இருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை

இருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை, ரவி பிரகாஷ், உங்கள் ரசிகன் பதிப்பகம், விலை 420ரூ. 50 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். படிப்பதற்கு சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளன. ஒவ்வொரு கதைக்கும் பிரபல பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பல பிரமுகர்கள் வழங்கி இருக்கும் மதிப்புரைகள், சிறந்த முன்னோட்டமாக அமைந்து ஆர்வத்தை தூண்டுகின்றன. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027228.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

பேதமறுத்த பிராமணன்

பேதமறுத்த பிராமணன், ஆச்சாரியர் பிரம்மதர்மதாசன்(எழிலரசு), வேங்கடாசலம் பிள்ளை நினைவு வெளியீடு,  பக்.360, விலை ரூ.200. இந்திய வரலாற்றில் மேற்கு வங்க மாநிலம் பல மகத்தான மனிதர்களை உருவாக்கியிருக்கிறது. சுபாஷ் சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர், விவேகானந்தர், பக்கிம் சந்திரர் என்ற அந்த வரிசையில் மற்றுமொரு மகத்தான மனிதர் ராஜா ராம்மோகன் ராய். அவரது வாழ்க்கை வரலாற்றை முப்பத்தைந்து அத்தியாயங்களில் முழுமையாகப் பதிவு செய்கிறது இந்நூல். ராஜா ராம்மோகன் ராய் ஸதி எனப்படும் பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க பாடுபட்டவர் என்பது உலகமறிந்ததுதான். ஆனால் அவரது சாதனை […]

Read more

மெய்ப்பொய்கை பாலியல் பெண்களின் துயரம்

மெய்ப்பொய்கை பாலியல் பெண்களின் துயரம், தொகுப்பு ருச்சிரா குப்தா, தமிழில் சத்தியப்பிரியன், கிழக்கு பதிப்பகம், விலை 325ரூ. சதை தின்னும் கழுகுகள் மனித வாழ்வில் துயரங்களும் ஒரு அங்கமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சிலருக்கோ துயரங்களே வாழ்க்கையாகிப்போகிறது. பெண்களுக்குத் துயரங்கள் பெண்ணாக இருப்பதாலேயே வந்தடைகின்றன. பெண்ணின் உடல் ஆணின் வக்கிரத்தால் எந்தளவுக்குச் சீரழிக்கப்படும் என்பதை சராசரியான வாழ்விலுள்ளவர்களால் கற்பனை செய்யவே முடியாது. இந்த நேரத்தில் சின்னச் சின்ன சந்துகளிலும் மறைவிடங்களிலும் பூட்டிய அறைகளுக்குள்ளும் பாலியல் தொழிலிடங்களிலும், உறவினர்களாலும் நண்பர்களாலும் காமுகர்களாலும் எத்தனையெத்தனை உடல்கள் வன்முறைக்கு ஆளாகிக்கொண்டிருக்கின்றனவோ. பெண்களின் […]

Read more

திருக்குறள் வாழ்வியல் விளக்கவுரை

திருக்குறள் வாழ்வியல் விளக்கவுரை, இரா.இளங்குமரனார் (ஆறு தொகுதிகள்), பாவேந்தர் பதிப்பகம், தொகுதி-1, பக்.624, ரூ.500; தொகுதி-2, பக்.352, ரூ.300; தொகுதி-3, பக்.608, ரூ.500; தொகுதி-4, பக்.464, ரூ.350; தொகுதி-5, பக்.480, ரூ.400; தொகுதி-6, பக்.416, ரூ.350; ஆறு தொகுதிகள் மொத்தம் ரூ.2400; திருக்குறளுக்குப் பல்வேறு விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன – எழுதப்பட்டும் வருகின்றன. அவற்றுள்  இரா. இளங்குமரனாரின் திருக்குறளுக்கான வாழ்வியல் விளக்கவுரை தனிச்சிறப்புப் பெற்றது.திருக்குறள் நம் மறை என ஆணித்தரமாகக்கூறும் இளங்குமரனாரின் ஆழங்காற்பட்ட புலமையை இத்தொகுதிகள் வெளிப்படுத்துகின்றன. முப்பொருள் கூறிய திருவள்ளுவர்  பற்றிக் கூறாமைக்கான விளக்கம்; […]

