மேக்நாட் சாகா ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை

மேக்நாட் சாகா ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை, தேவிகாபுரம் சிவா, பாரதி புத்தகாலயம், பக்.288, விலை ரூ.230. இந்தப் பேரண்டம் தோன்றிய சில விநாடிகளில் நிகழ்ந்தது என்ன? அது எப்படி இருந்தது? என்பதை அறிய நமதுநாட்டில் தோன்றிய விஞ்ஞானி மேகநாட் சாகாவின் வெப்ப அயனியாக்கக் கோட்பாடு பயன்பட்டிருக்கிறது. வளி மண்டல அடுக்கான அயனி மண்டல ஆய்விலும் சாதனை நிகழ்த்தியவர் சாகா. அவருடைய வாழ்க்கை வரலாறு இந்நூல். இந்திய அணு ஆராய்ச்சியின் முன்னோடியாக சாகா இருந்தார். “அறிவியல் ஆராய்ச்சி மக்களுக்கானது; அது வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்’ […]

Read more

தமிழ்க்காப்பு இயம்

தமிழ்க்காப்பு இயம், புலவர் மீ.காசுமான்,காசுமான் பதிப்பகம், பக்.402, விலை ரூ.200. செய்யுள் வடிவிலான நமது சங்க இலக்கியங்களை பாமரரும் அறிய உதவியவர்கள் நமது உரையாசிரியர்களே. உரைநடை இலக்கியச் செல்வாக்கு மிகுந்துவிட்ட இக்காலகட்டத்தில், தமிழில் இலக்கண நூல் ஒன்று வெளிவந்திருப்பது, வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. எழுத்து, சொல், பொருள் என தொல்காப்பியம் அமைந்த நிலையில், கால மாற்றத்துக்கு ஏற்ப அதை எழுத்து, சொல், சொற்புணர்ச்சி என நூலாசிரியர் மாற்றத்தைப் புகுத்தி அதற்கான சரியான விளக்கத்தையும் அளித்திருக்கிறார். தமிழில் எழுத்து மாற்றம், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப […]

Read more

தமிழர் புத்தகங்கள் ஓர் அறிமுகம்

தமிழர் புத்தகங்கள்  ஓர் அறிமுகம், தொகுப்பாசிரியர் சுப்பு, விஜயபாரதம் பிரசுரம், பக்.504, விலை  ரூ.200. ஒரு மொழியைப் பயன்படுத்துவது குறைந்து கொண்டே வருகிறது என்றால், அந்த மொழி அழிவை நோக்கிச் செல்கிறது என்று சொல்லலாம். தமிழில் தொன்மையின் தொடர்ச்சியாக, தேசியத்தையும் பண்பாட்டையும் கட்டிக் காக்கும் படைப்புகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு, வாழும் தமிழின் போக்குகளையும், வாசிக்கும் அன்பர்களின் விரிவான தேடலையும் இணைக்கும் விதமாக, இந்த நூலைத் தொகுத்திருக்கிறார் மூத்த பத்திரிகையாளரான சுப்பு. சுகி.சிவம் முதல் வ.வே.சு. வரை தமிழின் முன்னணி எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பலர் இதில் […]

Read more

வெண்ணிறக் கோட்டை

வெண்ணிறக் கோட்டை , துருக்கி நாவல், ஓரான் பாமுக், ஆங்கில மூலம் விக்டோரியா ,ஹோல்ப்ரூக், தமிழில் ஜி.குப்புசாமி, காலச்சுவடு பதிப்பகம், பக்.176, விலை ரூ.165. 2006-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற துருக்கிய எழுத்தாளர் ஓரான் பாமுக்கின் தி ஒயிட் கேஸில் நாவலின் தமிழ் வடிவமே வெண்ணிறக்கோட்டை. வெனிஸ் நகரிலிருந்து நேப்பிள்ஸ்க்கு புறப்பட்டுச் செல்லும் கப்பலொன்றை துருக்கிய கடலோடிகள் சிறைப்பிடித்து, அதிலுள்ள பயணிகளை இஸ்தான்புல்லுக்கு அழைத்துச் சென்று அடிமைப்படுத்துகின்றனர். அவ்வடிமைகளில் ஒருவன், மத மாற்றத்துக்கு உடன்படாததால் பல்வேறு இன்னல்களுக்குப் பிறகு அவனைப் போலவே உருவத்தையொத்த ஒருவனிடம் விற்கப்படுகிறான். இவ்விருவரும் […]

