முதல் குரல்

முதல் குரல், பாரதி பாஸ்கர்,கவிதா பப்ளிகேஷன்ஸ், பக்.176, விலை ரூ.130. பலவகையான காய்கறிகளைக் கலந்து செய்த ருசியான – காரமான அவியல் மாதிரியான ஒரு தொகுப்பு இந்நூல். ஆம். ஒன்பது கட்டுரைகள், ஒன்பது கதைகள், எட்டு பதிவுகள் ஆகிய மூன்றின் கலவை. முதல் பெண் பேச்சாளர் யார்? சென்னை கடற்கரைச் சாலையில் இருந்த ஐஸ் ஹவுஸ் எப்படி விவேகானந்தர் இல்லமாக மாற்றப்பட்டது? மதுரையை விட்டு சென்னைக்குத் தனியாக வந்த எம்.எஸ்.சுப்புலெட்சுமியின் வாழ்க்கைப் பாதை மாறிய விதம் எப்படி? என்பன போன்ற கட்டுரைகள், நல்ல தகவல்கள். […]

Read more

மொழிகளின் தாய்

மொழிகளின் தாய், பெருங்சக்கவிளை தம்பி நாடார்(எ) அ.சோசிலி சாம்தச், பஃறுளி பதிப்பகம், விலை 100ரூ. மனிதனின் நாக்கு உச்சரிப்பதற்கு முன்னரே பறவைகளாலும், விலங்குகளாலும் உச்சரிக்கப்பட்ட இயற்கை ஒலிகள்தான் தமிழ்மொழியின் 12 உயிர் எழுத்தொலிகளும், 18 மெய் எழுத்தொலிகளும். ஃ என்ற ஆய்த எழுத்தொலியும், இந்த உண்மையை பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் கூறுகிறது இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 17/8/2016.   —-   சாமுத்திரகா லட்சணம், பிரியா நிலையம், விலை 40ரூ. ஒருவருடைய தலைமுடி, நெற்றி, கண்கள், காது, மூக்கு, கன்னம், மார்பு, விரல்கள் முதலான […]

Read more

தீர்க்க சுமங்கலி பவ

தீர்க்க சுமங்கலி பவ, ப்ரியா கல்யாணராமன், குமுதம், விலை 150ரூ. திருமணம், குழந்தை பாக்கியம், சுகப்பிரசவம், நோயின்மை, பில்லி சூனியங்களிடமிருந்து பாதுகாப்பு என ஏராளமான வரங்களை அள்ளித்தரும் ஆலயங்களின் அற்புத வரலாறு அடங்கிய நூல். அம்மன் மீது பெண்களுக்கு இருக்கும் ஆழ்ந்த நெருக்கத்தை நூலாசிரியர் அருமையாக வெளிப்படுத்தி உள்ளார். குமுதம் இதழில் வெளிவந்த தொடர்களின் தொகுப்பே இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 17/8/2016.

Read more

தென்திசை வீரன் சிவன்

தென்திசை வீரன் சிவன், க.மனோகரன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 350ரூ. ‘ஈஸ்வர்’ என்றும் ‘தட்சிணாமூர்த்தி’ என்றும் இந்தியாவின் வட பகுதிகளிலும், சிவா, சிவன் என்ற பெயர்களில் உலகின் பல பகுதிகளிலும் சிவன் வணங்கப்படுகிறார். இத்தகைய சிறப்புகள் மிக்க சிவன் தென் தமிழகத்தைச் சேர்ந்த வீரன் என்றும், அவர் எப்படி வட திசைக்கச் சென்று அவர்களின் தலைவர் ஆனார் என்பதையும் நாவல் வடிவில் எழுதியுள்ளார் க. மனோகரன். புராணத்தையே சரித்திரக்கதை வடிவில் கூறியிருப்பது இந்நூலின் சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 17/8/2016.

Read more

உணவே மருந்து

உணவே மருந்து, சீத்தலைச்சாத்தன், ஒப்பில்லான் பதிப்பகம், பக். 172, விலை 125ரூ. நோய் தீர்க்கும் உணவுகள் பற்றி நம் முன்னோர்கள் சொன்னதை ஓலைச்சுவடிகளில் இருந்து தேடி எடுத்து தொகுத்துத் தந்துள்ளார். கூடவே பழைய நூல்களில் உள்ள பல மருத்துவக் குணம் உள்ள உணவுப்பொருட்கள் பற்றியும் தெரிவித்துள்ளது சிறப்பு. நன்றி: குமுதம், 17/8/2016.   —- செல்வச் சுரங்கத்தின் திறவுகோல், நெப்போலியன் ஹில், தமிழில் மு. சிவலிங்கம், கண்ணதாசன் பதிப்பகம், பக். 256, விலை 160ரூ. இந்நூல் செல்வச் சுரங்கத்தின் அனைத்து கதவுகளையும் திறக்கும் திறவுகோலாக […]

