அரங்கமா நகருளானே!

அரங்கமா நகருளானே!, வேதா டி. ஸ்ரீதரன், வேத ப்ரகாசனம் வெளியீடு, சென்னை, பக். 270, விலை 250ரூ. பூலோக வைகுந்தம் என்று வைஷ்ணவர்களால் போற்றிப் புகழப்படும் ஸ்ரீ ரங்கத்து திருக்கோவிலின் தல வரலாறு மற்றும் ஆலயம் குறித்த பல அரிய தகவல்களை தொகுத்து எளிய தமிழில் இந்நூலை உருவாக்கியுள்ளார் ஆசிரியர். பன்னிரு ஆழ்வார்களில் பதினோரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஒரே பெருமாளாகிய அரங்கநாதர் வீற்றிருக்கும் இத்திருத்தலத்தையும், அவரின் அருமை பெருமைகளையும் பற்றி 22 தலைப்புகளில் விரியும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் பகத்ர்களுக்கு பரவசமூட்டும் வகையில் அமைந்துள்ளது. […]

Read more

சக்கை

சக்கை, கலைச்செல்வி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 236, விலை 180ரூ. ஜல்லி உடைக்கும் கூலித் தொழிலாளிகளின் கண்ணீர்க் கதைதான் இந்த நாவல். நூலாசிரியரின் முதல் நாவல் இது. வறுக்கும் உச்சிவெயிலில் கல்லுடைத்து வாங்கும் சொற்ப கூலியில் கஷ்ட ஜீவனம் நடத்தும் ராசப்பனின் குடும்பம் கதையில் மையமாகிறது. முக்காலும் ஒரு குடும்பத்தைச் சுற்றிச் செல்லும் நாவலில், வருத்தும் வறுமை, இழவு, இழிவு, வஞ்சகம், நோய், மனவலிகள் என்பதாக ஓடுகிறது கதை. அதற்குள்ளும் காதல், கல்யாணம், சடங்கு, சம்பிரதாயம், மான, மரியாதை, வைராக்கியம், வீரியம் […]

Read more

கம்பராமாயணம் (அயோத்தியா காண்டம்)

கம்பராமாயணம் (அயோத்தியா காண்டம்), பெரும்புலவர் கோ. வில்வபதி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 1320, விலை 900ரூ. கம்ப ராமாயணம், ஆறு காண்டங்களை உடையது. இரண்டாவதான, அயோத்தியா காண்டத்தின் பாடல்களுக்கு, தெளிவுரையும், விளக்க உரையும் கொண்டது இந்த நூல். நூலின் முதலில் 12 படலங்களுக்கும் உரிய கதைச் சுருக்கம் உள்ளது. அது படிப்போருக்கு தூண்டுகோலாக அமையும். கெடுத்தொழிற்தனை என துவங்கும் பாடலுக்கு, உரையாசிரியர் தரும் அருமையான விளக்கம், அவரது புலமைத் திறனுக்கு எடுத்துக்காட்டு. (பக். 156 -161). கிள்ளையொடு பூவை அழுத பாடலுக்கு, ஒருசார் அஃறிணையோடு […]

Read more

அனுமன் கதைகள்

அனுமன் கதைகள், திருப்பூர் குமரன் பதிப்பகம், சென்னை, விலை 260ரூ. ராமாயணத்தில் முக்கிய கதாபாத்திரமாக வலம் வருபவர் ஆஞ்சிநேயர். அவருடைய சாகசங்களை அனைவரும் அறிவோம். ஆனால் அவர் பிறப்பைப் பற்றி அறிந்தவர்கள் ஒரு சிலரே இருப்பார்கள். வானுலகில் இருந்து பூமிக்கு வந்த புஞ்சிக்ஸ் தலை என்ற அப்சரஸ் குரங்கு முகம் கொண்ட ஒரு முனிவரை கேலி செய்ததால், குரங்காகி விடுகிறாள். பிறகு சிவனை நோக்கி தவம் செய்ததால், சிவன் அவர் முன் தோன்றுகிறார். “சிறிது காலம் குரங்காய் வாழ்ந்து, மிகுந்த பராக்கிரமம் உடைய ஒரு […]

Read more

நடிப்பிசைப்புலவர் கே.ஆர். ராமசாமி நினைவுகள்

நடிப்பிசைப்புலவர் கே.ஆர். ராமசாமி நினைவுகள், வசந்தா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. நாடகத்துறையிலும், சினிமா துறையிலும் சாதனை படைத்தவர் கே.ஆர். ராமசாமி. பாகவதர், பி.யு. சின்னப்பா, டி.ஆர். மகாலிங்கம் போல, சொந்தக் குரலில் பாடி நடித்தவர். அறிஞர் அண்ணா வசனம் எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, சொர்க்கவாசல் முதலான படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தி.மு. கழகத்தில் உறுப்பினராக இருந்ததால், புராணப் படங்களில் நடிக்க மறுத்தவர். சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியை கட்சி நலனுக்காக செலவிட்டவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை, அவரோடு நாடகத்தில் நடித்தவரும், […]

