108 தென்னக சிவஸ்தலங்கள்

108 தென்னக சிவஸ்தலங்கள், பொன்னம்மாள், கிரி டிரேடிங் ஏஜென்ஸி, விலை 250ரூ. எந்நாட்டவருக்கும் இறைவனாகி, தென்னகத்தை தன்னகத்தாய் கெண்டு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அனைத்தினையும் தனதாக்கிக் கொண்ட சிவபெருமானுக்கும் நம் முன்னோர்களால் எண்ணற்ற சிவாலயங்கள் எழுப்பப்பட்டன. அவைகளில் பிரதானமான 108 சிவாலயங்களைப் பற்றிய முழு விவரங்கள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான கோவில்களோடு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலுள்ள புகழ்பெற்ற கோவில்களும், பின் இணைப்பாக காசி, கேதாரேஸ்வர கோவில்களும் ஸ்தல புராணம், ஆலய அமைப்பு, அமைவிடத்தோடு அரிய […]

Read more

அதிசயங்களின் ரகசியங்கள்,

அதிசயங்களின் ரகசியங்கள், நெய்வேலி பாரதிக்குமார், தினத்தந்தி பதிப்பகம், விலை 160ரூ. உலகில் இறைவன் படைத்த அதிசயங்கள் ஒருவகை, மனிதன் உருவாக்கிய அதிசயங்கள் இன்னொரு வகை. உலக அதிசயங்கள் குறித்தும், அதில் புதைந்து கிடக்கின்ற ரகசியங்கள் பற்றியும் அதில் புதைந்துகிடைக்கின்ற ரகசியங்கள் பற்றியும் எழுத்தாளரும், பொறியாளருமான நெய்வேலி பாரதிக்குமார், தினத்தந்தி முத்துச்சரம் பகுதியில், ‘அதிசயங்களின் ரகசியங்கள்’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி வந்தார். பல சுவாரஸ்யமான வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கிய இந்தக் கட்டுரைத் தொடர் வாசகர்களின் அபரிமிதமான ஆதரவைப் பெற்றது. தொடராக வந்ததைக் காட்டிலும் […]

Read more

நீங்களும் படிக்கலாம்

நீங்களும் படிக்கலாம், அழகியசிங்கர், விருட்சம், பக். 84, விலை 60ரூ. இந்நூலாசிரியர் அண்மையில் தான் படித்த எட்டு நாவல்கள், ஐந்து கவிதைத் தொகுதிகள், ஐந்து கட்டுரைத் தொகுதிகள், இரண்டு சிறுகதைத் தொகுதிகள் என மொத்தம் இருபது நூல்களைப் பற்றி இந்நூலில் சுருக்கமாக அறிமுகம் செய்திருக்கிறார். அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்ற முதல் வரிசை எழுத்தாளர்களிலிருந்து தனது முதல் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டிருக்கும் ராமலக்ஷ்மி வரை பலருடைய நூல்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கைப் பின்னணியில் ஜாதிப் பிரச்னைகளின் பல்வேறு முகங்களைக் காட்டும் “சஞ்சாரம்’‘ […]

Read more

தித்திக்கும் தேனினும் தெவிட்டாத திருக்கோயில்கள்

தித்திக்கும் தேனினும் தெவிட்டாத திருக்கோயில்கள், ஏ.எம். ராஜகோபாலன், குமுதம் பு(து)த்தகம், (பாகம் 1) பக். 152, விலை 125ரூ, (பாகம் 2) பக். 152, விலை 125ரூ. குமுதம் ஜோதிடம் ஆசிரியர் ஏ.எம். ராஜகோபாலன் அந்த இதழில் பல்வேறு திருத்தலங்கள் குறித்து எழுதிய தொடர் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, 2 பாகங்களாக வெளிவந்துள்ளன. முதல் பாகத்தில் 18 கட்டுரைகளும், இரண்டாம் பாகத்தில் 23 கட்டுரைகளும் உள்ளன. பலருக்கும் தெரியாத அபூர்வ திருத்தலங்கள் குறித்தும், ஏற்கெனவே தெரிந்த கோயில்கள் குறித்த தெரியாத பல தகவல்களையும் தனக்கே உரிய […]

Read more

அதிர்வுகள்

அதிர்வுகள், இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள், விகடன் பிரசுரம், பக்.290, விலை ரூ.160. சிறந்த ஆன்மிக, இலக்கியச் சொற்பொழிவாளரான இலங்கை ஜெயராஜ் எழுதிய 27 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பல கட்டுரைகள் சிந்திக்க வைக்கின்றன; சில கட்டுரைகள் சிரிக்க வைக்கின்றன; அதேவேளையில், சில கட்டுரைகள் நம்மை அழ வைக்கின்றன. இதற்கிடையே, வாழ்க்கையில் பின்பற்றக்கூடிய தத்துவங்களும் சில கட்டுரைகளில் இடம்பெற்றுள்ளன. “பெரிய மாமி’‘ என்ற கட்டுரை தமிழ்ப் பெண் குலத்தின் மாண்பையும், பண்பாடு, கணவன் மீதான பாசத்தையும் பறைசாற்றுகிறது. கணவனுடன் வாழ்ந்தபோது பட்டுப்புடவை, நகைகள், அலங்காரங்களுடன் வலம் […]

