மௌனத்தின் நிழல்

மௌனத்தின் நிழல், கர்ணன், கவிதா பப்ளிகேஷன், பக்.320, விலை ரூ.280. விடுதலைப் போராட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு தமிழில் ஏற்கெனவே பல புதினங்கள் வந்துள்ளன. இதுவும் அவ்வகையிலானதுதான் எனினும், குறிப்பிட்ட ஓர் ஊரை மட்டுமே கதைக்களமாகக் கொண்டிருப்பதாலும், நிஜத்தில் வாழ்ந்து மறைந்தவர்களே கதாபாத்திரங்களாக இடம் பெற்றிருப்பதாலும் மற்றவற்றிலிருந்து வேறுபடுகிறது. ஆன்மிக நகரமாக அறியப்பட்டிருக்கும் மதுரை, தென்னிந்தியாவின் அரசியல் எழுச்சிக்குக் காரணமாக இருந்ததை ஏராளமான உண்மை நிகழ்வுகள் மூலம் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். தொடக்கத்தில் காவல்துறை அதிகாரி சேதுராமன் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்வதைப் படிக்கும்போதே […]

Read more

மீனும் பண் பாடும்

மீனும் பண் பாடும், ஹால்டார் லேக்ஸ்நஸ், தமிழில் எத்திராஜ் அகிலன், காலச்சுவடு பதிப்பகம், விலை 375ரூ. மாறுவேடமிட்டிருக்கும் நம் முகங்கள் நோபல் பரிசு பெற்ற ஹால்டார் லேக்ஸ்நஸை ‘மீனும் பண் பாடும்’ நாவல் மூலமாகத் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் எத்திராஜ் அகிலன். இந்த நாவலில் இழையோடும் பகடிக்காகவே ஆர்வத்தோடு வாசித்தார்கள். இன்றைய சமூகத்தில் உலகமயமாக்கல் விளைவித்திருக்கும் இடர்ப்பாடுகளை நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே யூகிக்கத் தொடங்கியிருக்கிறார் லேக்ஸ்நஸ். அயல்தேச கிராமவாசிகளின் நாட்டார் வழக்குகளும், அவர்களது வாழ்வுமுறையும், மனவோட்டங்களும் ஆச்சர்யத்தக்க வகையில் நமது சூழலுக்கு மிக […]

Read more

சுற்றுச்சூழல் சிதறல்கள்

சுற்றுச்சூழல் சிதறல்கள், ஜே.ஜோபிரகாஷ், ரேவதி பதிப்பகம், விலை 420ரூ. சுற்றுச்சூழல் பாழ்பட்டு வருவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. இதில் இடம் பெற்றுள்ள 100 கட்டுரைகளிலும் வளங்கள், நீர்நிலைகளை பாதுகாப்பது, பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் ஆபத்து போன்ற பயனுள்ள பல அரிய தகவல்கள், புள்ளி விவரங்கள் இடம்பெற்று உள்ளன. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027226.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

கலைஞர் ஆயிரம்

கலைஞர் ஆயிரம், வாழ்க்கையெனும் ஓடம், தொகுப்பாசிரியர் மு.கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 300ரூ. தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளால் புகழ்பெற்ற முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பற்றிய கவிதை புத்தகம் இது. டாக்டர் கலைஞர் புகழ் குறித்து, 249 கவிஞர்கள் இயற்றிய உணர்ச்சிகரமான கவிதாஞ்சலியை மு.கலைவேந்தன் அழகாகத் தொகுத்து தந்து இருக்கிறார். நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027225.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

அவள் பெண்ணியப் பார்வையில்

அவள் பெண்ணியப் பார்வையில், டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 90ரூ. பெண்ணியம் குறித்த விவாதங்களும், கருத்துகளும் உலக அளவில் இன்று ஒரு பேசு பொருள் ஆகிவிட்டது. இந்த நூலில் பெண்கள் தொடர்பான எல்லாப் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் இஸ்லாமிய பேச்சாளரும், எழுத்தாளருமான டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத் அலசி ஆராய்ந்துள்ளார். பெண்கள் இன்று எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு இஸ்லாம் கூறும் தீர்வுகளை அழகிய தமிழில் எளிய முறையில் எடுத்துக்கூறுகிறார். நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

