கம்பனின் ஆற்றலும் இராமாயணத்தின் சிறப்பும்

கம்பனின் ஆற்றலும் இராமாயணத்தின் சிறப்பும், அருட்கவிஞர் அ. காசி, மணிமேகலை பிரசுரம், பக். 88, விலை 60ரூ. சீதாபிராட்டியாரின் ஜானகி, மைதிலி, வைதேகி என்ற பெயர் விளக்கம் ஒவ்வொன்றும் அறிந்தது என்றாலும் ‘சீ’, ‘தை’க்குக் கொடுத்த பொருள் போற்றச் செய்கிறது. ராமனின் கை நிக்கிரகம், சீதையின் கை அனுக்கிரகம். சீதையின் கரம் பற்றினால்தான் அனுக்கிரக சக்தி கிடைக்கும் என்ற ஆசிரியரின் கற்பனை, அவரின் பக்தி உணர்வைக் காட்டுகிறது. துந்துபி என்ற கதாபாத்திரத்தின் எலும்பை லட்சுமணன் தன் காலால் எட்டித் தள்ளும் காட்சி விளக்கத்தில் இதுவரை […]

Read more

மதுரை மாரியப்ப சுவாமிகள் வரலாறு

மதுரை மாரியப்ப சுவாமிகள் வரலாறு, ப. சோழநாடன், நிழல் வெளியீடு, விலை 150ரூ. இங்கிலீஷ் மெட்டில் மாரியப்ப சுவாமிகள்! தமிழிசை என்று வருகிறபோது என்ன காரணத்தாலோ பல அருமையான சாஹித்ய கர்த்தாக்களைப் பிரபலமானவர்கள் கண்டுகொள்வதே இல்லை. மதுரை சோமுவின் வெண்கல நாதத்தில் இழைந்து காற்றை கௌரவப்படுத்திய பல பாடல்கள் மதுரை மாரியப்ப சுவாமிகள் இயற்றியவை என்பது எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்? ‘செந்திலாண்டவன் கீர்த்தனைகள்’ என்று ஒரு பாடல் தொகுப்பை 1926ஆம் ஆண்டிலேயே வெளியிட்டார் தீவிர முருக பக்தரான மதுரை மாரியப்ப சுவாமிகள். ‘தமிழிசை இயக்கம் […]

Read more

காஷ்மீர் இந்தியாவுக்கே!

காஷ்மீர் இந்தியாவுக்கே!, கேப்டன் எஸ்.பி. குட்டி, கிழக்கு பதிப்பகம், பக். 303, விலை 250ரூ. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கேப்டன் எஸ்.பி. குட்டி எழுதிய புத்தகம். 1965ல் இந்தோ-பாக் போரில் பங்கேற்றவர். காஷ்மீரில் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர். புத்தகத்தில் காஷ்மீர் முதல் போர், பாகிஸ்தான் ஊடுருவல், ஆக்கிரமிப்பு சதித்திட்டங்கள், ஐ.நா. விவாதங்கள், ஆர்டிகிள் 370 ஆகியன பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் தொடர்பான இந்தியத் தரப்பு நியாயங்களையும், பாகிஸ்தானின் அத்துமீறல்களையும், இந்திய அரசியல்வாதிகளின் பிழைகளையும், பிரிட்டிஷாரின் தந்திரங்களையும் முழுமையாக விவரிக்கும் தமிழ்நூல் இது. ஒவ்வொரு […]

Read more

திருப்போரூர்ச் சந்நிதி முறை

திருப்போரூர்ச் சந்நிதி முறை, பி.ரா. நடராசன், சங்கர் பதிப்பகம், பக். 440, விலை 350ரூ. சிதம்பரம் சுவாமிகளின் ஒப்பற்ற நூல்! கடந்த, 200 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிறந்த இலக்கணப் புலவர், சிதம்பர சுவாமிகள். மதுரையிலிருந்து முருகன் திருவருளால், திருப்போரூர் வந்தார். புதைத்திருந்த சுயம்பு முருகனுக்கு, வியந்து போகுமளவு கற்கோவில் கட்டினார். ‘திருப்போரூர் சந்நிதி முறை’ எனும் சொற்கோவிலும் படைத்தார். இவரது உரையால்தான், திருஞானசம்பந்தர் பாடல் திருக்கடைக்காப்பு, அப்பர் பாடியது தேவாரம், சுந்தரர் பாடியது திருப்பாட்டு என்று வகைப்படுத்தப்பட்டது. இத்தகு அருட்புலவரின் புதிய பக்தி […]

Read more

பங்களா கொட்டா

பங்களா கொட்டா, ஆரூர் பாஸ்கர், அகநாழிகை பதிப்பகம், பக். 128, விலை 130ரூ. சொத்தில் தன் பங்காக வரும் நிலத்தில், கல்வியை சேவையாக செய்யும் நல்ல எண்ணத்துடன், கல்லூரிக்கு கட்ட விரும்பும் ஞானசேகர் என்பவரின் கனவையும், அதன் பொருட்டு அவர் எதிர்கொள்ளும் சவால்களையும் விவரிக்கிறது, இந்த நாவல். தஞ்சை மண்ணின் பின்னணியில் நிகழ்கிறது இந்தக் கதைக்களம். கதையின் ஊடாக அந்நிலத்தின் ஜாதியக் கட்டமைப்பையும், விவசாயம் சார்ந்த மக்களின் வாழ்க்கையையும், குடும்ப உறவுக்குள் இருக்கும் அன்பையும், பிணக்குகளையும், மனிதர்களின் குணாதிசயங்களையும் விறுவிறுப்பாக கூறிக்கொண்டே செல்கிறது இந்நாவல். […]

