நடந்தது நடந்தபடி… (ஒரு ஐ.ஏ.எஸ். அலுவலர் நடந்துவந்த பாதை)

நடந்தது நடந்தபடி… (ஒரு ஐ.ஏ.எஸ். அலுவலர் நடந்துவந்த பாதை), ஏ.எம். சுவாமிநாதன், நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை – 17. விலை ரூ. 100 ஆதாயம் தேடுவோரும் ஆள்காட்டிகளும் அதிகார வர்க்கத்தில் அதிகமாகிப்போன இந்தக் காலகட்டத்தில் இப்படி ஒரு புத்தகம் வந்துள்ளது. ஐ.ஏ.எஸ். என்ற உயரிய பொறுப்பை தனக்கான கௌரவமாகக் கருதாமல், மக்களுக்குச் சேவை செய்யக் கிடைத்த வாய்ப்பாகக் கருதிச் செயல்பட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஏ.எம். சுவாமிநாதன். தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று சொல்லாமல், ஐ.ஏ.எஸ். அலுவலர் என்றவர். […]

Read more

உங்கள் மனக்கதவுகளைத் திறந்து வையுங்கள்

உங்கள் மனக்கதவுகளைத் திறந்து வையுங்கள், அஜன் பிராம், பக். 304, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை – 17. விலை ரூ. 150 இந்நூலின் ஆசிரியர் தனது பிரசங்கத்தின்போது கூறிய கதைகளின் தொகுப்புதான் இந்நூல். ஒவ்வொரு கதையும் நமது நிஜவாழ்க்கைக்கு நெருக்கமாக இருப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இக்கட்டான நேரத்தில் எதுவும் செய்வதற்கில்லை என்ற நிலை வந்தால் பேசாமல் அமைதியாக இருந்துவிடு. இதனால் உயிரையே காக்கும் அறிவுத் திறம் உனக்கு ஏற்படும் என்று ஆதாரத்துடன் ஒரு கதையில் விளக்குகிறார் அஜன் பிராம். நமது இளமைக் காலத்திலேயே அதிகம் பேசாமல் […]

Read more

ராஜீவ் படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம்

ராஜீவ் படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம், திருச்சி வேலுசாமி, தொகுப்பு: பா. ஏகலைவன், பேட்ரிஷியா பதிப்பகம், 2/40 பி, இரண்டாவது தளம், ராம் நகர், நங்கநல்லூர், சென்னை – 61. விலை ரூ. 200 அந்தத் துன்பச் சம்பவம் நிகழ்ந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், உண்மைக் குற்றவாளிகள் யார் என்று முழுமையாகத் தெரியவில்லை. இந்தியப் பிரதமர் நாற்காலியில் இருந்த ராஜீவ் காந்தியின் பச்சைப் படுகொலையில்கூட இத்தகைய மெத்தனமான விசாரணை நடத்த முடியுமானால் சாமான்யனின் மரணத்தில் சட்டத்தின் ஆட்சி என்பது பல முக்கியமான நிகழ்வுகளில் தனி மனிதர்களின் […]

Read more

2012 சிறந்த 10 புத்தகங்கள் – ஜெயமோகன்

2012 சிறந்த 10 புத்தகங்கள் – ஜெயமோகன் சரிவிகித உணவு பற்றி நாம் ஐந்தாம் வகுப்பிலேயே வாசிக்க ஆரம்பித்திருப்போம். எல்லா சத்துகளும் அடங்கிய உணவுதான் உடல்நலத்துக்கு நல்லது. ஏதேனும் ஒரு சத்து மிகையாக இருந்தாலும், குறைந்தாலும்… நோயையே உருவாக்கும். வாசிப்பிலும் அப்படி ஒரு சரிவிகித நிலை வேண்டும். எல்லா அறிவுத்தளங்களிலும் முக்கியமான நூல்களை வாசிப்பதுதான் அவசியமானது. அதுவே சமநிலை கொண்ட முழுமையான நோக்கை உருவாக்கும். நாக்கின் சுவை கருதி உண்பது எப்படி நோயை அளிக்குமோ, அப்படித்தான் வாசிப்பின் சுவை மட்டுமே கருதி வாசிப்பதும். தமிழில் […]

Read more

உலகம் அழியுமா? ஏன்? எப்போது? எப்படி?

உலகம் அழியுமா? ஏன்? எப்போது? எப்படி?, பி.எம். கலீலுர் ரஹ்மான் மன்பஈ, ஸலா பப்ளிகேஷன், 21/10, 4-வது தெரு, மந்தைவெளி பாக்கம், சென்னை – 28. விலை ரூ. 100 உலக அழிவு குறித்து அன்றும் இன்றும் வெளியான சுவையான திகிலூட்டும் பல்வேறு செய்திகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக – விஞ்ஞானிகள், வான்கலை வல்லுநர்கள், புவியியல் அறிஞர்கள், கடல் ஆராய்ச்சியாளர்கள், ஜோதிடர்கள் அனைத்து மத தீர்க்க தரிசிகள், ஞானிகள், நாஸ்டர்டாம், சாக்ரடீஸ் போன்ற முற்கால தத்துவவாதிகள்… என்று பலரும் பல்வேறு காலகட்டங்களில் கூறிய காரணங்களை எல்லாம் தேடிப் பிடித்து, அதற்குரிய […]

