நெருப்புப் பொறிகள்

நெருப்புப் பொறிகள், அரசியல் சமூக பொருளாதாரக் கட்டுரைகள், பேராசிரியர் மு. நாகநாதன், கதிரொளி பதிப்பகம், விலை 150ரூ. ஆழமும் விரிவும் தமிழ்நாட்டில் வாழும் முக்கியமான பொருளாதாரம், மாநில சுயாட்சியில் அறிஞரான பேராசிரியர் நாகநாதனின் கருத்துக்கள் எப்போதுமே கவனிக்கத்தக்கன. திமுக தலைமைக்கு நெருக்கமானவராக இருந்தாலும் கூட அவரது கருத்துகளில் துணிச்சலும் தனித்துவமும் இருக்கும். அவர் சிந்தனையாளன் இதழில் குட்டுவன் என்ற பெயரில் எழுதிவந்த தொடர் பத்தியிலும் இந்த தனித்துவம் இருந்தது. இந்திய அரசியல், உலக அரசியல், பொருளாதாரம், மதம், நீதித்துறை, சாதியம், மத்தியில் ஆளும் கட்சிகள் […]

Read more

வாங்க பேசலாம் செல்லம்ஸ்

வாங்க பேசலாம் செல்லம்ஸ், இளங்கோவன் கீதா, படி வெளியீடு, விலை 100ரூ. இளங்கோவன் முகநூலில் எழுதிய குறிப்புகள் வானத்திற்குக் கீழான அனைத்து விஷயங்களைப் பற்றியும் பேசுகின்றன. வகைப்படுத்த முடியாதபடிக்கு ஆவேசமும், அன்பும், கருணையும், விவாதமும் கொண்ட பகுதிகள். மெல்லிய புன்னகையோடு ரொம்பவும் உள்புகுந்து வருந்தாமல் செல்கிற சுலபமான பத்திகள். எல்லோருடைய வாழ்க்கைக்கும் சம்பந்தம் உடைய பகுதிகளைப் பற்றி பேசுவதால் நமக்கு நெருக்கமாகிவிடுகின்றன. எப்போதுமே உண்மைக்கு அருகில் இருப்பவை சுவாரஸ்யம் நிரம்பியவை. வாழ்க்கையைக் கொண்டாட்டமாகப் பார்த்து, முன் பின்னாய் யோசித்துப் பார்த்து எழுதப்பட்டவை. காதலர் தின […]

Read more

மலரும் நினைவுகளில் காமராஜர்

மலரும் நினைவுகளில் காமராஜர், விருதை ராஜா, கண்ணப்பன் பதிப்பகம், பக். 112, விலை 70ரூ. காமராஜர் பற்றிய 100 நிகழ்வுகளைத் தொகுத்து மலரும் நினைவுகளாகத் தந்துள்ளார் நூலாசிரியர். தமிழக மக்களின் கல்விக் கண்ணைத் திறக்க அவர் உழைத்த உழைப்பு இங்கே சித்திரமாகக் காட்டப்பட்டுள்ளது. அவரது தியாகம், தொண்டு, எளிமை ஆகியவற்றைப் படிக்கப் படிக்க அது புதிய சரித்திரமாக நம்முன் வந்து நிற்கிறது. மனிதன் மனிதனாக வாழ விழிப்புணர்வு ஊட்டும் நூலாக அது விளங்கும் என்பது உண்மையே. நன்றி: குமுதம், 26/4/2017.

Read more

உறவுகள் பலவிதம்

உறவுகள் பலவிதம், சந்திராமனோகரன், ஒலிவியா பதிப்பகம், பக்.164, விலை 150ரூ. முற்போக்கு சிந்தனையுள்ள, இளைஞர்கள் கூட்டணி அமைத்து, வேர்கள் இறுகிப்போனாலும் விழுதுகள் மரத்தைத் தாங்கி நிற்கும் என்ற கருத்தை ஆழமாகப் பதிவு செய்யும் புதினம். பழைய சாதி சமய முரண்பாடுகளை முறியடித்து அவர்கள் புதுயுகம் படைக்கிறார்கள். கார்த்திக், கல்பனா, மணிவண்ணன் நம் வாழ்வின் நிஜங்கள். நன்றி: குமுதம், 26/4/2017.

Read more

எரியத் துவங்கும் கடல்

எரியத் துவங்கும் கடல், அ.வெண்ணிலா, அகநி, விலை 275ரூ. பெண்முகம் ‘நானும் கவிதையும் வேறுவேறல்ல, கவிதை பெயரிடப்படாத நான், நான் பெயரழிந்த கவிதை’ என்ற நூலின் முகப்பிலேயே குறிப்பிடும் கவிஞர் வெண்ணிலா இந்த கவிதைத் தொகுப்பில் தன் மொத்த கவியுலகத்தையும் பார்வைக்கு வைக்கிறார். பொதுவாக கவிதை என்பதை மொழி தெரிந்த யார் வேண்மாடுனாலும் எழுதிவிடக்கூடும். ஆனால், அதன் பின்னால் இயங்கும் பித்துப்பிடித்த கவிமனம் தான் கவிஞருக்கும் ‘தொழில் நுட்பவாதிகளுக்கான’ வித்தியாம். வெண்ணிலாவின் கவி உள்ளம் நெகிழ்ச்சியானது. உறவுகளை, உணர்வுகளை, வாழ்வை, சூழலை நெகிழ்வோடு காண்கிறார். […]

