தாம்பத்திய வழிகாட்டி அந்தப்புரம்

தாம்பத்திய வழிகாட்டி அந்தப்புரம், விகடன் பிரசுரம், விலை 125ரூ. புதிதாக மணம் செய்து கொண்டவர்கள், மணம் செய்யப்போகிறவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி பிரபல டாக்டர் டி. நாராயண ரெட்டி இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். கேள்வி – பதில் பகுதியும் அடங்கியுள்ளது. ஷ்யாம் வரைந்துள்ள படங்கள் கண்ணைக் கவருகின்றன. நன்றி: தினத்தந்தி, 23/3/2017   —-   இரா. இரவியின் படைப்புலகம், பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், விலை 70ரூ. இரா.இரவி எழுதிய 10 நூல்களுக்கு இரா. மோகன் எழுதிய அணிந்துரைகள் […]

Read more

நெஞ்சில் நிறைந்த ஏ.என்.

நெஞ்சில் நிறைந்த ஏ.என்., நன்னூல் அகம், விலை 160ரூ. சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் இயக்குனராகப் பணியாற்றிய ஏ. நடராஜன், எல்லோராலும் அன்புடன் “ஏ.என்.” என்று அழைக்கப்பட்டவர். எழுத்தாளர், இசை ஆர்வம் மிக்கவர், சொற்பொழிவாளர் என்று பன்முகம் கொண்டவர். அவரால் வாழ்க்கையில் முன்னேறியவர்கள் ஏராளம். நடராஜனின் சிறப்புகளை பல்வேறு கோணங்களில் பாராட்டியுள்ள பல வி.ஐ.பி.கள் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் அடங்கியுள்ளன. ஏ. நடராஜனுடன் நெருங்கிப் பழகியவரான நல்லிகுப்புசாமி செட்டியார் இந்த நூலை மிகச் சிறப்பாகத் தொகுத்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 23/3/2017

Read more

ஐஎஸ்ஐஎஸ் கொலைகாரன் பேட்டை

ஐஎஸ்ஐஎஸ் கொலைகாரன் பேட்டை, பா. ராகவன், கிழக்கு பதிப்பகம், விலை 140ரூ. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்து எழுத்தாளர் பா. ராகவன் எழுதிய நூல். அல்கொய்தாவுக்கு பிறகு சர்வதேச சமூகத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தோற்றம், அதன் செயல்பாடுகள் குறித்து விரிவாக எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 23/3/2017.   —-   திருவாசகம், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்தின் மூலமும் உரையும் அடங்கிய நூல். உடலையும் உள்ளத்தையும் ஒருசேர உருக்குகின்ற திருவாசத்திற்கு உரையாசிரியர் தமிழ்ப்பிரியன் எளிய வகையில் விளக்கம் […]

Read more

தொல்காப்பியம் முதல் ஐக்கூ வரை

தொல்காப்பியம் முதல் ஐக்கூ வரை, துரை.குணசேகரன்,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக்.148. விலை ரூ.140. இலக்கியப் பணிகள் (மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை), இலக்கணம் (தொல்காப்பியம்), யாப்பிலக்கணம்(யாப்பருங்கலக்காரிகை), அகப்புற நூல்கள் (கலித்தொகை, புறநானூறு), அறநூல்கள் (நான்மணிக்கடிகை, ஏலாதி), பதிப்புப் பணிகள் (ச.மெய்யப்பன்), வள்ளுவம் (மூன்று கட்டுரைகள்), ஐக்கூ (கவிதை) எனப் பல்வேறு துறைகளில் அமைந்த, பல்வேறு கருத்தரங்களில் வாசிக்கப்பட்ட பன்னிரு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் இலக்கியப் பணிகள், தொல்காப்பிய மொழிமரபு, கலித்தொகையின் கருத்தும் காட்சியும், வள்ளுவத்தில் காணப்படும் ‘உடைமை 39‘, பண்புகள், நான்மணிக்கடிகை […]

Read more

பயண சரித்திரம்

பயண சரித்திரம், முகில், சிக்ஸ்த்சென்ஸ், விலை 333ரூ. ஆதிகாலத்தில், உலகம் உருண்டையானதா, தட்டையானதா என்று மனிதனுக்குத் தெரியாது. படகுகளிலும், கப்பல்களிலும் வீரப்பயணம் மேற்கொண்டவர்களால்தான் உலகம் பற்றிய பல உண்மைகள் தெரிய வந்தன. மாமன்னர் அலெக்சாண்டர், பாஹியான், யுவான்சுவாங், மார்க்கோபோலோ போன்றவர்கள் மேற்கொண்ட சாகசப் பயணங்கள், உலக வரலாற்றில் அழியா இடத்தைப் பெற்றுள்ளன. இவர்களுடைய பயணம் பற்றிய விவரங்களை மெய்சிலிர்க்கச் செய்யும் வண்ணம் எழுதியுள்ளார் முகில். இதுவரை அதிகமாக அறியப்படாத பல புதிய செய்திகள் புத்தகத்தில் நிறைந்துள்ளன. உதாரணம், தன் குரு அரிஸ்டாட்டிலுக்கு இந்தியாவில் இருந்து […]