Read more

வலது காலை எடுத்துவைத்து வா…

வலது காலை எடுத்துவைத்து வா… ‘பொம்மை’ சாரதி, அஸ்வினி புக் கம்பெனி, விலை ரூ. 65 பல பேர் நல்ல கதைகளை எழுதியிருந்தால் உரிய வெளிச்சம் கிடைக்காமலேயே போய்விடுகிறது. ‘மங்கை’, ‘சுமங்கலி’ இதழ்களில் ஆசிரியராக இருந்த ‘பொம்மை’ சாரதியின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறது. முக்கியமாக 1951-ஆம் ஆண்டில் அப்போது பிரபலமாக இருந்த ‘காவேரி’ மாத இதழில் வெளியான ‘முதல் பிச்சை’ என்னும் தலைப்பிலான சிறுகதையைச் சொல்லவேண்டும். அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும் சிரஞ்சீவியாகத் தோற்றமளிக்கிறது. ‘தமிழின் முதல்தரமான சிறுகதைகளுள் இது ஒன்று’ என்று […]

Read more

ராஜீவ் படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம்

ராஜீவ் படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம், திருச்சி வேலுச்சாமி, தொகுப்பு: பா. ஏகலைவன், பேட்ரிஷியா பதிப்பகம், 2/40, பி, இரண்டாம் தளம், ராம் நகர், நங்கநல்லூர், சென்னை – 600061. விலை ரூ. 200 ராஜீவ் படுகொலை, இந்தியத் துணைக்கண்டத்தின் தீராத புதிர். தமிழகத்தில் மூன்று பேரின் கழுத்தில் தூக்குக் கயிறு தொங்கிக் கொண்டிருக்கும் சூழலில், இந்தப் புதிர் குறித்த தீவிரமான விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கொடூரமான இந்தக் கொலை குறித்து தீர்க்கப்படாத பல கேள்விகள் இன்றும் இருக்கின்றன. இந்த கேள்விகளின் வாயிலாக ராஜீவ் படுகொலை […]

Read more

கொண்டலாத்தி

கொண்டலாத்தி, எழுதியவர்: ஆசை, பக்கம் 62, க்ரியா, சென்னை. விலை ரூ. 180 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-722-7.html புள்ளினங்கள் பற்றி நாற்பத்திரெண்டு எழிலான கவிதைகள், அவைகளில் வெளிப்படும் பறவைகளின் தீவிர ஈடுபாடு, கண்ணையும் மனதையும் கவரும் துல்லியமான புகைப்படங்கள், உள்ளடக்கத்திற்கேற்ற நூல் உருவாக்கம். சுகமான வாசிப்பனுபவம் இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்தாலே மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்நூலின் ஆசிரியர், ஆசை என்று கையெழுத்திட்டிருக்கும் ஆசைத்தம்பி, முன்னர் ‘சித்து’ என்ற கவிதைத்தொகுப்பின் மூலம் தமிழ் வாசகர்களின் கவனத்தை ஈர்த்தவர். தமிழுக்கு எவ்வளவு நீண்ட கவிதை மரபு […]

Read more

தீராத விளையாட்டு விட்டலன்

தீராத விளையாட்டு விட்டலன், அருண் சரண்யா, பக். 240, கல்கி பதிப்பகம், சென்னை – 32. விலை ரூ. 200 மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பண்டரிபுரம் மகாபக்தர்களின் சரிதங்கள் ஆனந்தக் கண்ணீர் சொரியச் செய்பவை; நம்மை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்துபவை. பண்டரிபுரத்தில் அருளாட்சி புரியும் பாண்டுரங்க விட்டலனின் பக்தர்களின் சரிதத்தை நூலாசிரியர் அற்புதமாகத் தொகுத்து வழங்கி இருக்கிறார். கண் கவரும் வேதாவின் ஓவியங்களும், ஸ்ரீஹரியின் புகைப்படங்களும் இந்நூலுக்கு மெருகு சேர்க்கின்றன. நூலின் மற்றொரு சிறப்பு மகாபக்தர்களின் அபங்கங்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் வழங்கி இருப்பது. பக்த நரஹரி, உத்தவரின் […]

Read more

மாற்று சினிமா

மாற்று சினிமா, கிராபியென் ப்ளாக், புதிய கோணம் வெளியீடு, 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 18. விலை ரூ. 90 ‘மாற்று சினிமா’ என்ற சொல், தமிழின் வணிக சினிமா அராஜகங்களுக்கு எதிராக எழுந்த சொல். உண்மையில் அசலான சினிமாவைத் தேடும் எல்லா முயற்சிகளுமே தமிழில் மாற்று சினிமா என்ற அடைமொழிக்குள் வந்துவிட்டன. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சி, கேமராவை எழுதுகோல் போன்ற ஒரு எளிய சாதனமாக கலைஞர்கள் கையில் கொண்டுபோய்ச் சேர்த்தது. கடந்த பத்தாண்டுகளில் குறும்படங்கள், ஆவணப்படங்கள் சார்ந்த இயக்கம் ஒரு பேரலையாக […]

Read more
1 318 319 320 321 322 336