இடதுசாரிகள் பார்வையில் விவேகானந்தர்

இடதுசாரிகள் பார்வையில் விவேகானந்தர், வெ. ஜீவானந்தம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 76, விலை 60ரூ. ப.ஜீவானந்தம், வி.ஆர்.கிருஷ்ணய்யர், ஏ.பி.பரதன், ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட், கே.என்.பணிக்கர் முதலானோர், விவேகானந்தர் பற்றி எழுதிய 11 கட்டுரைகளின் தமிழாக்கம் தான் இந்த நூல். விவேகானந்தரை தேச பக்த துறவி என்றும், இந்தியப் பண்பாட்டையும், மேலை நாட்டு விஞ்ஞானத்தையும் இணைத்து, ஒரு புதிய பண்பாட்டைக் காண விரும்பியவர் என்றும், இந்த நூலில் ப.ஜீவானந்தம் எழுதியுள்ளார். சிகாகோவில், விவேகானந்தருக்குப் புகலிடம் தந்த பெண்மணி, மேரி ஹேல். அவருக்கு, 1886, நவ., […]

Read more

இன்றும் காந்தியம்

இன்றும் காந்தியம், சித்தார்த்தன், பண்மொழி பதிப்பகம், பக். 96, விலை 70ரூ. இன்றைய சமூகத்தில், காந்தியம் கவைக்கு உதவாது என்று பலர் நினைக்கலாம். இந்தச் சூழலிலும் கூட, காந்திய தத்துவங்களும் போராட்ட வழிகளும் எவ்வளவு நடைமுறை சாத்தியமானவை என்று, நூலாசிரியர் இந்த நூல் மூலம் சிந்திக்க வைக்கிறார். உதாரணமாக, அகிம்சையின் அடிப்படைத் தத்துவம், தன்னை வருத்திக் கொண்டு எதிரியின் மனதில் நியாய உணர்வை விழிப்புறச் செய்வது தான். ‘நியாய உணர்வு’ என்பது, ‘தர்மம்’ என்ற வார்த்தையின் பொருளாக கருதலாம். சிறிதும் தவறற்ற சிந்தனை அது. […]

Read more

செவ்வி

செவ்வி, பேரா. தொ. பரமசிவன் நேர்காணல்கள், கலப்பை பதிப்பகம், விலை 130ரூ. ஏறக்குறைய நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப்பரப்பில் அறிவார்த்தமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும், சரியாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறார் பேராசிரியர் தொ. பரமசிவன். மரபின் வேர் பிடித்து நம்மை அழைத்துச் செல்பவர். அவரின் 14 நேர்காணல்கள் இடம்பெற்ற தொகுதி இது. 144 பக்கங்களுக்குற் செறிந்த உலகத்திற்குச் செல்வது சாத்தியமாகிறத, நம்முன்னோர்கள், சாதிகள், திராவிடக் கருத்தியல், தமிழர் பண்பாடு, பகுத்தறிவு, சீர்திருத்தம், தமிழ் தேசியம் என பரந்துபட்ட பரப்பிற்குள் மூழ்கி எழுகிற எத்தனிப்பு. மேலோட்டமாக எதையும் பார்த்துப் பழகிய கண்களுக்கு […]

Read more

புஷ்பாஞ்சலி

புஷ்பாஞ்சலி, யத்தனபூடி சலோசனா ராணி, தமிழில் கவுரி கிருபானந்தன், வானவில் புத்தகாலயம், பக். 248, விலை 199ரூ. கதையின் நாயகன் மாதவன், ஒரு சுதந்திரப் போராட்ட வீரன். நாடு சுதந்திரம் அடைந்ததும், காங்கிரஸ் தியாகிகள் சிறையில் இருந்து விடுவிக்கப் படுகின்றனர். மாதவனும் விடுதலை ஆகிறான். தன் மாமன் மகள், தனக்காகக் காத்திருப்பாள் என்று நம்பிக்கையுடன் வருகிறான். ஆனால், மாமன் மகள் சுதாவுக்கு, வேறு ஒருவருடன் திருமணம் முடிந்து விடுகிறது. இது அவனுக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில், இளம்பெண் ஒருத்தி, அவனை அடித்து, […]

Read more

நீங்களும் படிக்கலாம்

நீங்களும் படிக்கலாம், அழகியசிங்கர், விருட்சம், பக். 84, விலை 60ரூ. சென்ற ஆண்டு தான் படித்த நூற்றுக்கணக்கான புத்தகங்களிலிருந்து 20 புத்தகங்களை மட்டும் எடுத்து விமர்சனமாக எழுதி அதை புத்தகமாக வெளியிட்டுள்ளார் அழகியசிங்கர். மருத்துவம், கவிதை, கதை என எல்லாமும் இதில் உள்ளன. சாருவின் நூல் பற்றிப் பேசுவதையில் அவர் எழுத்துத் திறனை சிலாகித்தும் அவரின் சில கருத்துகளை நிராகரித்தும் நேர்மையாகப் பதிவு செய்துள்ளார். இப்படி நிறைய சொல்லிக்கொண்டே செல்லலாம். எழுத்தாளர்களை கௌரவிக்கும் செயல் இந்நூல் எனலாம். நன்றி: கல்கி, 21/8/2016.