Read more

மகாபாரதக் கதைகள்

மகாபாரதக் கதைகள், ஆர். கல்யாண மல்லி, அழகு பதிப்பகம், பக். 200, விலை 165ரூ. மனித வாழ்க்கையில் தோன்றும் பல்வேறு பிரச்னைகளையும் எப்படி எதிர்கொண்டு வாழ வேண்டும் என்ற வழிமுறைகளைக் கூறுபவைதான் ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்கள். குறிப்பாக பெண்ணாசையும், மண்ணாசையும் இல்லாத மனிதர்களைக் காண்பது அரிது. அவை முறையற்றதாக இருந்தால், என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை, பல்வேறு கதாபாத்திரங்களைக் கொண்டு விளக்கி, மனித வாழ்க்கைக்குரிய அறத்தைப் போதிப்பதால், இவை இன்றும் போற்றப்படுகின்றன. மஹாபாரதம் முடிந்த சமயத்தில்தான் கலியுகம் பிறந்ததாகக் கூறப்படுகிறது. பாண்டவர்கள், கௌரவர்கள், […]

Read more

பொருளறிவியல் கற்பித்தல்

பொருளறிவியல் கற்பித்தல், டாக்டர் அ. பன்னீர் செல்வம், டாக்டர் வி. நடராஜன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 272, விலை 170ரூ. பொருள் அறிவியல் என்றால் என்ன? அதன் குறிக்கோள், நோக்கம் யாது? அவை எவ்வாறு கற்பிக்கப்படவேண்டும்? என்பன போன்ற உள்ளடக்கங்களுடன் கூடிய நூல். பி.எட். கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் பயன்பெறும் வகையில் அதன் சிறப்புப் பேராசிரியர்களால் எழுதப்பட்ட முதல்நூல் இது. மாணவர்களை ஆசிரியர்களாக உருவாக்கும் பணியில் இந்நூல் சிறப்பிடம் பெறும். நன்றி: குமுதம், 26/4/2017.

Read more

மௌனத்தின் மொழிபெயர்ப்பாளன்

மௌனத்தின் மொழிபெயர்ப்பாளன், ஜெயசிவா, நந்தவனம் பதிப்பகம், பக். 64, விலை 60ரூ. மனித வாழ்வின் யதார்த்தத்தையும் சமூகத்தின்மேல் உள்ள கோபத்தையும் நமக்கு மொழிபெயர்த்துத் தந்து மனதின் ஆழத்தில் பதித்துவிட்டுச் செல்கிறார் கவிஞர் ஜெயசிவா. தவிக்கிறது தமிழ்க் குழந்தை தாய்பாலுக்காக ஆங்கிலப்பள்ளிகளில் -கவிஞரின் தவிப்பு நம்மையும் தவிக்க வைக்கிறது. நன்றி: குமுதம், 26/4/2017.

Read more

புகழ்பெற்ற பஞ்ச தந்திரக் கதைகள்

புகழ்பெற்ற பஞ்ச தந்திரக் கதைகள், எஸ். தமயந்தி, சுவாமிமலை பதிப்பகம், பக். 176, விலை 60ரூ. நீதியை கதைகள் வாயிலாகக் கூறி, இளம் உள்ளங்களை ஒழுக்க நெறிக்கு இட்டுச் செல்வதால் பஞ்ச தந்திரக் கதைகள் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகின்றன. கதைகளை விலங்குகள் மூலம் சொல்லுவதால் சொல்ல வந்த கருத்துக்கள் இன்னும் ஆழமாகப் பதிகிறது. மாணவர்கள் எளிதில் படித்துப் புரிந்துகொள்ளும் எளிய இனிய நடையில் நூல் அமைந்திருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 26/4/2017.

Read more

மேயோ கிளினிக் – நீரிழிவைச் சமாளிப்பது எப்படி?

மேயோ கிளினிக் – நீரிழிவைச் சமாளிப்பது எப்படி?,  மரியா கொலாசோ, கிளாவெல்; தமிழில் சிவசுப்ரமணிய ஜெயசேகர்; அடையாளம், பக்.264, விலை ரூ.190. அமெரிக்காவின் ரோசெஸ்டர் நகரில் தொடங்கப்பட்ட மேயோ கிளினிக், இன்று பல பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. அதை நடத்துபவர்கள் தங்களுடைய அனுபவம், அறிவின் அடிப்படையில் பல நோய்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாக நூல்களை வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் ஒன்றுதான் இந்நூல். நீரிழிவு நோய் சிறுவர், பெரியவர், ஆண், பெண் என்ற வேறுபாடின்றி எல்லாருக்கும் வரக்கூடிய நோயாக இருக்கிறது. போதிய உடற்பயிற்சியின்மை, உணவுமுறை, வாழ்க்கைமுறை […]

Read more
1 406 407 408 409 410 505