புதிய கல்விக் கொள்கை – மாணவர்களும் ஆசிரியர்களும் குற்றவாளிக் கூண்டிலா?

புதிய கல்விக் கொள்கை – மாணவர்களும் ஆசிரியர்களும் குற்றவாளிக் கூண்டிலா?, நா. மணி, பாரதி புத்தகாலயம், பக். 48, விலை 20ரூ. 1986 ஆம் ஆண்டிலேயே இன்றைய புதிய கல்விக் கொள்கைக்கான அடித்தளம் போடப்பட்டுவிட்டது. அதன் தொடர்ச்சியாக, தற்போது கல்வியை விற்பனைச் சரக்காக்க முயற்சிக்கப்படுகிறது என்று கூறுகிறது இந்நூல். “பொதுப்பள்ளி முறை தூர்ந்து கிடப்பதை எவ்வாறு சரி செய்வது? மிகப் பெரும் மக்கள் திறன் உள்ள இந்திய நாட்டில் வேலை வாய்ப்புகளை எத்தகைய கல்விமுறை உருவாக்கும்? வேலைவாய்ப்பு அற்ற இன்றையப் பொருளாதார வளர்ச்சி சிக்கல்களை […]

Read more

உரையாசிரியர்களின் செவ்வியல் நோக்கு

உரையாசிரியர்களின் செவ்வியல் நோக்கு, மு.முனீஸ்மூர்த்தி, இராசகுணா பதிப்பகம், பக். 136, விலை 100ரூ. தொல்காப்பியர், செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாக “நோக்கு‘’ என்பதைச் செய்யுளியலில் குறிப்பிடுகிறார். சில நூற்பாக்களில் இந்த “நோக்கை’‘க் காணமுடிகிறது (எ.கா. “நோக்கே பாவே அளவியல்’‘, “நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே’‘). இந்த நோக்கு குறித்து பல ஐயங்களை எழுப்பி, அதற்கான விடையும் தரப்பட்டுள்ளது. இதற்கு முன் நோக்கு குறித்து ஆராய்ந்த அறிஞர்கள் பெருமக்களின் பட்டியல், இந்நோக்கு குறித்து நச்சினார்க்கினியர், பேராசிரியர், இளம்பூரணர், தமிழண்ணல், செ.வை.சண்முகம் போன்றோரின் புரிதல்கள் போன்றவையும் தரப்பட்டுள்ளன. கலித்தொகைக்குத் […]

Read more

மதராஸாபட்டினம்

மதராஸாபட்டினம், தாழை மதியவன், இலக்கியச் சோலை, பக். 176, விலை 100ரூ. மதரஸாபட்டினம், சென்னப்பட்டினம், மதராஸ், மெட்ராஸ், (இன்று) சென்னை என அழைக்கப்படும் இப்பட்டணத்தின் வரலாறு கி.பி. 15-ஆம் நூற்றாண்டிலிருந்து விவரிக்கப்பட்டுள்ளது. சென்னக் குப்பத்தை விலைக்கு வாங்கிய 1639-ஆம் ஆண்டைக் கணக்கிட்டு சென்னை-375, 376 என விழா நடத்துகிறார்கள். ஆங்கிலேயர்களின் சென்னப் பட்டினத்திற்குத்தான் வயது 376. நமது மதராஸப்பட்டினத்திற்கான வரலாறு ஆயிரம் ஆண்டுகள். இந்நூல் ஆங்கில ஏகாதிபத்தியம் அகலும் வரையுள்ள பல நூற்றாண்டு நிகழ்வுகளைக் கூறுகிறது. இன்றைய புனித செயிண்ட் ஜார்ஜ் கோட்டையும் அதன் […]

Read more

கடைசி நமஸ்காரம்

கடைசி நமஸ்காரம், தமிழில் புவனா நடராஜன், சாகித்திய அகாடமி, விலை 415ரூ. 1972-ம் ஆண்டு வங்க மொழிக்கான சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவல். கொஞ்சம் வேதனை, கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் தேடுதல், கொஞ்சம் உணர்ந்து கொள்ளுதல், கொஞ்சம் புரிந்துகொள்ளுதல் இவையும் வாழ்க்கைதானே. அவற்றை அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறார் வங்க எழுத்தாளர் சந்தோஷ்குமார்கோஷ். இதை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் புவனா நடராஜன். நன்றி: தினத்தந்தி, 10/8/2016.   —- சர்க்கரை நோய், தொகுப்பாசிரியர் மரு.கு. கண்ணன், பாப்பா பதிப்பகம், விலை 145ரூ. சர்க்கரை நோய் […]

Read more

ஒரு விற்பனையாளரின் வெற்றி ரகசியங்கள்

ஒரு விற்பனையாளரின் வெற்றி ரகசியங்கள், சி.எஸ். தேவநாதன், சுரா பதிப்பகம், விலை 60ரூ. விற்பனையாளர், தங்கள் செயல்திறனை மேம்படுத்திக் கொள்ளவும், சிறந்த குணங்களை முழுமையாய் வெளிப்படுத்தவும், அடுத்த வாய்ப்பை இன்னும் மகத்தானதாக்கிக் கொள்ளவும், வாடிக்கையாளர்களோடு நம்பிக்கையூட்டும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் இந்நூலை எழுதியிருக்கிறார் சி.எஸ். தேவநாதன். நன்றி: தினத்தந்தி, 10/8/2016.   —- சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம், ஆர். பாலகிருஷ்ணன், பாதி புத்தகாலயம், விலை 150ரூ. சிந்து வெளியிலும், ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் இன்றுவரை திராவிட இடப்பெயர்கள் […]