Read more

காவ்யா ஒரு காவியம்

காவ்யா ஒரு காவியம், ஆரூர்தாஸ், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 125ரூ. 1000 திரைப்படங்களுக்கு மேல் வசனம் எழுதி சாதனை படைத்த ஆரூர்தாஸ், இப்போது நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் எழுதுவதிலும் சாதனை படைத்து வருகிறார். அவர் எழுதிய காவ்யா ஒரு காவியம், இலட்சியப் பயணம், இதய இலக்கணம், அரண்மனை வாரிசு ஆகிய 4 குறுநாவல்கள் இப்புத்தகத்தில் அடங்கியுள்ளன. பாசமலர் போன்ற காவியங்களை படைத்தவர் அல்லவா? இந்த குறுநாவல்களிலும் அவரது முத்திரையைப் பதித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 12/8/2015.   —- மருத்துவ நோபல், நெல்லை சு. […]

Read more

மீண்டும் ஒரு மழைக்காலத்தில்

மீண்டும் ஒரு மழைக்காலத்தில், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 210ரூ. கவிஞர் தியாரூ எழுதிய 21 சிறுகதைகளின் தொகுப்பு. இந்த நூலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொறு சிறுகதையையும் சமுதாயக் கண்ணோட்டத்துடனும், ஆழ்ந்த மனித நேயம் வெளிப்படும் விதமாகவும் எழுதியுள்ளார். சிறுகதை வளர்ச்சிக்கு ஆசிரியரின் அழகிய பங்களிப்பு இந்த நூல் என்றால் அது மிகையல்ல. எழுத்து என்பது சமூக நோக்கிற்கான ஓர் உபகரணம்-கருவி என்பதே உண்மை என்று அணிந்துரையில் கவுதம நீலாம்பரன் கூறி இருப்பதை உண்மை ஆக்கியருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 12/8/2015.   […]

Read more

ஏற்றுமதி இறக்குமதி வணிகம்

ஏற்றுமதி இறக்குமதி வணிகம், ஜஸ்டின் பால் ராஜீவ் அசேர்கர் , தமிழில் லயன் எம். சீனிவாசன், கற்பகம் புத்தகாலயம், சென்னை, விலை 250ரூ. ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் குறித்து ஜஸ்டின் பால் ராஜீவ் அசேர்கர் எழுதிய நூல். இதைத் தமிழில் லயன் எம்.சீனிவாசன் மொழிபெயர்த்துள்ளார். அயல்நாட்டு வர்த்தக நிறுவனங்களின் கட்டமைப்பு, இறக்குமதி ஏற்றுமதி ஆவணங்களை தயாரிக்கும் முறை, சுங்க இலாகாசெயல்பாடுகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து பற்றி விரிவாக விளக்கியுள்ளார். ஏற்றுமதி இறக்குமதி வணிகம் சவால்கள் நிறைந்த பணியாகும். அதில் ஈடுபடுவோர் கையாள வேண்டிய நெறிமுறைகள் […]

Read more

பேசாத பேச்செல்லாம்

பேசாத பேச்செல்லாம், ப்ரியா தம்பி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 288, விலை 170ரூ.   To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024596.html இன்றும்கூட ஆணாதிக்கம் இந்த சமூகத்தில் புரையோடிக் கிடக்கிறது. ஆணாதிக்கத்தின் அடிமைகளாய் கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களிலும் பெண்கள் கட்டுண்டு கிடக்கின்றனர் என்பதை நூலாசிரியர் இந்நூலில் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார். வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு முன்னேறிச் செல்லத் துடிக்கும் பெண்கள், அதற்கான வாய்ப்புகளைத் தேடி கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களை நோக்கி இடம்பெயர்கிறார்கள். ஆனால் பெண் என்பதால் அவர்கள் எத்தகைய துன்பங்களை […]

Read more

தமிழில் அறிவியல் புலம்

தமிழில் அறிவியல் புலம், கவிக்கோ ஞானச்செல்வன், மணிவாசகர் பதிப்பகம், பக். 96, விலை 50ரூ. எழுத்தாளர்களும், பேச்சாளர்களும், இதழ்களும் தமிழ் மொழியில் செய்யும் பிழைகளைச் சுட்டிக்காட்டி, இடித்துரைத்துத் தெளிய வைக்கிறார். நூலைப் படிப்போர் தமிழின் சிறப்புகளை உணர்வர். தெ.பொ.மீ., மு.வ., ராதாகிருஷ்ணன் ஆகிய பேராசிரியர்கள், கவிஞர் வாலி ஆகியோர் பற்றிய அவர்தம் கருத்துகள் நூலில் ஒளிர்கனிற்ன. பன்மொழிப் புலமைமையில் மு.வ., அவர்களைத் தெ.பொ.மீ. யோடு நிகராக்க இயலாது என, குறிப்பிட்டுள்ளமை, மனத்தை தொடுகிறது. ஆங்காங்கே நூலாசிரியரின் தன் வரலாற்றுச் செய்திகளையும் காண்கிறோம். பெயர் சுட்டப் […]

Read more
1 56 57 58 59 60 336