ஈசனை உணரலாம் வாங்க

ஈசனை உணரலாம் வாங்க, ஆ.ஞானகுரு, தமிழ்வனம், விலை 110ரூ. மதுரை அருகே உள்ள புனிதத் தலமான சதுரகிரிக்குச் செல்பவர்களுக்குப் பயன் தரும் வழிகாட்டிப் புத்தகம் போல இந்த நூல் அமைந்து இருக்கிறது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னருக்கு குழந்தை வரம் அருளிய வல்லப சித்தர் என்பவரின் வாழ்க்கை விவரத்துடன் தொடங்கும் இந்த நூலில், சதுரகிரியில் எந்த எந்த சித்தர்கள் எங்கே வாழ்ந்தார்கள்? அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள், அந்தச் சித்தர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் செல்வது எப்படி? என்ற அனைத்து விவரங்களும் இதில் தரப்பட்டு இருக்கின்றன. சதுரகிரியில் […]

Read more

சித்தர் படைப்புகளில் இறை கோட்பாடு

சித்தர் படைப்புகளில் இறை கோட்பாடு, முனைவர் சு.சசிகலா, காவ்யா, பக். 272, விலை 280ரூ. இப்பிரபஞ்ச இயக்கத்தின் சூட்சுமத்தை உணர்ந்தவர்களாக வாழ்ந்த சித்தர்கள், இறைவன் உன்னுள்ளே உள்ளான் என்ற அகவழிபாட்டு நெறியை, சமயம் கடந்த நிலையில் விளக்கியுள்ளனர். அண்டம் அனைத்தும் பரவியிருக்கும் பரம்பொருள் மனித உடலுக்குள்ளும் இருக்கிறது என்பதையே, ‘அண்டத்துள் உள்ளது பிண்டத்துள் உள்ளது’ என்று சித்தர்கள் கூறுகின்றனர். இவர்கள் தமிழில் யோகம், மருத்துவம், ஞானம், ரசவாதம் போன்றவற்றை நுட்பமாக விளக்கியுள்ளனர். பதினெண் சித்தர்கள், உரோம ரிஷி, கருவூரார் வரலாற்றையும், அவர் தம் படைப்புகளையும், […]

Read more

செப்புத் திருமேனிகள் வார்த்தெடுக்கும் செய்முறைகளும் அமைப்பு முறைகளும்

செப்புத் திருமேனிகள் வார்த்தெடுக்கும் செய்முறைகளும் அமைப்பு முறைகளும், ம.பாபு; காவ்யா, பக்.318; ரூ.320; ஐம்பொன்னில் செம்பு அதிகம் கலந்து வார்க்கப்படும் திருவுருவத்தை செப்புத் திருமேனி என்பர். தொடக்கத்தில் இறைவன் உருவங்களே உருவாக்கப்பட்டன. பின்னர் அரசர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்றோர் திருமேனிகளையும் செப்புத் திருமேனிகளாக வடித்தனர். தமிழகத் திருக்கோயில்களில் இடம்பெறும் கலைப் பாணிகளை வரலாற்று நோக்கில் வகைப்படுத்தி விளக்கியுள்ளார் ஆய்வாளர். பண்டைக் காலத்தில் சிற்பக்கலை இருந்ததற்கான சான்றுகளை சிலப்பதிகாரத்தைக் கொண்டும், சங்க காலத்தில் உலோகங்களால் திருமேனிகள் செய்யப்பட்டதை நன்னன் என்ற அரசனின் வரலாறு கொண்டும் விளக்கியுள்ளது […]

Read more

ஸ்ரீ ஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி

ஸ்ரீ ஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி, அல்லூர் வெங்கட்டராமய்யர், ஆனந்த நிலையம், பக். 165, விலை 200ரூ. சோதிடத்தில் தேர்ந்த ஆசிரியர் காஞ்சி மடத்தின் பெருமைகளை நுாலாக தொகுத்திருக்கிறார். காஞ்சி மகாபெரியவரின் ஆசி பெற்ற இவர் அம்மடத்தின் பரமபக்தன் என்பதில் பெருமை கொண்டவர். தொண்டைநாட்டின் புகழ்பெற்ற காஞ்சி, இந்திய திருநாட்டின் தெய்வீக நகரங்கள் ஏழினுள் ஒன்று என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இங்கு ஆதிசங்கர மகான் வந்தார் என்பதும் வரலாறு. ஆனால் அவர், ‘சனாதன மதம் ’என்ற தத்துவத்தை தன் அத்வைத கோட்பாடுகளால் நிறைவேற்றிய தெய்வீக […]

Read more

நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் 12 தொகுதிகள்

நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் 12 தொகுதிகள்,  பள்ளத்துார் பழ.பழனியப்பன், திருவரசு புத்தக நிலையம், விலைரூ.3880 மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்களால் கூறப்பட்ட நாலாயிரம் பாசுரங்களுக்கும் உரை எழுதுவது என்பது மிகப்பெரிய சாதனையாகும். இன்றைய மக்கள் எளிதில் படித்து மகிழும் வண்ணம், பழகு தமிழில் உரை எழுதியுள்ளார் பழனியப்பன். பெரியவாச்சான் பிள்ளை நாலாயிரத்திற்கு முன்பு உரை எழுதியிருந்தாலும், அவை மணிப்பிரவாள நடையில் (வடமொழியுடன்கூடிய தமிழ்ச்சொற்கள்) இருப்பதால், இக்காலத்தவர் படிக்கையில், அயர்ச்சியே ஏற்படும். அதைத் தவிர்க்க இப்பெரும் முயற்சி எனலாம். ‘சொட்டுச்சொட்டென்ன’ என்ற சொல்லுக்கு, ‘வியர்வைத்துளி’ […]