Read more

பாரதிதாசன் காப்பியங்கள்

பாரதிதாசன் காப்பியங்கள், பேரா.சு. சண்முக சுந்தரம், காவ்யா, பக். 376, விலை 1300ரூ. புரட்சிக்கவி பாரதிதாசன் எழுதிய காப்பியங்களின் மொத்தத் தொகுப்பு இது. இதில் எதிர்பாராத முத்தம், பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, உள்ளிட்ட 9 பெருங்காப்பியங்கள் இடம் பெற்றுள்ளன. 1930ல் அவர் முதன் முதலாக எழுதிய ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரட்சிக்கவி’ உள்ளிட்ட ஆறு சிறுகாப்பியங்களும் அடங்கும். காப்பியங்கள் அனைத்தும் இருபதாம் நூற்றாண்டில் பாரதிதாசன் விரும்பிய சமுதாய மாற்றங்களைப் பாடுபொருளாகக் கொண்டவை. சமுதாய மாற்றத்திற்கு உறுதுணையாக நிற்பவை. நன்றி: குமுதம், 17/8/2016.

Read more

பார்த்தீனியம்

பார்த்தீனியம், தமிழ்நதி, நற்றிணை பதிப்பகம், விலை 450ரூ. தமிழீழத்தில் நடந்த இன அழித்தொழிப்பு பின்புலமாக உடன் நிற்க, ஈழ நினைவுகளை துல்லியமாகவும், நேர்த்தியுடனும் வாசகப் பரப்பில் முன் வைக்கிறது பார்த்தீனியம். வரலாறு போலவும், நடப்பு போலவும், நாம் எல்லோரும் அதில் சம்பந்தப்பட்டது மாதிரியும் ஏக வடிவங்களில் நாவல் விரிவது பேரழகு. தமிழ்நதியின் மொழி நடையில் அலங்காரங்கள் இல்லை. அவரின் கவிதைகளில் கூடி வருகிற காவியத்தன்மை கூட இதில் இல்லாதது கதை சொல்லலை எளிதாக்குகிறது. இயல்பில் நாம் சந்தித்தவர்களே பாத்திரங்களாக வருகிறார்கள். கற்பனைப் பாத்திரங்களின் நுழைவெல்லாம் […]

Read more

பிம்பச் சிறை

பிம்பச் சிறை, எம்.எஸ். பாண்டியன், பிரக்ஞை பதிப்பகம், பக். 248, விலை 225ரூ. திராவிட இயக்க ஆய்வாளரான இந்நூலாசிரியர் 24 ஆண்டுகளுக்கு முன்னர் எம்.ஜி.ஆரைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய இந்நூல், தமிழில் இப்போது வெளிவந்துள்ளது. எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வல நிகழ்விலிருந்து தொடங்குகிறது இந்நூல். எம்.ஜி.ஆர். மீது தமிழக மக்கள் வைத்திருந்த அபரிமிதமான பற்று (எம்.ஜி.ஆர். இறந்தபோது ஏராளமானோர் மொட்டையடித்துக் கொண்டது, 31 பேர் தற்கொலை செய்து கொண்டது), எம்.ஜி.ஆர். தனது படங்களுக்கு அடித்தட்டு மக்களிடமிருந்தே தலைப்புகளைப் பெற்றது (“தொழிலாளி’‘, “விவசாயி’‘, “படகோட்டி‘’), ஆரம்ப காலப் […]

Read more

இஸ்லாம் ஒரு பார்வை

இஸ்லாம் ஒரு பார்வை, டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது, கிழக்குப் பதிப்பகம், பக். 128, விலை 120ரூ. மனிதன் சீரிய ஒழுக்கத்துடனும், நெறிகளுடனும், பண்புகளுடனும், அமைதியாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அன்று உருவானதுதான் மதங்கள். ஆனால், இன்று உலகில் நடக்கும் சில தீங்குகளுக்கு இந்த மதங்களும் ஒரு காரணம் என்ற விபரீதமான கருத்து சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்த விமர்சனத்திற்கு இஸ்லாம் தற்போது பலிகடாவாகி உள்ளது. பன்முகத் தன்மையும், மதச்சார்பற்ற கொள்கையும் கொண்டு உலகின் சிறப்புக்குரிய நாடாக விளங்கும் இந்தியாவில், […]

Read more

ஷேக்ஸ்பியர் முதல் ஜெயகாந்தன் வரை

ஷேக்ஸ்பியர் முதல் ஜெயகாந்தன் வரை, கா. செல்லப்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 100, விலை 70ரூ. ஷேக்ஸ்பியர், கார்ல்மார்க்ஸ், ஷெல்லி, வேர்ட்ஸ்வொர்த் போன்ற உலகளாவிய பெருமை மிக்க ஆளுமைகள் குறித்து இதுவரை அறியப்படாத தகவல்கள், காந்தி, தாகூர், நேரு போன்ற இந்திய பிரபலங்களின் சிறப்புகள், பாரதியார், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம், ஜெயகாந்தன், கண்ணதாசன் ஆகியோர் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு என மிகச் சிறந்த படைப்பாளிகள் குறித்து 22 அத்தியாயங்களில் கட்டுரை வடிவில் தொகுத்துள்ளார் நூலாசிரியர். நடுக்கோடையிரவுக் கனவு, வெனிஸ் […]

Read more
1 470 471 472 473 474 505