நேரு முதல் மோடி வரை

நேரு முதல் மோடி வரை, நமது பிரதமர்களின் கதை, ரா. வேங்கடசாமி, சூரியன் பதிப்பகம், விலை 100ரூ. இந்திய மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்து வாழ்வதற்கு, தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஜனநாயக சூழலைப்பெறுவதற்கு கணிசமான பங்களிப்பைச் செய்த நம் பிரதமர்களின் தனிப்பட்ட வாழ்வு மற்றும் பொதுவாழ்வு சுவாரசியங்களைச் சொல்கிற நூல். நன்றி: குமுதம், 3/8/2015. —- வானொலித் தகவல்கள், தென்கச்சி கோ. சுவாமிநாதன், கீதம் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 110ரூ. அறிந்ததை, புரிந்ததை, உணர்ந்ததை பிறருக்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தினால் பாமரனும் புரிந்து […]

Read more

நான், ஜிபு மற்றும் புற்றுநோய்

நான், ஜிபு மற்றும் புற்றுநோய், ம.அஹமது நவ்ரோஸ் பேகம், என்.ஜே.பதிப்பகம், பக். 96, விலை 30ரூ. சென்னை புரசைவாக்கம் ஜே.எம்.பள்ளியின் முதல்வர் அஹமது நவ்ரோஸ் பேகம், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் மகன் ஜிபு என்ற ஜிப்ரீல் பட்ட அவஸ்தைகளையும், எடுத்துக்கொண்ட சிகிச்சைகளையும் கண்ணீருடன் பதிவு செய்திருக்கும் நூல் இது. ஒரு தேர்ந்த எழுத்தாளருக்கே உரிய திறமையுடன் மிக நேர்த்தியாக இந்த நூலை எழுதியிருக்கிறார் ஆசிரியர். மகனுக்கு உடல்நலம் குன்றிய முதல் நாளில் தொடங்கி, அவனை மருத்தவரிடம் காட்டியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, மகனுக்கு செய்யப்பட்ட இரத்தப் […]

Read more

நல்லது நடந்தால் நல்லது

நல்லது நடந்தால் நல்லது, ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. ஏர்வாடி ராதாகிருஷ்ணன், சிறந்த கவிஞர் என்பதை அனைவரும் அறிவர். உரைநடையிலும் அவருக்கு மிக்க ஆற்றல் உண்டு என்பதை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. இதில் 23 கட்டுரைகள் உள்ளன. எல்லாமே கருத்தாழம் மிக்க கட்டுரைகள். தமிழால் முடியும் என்ற கட்டுரையில் கீழ்க்கண்ட தகவல்களைக் கூறுகிறார். உலக மொழிகள் 2800ல் செம்மொழி என்கிற சிகரச் சிறப்பைப் பெற்ற மொழிகள் 6 மட்டுமே. அந்த ஆறில் ஒன்று தமிழ் என்பது தமிழுக்குப் பெருமை. சில […]

Read more

கிரவுஞ்சப் பட்சிகள்

கிரவுஞ்சப் பட்சிகள், வைதேகி, தமிழில் ஜெயந்தி, சாகித்திய அகாதெமி, சென்னை, விலை 110ரூ. கன்னடத்தில் பிரபல எழுத்தாளரான வைதேகி படைத்த சிறுகதைகளின் தொகுப்பு நூல். இதிலுள்ள எல்லாக் கதைகளிலும் ஆண், பெண் இணைந்த உலகமொன்று உள்ளது. அந்த உலகத்தில் பிரிதலும் உண்டு, சுவாரசியமான பேச்சு மட்டுமின்றி, துன்பத்தின் வரிகளும் இழையோடுகிறது. சந்தோஷத்தின் உச்சத்திலிருந்தாலும், அதனூடே துக்கத்தின் சாயலும் படிந்துள்ளது. மனதைத் தொடும் இச்சிறுகதை தொகுப்பு நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழாக்கம் ஜெயந்தி. நன்றி: தினத்தந்தி, 29/7/2015.   —- […]

Read more

வரலாறு படைத்த தமிழ்ப் புதினங்கள்

வரலாறு படைத்த தமிழ்ப் புதினங்கள், கண்ணகி கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், தஞ்சை, விலை 500ரூ. தமிழில் புகழ் பெற்று விளங்கும் நாவல்கள் பற்றி, ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். கல்கியின் சிவகாமியின் சபதம், டாக்டர் மு. வரதராசனாரின் அகல் விளக்கு, அகிலனின் நெஞ்சின் அலைகள், வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம், தி. ஜானகிராமனின் மோகமுள் உள்பட 89 நாவல்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. சிவகாமியின் சபதம் நாவலை 4 பேர்கள் 4 கோணங்களில் ஆராய்ந்துள்ளனர். […]

