ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்

ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும், தொகுப்பும் பதிவும்: பசு. கவுதமன், ரிவோல்ட் பதிப்பகம், கும்பகோணம், விலை 185ரூ. 50 ஆண்டுகளுக்கு முன் அரசியல் வட்டாரத்தில் பிரபலமான மூன்றெழுத்து ஏ.ஜி.கே. அதாவது, ஏ.ஜி. கஸ்தூரிரெங்கன். ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற எல்லா நாட்களும் அவர் மீதான வழக்கு நாகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று சொல்லும் அளவுக்கு 1960-70 காலகட்டத்தில் சுமார் 140 வழக்குகள் அவர் மீது இருந்தன. இத்தனை வழக்குகள் இருந்தும் அவர் முடங்கிப் போய்விடவில்லை. தலைமறைவு வாழ்க்கையின் போதுகூட அவரை போலீஸ் பிடித்ததாகத் தகவல் இல்லை. […]

Read more

இந்தியப் புண்ணிய நதிகளும் பெருமைகளும்

இந்தியப் புண்ணிய நதிகளும் பெருமைகளும், என்.டி. ராமகுமார், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 170ரூ. தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள சிவலிங்கத்திருமேனி நர்மதை நதியிலிருந்து எடுத்துவந்து பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். வடநாட்டில் பல சிவாலயங்களில் இடம்பெற்றுள்ள லிங்கத் திருமேனிகள் இநத் நர்மதையிலிருந்து எடுத்துவரப்பட்ட பாணலிங்கங்கள்தான் என்கிறார் இந்த நூலின் ஆசிரியரான என்.டி. ராமகுமார். நர்மதை நதியில் கிடைக்கும் எல்லாக் கூழாங்கற்களுமே சிவ லிங்கங்களாகக் கருதப்படுகின்றன. ஒங்காரரேஷ்வர் தலத்திலிருந்து 25 கி.மீ. தொலைவிலுள்ள தாடிகுண்ட் என்னுமிடத்திலுள்ள ஆழமான பாறைக்கிணறுகளில் உயரத்திலிருந்து விழும் நர்மதை நதி நீர் வெள்ளத்தில் […]

Read more

நேருவின் ஆட்சி

நேருவின் ஆட்சி (பதியம் போட்ட 18 ஆண்டுகள்), ரமணன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 151, விலை 115ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023630.html நேருவின் பெரும் தோல்வி! நாட்டின் தலைவராக வருபவரின் பலம், பலவீனம் மற்றும் விருப்பு, வெறுப்பு ஆகியவையே, நாட்டின் போக்கை தீர்மானிக்கின்றன. கட்சியிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும், சர்தார்பட்டேலுக்கு ஆதரவு இருந்தபோதும், காந்தியின் விருப்பம் ஒன்றே, நேருவை இந்தியாவின் முதல் பிரதமராக்கியது. நேருவின் விருப்பு, வெறுப்புகள் எப்படி,நாட்டின் போக்கை தீர்மானித்தன என்பதை விளக்குகிறது […]

Read more

காலம் போற்றும் கவி. கா. மு. ஷெரீப்

காலம் போற்றும் கவி. கா. மு. ஷெரீப், செ. திவான், யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், பக். 316, விலை 200ரூ. பாட்டும் நானே பாடலை எழுதியது யார்? பொன்னான வாழ்வே மண்ணாகி போமா, நான் பெற்ற செல்வம் நலமான செல்வம், வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும், ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா, ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே எனும் பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் நம் மனக்கண் முன் வருபவர் கா. மு. ஷெரீப். அவரை திரைப்பட பாடலாசிரியர் என்ற அளவில் மட்டும் தெரிந்து வைத்திருக்கும் இக்கால தலைமுறையினருக்கு, […]

Read more

ஸ்ரீவசன பூஷணம், ஆசார்ய இருதயம்

ஸ்ரீவசன பூஷணம், ஆசார்ய இருதயம், தி. பாஷ்ய ராமாநுசதாசன், செல்வி. ரம்யா கஜபதி, பக். 160, 120, விலை 100ரூ, 50ரூ. வைணவ தத்துவம், இதம், புருஷணார்த்தம் ஆகியவற்றை விளக்க, ஆசாரியர்கள் எழுதியுள்ள நூல்களில், இந்த இரண்டும் பலரால் போற்றப்படுகின்றன. பெரும்பாலும் வடமொழி கலந்த மணிப்பிரவாள நடையில் இவை இருப்பதால், தற்காலத்தில் படிப்போர்க்குக் கடினம். அதனால் எளிய தமிழில், அவற்றுக்கு இந்த உரை நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சொல்லழகும், பொருளழகும் உடைய ஸ்ரீவசன பூஷணம் என்ற நூலை, பிள்ளைலோகாசாரியர் அருளிசெய்தார். ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்கள் […]