இந்தியாவின் இருண்ட காலம்

இந்தியாவின் இருண்ட காலம், சசி தரூர், கிழக்குப் பதிப்பகம், விலை 350ரூ. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான இந்நூலாசிரியர், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், வெளியுறவுத் துறை இணையமைச்சர், ஐ.நா.வின் துணைப் பொதுச் செயலாளர் என்று பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியவர். தவிர, இந்திய அரசியல், கலாசாரம், வரலாறு, சமூகம், அயல்நாட்டுக் கொள்கை ஆகிய துறைகள் குறித்தும் பல நூல்களை எழுதியிருப்பதோடு, உலகம் அறிந்த பேச்சாளராகவும் திகழ்பவர். இவர், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் இந்தியாவை கொள்ளையடித்த வரலாற்றை இந்நூலில் விவரித்துள்ளார். ஆங்கிலத்தில் வெளிவந்த ‘An Era […]

Read more

இந்திய மண்ணை மணம் வீசச் செய்த இசுலாமிய மாமணிகள்

இந்திய மண்ணை மணம் வீசச் செய்த இசுலாமிய மாமணிகள், ஜெகாதா, நேஷனல் பப்ளிஷர்ஸ், பக்.160, விலை 140ரூ. பிரபல எழுத்தாளரும், மாற்று மதத்தைச் சார்ந்தவருமான இந்நூலாசிரியர், இஸ்லாம் குறித்த சில நூல்களையும் எழுதியுள்ளார். அந்த வகையில் இந்தியாவில் பல்வேறு துறைகளிலும் சுடர்விட்டுப் பிரகாசித்து, இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இஸ்லாமிய மாமனிதர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளையும், அவர்கள் புரிந்த சாதனைகளையும் இந்நூலில் எழுதியுள்ளார். ஆங்கிலேயர்களுக்கு முன் இந்தியாவை சுமார் 800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய மன்னர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் நல்லாட்சி புரிந்துள்ளார்கள். அதேபோல் […]

Read more

உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம்

உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம், ஆ.இரா.வேங்கடாசலபதி, டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், விலை 600ரூ. சுவடிகளில் மட்டுமே இருந்த பழங்கால தமிழ் இலக்கியங்களைத் தேடிச் சென்று எடுத்து பதிப்பித்து அவற்றுக்கு உயிர் கொடுத்த தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர், 1877 முதல் 1942 வரை தனக்கு வந்த அத்தனை கடிதங்களையும் பத்திரப்படுத்தி வைத்து இருந்தார். ஜி.யு.போப், மறைமலையடிகள், மனோன்மணியம் சுந்தரனார், சி.தியாகராஜசெட்டியார் மற்றும் பல ஜமீன்தார்கள், ஆதுனகர்த்தர்கள் போன்ற பலர் எழுதிய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை பொக்கிஷமாக சேகரித்து இருந்தார். இவற்றில் 700 கடிதங்கள் முதல் தொகுப்பாக […]

Read more

காக்க காக்க உடல் நலம் காக்க

காக்க காக்க உடல் நலம் காக்க, டாக்டர் பெ.போத்தி, வானதி பதிப்பகம், பக். 184, விலை 100ரூ. கால்நடை மருத்துவத்தில் தங்கப் பதக்கம் பெற்ற இந்நூலாசிரிர், மனிதனைத் தாக்கும் நோய்கள், அதற்கான காரணங்கள் மற்றும் மருத்துவ முறைகள் குறித்தும் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் ‘மனிதனைத் தொற்றும் விலங்கின நோய்கள், உடல்நலம் காக்க உன்னத வழிகள், நோயை அறிவோம் நோயின்றி வாழ்வோம்’ போன்ற நூல்கள் வாசகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்றதன் அடிப்படையில் இந்நூலையும் இயற்றியுள்ளார். பொதுவாக நம்மைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான நுண்கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள், […]

Read more

ஒரு வீடு ஒரு தேவதை

ஒரு வீடு ஒரு தேவதை, கவுசிக் பாபு, கவுதமா வெளியீட்டகம், விலை 275ரூ. 1950-ம் ஆண்டு கால கட்டத்தில் தமிழ் நாட்டின் கடைகோடி கிராமத்தில் வசிக்கும் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையை மிக இயல்பாக இயம்புகிறது இந்நாவல். கதையின் நாயகன் எளிமையான குடும்பத்தில் பிறந்து பல இடர்களை கடந்து, கல்வி கற்று அரசு பள்ளியின் ஆசிரியராக உயர்கிறான். ஆனால் திருமணத்திற்கு பிறகு ஆணாதிக்க மனப்பான்மை, பிடிவாதம், அதிகார திமிர் போன்றதாக மாறும் கதாநாயகனின் குணாதிசயங்கள் குடும்பத்தை தவிக்க வைக்கிறது. கதாநாயகனை கரம் பிடித்து வந்தவளும் […]

Read more
1 272 273 274 275 276 505