Read more

பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ்

பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ், ச.க. இளங்கோ, பாரிநிலையம், பக். 488, விலை 180ரூ. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் திரைப்படத் துறையிலும் தனது முத்திரைகளைப் பதித்துள்ளார். திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களில் முதன்முதலில் திரைத்துறையில் நுழைந்தவர் பாரதிதாசனே. 1937ஆம் ஆண்டு முதன்முதலில் பாலாமணி அல்லது பக்காத்திருடன் படத்துக்குப் பாடல்கள் எழுதினார். 1938இல் எழுத்தாளர் வ.ரா.கேட்டுக்கொண்டதற்கிணங்க ஸ்ரீராமானுஜர் படத்துக்குப் பாடல் எழுதினார். 1940இல் வெளிவந்த காளமேகம் திரைப்படத்தின் கதை, வசனம், பாடல்கள் எழுதியது பாரதிதாசனே. ஓர் இரவு, பராசக்தி, இரத்தக்கண்ணீர், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி உள்ளிட்ட 17 படங்களில் பாரதிதாசனின் […]

Read more

நபி நேசம் நம் சுவாசம்

நபி நேசம் நம் சுவாசம், மவ்லவி பி.எம். கலீலுர் ரஹ்மான் மன்பஈ, எஸ்.கே.எஸ். பப்ளிகேஷன்ஸ், பக். 186, விலை 100ரூ. நபிகள் நாயகத்தின் மகத்துவம் எத்தகையது என்பதை, டாக்டர் கலீல் இப்ராஹிம் முல்லா காதிர் என்பவர் எழுதிய ஒரு அரபு நூலின் அடிப்படையில் இந்நூலை ஆசிரியர் உருவாக்கியுள்ளார். மனிதர்களை நல்வழிப்படுத்த வேண்டி, 1,25,000க்கும் மேற்பட்ட தூதர்களை (நபிமார்களை) இறைவன் இவ்வுலகிற்கு அனுப்பியுள்ளான். அதில் முதல் முனிதரும் முதல் நபியுமான ஆதாம் முதல் ஈஸா (யேசு) வரையிலான அனைத்து நபிமார்களும், வேதங்களும் இறுதி நபியாகிய முஹம்மது […]

Read more

கம்பரின் நூலகம் ஆழ்வார்கள்

கம்பரின் நூலகம் ஆழ்வார்கள், நயவுரைநம்பி டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை, விலை 200ரூ. வால்மீகி எழுதிய ராமாயணத்தில், ராமனை ஒரு மாவீரனாகத்தான் சித்தரிக்கிறார். திருமாலின் அவதாரம் என்று கூறவில்லை. ராமனை திருமாலின் அவதாரம் என்று எழுதியவர் கம்பர்தான். கம்பராமாயணத்தில், பலஇடங்களில் அடியெடுத்துக் கொடுத்தவர்கள் ஆழ்வார்கள் என்பதை ஆதாரத்துடன் எடுத்துக்கூறுகிறார் நயவுரைநம்பி டாக்டர் எஸ். ஜெகத்ரட்சன். கம்பராமாயணத்தின் சுவையான பல பகுதிகளை எடுத்துக்கூறி, அவற்றுக்கு அழகிய நடையில் பொருள் கூறுகிறார் ஜெகத்ரட்சகன். எனவே நூலைப் படித்து முடிக்கும்போது, கம்பராமாயணத்தையே படித்து முடித்த […]

Read more

இயக்குநர் சிகரம் கே.பி.

இயக்குநர் சிகரம் கே.பி., சூரியன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. திரை உலகில் வரலாறு படைத்த கே.பாலசந்தரின் வாழ்க்கை வரலாற்றை கூறும் புத்தகம். பாலசந்தர் வாழ்க்கையுடன், அவர் இயக்கிய படங்களின் கதையையும், சிறப்பையும் சுவைபட விவரிக்கிறார் எழுத்தாளர் டி.வி. ராதாகிருஷ்ணன். நிறைய படங்கள் இடம் பெற்றிருப்பது, புத்தகத்துக்கு எழிலூட்டுகிறது. பாலசந்தர் பற்றிஅறிய சிறந்த புத்தகம். நன்றி: தினத்தந்தி, 29/7/2015.   —- முல்லை மண் மக்கள் இலக்கியம், முனைவர் வாணி அறிவாளன், அருண் அகில் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. சங்க இலக்கியங்களில் மக்கள் […]

Read more

புனிதராற்றுப்படை

புனிதராற்றுப்படை, எம். அல்போன்ஸ், பொதிகை பதிப்பகம், சென்னை, பக். 104, விலை 80ரூ. சங்ககால ஆற்றுப்படை இலக்கியங்கள் அனைத்தும் இலக்கியக் கருவூலங்களாகும். சங்ககத் தொகை நூல்களுள் ஒன்று பத்துப்பாட்டு. இப்பத்துப்பாட்டில்தான் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை முதலிய ஆற்றுப்படை நூல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வரிசையில் தற்போது வெளிவந்திருக்கும் இந்தப் புனிதராற்றுப் படையையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆற்றுப்படுத்துதல் என்றால், வழிப்படுத்துதல் என்றும், ஆற்றுப்படை என்றால் வழிப்படுத்தி அனுப்புதல் என்றும் பொருள். விறலியர், பாணர், கூத்தர், பொருநர் போன்றோர் தம் வறுமையைப் போக்கிக் கொள்ள வள்ளல்களிடம் சென்று, பொன்னும் […]

Read more
1 54 55 56 57 58 336