Read more

அ. ஞானசம்பந்தன்

அ. ஞானசம்பந்தன், நிர்மலா மோகன், சாகித்ய அகாடமி, பக். 128, விலை 50ரூ. ‘புதிய புதிய அல்லல்களில் சிக்கித் தவிக்கும் தமிழ்ச் சமுதாயம், பெரிய புராணத்தைக் கற்பதன் மூலம் மீண்டும் தலை நிமிர்ந்து வாழ முற்படுமென்று நம்புகிறேன்.’(பக். 72) என்று கூறும், ‘ஆழ்ந்து அகன்ற நுண்ணியரான’ அ.க. ஞானசம்பந்தன், 35 ஆய்வு நூல்களையும், மூன்று மொழிபெயர்ப்பு நூல்களையும், ஆறு பதிப்பு நூல்களையும் வெளியிட்டு, அன்னைத் தமிழுக்கு அரணாகவும், அணியாகவும் விளங்கி 85வது அகவையில் காலமானார். நாவலர் சோமசுந்தர பாரதியாரால் இலக்கியத் துறைக்கு வந்த அ.ச..வின் […]

Read more

ஆணிவேர்

ஆணிவேர், நா. நாச்சாள், ஓம் பதிப்பகம், பக். 64, விலை 60ரூ. இயற்கை விவசாயம் முதல், நஞ்சில்லா உணவு வரை, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை பற்றி விரிவாக கூறியுள்ளார். நம் முன்னோர்கள் பயன்படுத்திய பலவும், ஆழ்ந்த ஆய்வுக்கு பின்னரும், நீண்ட நெடிய அனுபவத்தின் அடிப்படையிலும் வளர்ந்த மரபு என்பதை நிறுவுயுள்ளார். பற்பசை, சோப்பு, முகப்பவுடர் என அன்றாடம் பயன்படுத்தும் ரசாயனங்களால் ஏற்படும் பாதிப்புகளையும், அதற்கு மாற்று என்ன என்பதையும் விரிவாக விளக்கி உள்ளார். நம் பாரம்பரிய உணவு வகைகள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. சத்தான சிறுதானியங்கள் […]

Read more

சொப்பன சுந்தரி

சொப்பன சுந்தரி, தெலுங்கில் யத்தனபூடி சுலோசனா ராணி, தமிழில் கவுரி கிருபானந்தன், வானவில் புத்தகாலயம், பக். 384, விலை 299ரூ. ஏழ்மையில் இருந்த மேனகா, எதிர்பாராத விதமாக நடிகையாகி விடுகிறாள். ஹரி கிருஷ்ணா என்ற  டாக்டரை அவள் நேசிக்கிறாள். மேனகா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டபோது, அவளைக் காப்பாற்றியவர் ஹரிகிருஷ்ணா. ஆனால், சந்தர்ப்ப வசத்தால் ஹரி, ரேகா என்ற பெண்ணை மணக்கிறான். ரேகா ஒரு லட்சிய மனைவி அல்ல; ஆடம்பர வாழ்க்கை வாழ நினைப்பவள். ஹரியை உதாசீனம் செய்கிறாள். ஹரி ஒரு பரோபகார டாக்டர். தான் […]

Read more

மேக்நாட் சாகா ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை

மேக்நாட் சாகா ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை, தேவிகாபுரம் சிவா, பாரதி புத்தகாலயம், பக்.288, விலை ரூ.230. தேவிகாபுரம் சிவா எழுதிய, ‘மேக்நாட் சாகா’ என்ற வாழ்க்கை வரலாற்று நூலை சமீபத்தில் படித்தேன். பாரதி புத்தகாலயம் வெளியிட்டு உள்ளது. புறக்கணிக்கப்பட்ட இந்திய விஞ்ஞானியின் வரலாற்றை விவரிக்கும் நூல் இது. வங்கதேசம் பிரிக்கப்படாத போது அங்கு பிறந்தவர். பெட்டிக் கடைக்காரரின் எட்டு குழந்தைகளில், ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். வறுமையின் காரணமாக, துவக்கப் பள்ளிக்குப் பின், வீட்டுவேலை செய்து படித்தார். வங்கப் பிரிவினையின் போது, ஆங்கிலேயர்களை எதிர்த்துப் […]

Read more

கடைசி நமஸ்காரம்

கடைசி நமஸ்காரம்,சந்தோஷ்குமார் கோஷ், தமிழில் புவனா நடராஜன், சாகித்ய அகாதெமி, பக்.624, விலை ரூ.415. சுயசரிதை முறையில் எழுதப்பட்டுள்ள இந்த நாவல் 1972-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றது. வாழ்வின் நிறைகள், அவலங்களை தத்ரூபமாக சித்திரிக்கும் இந்தப் படைப்பு, எழுத்தாளனின் ஒற்றைச் சாளரம் வழியே வாழ்கையின் முழுப் பரிமாணத்தையும் பிரதிபலிக்கிறது. வாழ்க்கை வரலாறு என்றால் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்ச்சிகளின் தொகுப்பு மட்டும் இல்லை என்பது ஆசிரியரின் வாதம். கொஞ்சம் வேதனை, கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் தேடுதல், கொஞ்சம் உணர்ந்து கொள்ளுதல்,கொஞ்சம் புரிந்து […]

Read more
1 486 487 488 489 490 505