வள்ளலார் மூட்டிய புரட்சி

வள்ளலார் மூட்டிய புரட்சி, பழ.நெடுமாறன், ஐந்திணை வெளியீட்டகம், பக். 160, விலை ரூ.150. திருவருட்பிரகாச வள்ளலாரை ஓர் ஆன்மிகவாதியாக மிகப் பெரிய ஞானியாக மட்டுமே அறிந்து வைத்துள்ளவர்களுக்கு அவரை மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதியாக, மனித நேயப் பண்பாளராக, மொழிப்பற்றாளராக இன்னும் பல்வேறு கோணங்களில் அவரது அருமை பெருமைகளை இந்நூலின் வாயிலாக எடுத்தியம்பி இருக்கிறார் பழ.நெடுமாறன். 19-ஆம் நூற்றாண்டின் தனிப்பெரும் சிந்தனையாளராக வள்ளலார் சிறப்பிடம் பெற்றுள்ளார். வள்ளலார் பெருமான் உலகிற்கு வழங்கிய அழியா முழு முதற்கோட்பாடு ஒன்றே ஒன்றுதான். அதுவே சீவகாருண்யம் என்னும் உயிரிரக்கப் பண்பு. […]

Read more

1000 செய்திகள் (பாகம் 1)

1000 செய்திகள் (பாகம் 1), முக்தா சீனிவாசன், திருக்குடந்தை பதிப்பகம், விலை 100ரூ. 1000 செய்திகளை (சிறிய துணுக்குகள்) 4 புத்தகங்களாக வெளியிட ‘முக்தா’ சீனிவாசன் முடிவு செய்து, அதில் முதல் புத்தகத்தை (247 செய்திகளுடன்) கொண்டு வந்துள்ளார். பாராட்டத்தக்க முயற்சி. படங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நலம். உதாரணமாக 25-வது பக்கத்தில் நாமத்துடன் காட்சியளிப்பவர் எஸ்.ஏ.பி. அல்ல. நன்றி: தினத்தந்தி, 10/8/2016.

Read more

பிம்பச் சிறை

பிம்பச் சிறை, பாண்டியன், தமிழில் பூ.கொ. சரவணன், பிரக்ஞை பதிப்பகம், விலை 225ரூ எம்.ஜி.ஆர். பற்றிய ஆய்வு நூல் தமிழ்நாட்டில் முதலில் சினிமாவிலும், பிறகு அரசியலிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் எம்.ஜி.ஆர். அவரைப்பற்றி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய எம்.எஸ்.எஸ். பாண்டியன் ஆய்வு செய்து, ஆங்கிலத்தில் எழுதிய நூல், இப்போது தமிழில் “பிம்பச் சிறை” எம்.ஜி. ராமச்சந்திரன் திரையிலும், அரசியலிலும் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. தமிழில் மொழி பெயர்த்தவர் பூ.கொ. சரவணன். திரை உலகில் எம்.ஜி.ஆர். பெற்ற வெற்றியை விரவாகக் கூறும் பாண்டியன், அவருடைய […]

Read more

என். கிருஷ்ணசாமி-படிக்காத மேதை பட அதிபரின் வாழ்க்கை வரலாறு

என். கிருஷ்ணசாமி, படிக்காத மேதை பட அதிபரின் வாழ்க்கை வரலாறு, கலைஞன் பதிப்பகம், விலை 130ரூ. சிவாஜி கணேசனின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று “படிக்காத மேதை”. பல கட்டங்களில், படம் பார்ப்பவர்களின் கண்களை கலங்கச் செய்து விடுவார் சிவாஜி. அந்தப் படத்தை தயாரித்தவர் “பாலா மூவிஸ்” என். கிருஷ்ணசாமி. படத்தைத் தயாரிக்கவும், ரிலீஸ் செய்யவும் அவர் எதிர்நீச்சல் போட வேண்டி இருந்தது. படம் பெரிய வெற்றி பெற்று வசூலை குவித்த போதிலும், அதனால் லாபம் அடைந்தவர்கள் விநியோகஸ்தர்கள்தான். என்.கிருஷ்ணசாமி வேறு பல சாதனைகளுக்கும் சொந்தக்காரர். […]

Read more

லீ குவான்யூ சிங்கப்பூரின் சிற்பி

லீ குவான்யூ சிங்கப்பூரின் சிற்பி, எஸ்.எஸ்.வி, மூர்த்தி, கிழக்கு பதிப்பகம், விலை 250ரூ. இன்று சிங்கப்பூர் ஒரு சொர்க்கபுரியாக மாறி இருக்கிறதென்றால் அதற்கு ஒரே காரணம் லீ குவான் யூ. அந்த நாட்டின் பிரதமராக இருந்த அவர், தரமான கல்வி, நல்ல வாழ்க்கைத்தரம், வலுவான பொருளாதாரம், ஒழுங்கு, தூய்மை என உலகத்துக்கே ஒரு முன்மாதிரி நாடாக சிங்கப்பூரைக் கட்டமைத்தார். அவரது மன உறுதி, தொலை நோக்குப் பார்வை, திட்டமிடும் திறன் ஆகியவற்றை உலகமே வியந்து பாராட்டுகிறது. அத்தகைய லீ குவான் யூ வரலாற்றை, சிங்கப்பூரின் […]

