யக்ஞோபவீதம் – பூணூல்

யக்ஞோபவீதம் – பூணூல், சர்மா சாஸ்திரிகள், பக். 80, விலை 60ரூ. காஞ்சி மடத்துடன் அதிக தொடர்பு கொண்டவரும், முன்பு சங்கபரிவார் அமைப்புகளுடன் இருந்தவருமான ஆசிரியர், தற்போது இந்த நூலை வெளியிட்டு உள்ளார். அதன் அடிப்படையில் பிராமணர்கள் தெரிந்துகொள்ளும் விதமாக பூணூல் பற்றி தகவல்களை கூறியுள்ளார். தமிழகத்தில் பல்வேறு பிரிவினர் பூணூல் அணிகின்றனர். திருமூலர் நூலது காற்பாசம் : நுண்சிகை ஞானம் என்பார். பூணூலின் இலக்கணம் என்ன, வேதத்தில் பூணூல் பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது, பூணூலை இலக்கணம் என்ன, வேதத்தில் பூணூல் பற்றி என்ன […]

Read more

இந்தியப் பயணக் கடிதங்கள்

இந்தியப் பயணக் கடிதங்கள், எலிஸா பே, தமிழில் அக்களூர் இரவி, சந்தியா பதிப்பகம், பக். 288, விலை 200ரூ. கடந்த 1779 முதல் 1815 வரை எழுதப்பட்ட, 31 கடிதங்களின் தொகுப்பு. எலிஸா எனும் ஆங்கிலேயப் பெண்மணி, கப்பல் மூலமாகவும், தரை வழியாகவும் இந்தியாவின் கள்ளிக்கோட்டையை அடைந்தது வரை பட்ட துன்பங்களும், இன்பங்களும், கடிதங்களாய் எழுதப்பட்டுள்ளன. கள்ளிக்கோட்டை ஹைதர் அலியின் ஆட்சியின் கீழ் இருந்ததால் எலிஸாவும், அவரது கணவரும், மற்றவர்களும் சிறைப்படுத்தப்பட, சோகத்திலிருந்து விடுதலை வழங்கியது, மெட்ராஸ் எனும் சென்னை பதினெட்டாம் நூற்றாண்டில் பெண்கள் […]

Read more

ஔவைத் தமிழ் களஞ்சியம்

ஔவைத் தமிழ் களஞ்சியம், வேம்பத்தூர் கிருஷ்ணன், சுடர்மணி பதிப்பகம், பக். 144, விலை 50ரூ. அவ்வையாருக்கு ஒரு கோட்டம் கட்டும் முயற்சியில் பல்லாண்டுகளாக பாடுபடுபவர் வேம்பத்தூர் கிருஷ்ணன். அவ்வையார் பற்றி 36 அறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் படிப்பவருக்கு இனிமை ஊட்டும். இக்கட்டுரை ஆசிரியர் உடல் தளர்ந்தாலும், உள்ளம் தளராமல் அவ்வையாரை மீட்டுருவாக்கம் செய்வதில் பேரார்வம் கொண்டவர் என்பதை, அவரது இந்தத் தொகுப்பே கூறிவடும். சிவாலயம் மோகனின் முதற்கட்டுரை, திருமூலரில் துவங்கி, அவ்வை வரையில், சிவநெறி எவ்வாறு போற்றப்படுகிறது என்று கூறுகிறது. அதில் […]

Read more

பழனிமுருகன் வழிபாட்டில் காவடிகள்

பழனிமுருகன் வழிபாட்டில் காவடிகள், முனைவர் க. கிருஷ்ண மூர்த்தி, காவ்யா, பக். 258, விலை 230ரூ. முருகனுக்கு காணிக்கை குழந்தைகள்! தமிழனின் தொன்மைக் கலைகளில் ஒன்ற, காவடி ஆட்டம், குன்றின் மேல் நிற்கும் முருகனை வழிபட, பூஜைப்பொருட்களை காவடியில் கட்டிக் கொண்டும், காட்டு விலங்குகள் வராமலிருக்க ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் செல்லும் காவடியின் கதையை, இந்த நூல் விரிவாக ஆய்வு செய்கிறது. சக்திமலை, சிவமலையை கட்டிக்காவடியாக இரு மலைகளையும் இடும்பன் பழனியில் தூக்கி வந்து, முதலில் தண்டாயுதபாணியை வணங்கி அருள் பெற்றான். காவடி தோன்றிய பழனியில் […]

Read more

நினைவில் நின்றவை

நினைவில் நின்றவை, டி.வி. சந்திரசேகரன், பாரதி புத்தகாலயம், சென்னை, பக். 263, விலை 180ரூ. வங்கிகளில் வளர்ந்த தொழிற்சங்கங்கள் பற்றிய ஓர் கண்ணோட்டம் இந்நூல். காலந்தோறும் தொழிற்சங்க இயக்கங்கள் பல மாற்றங்களுக்கு உள்ளாவது இயல்பு. ஆனால் அந்த மாற்றங்கள் தொழிலாளர்களின் முன்னேற்றத்தில் நிலையான மகிழ்ச்சியைத் தந்தனவா என்பது கேள்விக்குறியே. இந்தப் பின்னணியில் நின்று, தமது 33 ஆண்டுகால தொழிற்சங்க இயக்கத்தின் ஈடுபாட்டு அனுபவத்தை, தன்னுணர்வு தலைதூக்காது, நடுநிலையோடு எழுதியுள்ளார் நூலாசிரியர். தொழிற்சங்க இயக்கத்தின் வரலாற்றை ஸ்டேட் வங்கி இயக்கத்தின் வரலாற்றோடு பகிர்ந்தளிப்பது சிறப்பு. ஸ்டேட் […]

Read more

கம்பரின் நூலகம் ஆழ்வார்கள்!

