ரஜினீஷ் எனும் ஓஸோ

ரஜினீஷ் எனும் ஓஸோ, யோக சித்தர் டாக்டர் மானோஸ், ஹலோ பப்ளிகேஷன்ஸ், விலை 150ரூ. பாலுணர்வில் இருந்து விடுதலை அடைவதற்கு சரியான வழி சொன்னவர் ஓஸோ. தவறான அணுகுமுறையால் காமமே வாழ்க்கையாக்கிக் கொண்ட நமக்கு விடுதலை வாங்கி கொடுத்தவர் ஓஸோ. அவர் பாலுணர்வுவை மட்டும் போதிக்கவில்லை. பிரார்த்தனை, கடவுள், அன்பு மரணம், தியானம் இன்னும் மானிட சம்பந்தமான அனைத்தையும் அலசி ஆராய்ந்து 600 நூல்களில் தன்னுடைய கருத்தை பிரச்சாரமாக தந்துள்ளார். அந்த 600 நூல்களில் சொன்ன அத்தனை கருத்துக்களையும் ரத்தின சுருக்கமாக இந்த நூலில் […]

Read more

தமிழ்மகள் சிறுகதைகள்

தமிழ்மகள் சிறுகதைகள், தமிழ்மகள், உயிர்மை பதிப்பகம், விலை 550ரூ. பல நாவல்களும் ஏராளமான சிறுகதைகளும் எழுதியுள்ள தமிழ்மகன் என்கிற பா.வெங்கடேசன், ஜுனியர் விகடனில் பணியாற்றுகிறார். அவருடைய பல நாவல்கள், பரிசுகளும், விருதுகளும் பெற்றவை. இவர் எழுதிய சிறுகதைகள் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டு ஒரே புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 80 சிறுகதைகள் இதில் அடங்கியுள்ளன. 3 பக்கக் கதைகளும் உண்டு. 10 பக்க கதைகளும் உண்டு. கதைகளை வீணாக வளர்க்காமல், வார்த்தைகளை சிக்கனமாகக் கையாண்டு, விறுவிறுப்பாக எழுதியுள்ளார். பரிசு பெற்ற கதைகளும் பாராட்டுப் பெற்ற கதைகளும் நிறைய […]

Read more

முத்தும் பவளமும்

முத்தும் பவளமும், தொகுப்பாசிரியர் முஹம்மது ஃபுஆத் அப்துல் பாக்கீ, சாஜிதா புக் சென்டர், பக். 944, விலை 400ரூ. இஸ்லாமிய வாழக்கைக்கு வழிகாட்டியாக இருப்பவை திருக்குர்ஆனும், ஹதீஸும். குர்ஆன் என்பது இறைவன் அருளிய வேதம். ஹதீஸ் என்பது நபிகள் நாயகம்(ஸல்)) அவர்கள் அருளிய வாழ்க்கை நெறி. இஸ்லாமியர்களின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபிகள், தனது வாழ்க்கை முறையைக் கொண்டே வழிகாட்டினார்கள். அவற்றின் தொகுப்பே ஹதீஸ் நூல்கள். இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, தர்மம், வியாபாரம், கல்வி சமூக […]

Read more

சந்தோசம்

சந்தோசம், மு.ஞா.செ.இன்பா, பந்தள பதிப்பகம், விலை 299ரூ. கலை பேசும் சந்தோசம் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, கடும் உழைப்பாலும், நேர்மையாலும் வெற்றியின் சிகரத்தைத் தொட்டவர்கள் வி.ஜி.பன்னீர்தாஸ் சகோதரர்கள். அண்ணன் பன்னீர்தாஸ் எதிர்பாராதவிதமாக இளமையிலேயே மறைந்து விட, சோதனைகளைத் தாங்கி அந்த நிறுவனத்தை கோபுரம் அளவுக்கு உயரச் செய்தவர் வி.ஜி.சந்தோஷம். எதிர்நீச்சல் போட்டு முன்னேறிய சந்தோஷத்தின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்புடன் எழுதியுள்ளார் நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா. ஏராளமான படங்களுடன், கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணம் புத்தகம் அமைந்துள்ளது. வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்கள் அவசியம் படிக்க […]