Read more

நீரழிவு நோயாளிக்கு வாழ்க்கை முறைகள்

நீரழிவு நோயாளிக்கு வாழ்க்கை முறைகள், இ.எஸ்.எஸ்.ராமன், சஞ்சீவியார் பதிப்பகம், விலை 250ரூ. மருத்துவர், எழுத்தாளர், அரசியல்வாதி என்று, பன்முகம் கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன், எழுதி இருக்கும் இந்த நூல், நீரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். நீரழிவுக்கான அறிகுறிகள், அந்த பாதிப்பைக் கண்டறியும் முறைகள், சிகிச்சை முறைகள், தனக்குத் தானே இன்சலின் எவ்வாறு போட்டுக் கொள்வது போன்ற அனைத்தையும் மிக விரிவாக அதே சமயம் படிப்பதற்கு சுவாரசியமாகத் தந்து இருக்கிறார். நீரிழிவை கட்டுப்படுத்துவதற்கான உணவு முறைகள், மற்றும் அதற்குரிய […]

Read more

காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 800ரூ. இசையரசி “பாரத ரத்னா” எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை “காற்றினிலே வரும் கீதம்” என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார் எழுத்தாளர் ரமணன். எம்.எஸ். பாடலைக்கேட்டு மகாத்மா காந்தியும், நேருவும் பாராட்டியிருக்கிறார்கள். ஐந்து திரைப்படங்களில் மட்டுமே நடித்த எம்.எஸ். அதன் பிறகு வந்த வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்துவிட்டு, இசைக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். 1940-ம் ஆண்டில், எம்.எஸ். சுப்புலட்சுமியும், “கல்கி” சதாசிவமும் திருமணம் செய்து கொண்டார்கள். அதன்பின், எம்.எஸ்.சை சிகரத்துக்கு கொண்டு சென்ற பெருமை சதாசிவத்துக்கே […]

Read more

ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

ஏ.பி.ஜே. அப்துல் கலாம், அருண் திவாரி, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங், பக். 548, விலை 495ரூ. மகாத்மா காந்திக்குப் பிறகு அதிக மரியாதைக்குரியவராக கருதப்பட்ட ஓர் இந்தியத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். அவரது வாழ்க்கை வரலாற்றை விரிவாகப் பேசும் நூல் இது. அப்துல்கலாமின் சீடரான அருண் திவாரி, கலாம் தன் வாழ்வில் எதிர்ப்பட்ட அனைத்துத் தடைகளையும் சவால்களையும் எவ்வாறு வெற்றிகரமாக கடந்தார் என்பதை இந்நூல் மூலம் உலகிற்கு அறிவுறுத்தியிருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஓர் இந்தியராக இருந்தார் என்பதை இந்நூல் வெளிப்படுத்துகிறது. […]

Read more

தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்

தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம், க. பூரணச்சந்திரன், காவ்யா,பக்.214,விலை ரூ.210 தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சியில் தொடங்கி, தமிழ் இலக்கியத்தில் மார்க்சியம், ஃபிராய்டியம், இருத்தலியம், நவீனத்துவம், பின் நவீனத்துவம், பெண்ணியம், தலித் இலக்கியம் போன்ற பதின்மூன்று தலைப்புகளில் ஆழமான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. இலக்கியம் சமகாலச் சமூகத்தைப் பற்றி, மக்களைப் பற்றி வருணிப்பதாகவும், கவலை கொள்வதாகவும், மாறியது இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஓர் அடிப்படை மாற்றம் என்கிற கட்டுரையாளரின் கருத்து முக்கியமானது. மேலும், புத்திலக்கியங்கள் தமிழில் தோன்றுவதற்கான சூழல் 19-ஆம் நூற்றாண்டில் உருவாயிற்று […]

Read more

குழந்தைகளின் மனநலம்

குழந்தைகளின் மனநலம், ஏ.வினோத்குமார்,கண்ணதாசன் பதிப்பகம், பக்.245, விலை ரூ.160. கரு உருவானது தொடங்கி அவற்றில் ஏற்படும் மனவளர்ச்சி, குழந்தைகளிடம் காணப்படும் பொதுவான பயம், இடதுகைப் பழக்கம், தூக்கத்தில் சிறுநீர் கழிப்பது போன்றவை, குழந்தைகளின் படிப்பு தொடர்பான உளவியல் என 3 பகுதிகளாக இந்தப் புத்தகம் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதன் பிறந்த பின்பு தன் முழு வாழ்நாளில் உடலளவிலும், மனதளவிலும் எத்தனை உயிரியல் மாற்றங்களைக் கடக்கிறானோ, அதைவிட அதிகமான உயிரியல் மாற்றங்களை அவன் கருவறையில் இருக்கும் 10 மாதங்களில் கடக்கிறான். எனவே ஒரு பெண் தாய்மை […]

Read more
1 469 470 471 472 473 505