Read more

சில பாதைகள் சில பயணங்கள்

சில பாதைகள் சில பயணங்கள், பாரதி பாஸ்கர், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 144, விலை 90ரூ. சமூகத்தாக்கத்தோடு, சமுதாய முன்னேற்றத்திற்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்து, அதில் வெற்றி பெற்று வரலாற்றில் இடம் பெற்றுள்ள, மதுவிலிருந்து மீள வழிகாட்டும் சாந்தி ரங்கநாதன், அமில வீச்சுக்கு ஆளான அர்ச்சனா குமாரி, பாலியல் தொழிலாளர் குழந்தைகளைப் படிக்க வைக்கும் சோம்லே மாம், தேவதாசி ஒழிப்பில் வெற்றிகண்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, சமையல் புத்தகம் முதலில் எழுதிய மீனாட்சி அம்மாள், கர்நாடக சங்கீதக் கலைஞர் வீணை தனம்மாள், கம்யூனிஸ்ட் பார்வதி […]

Read more

தெரிந்த புராணம் தெரியாத கதை

தெரிந்த புராணம் தெரியாத கதை, டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி, எல்.கே.எம். பப்ளிகேஷன்ஸ், பக். 152, விலை 150ரூ. ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும், புராணங்களிலும் உள்ள கதைகளை அறிந்த பலரும், கிளைக் கதைகளை அறிந்திருக்க மாட்டார்கள். கிளைக் கதைகளையும் அவற்றில் பொதிந்துள்ள உட்கருத்துக்களையும், எளிய நடையில், தெளிவான முறையில், எல்லோருக்கும் புரியும் வகையில் நூலாசிரியர் எழுதியுள்ளார். மன்னனா? துறவியா? என்ற கட்டுரையில் ஜனகர் – பஞ்சசிகர் தொடர்புடைய நிகழ்வுகள் புலனடக்கம், சத்தியத்தின் உயர்வு, அகந்தை, ஆணவம் துறத்தல் முதலானவற்றை வலியுறுத்துகின்றன. மனைவி கூறிய கருத்தை மதித்த […]

Read more

சீத்தலைச்சாத்தனார் மணிமேகலை ஆக்கப் பிரதியின் வாசிப்பு அரசியல்

சீத்தலைச்சாத்தனார் மணிமேகலை ஆக்கப் பிரதியின் வாசிப்பு அரசியல், முனைவர் கா. அய்யப்பன், இராசகுணா பதிப்பகம், பக். 138, விலை 120ரூ. சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை காப்பியத்தை, ஐந்து பிரிவுகளில், ஆய்வு செய்கிறது இந்த நூல். முதல் பிரிவில் மணிமேகலை காப்பியக் கதையும், இரண்டாம் பிரிவில் இந்திர விழாவும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மூன்றாம் பிரிவில், மணிமேகலை கூறும் தத்துவக் கருத்துகள் விளக்கப்பட்டுள்ளன. நான்காம் பிரிவில், மணிமேகலை காப்பியத்தைப் பிற பண்டைய இலக்கியங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளார். ஐந்தாம் பிரிவில், உரையாசிரியர்கள், மணிமேகலை காப்பியத்தைப் பயன்படுத்தியுள்ள […]

Read more

தமிழக வழிபாட்டு மரபுகள்

தமிழக வழிபாட்டு மரபுகள், திருச்சிற்றம்பலம் மு. அருணாசலம், சிவ. முருகேசன், சந்தியா பதிப்பகம், பக். 208, விலை 160ரூ. பேராசிரியர் மு. அருணாசலம் தமிழில் எழுதி வெளிவராத, தலவழிபாடு எனும் படைப்பையும் உள்ளிட்டு, அவர் ஆங்கிலத்தில் எழுதிய ஐந்து ஆய்வுக் கட்டுரைகளை தமிழாக்கம் செய்து, மொத்தம் ஆறு கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. வாதாபி கணபதிக்கு முன்பே, கணபதி வழிபாடு தமிழகத்தில் நிலவியது என்பதை, பிடியதன் உருஉமை கொளமிகு கரியது (பக். 20) என, அப்பரடிகள் பாடியதையும், புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை […]

Read more

யக்ஞோபவீதம் – பூணூல்

யக்ஞோபவீதம் – பூணூல், சர்மா சாஸ்திரிகள், பக். 80, விலை 60ரூ. காஞ்சி மடத்துடன் அதிக தொடர்பு கொண்டவரும், முன்பு சங்கபரிவார் அமைப்புகளுடன் இருந்தவருமான ஆசிரியர், தற்போது இந்த நூலை வெளியிட்டு உள்ளார். அதன் அடிப்படையில் பிராமணர்கள் தெரிந்துகொள்ளும் விதமாக பூணூல் பற்றி தகவல்களை கூறியுள்ளார். தமிழகத்தில் பல்வேறு பிரிவினர் பூணூல் அணிகின்றனர். திருமூலர் நூலது காற்பாசம் : நுண்சிகை ஞானம் என்பார். பூணூலின் இலக்கணம் என்ன, வேதத்தில் பூணூல் பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது, பூணூலை இலக்கணம் என்ன, வேதத்தில் பூணூல் பற்றி என்ன […]

Read more
1 52 53 54 55 56 336