Read more

சத்சங்கம்

சத்சங்கம், வெ.இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.160,  விலை ரூ.150. குருவுக்கும் சீடனுக்கும் இடையில் நிகழும் உரையாடல் வடிவில் ஆன்மிகம் குறித்த தெளிவான புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது. ஆன்மிகம் என்பது வழிபாடு என்கிற செயல்முறையோடு நின்றுவிடுவதில்லை.யார் அச்சத்திலிருந்து விடுபடத் தொடங்குகிறார்களோ அவர்களே ஆன்மிகத்தில் அடியெடுத்து வைக்கிறார்கள் என்று பொருள். அவர்கள் எதிர்காலம் குறித்துப் பயப்படமாட்டார்கள்.மகிழ்ச்சியால் ஆன்மிகமே தவிர, மகிழ்ச்சிக்காக ஆன்மிகம் இல்லை.ஆன்மிகம் என்பதே அன்பு. எதிரி என்று யாரும் இல்லாத நிலையே ஆன்மிகம். நம்மைப் பார்த்து யாரும் பொறாமைப்படாதவாறு வாழ்வதே சிறந்த […]

Read more

அல்லல் போக்கும் மகாபைரவர்

அல்லல் போக்கும் மகாபைரவர், சிவம், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 25ரூ., ஸ்ரீ பிரம்ம வைவர்த்த புராணம், விலை 40ரூ., ஸ்ரீ வாமன புராணம், விலை 50ரூ, பவிஷ்ய புராணம், விலை 40ரூ. புராணங்கள், தெய்வீகம் தொடர்பான இந்த நூல்கள் பல விஷயங்களை உள்ளடக்கியன. பவிஷ்ய புராணத்தில் சூரியன் தோன்றியது உட்பட பல கருத்துக்கள் உள்ளன. ஸ்ரீ பிரம்ம வைவர்த்த புராணத்தில் நாரதர் கதையைக் காணலாம். மகா பைரவர் வழிபாட்டு முறைகளில், சொர்ண பைரவர் பற்றி பல தகவல்கள் சிறப்பாக உள்ளன. ஆன்மிகத்தில் தோய்ந்தவர்களுக்கு உரிய […]

Read more

அற்புதங்கள் தரும் ஆலயங்கள் 5 பாகங்கள்

அற்புதங்கள் தரும் ஆலயங்கள் 5 பாகங்கள், சத்யவதனா, சத்யா பதிப்பகம், பக். 1340, விலை 675ரூ. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உட்பட, தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் வாரியாகவும், ஆந்திரா, கர்நாடகா, அசாம், கேரள மாநிலங்களில் உள்ள, 187 ஹிந்து தலங்கள் பற்றிய சிறு முன்னோட்டத்தை, இந்நுால்கள் வழங்கியுள்ளன. நான்கு பாகங்களை, சத்யவதனா என்பவரும், ஐந்தாவது பாகத்தை, வீரரகுவும் எழுதியுள்ளனர். ஐந்தாவது பாகம், அதிலிருந்து சற்று வித்தியாசமாக உள்ளது. உலகின் முதல் சிவன் கோவில், சிவராத்திரி சிறப்புகள், 1,008 லிங்கங்களின் பெயர்கள் என, சுவாரஸ்யமாகவும் […]

Read more

ஆதித்ய இருதயம் விரிவுரை

ஆதித்ய இருதயம் விரிவுரை, க.அரங்கநாதன், ஸ்ரீ அரங்கன் நிலையம், விலை 400ரூ. ராமாயண காவியத்தில், ராவணனுடன் ராமர் போருக்கு ஆயத்தமாக இருக்கும் காலத்தில், ராமருக்கு சூரிய வழிபாடு மற்றும் குல தெய்வ வழிபாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விளக்கி அகத்திய முனிவர் அருளிய மந்திரங்களான ஆதித்ய இருதயத்தில் கூறப்பட்டுள்ள அற்புதமான விஷயங்களை இந்த நூல் விளக்கமாகவும் எளிய முறையிலும் தந்து இருக்கிறது. அனைத்து தெய்வங்களின் அம்சங்களையும் பெற்றுக்கொண்டு அவற்றை மக்களுக்கு வழங்கும் சூரிய பகவான் செய்லபாடுகளை உணர்வு பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் ஆசிரியர் இந்த நூலில் […]

Read more

திருவாசகம்

திருவாசகம் (பதிக விளக்கம்), ஆ. ஆனந்தராசன், நர்மதா பதிப்பகம், பக்.248, விலை ரூ.200; சைவர்களின் தமிழ் வேதமான பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாகத் திகழ்கிறது மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவாசகம். இறைவனின் திருவருளையே துணையாகக் கொண்டு அருளிச் செய்யப்பட்டதுதான் திருவாசகம்.இந்நூலில், ஒவ்வொரு பதிகத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனியாக விளக்கமளிக்காமல், பதிகம் நிறைவு பெறும்போது அந்தந்தப் பதிகத்தின் பொருளை குறைந்த சொற்களில் நிறைவான பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது சிறப்பு. முதல் பதிகமான சிவபுராணத்துக்குத் தந்திருக்கும் விளக்கத்தில், சிந்தை மகிழ சிவபுராணந் தன்னை முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் […]

Read more
1 22 23 24 25 26 128