Read more

செவ்வியல் இலக்கிய மகளிரும் மரபுசார் வாழ்க்கையும்

செவ்வியல் இலக்கிய மகளிரும் மரபுசார் வாழ்க்கையும்,  பதிப்பாசிரியர்  த.மலர்க்கொடி, அய்யா நிலையம்,  பக். 296, விலை ரூ.300. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரித் தமிழ்த்துறை உயராய்வு மையமும் இணைந்து (மூன்று நாள்கள் மார்ச் (4-6, 2015) நடத்திய கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. பண்டைத் தமிழர்களுடைய வாழ்க்கை, மரபு வழிப்பட்ட வாழ்க்கை. சங்ககாலம் தொடங்கி,இக்காலம் வரை அவர்கள் நடைமுறைப்படுத்திய மரபுகள் சில கொள்ளப்பட்டன; சில தள்ளப்பட்டன. இதற்குக் காரணம், தலைமுறை இடைவெளி என்றுகூடச் சொல்லலாம். மேலும், ஆணாதிக்கம் தலைதூக்கி […]

Read more

ராமாயணம்

ராமாயணம், தேவி வனமாலி, தமிழில்: நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் , பக்.320, விலை ரூ.275. பெண் துறவியும், எழுத்தாளருமான தேவி வனமாலி, ஸ்ரீ ராம்லீலா என்ற தலைப்பில் எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கம் இது. மொழிபெயர்ப்பு என்றாலும் மூலத்தைப் படிப்பதைப் போன்ற விறுவிறுப்புடன் தமிழாக்கம் செய்திருக்கிறார் நாகலட்சுமி சண்முகம். எல்லாருக்கும் தெரிந்த வால்மீகி ராமாயணத்தின் சுருக்கமான வடிவம்தான் இந்நூல். அதனை நூலாசிரியர் கொடுத்திருக்கும் விதம் சிறப்பு என்றால், அவர் எழுதியிருக்கும் முன்னுரை மிகச் சிறப்பு. ராமபிரானின் குணாதிசயங்கள் குறித்து எழுந்துள்ள சில சர்ச்சைகளுக்குத் தீர்வு காணும் […]

Read more

மானுட அமைதிக்கு வழிவகுத்த பேரறிஞர்களின் பேருரைகள்

மானுட அமைதிக்கு வழிவகுத்த பேரறிஞர்களின் பேருரைகள், கோபால் மாரிமுத்து, பக்.395, விலை ரூ.169. ஆப்ரஹாம் லிங்கன், காந்தி, மார்ட்டின் லூதர்கிங், உட்ரோ வில்சன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், நெல்சன் மண்டேலா, வின்ஸ்டன் சர்ச்சில், நேரு, ஜான் கென்னடி, பராக் ஒபாமா உள்ளிட்ட 37 தலைவர்கள், அறிஞர்களின் குறிப்பிடத்தக்க சொற்பொழிவுகளின் ஆங்கில மூலமும், அவற்றின் தமிழாக்கமும் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளதால், நூலைப் படிப்பவரின் அறிவும், பார்வையும் விரிவடையும் வாய்ப்புள்ளது. நிறவெறி ஒழிய “”கண்ணியமான ஒழுக்கமான போராட்டத்தை நடத்த […]