Read more

அம்மாவின் கோலம்

அம்மாவின் கோலம், ஜெயதேவன், எழுத்து வெளியீடு, பக். 96, விலை 60ரூ. மரபின் உள் மூச்சை வாங்கி நவினத்துவ மூக்கில் சுவாசிக்கும் இவரது கவிதைகள், வாசிப்புச் சுகம் மிக்கவை. சமூக அக்கறையும் விசாரிப்பும் கலந்தவை. “பாக்கெட்டில் சுரட்டி வைக்கப்பட்டுள்ளது வாழ்க்கை உங்கள் பாக்குத்தூளைப் போல” -போன்ற வரிகள் இயல்பான அசலான சமூக பிம்பத்தைக் காட்டுகின்றன. ஒவ்வொரு கதவுக்குள் திரியும் மிருகத்தின் முதுகில் குத்தப்பட்டுள்ள முத்திரை என்னவோ ‘பெண்கள் ஜாக்கிரதை’ -இப்படியான கவிதைகளுடன் வாசகனை ஏமாற்றாத நூல் இது. நன்றி: கல்கி, 21/8/2016.

Read more

சிறப்புமிக்க சென்னைக் கோயில்கள்

சிறப்புமிக்க சென்னைக் கோயில்கள், ம. நித்யானந்தம், மணிவாசகர் பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. காசி முதல் ராமேஸ்வரம் வரை 400க்கும் மேற்பட்ட கோயில்களுக்குச் சென்று தரிசித்த அனுபவம் கொண்ட ம. நித்யானந்தம், ‘சிறப்புமிக்க சென்னைக் கோயில்கள்’ என்ற நூலை எழுதியுள்ளார். வரலாற்றுக் குறிப்புடன் புராணத் தகவலுடன் ஒவ்வொரு கோயிலைப் பற்றியும் இந்நூலில் அளித்துள்ளார். கோயில்கள் என்பது நம் கலாசாரத்தின், பண்பாட்டின் பிரதிபலிப்பு. ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பதை இந்த நூல் ஆணித்தரமாகச் சொல்கிறது. நன்றி: கல்கி, 21/8/2016.

Read more

கவிதைக்குள் அலையும் மனச்சிறகு

கவிதைக்குள் அலையும் மனச்சிறகு, கவிஞர் க. அம்சப்ரியா, பொள்ளாச்சி இலக்கிய வட்டம், விலை 10ரூ. கவிஞர் ச. அம்சப்ரியா பல்வேறு இதழ்களில் கவிதை பற்றி எழுதிய கட்டுரைகள் அடங்கிய சிறுதொகுப்பு. இது 24 பக்கங்கள் கொண்ட கையேடு. ‘கவிதைக்குள் அலையும் மனச்சிறகு’ என்ற பெயரில் பல கவிஞர்களின் கவிதைகள் அர்த்தத்தோடு சிலாகிக்கப்பட்டுள்ளது. ராஜ சுந்தராஜன் எழுதிய ‘தழும்புகள்’ என்ற தலைப்பில்… அப்படி ஒரு நிலைமை வரும் என்றால் அக்கணமே வாழோம் என்றிருந்தோம் வந்தது அப்படியும் வாழ்கிறோம் நம்மோடு நாம் காண இத்தென்னைகள் தன் மேனி […]

Read more

வீழ்வதற்கல்ல வாழ்க்கை

வீழ்வதற்கல்ல வாழ்க்கை, லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், பக். 168, விலை 100ரூ. Master of all subjects – என்று பாராட்டப் பெற்ற எழுத்தாளர் தமிழ்வாணனின் வாரிசுதான் இந்நூலாசிரியர். இவரும் தன் தந்தையைப்போல தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள எழுத்தாளர். இதுவரை 85 நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகளை ஆராய்ந்து, எம்.ஃ.பில்., பி.எச்.டி. பட்டங்களைப் பெற்றவர்களும் உண்டு. அண்டார்டிகாவைத் தவிர, அனைத்து உலக நாடுகளையும் சுற்றி வந்தரும்கூட. தினமலர் வார மலரின் முன்னேற்றமான வாழ்க்கைக்கு உரிய விஷயங்களைக் குறித்து, […]

Read more

இது நம் குழந்தைகளின் வகுப்பறை

இது நம் குழந்தைகளின் வகுப்பறை,  சூ. ம. ஜெயசீலன், அரும்பு பப்ளிகேஷன்ஸ், பக்.160, விலை ரூ.160. மாறி வரும் உலகமயச் சூழலில் கல்வி வணிகமாக்கப்பட்டு, தனியார் பள்ளிகள் புற்றீசல் போல பெருகி வரும் நிலையில், வகுப்பறைச் சூழல், பாடத்திட்டங்களும், மதிப்பெண் சார்ந்த வெற்றி தோல்விகளும் அவ்வப்போது விவாதப் பொருள்களாகி வருகின்றன. இதுபோன்ற நிலையில், கற்றல் – கற்பித்தலில் சமூக அக்கறையுடன் பல்வேறு கூறுகளை இந்நூலில் அணுகியுள்ளார் நூலாசிரியர். பள்ளிப் பருவத்தில் தனக்கு ஏற்பட்ட நினைவுகளையும், சமூகத்தில் பெரும் ஆளுமைகளாக வலம் வருவோர், சக ஆசிரியர்கள், […]

Read more
1 468 469 470 471 472 505