Read more

ஆதி சைவர்கள் வரலாறு

ஆதி சைவர்கள் வரலாறு, தில்லை எஸ். கார்த்திகேய சிவம், ஆதி சைவர்கள் நல வாழ்வு மையம் வெளியீடு, பக். 184, விலை 200ரூ. சிவாலயங்களில் பூசனை புரியும் மரபினர் ஆதி சைவர் எனப்படுகின்றனர். சிவ வேதியர், சிவாச்சாரியர் முதலாகிய இருபது பெயர்களால் அழைக்கப்படும், ஆதி சைவர்கள் ஆகமங்களினால் திருக்கோவில்களின் நாட்பூசனைகள், சிறப்புப் பூசனைகள், வேள்விகள், சடங்குகள் முதலியவற்றைச் செய்வோர் ஆவர். சிவாச்சாரியர் மரபு பற்றி சங்க நூலாகிய பரிபாடல் துவங்கிப் பல்வேறு இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகளில் உள்ள செய்திகளையும், சில பல வரலாற்றுக் குறிப்புகளையும் […]

Read more

அழகான அம்மா

அழகான அம்மா, (ரஷ்ய சிறார் கதைகள்), யூமா வாசுகி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 352, விலை 290ரூ. குழந்தைகளுக்கு கதை சொல்ல ஆசையா? குழந்தைகளின் உலகம் மிக இனிமையானது. சாதாரண விஷயங்களையும் கதையாக சொல்லும் போது, ஈர்க்கும் பருவம் அது. வாழ்க்கையின் புரிதலை, கதை வழியாக கேட்பதால் ஆனந்தமடையும் வயது. அதனால் தான், வீடியோ காட்சிகளாகவும், ஆடியோ பேச்சுகளாகவும் வடிவம் எடுத்துள்ள கதைகளுக்கும் மவுசு குறையவில்லை. ‘டிவி சேனலில்’ ஒளிபரப்பாகும், பொம்மை படங்களின் கதைகள், இந்த தலைமுறை குழந்தைகளை ஈர்க்கின்றன. இருந்தாலும், […]

Read more

கண்ணப்ப நாயனார்

கண்ணப்ப நாயனார், முகிலை இராசபாண்டியன், முக்கடல் வெளியீடு, பக். 56, விலை 50ரூ. சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு இடம் பெற்றுள்ளது. அதில் கண்ணப்ப நாயனாரின் வரலாற்றை எளிய நடையில் விவரிக்கும் வகையில் அமைந்துள்ள நூல் இது. திண்ணன் எனும் இயற்பெயர் கொண்ட கண்ணப்ப நாயனாரின் பிறப்பிடமான பொத்தப்பி நாடும், காளத்தி மலையும் தற்போது ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கின்றன என்பதையும், வேட்டுவர்களின் வாழ்க்கையையும் இந்த நூல் சிறப்பாக எடுத்துரைக்கிறது. வேட்டுவச் சிறுவர்களுக்கு வில் வித்தை துவங்கும் போது, அக்காலத்தில் […]

Read more

சங்க இலக்கிய ஐயங்களும் தெளிவுகளும்

சங்க இலக்கிய ஐயங்களும் தெளிவுகளும், முனைவர் வாணி அறிவாளன், அருண் அகில் பதிப்பகம், பக். 112, விலை 110ரூ. மன்னரிடமோ, வள்ளல்களிலிடமோ பரிசில் பெற்ற கூத்தர், பாணர், பொருநர், விறலியர் முதலான இரவலர்கள் தம்மைப்போன்ற இரவலர் பசியாலும், வறுமையாலும் துன்புற்ற நிலையில் வழியில் எதிர்ப்படும்போது, தான் பரிசிலாகப்பெற்ற பெருவளத்தைக் கூறி அவர்களையும் அப்புரவலரிடத்துச் சென்று பரிசில் பெறுமாறு வழிகாட்டுதலே ஆற்றுப்படை இலக்கணம். ஆற்றுப்படுத்தப் பெற்றவர் பெயராலேயே ஆற்றுப்படை இலக்கியங்கள் எல்லாம் அமைந்திருக்க, திருமுருகாற்றுப்படை மட்டும் பாட்டுடைத் தலைவன் முருகன் பெயரால் அமைந்தமை ஏன்? இவ்வினா […]

Read more

தாயுமானவ சுவாமிகள் பாடல் – அரிய பழைய உரை

தாயுமானவ சுவாமிகள் பாடல் – அரிய பழைய உரை, சு. இலம்போதரன், முல்லை நிலையம், பக். 656, விலை 450ரூ. வேதாந்த – சித்தாந்த நெறி நின்ற தாயுமானவரின், 1,451 பாடல்களுக்குப் பலர் எழுதிய உரைத் தொகுப்போடு, செய்குதம்பி பாவலரின் கைவண்ணமும் கலந்து வெளிவந்துள்ள இவ்வரிய உரை தனித்தன்மை வாய்ந்தது. காலத்தால் பிற்பட்டவர் எனினும் அத்வைத நெறியை, தனது செழுமைச் சிந்தனைகளால் வெளிப்படுத்திய மகான். உரைச் சிறப்பிற்கு ஒரு சில உதாரணங்கள்: ‘அங்கிங்கெனாதபடி’ என்ற முதல்பாடலில், ‘மனவாக்கனிற் தட்டாமல் நின்றதெது’ என்னும் அடிக்கு, (பக்.100) […]

Read more
1 467 468 469 470 471 505