Read more

வியப்பின் மறுபெயர் வீரமணி

வியப்பின் மறுபெயர் வீரமணி, மஞ்சை வசந்தன், திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, விலை 250ரூ. திராவிட கழக தலைவர் கி.வீரமணியின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல். ஒரு காவிய நாயகரின் வரலாற்றை, காவியமாகவே படைத்திருக்கிறார் மஞ்சை வசந்தன். புத்தகத்தை கையில் எடுத்தால், கீழே வைக்க மணம் வராது. அந்த அளவுக்கு சுவை, விறுவிறுப்பு. புத்தகத்தில் உள்ள மறக்க முடியாத சில தவல்கள் பிறந்து 11 மாதமே ஆகி இருந்த நிலையில் வீரமணியின் தாயார் மறைந்தார். அதன் பின் சிற்றன்னையால் வளர்க்கப்பட்டார். இவருடைய இயற்பெயர் சாரங்கபாணி. […]

Read more

விடுதலைப் போர் தெரிந்த பெயர்கள் தெரியாத தகவல்கள்

விடுதலைப் போர் தெரிந்த பெயர்கள் தெரியாத தகவல்கள், ஆர்.பி.வி.எஸ். மணியன், அத்வைத் பப்ளிஷர்ஸ், பக். 200, விலை 120ரூ. இன்றைய தலைமுறையினருக்கு அந்நியர்களிடம் குறிப்பாக வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நம்நாட்டை மீட்டெடுக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்த நம் விடுதலைப் போராட்ட வீரர்களின் அருமை, பெருமைகளை நினைவூட்டுவது காலத்தின் கட்டாயமாக உள்ளது. காரணம், தேச விடுதலை என்றால் என்ன, அந்நியர்களிடம் தேசம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது நாட்டில் நடந்த நிகழ்வுகள் என்ன, அதனால் மக்கள் அன்றாடம் அடைந்த துயரங்கள் என்ன… என்பன போன்ற […]

Read more

இந்தியாவின் இலட்சிய மகளிர்

இந்தியாவின் இலட்சிய மகளிர், வசந்தநாயகன், ஸ்ரீகுருஇராகவன் பப்ளிகேஷன்ஸ், விலை 50ரூ. மாலவனுக்குத் தொண்டு செய்த ஆண்டாள் முதல் மக்களுக்கு சேவை செய்த மதர் தெரசா, ஜெயலலிதா வரை இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த மங்கையர்கள், பதினேழுபேரின் சுருக்கமான வரலாறு. ஜான்சிராணியின் இயற்பெயர் மணிகர்ணிகா என்பது போன்ற பலருக்கும் தெரியாத தகவல்களும் உண்டு. -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more

கடல் பயணங்கள்

கடல் பயணங்கள், மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 130ரூ. பயணிகளால்தான் பாதை உருவானது. அதுதான் உருண்டையான உலகின் இரு முனைகளை இணைக்க உதவியது. வாஸ்கோடகாமா, மார்கோபோலோ, கொலம்பஸ் என பன்னிரண்டுபேர் கடலோடிகளாகப் பயணித்து பல்வேறு சிரமங்களுக்கு இடையே கடல்வழிப் பாதைகளையும் அதன் வழிசென்று பல நாடுகளையும் கண்டுபிடித்த வரலாறு. கதைபோல் சொல்லப்பட்டிருப்பது சுவாரஸ்யம்! -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more

கொஞ்சம் பயமாய் இருக்கிறது

கொஞ்சம் பயமாய் இருக்கிறது, நர்மதா, படிவெளியீடு, விலை 90ரூ. சுற்றி நடக்கும் அநீதியைத் தட்டிக் கேட்க முயலாமல், உள்ளுக்குள் நொறுங்கி வெளியே தைரியசாலியாய் வேஷம் போடும் மனத்தின் மனக்குரலாய் ஒலிக்கும் கவிதைகள். நேசம், பாசம், பரிதவிப்பு, நெகிழ்ச்சி என்று ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு உணர்வின் வெளிப்பாடு. -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more

விடை தெரிந்த மர்மங்கள்,

விடை தெரிந்த மர்மங்கள், குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், விலை 160ரூ. தோன்றி நாள் முதல் எத்தனை எத்தனையோ மர்மங்களைத் தனக்குள் புதைத்துக் கொண்டு சுன்று கொண்டிருக்கிறது இந்த உலகம். மறைந்து கிடக்கும் இந்த மர்மங்கள் பலவற்றுக்கான விடையை தேடிக்கொண்டே இருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அவற்றுள் விடை தெரிந்தவற்றின் தொகுப்பு. படிக்கப் படிக்க, மர்மக் கதையைப் படிப்பது போன்ற சுவாரஸ்யம் எட்டிப்பார்க்கிறது. -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more
1 336 337 338 339 340 505