கம்பரின் நூலகம் ஆழ்வார்கள்!, எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை, பக். 264, விலை 200ரூ. புதுவை கம்பன் கழன பொன்விழா கருத்தரங்கில் நூலாசிரியர் பேசியதன் தொகுப்பே இந்நூல். கம்பரின் இராமாவதாரக் காவியத்தின் சிறப்புக்குக் காரணம், அவர்தொட்ட இடமெல்லாம் ஆழ்வார் அமுதப் பாசுரங்களையும் மிக நேர்த்தியாக காவியத்தில் கலந்துகொடுத்ததால்தான் என்பதை நிறுவும் நூல். ஆழ்வார்கள் தேனும் பாலும் நெய்யும் அமுதமும் கலந்து பாடிய அருட்பாசுரங்களை இராமாவதாரக் காவியத்துள் கலந்து கவிச்சக்கரவர்த்தி பாடியிருப்பதால்தான் அமுதத்தைவிட பன்மடங்கு சுவையாக இராமாயணக் காவியம் தித்திக்கிறது என்பது நூலாசிரியரின் […]

Read more

ஜெயகாந்தன் ஒரு மனிதன் ஒரு உலகம்

ஜெயகாந்தன் ஒரு மனிதன் ஒரு உலகம், தொகுப்பு மணா, குமுதம் பு(து)த்தகம், சென்னை. ஜெயகாந்தன் என்ற ஆளுமை உருவான பின்னணி, வாழ்கைப் போராட்டத்தில் எழுதுகோலை அவர் ஆயுதமாக தேர்ந்தெடுத்த அனுபவம், தமிழ் இலக்கியத்தின் போக்கை மாற்றியமைத்த அவரது எழுத்தின் துணிவு, சமூகத்தின் மீதான அவரது அக்கறை, கோபம், அவர் எழுப்பிய குரல், மண் வாசனையைத் தாண்டி மனித நெடியை வீசச் செய்த அவரது கதைகள் பற்றிய பார்வை, சினிமா சார்ந்த அவரது விமர்சனங்கள் சினிமா உலகில் எத்தகைய அழுத்தத்தை ஏற்படுத்தியது, மாற்று சினிமாவுக்கான அவரது […]

Read more

கண்ணகி அம்மன் வழிபாடு

கண்ணகி அம்மன் வழிபாடு, பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன், சென்னை, விலை 130ரூ. ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி! ஐம்பெருங்காப்பியங்களில் பலரும் விரும்பிப் படிப்பது சிலப்பதிகாரம். வரலாற்றுக் காப்பியம், புரட்சிக் காப்பியம், புதுமைக் காப்பியம் என்றெல்லாம் பலரும் அந்த காப்பியத்தை பாராட்டி உள்ளனர். அந்த காப்பியத்தின் தலைவி கண்ணகியை, தெய்வமாக வழிபடும் வழக்கம், அது தொடர்பான பல்வேறு தகவல்களின் தொகுப்பாக இந்த நூல் விளங்குகிறது. சைவ சமயத்தை புனருத்தாரணம் செய்த, யாழ்பாணத்து ஆறுமுக நாவலர், சிறுதெய்வ வழிபாடுகளை, கடுமையாக கண்டித்தவர். இலங்கையில் நிலவி வரும் […]

Read more

ஆலயங்களின் உட்பொருள் விளக்கம்

ஆலயங்களின் உட்பொருள் விளக்கம், இலஞ்சி ஏ. சொக்கலிங்கம், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், முதல் பாகம் விலை 260ரூ., இரண்டாம் பாகம் விலை 240ரூ. ஆலயங்களின் என்பது இந்து சமயத்தின் அஸ்திவாரமாகும். கோவில்களில் செய்யப்படும் அபிஷேகம், அர்க்கியம் போன்ற கிரிகைகளின் உண்மைத் தன்மை குறித்தும், தீப ஆராதனை, நைவேதனம் முதலியவற்றின் அவசியம் குறித்தும் இந்த நூலில் இலஞ்சி ஏ. சொக்கலிங்கம் எளிய முறையில் விளக்கியுள்ளார். கொடி மரத்தின் அறிகுறியும், விழாக்களின் காரணங்களும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 29/7/2015.   —- சைவமும் […]

Read more

பெருவெடி பிரபஞ்ச வரலாறு

பெருவெடி பிரபஞ்ச வரலாறு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அறிவியல் வெளியீடு, சென்னை, விலை 75ரூ. குழந்தைகளுக்கான சிறந்த அறிவியல் அறிமுக நூல். பெருவெடிப்பு நிகழ்வில் இருந்து பிரபஞ்சம் உருவாகி, கோள்களும், உயிரினங்களும் வந்த வரலாற்றை குழந்தைகளுக்காக படக்கதைபோல வண்ணப்படங்களுடன் எளிமையாக உருவாக்கி வழங்கி உள்ளது தமிழ்நாடு அறிவியல் இயக்கம். நன்றி: தினத்தந்தி, 29/7/2015.   —- நவக்கிரக தோஷ நிவர்த்திக்காக சித்தர்கள் அருளிய நெறிமுறைகள், சகுந்தலை நிலையம், சென்னை, விலை 35ரூ. துன்பம் தருகிற கிரகங்களை வேதங்களில் ரிஷிகள் உபதேசித்த நெறிமுறை வணங்கி வழிபட்டால் […]

Read more
1 53 54 55 56 57 336