Read more

என்னத்தச் சொல்ல…,

என்னத்தச் சொல்ல…, செ.சரவணா, ஜெயலக்ஷ்மி எண்டர்பிரைஸஸ், விலை 110ரூ. கிராமப்புறங்களில் ஒவ்வொரு மனிதரையும் ஓர் அடையாளமோ அடைமொழியோ சொல்லித்தான் அழைப்பார்கள். அப்படிப்பட்ட மண்மணம் கமழும் சாதாரண மனிதர்கள் எட்டுப்பேரின் அடைமொழிக்கான காரணக் கதைகள். கற்பனை என்றாலும் நிஜம்போல் நகர்கிறது கதை. அதற்குப் பக்கபலம் சேர்க்கிறது நெல்லை தமிழ் நடை. நன்றி: குமுதம்,17/10/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பாகன் திரும்பும் வரை

பாகன் திரும்பும் வரை, வலங்கைமான் நூர்துன், ஓவியா பதிப்பகம், விலை 80ரூ. வயற்காடு முதல் வான் மழைவரைதினம் நடக்கும் அவலங்களை மனம் தொட்டு உரசும் கவிதைகளாக வடித்திருக்கும் நூல். கைக்கு கனம் இல்லா புத்தகம், மனதை கனக்கச் செய்கிறது. நன்றி: குமுதம்,17/10/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பணம் மற்றும் பலன் தரும் மரங்கள்

பணம் மற்றும் பலன் தரும் மரங்கள், கா.த. பார்த்திபன், இரா.ஜுட் சுதாகர், பா.பழனிகுமரன், நா.கிருஷ்ணகுமார், கண்ணதாசன் பதிப்பகம், விலை 280ரூ. வனம் வளர்ந்தால் மனிதர்களின் வளம் பெருகும், வாழ்க்கை செழிக்கும் என்பது இயற்கையின் நியதி. ஆனால், வனங்கள் அழிந்து வசிப்பிடங்களாக மாறிவரும் இந்தக் காலகட்டத்தில், மரங்களின் அவசியத்தைச் சொல்லி, செழிப்பாக மரங்களை வளர்த்துப் பணமும் பலனும் பெற எளிய முறையில் வழிகாட்டும் நூல். நன்றி: குமுதம்,17/10/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027231.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

அன்புள்ள மாணவனே

அன்புள்ள மாணவனே, வெ. இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை135ரூ. சோதனைகளைக் கடந்து சாதனைகளைச் செய்ய விரும்பும் மாணவர்களுக்கு மகத்தான வழிகாட்டல். அறிவுரைகளாக இல்லாமல் அறவுரைகளாகவும், கடிந்து சொல்லாமல் கடிதங்களாகவும் எழுதியிருக்கும் விதம் அற்புதம். அனுபவத்தைப் பாடமாகத் தந்திருப்பதைப் படிக்கும் மாணவர் யாராயினும் ஏதேனும் ஒருவகையிலாவது சாதனை படைப்பார் என்பது நிச்சயம். நன்றி: குமுதம்,17/10/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026633.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஏழாம் நம்பர் வீடு

  ஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்), சுப்ரஜா, வாதினி, விலை 499ரூ. யதார்த்த வாழ்வில் நாம் அன்றாடம் பார்க்கும் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டும் நாற்பத்திரண்டு கதைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் சின்னச் சின்னதாக சட்டென்று நகர்ந்தாலும் அது ஏற்படுத்தும் தாக்கம் அவ்வளவு சீக்கிரம் மனதைவிட்டு நகராது என்பது நிஜம்! நன்றி: குமுதம்,17/10/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027247.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 […]

Read more

இஸ்லாமியத் தத்துவ இயல்

இஸ்லாமியத் தத்துவ இயல், ராகுல் சாங்கிருத்யாயன், ஏ.ஜி.எத்திராஜீலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 200, விலை 170ரூ. இந்நுால் ஹிந்தியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட ஒரு தத்துவ நுாலாகும். எளிய தமிழில் இஸ்லாமிய சமயம் குறித்த ஒரு ஆழ்ந்த சிந்தனையை, வரலாற்றை இந்நுால் முன்வைக்கிறது. முகமது நபி பெருமானது வரலாற்றில் துவங்கும் இந்நுால், இஸ்லாமிய சமயத்திலுள்ள கருத்து வேற்றுமைகளையும், கிழக்கிந்திய இஸ்லாமியத் தத்துவ அறிஞர்கள், ஸ்பெயினின் இஸ்லாமியத் தத்துவ அறிஞர்கள் குறித்தும், விரிவாக எடுத்துரைக்கிறது. இஸ்லாமியர் மட்டுமல்லாது, இம்மதத்தைப் பற்றி அறிய விழையும் அனைவருக்கும் […]

Read more
1 267 268 269 270 271 505