Read more

புத்தம் சரணம் கச்சாமி

புத்தம் சரணம் கச்சாமி, ஈ.அன்பன், திரிபீடக தமிழாக்க நிறுவனம், விலை 150ரூ. புத்தரின் வரலாற்றையும், அவருடைய போதனைகளையும் விரிவாக விளக்கும் நூல். மன்னராக வாழ்ந்தவர், மக்களுக்குத் தொண்டு செய்வதற்காக துறவியான சம்பவம், உலகம் அதற்கு முன்போ பின்போ நடந்திராத ஒன்றாகும். எல்லாம் வல்ல கடவுள் ஒருவர் உண்டு என்று பவுத்தம் நம்புவதில்லை. அதாவது புத்தர், கடவுள் நம்பிக்கை அற்றவர். நாத்திகர். ஆனால் பல நாடுகளில் புத்தரையே கடவுளாக வணங்குகிறார்கள். புத்தர் பிறந்த இந்தியாவில் புத்த மதம் வளரவில்லை என்றாலும், கடல் கடந்த பல நாடுகளில் […]

Read more

வேர்

வேர், அ.மா. சாமி, நவமணி பதிப்பகம், விலை 240ரூ. குரும்பூர் குப்புசாமி, அமுதா கணேசன் முதலிய புனை பெயர்களில் பல நாவல்கள் எழுதியுள்ள அ.மா. சாமி, இப்போது தன் சொந்தப் பெயரில் எழுதியுள்ள புதிய நாவல் ‘‘வேர்”. லஞ்சத்தை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. “லஞ்சம் எப்படித் தோன்றுகிறது? அதற்குக் காரணம் யார்?” என்று ஆராயும் ஆசிரியர், பல திடுக்கிடும் உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார். லஞ்சத்தை ஒழிப்பதற்கான வழிகளையும் கூறுகிறார். துள்ளல் நடையில் நாவலை விறுவிறுப்பாக எழுதியுள்ளார் அ.மா. சாமி. நன்றி: […]

Read more

சாதி தேசத்தின் சாம்பல் பறவை

சாதி தேசத்தின் சாம்பல் பறவை, எவிடன்ஸ் கதிர், விகடன் பிரசுரம், விலை 175ரூ. எத்தனை நிறங்களைப் பூசி இதை இந்திய தேசம் என்று நாம் சொல்லிக்கொண்டாலும், நாட்டு நடப்புகள் அத்தனையும் இதை, ‘சாதி தேசம்’ என்றுதான் தினமும் சொல்லிக்கொண்டிருக்கிறது. கோயில் முதல் கொலைகள் வரை, கல்யாணம் முதல் கருமாதி வரை, கிராமத்துப் பள்ளிகள் முதல் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் வரை நடக்கும் சம்பவங்கள் திரும்பத் திரும்பச் சொல்வது, ‘சாதி தேசம்’ என்ற அடையாளத்தைத்தான். அதற்கான ‘எவிடென்ஸ்’தான், கதிர் எழுதியுள்ள இந்தப் புத்தகம். சிலரைப் […]

Read more

சில கவிதைகள் சில கதைகள் சில கட்டுரைகள்

சில கவிதைகள் சில கதைகள் சில கட்டுரைகள், அழகிய சிங்கர், விருட்சம்,  பக். 136, விலை ரூ.100. எழுத்தாளர் அழகியசிங்கரின் 27 கவிதைகள், 8 சிறுகதைகள், 12 கட்டுரைகள் ஆகியவை அடங்கிய தொகுப்பு இது. பெரும்பாலான சிறுகதைகள் மிகவும் எளிமையாகவும் நேரடித்தன்மையுடனும் இருக்கின்றன. எழுத்தாளரான வங்கி அதிகாரி மீது வாடிக்கையாளர் ஒருவர் புகார் கொடுக்க, அதனால் அவருக்கு ஏற்படும் மன உளைச்சல்கள், திடீரென பணி நீக்கம் செய்யப்பட்ட வங்கி ஊழியர் ஒருவரை மீண்டும் பணியில் சேர்க்க முயற்சி செய்யும் வங்கி அதிகாரி முடிவில் தோல்வியடைவது […]

Read more

வருடம் முழுவதும் வசந்தம்

வருடம் முழுவதும் வசந்தம், ச. உமாதேவி, நந்தினி பதிப்பகம், பக். 254, விலை 200ரூ. இன்றைய இளைய சமுதாயம் ஆற்றல் மிக்க சமுதாயமாக விளங்குகிறது. அவர்களுக்கு நம் நாட்டில் தோன்றி நம் நாட்டு மக்களுக்காக பாடுபட்ட தியாகிகள் பலரின் வரலாற்றை சாதனையை தெரிந்து கொண்டால் இன்னும் உற்சாகமாக செயல்படுவார்கள். அந்த வரிசையில் நம் தலைவர்கள் சிலரின் வீரத்தியாகம் பற்றிய ஒரு வரலாற்றுத் தொகுப்பாக இந்நூலை உருவாக்கியுள்ளார் நூலாசிரியர். நன்றி: குமுதம், 19/4/2017.

Read more
1 408 409 410 411 412 505