Read more

சித்தா மருந்துகளின் செய்முறை விளக்கம்

சித்தா மருந்துகளின் செய்முறை விளக்கம், தொகுப்பு: அரவிந்த் ஹெர்பல் ஆரோக்கிய நிலை மருத்துவர் குழு, நர்மதா பதிப்பகம், சென்னை, பக். 344, விலை ரூ.200. இந்நூலில் சித்த மருத்துவத்துக்கான களிம்புகள், லேகியங்கள், கேப்சூல்கள், டானிக்குகள், சர்பத்கள், சூரணங்கள், பற்பங்கள் மற்றும் பல்பொடி, சாக்லேட், மாத்திரைகள் செய்யும் முறை பற்றி விளக்கிக் கூறப்பட்டுள்ளது. சித்தர்களான போகர், புலிப்பாணி, இராமதேவர் முதலியவர்களைத் தவிர, பெரும்பாலான சித்தர்கள் தமிழர்களே. ஆதலால், இச்சித்த வைத்தியம் தமிழ்நாட்டுக்கே உரியதென்பதை ஒருவரும் மறுக்க முடியாது. அதனால்தான் அவர்கள் இயற்றிய நூல்களெல்லாம் தமிழ்ச் செய்யுளில் […]

Read more

பொதுத்தேர்வுகளில் நேர் வழியில் 100 அறிவுரை அல்ல வழிமுறை

பொதுத்தேர்வுகளில் நேர் வழியில் 100 அறிவுரை அல்ல  வழிமுறை, பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி,  விகடன் பிரசுரம், பக்.70, ரூ.65. அதிக மதிப்பெண்கள் எடுப்பதே மாணவர்களின் லட்சியமாக இருக்கிறது. படிப்பு என்பது படபடப்போடு தேர்வறைக்குள் நுழையும் வரை படிப்பதல்ல என்பதை 20 சிறந்த குறிப்புகளாக வரையறுத்துத் தந்திருக்கிறார் ஆசிரியர். அறிவு மேம்பட நாள்தோறும் படிக்க வேண்டும். மனப்பாடம் செய்வதை மகிழ்ச்சியாகக் கூட செய்யலாம், தேர்வுக்கு முன்னதாக சளைக்காமல், மலைக்காமல் படிக்கலாம், அடிக்கடி தேர்வுகள் எழுதுவதும் பயிற்சிதான் என்கிறார் நூலாசிரியர். நாள்தோறும் பள்ளிக்குச் சென்று எல்லா வகுப்புகளையும் கவனித்து, குறிப்புகள் எடுத்துப் படிக்கும் பழக்கமும் வசமாகி விட்டால், மதிப்பெண்களும் மாணவர் வசமே. […]

Read more

யோகியுடன் கொஞ்ச தூரம்

யோகியுடன் கொஞ்ச தூரம்,  எஸ்.பார்த்தசாரதி, நேசமுடன், சென்னை, பக். 304, விலை: ரூ.150. இந்நூல் யோகி ராம்சுரத்குமாருடன் பழகிய பக்தர்களின் அனுபவங்கள் அத்தியாய, அத்தியாயமாக அனுபவித்து எழுதப்பட்டுள்ளது. அவற்றிலிருந்து சில… “யோகியுடன் இருக்கும்போது அவரிடமிருந்து ஏதோ ஒன்று கனமாக, வேகமாக, வெள்ளமாகப் பரவி அனைவரையும் ஆட்கொள்ளும். அச்சமயத்தில் உடல் செத்துவிடும், மனம் நினைவை இழக்கும். உணர்வு உணர்வற்ற நிலையை அடையும்’ என்று நூலாசிரியர் பார்த்தசாரதி தமது அனுபவத்தை சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார். யோகி மீது ஒரு மூதாட்டி வைத்திருந்த பக்தி, 85 வயதான பக்தருக்கு அவரது […]

Read more
1 487 488 489 490 491 505