Read more

நம் நாட்டின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் உதவிடுவோம்

நம் நாட்டின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் உதவிடுவோம், நாலுமாவடி கே.பி. கணேசன், மணிமேகலைப் பிரசுரம், விலை 125ரூ. இந்தியாவின் ராணுவ பலம் தேசபக்தியைத் தூண்டும் விதத்தில், “நம் நாட்டின் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் உதவிடுவோம்” என்ற தலைப்பில் நாலுமாவடி கே.பி.கணேசன் நூல் ஒன்றை எழுதியுள்ளார். இது புதுமையான புத்தகம். ஓரங்க நாடக பாணியில் நூல் தொடங்குகிறது. மாணவி ஜெயா (ராணுவ அதிகாரியின் மகள்) பாரதி டீச்சர் ஆகியோர் இடையே நடைபெறும் உரையாடல் நாட்டுப்பற்றை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது. நூலின் இடையே இந்தியாவின் ராணுவ பலம், அண்டை நாடுகளின் […]

Read more

உச்சாடனம்

உச்சாடனம், கா.சு. வேலாயுதன், கதை வட்டம் வெளியீடு, விலை 150ரூ. மந்திரங்களை உச்சரிக்கும் கலையின் மறுபெயரே ‘உச்சாடனம்’. வித்தியாசமான தலைப்பை கொண்ட இந்த நூலை பத்திரிகையாளர் கா.சு. வேலாயுதன் எழுதி உள்ளார். பத்திரிகை, படைப்பிலக்கியம், அரசியல், குடும்பம் என அனைத்திலும் சாதனை பல புரிந்து வயதிலும் நூற்றாண்டை நோக்கி நடைபோடுபவர் முன்னாள் முதல் அமைச்சர் மு. கருணாநிதி. இவருடைய நிருபர் சந்திப்பு கூட்டம் ஒன்றில் நூலாசிரியர் கேட்ட கேள்விக்கு, கருணாநிதி அளித்த பதில் சுவாரஸ்யமாக இந்த நூலில் தொகுக்கப்பட்டு உள்ளது. நன்றி: தினத்தந்தி, 10/8/2016.

Read more

மனதில் பதிந்தவர்கள்

மனதில் பதிந்தவர்கள், கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலை 150ரூ. தன்னைக் கவர்ந்த பிரமுகர்களின் வாழ்க்கைச் சுருக்கத்தை ‘மனதில் பதிந்தவர்கள்’ என்ற தலைப்பில் கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் கட்டுரைகளைக எழுதி வருகிறார். இந்த வரிசையில் எட்டாவது புத்தகம் இப்போது வெளிவந்துள்ளது. வெ. இறையன்பு, நீதியரசர் மு. கற்பக விநாயகம், ‘கிருஷ்ணா சுவீட்ஸ்’ முரளி, ரவிதமிழ்வாணன், கவிஞர் முடியரசன் உள்பட 19 பேர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் இதில் அடங்கியுள்ளன. வாழ்க்கைக் குறிப்பு என்றால் வெறும் புள்ளி விவரங்கள் அல்ல. தன்னை கவர்ந்தவர்களை எழுத்தோவியங்களாகத் தீட்டி […]

Read more

ஏற்றுமதி செய்ய வழிகாட்டி

ஏற்றுமதி செய்ய வழிகாட்டி, டி. வெங்கட்ராவ் பாலு, நர்மதா பதிப்பகம், விலை 220ரூ. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதி மூலக் கிடைக்கும் வருமானமே மிக முக்கியமானதாகும். ஏற்றுமதி செய்வதை அரசாங்கம் எளிமைப்படுத்தி உள்ளது. ஏற்றுமதி செய்வதற்கான லைசென்சு பெறுவதற்கான கட்டணத்தை வெறும் 250ரூபாயாகக் குறைத்துள்ளது. ஏற்றுமதி செய்வதன் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்ட முடியும். ஏற்றுமதி செய்ய விரும்புவோர் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களையும், விதிமுறைகளையும் இந்த நூலில் தெளிவாகவும், விரிவாகவும் எழுதியுள்ளார் டி. வெங்கட்ராவ் பாலு. எந்த நாட்டுக்கு எந்தெந்த பொருட்களை அனுப்பலாம் […]

Read more

காக்கியின் டைரி

காக்கியின் டைரி, சிங்கம்பட்டி பெ.மாடசாமி, நேசம் பதிப்பகம், விலை 200ரூ. ‘தேடுதலாக’ தேடிய தகவல்களின் தொகுப்பு நூல். அதில் விசித்திர வழக்கு, விநோத மனிதர், அரிய நிகழ்வு, அபூர்வ சம்பவம், வேடிக்கை,,, விநோதமென… – ‘இப்படியா? இருக்குமா? நடக்குமா? நடந்ததா?’ என்கிற கேள்விக்குறிகள் பல ஆச்சரியக்குறியாய் எழ, சிக்கின சிக்கல் வழக்குகள் சில. அவைகளை அருமையாக பரபரப்பூட்டும் செய்தியாக பதிவு செய்திருக்கிறார் உதவி ஆணையராக ஓய்வு பெற்ற சிங்கம்பட்டி பெ. மாடசாமி. அன்றாடச் செய்திகளில், இப்படியெல்லாம் ஏமாற்றுவார்களா? இப்படியும் ஏமாறுவார்களா? மற்றும் நினைத்துப் பார்க்க […]

Read more
1 471 472 473 474 475 505