மகிழ்ச்சியான வாழ்வுக்கு மகத்தான மந்திரங்கள்

மகிழ்ச்சியான வாழ்வுக்கு மகத்தான மந்திரங்கள், தந்தி பதிப்பகம், சென்னை, விலை 165ரூ. வளமுடன் நலமுடன் வாழ்க என்பதே ஒருவொருக்கொருவர் பரிமாறுகின்ற வாழ்த்துச் சொல்லாகும். அந்த வகையில் செல்வவளம் பெருகச் செய்யும் மந்திரங்கள், திருமணத் தடை விலகச் செய்யும் மந்திரங்கள், கடன் தொல்லை தீர்க்கும் மந்திரங்கள், கல்விச் செல்வம் வழங்கும் மந்திரங்கள், சொந்த வீடு அமைய வழிகாட்டும் மந்திரங்கள், சந்தான பாக்கியம் தரும் மந்திரங்கள், உடல் நலம் காக்கும் உன்னத மந்திரங்கள் என்று 25 தலைப்புகளில் மகிழ்ச்சியான வாழ்வுக்குரிய இந்து மந்திரங்களை ஸ்ரீ ஜானகிராம் இந்த […]

Read more

காஞ்சி மகான் தரிசனம்

காஞ்சி மகான் தரிசனம் (கச்சிமூர்த்தி நூலின் மறுபதிப்பு), ஸ்ரீமடம் பாலு, இலக்கியப் பீடம் பதிப்பகம், பக். 256, விலை 150ரூ. நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்த காஞ்சி மாமுனிவரான மகா பெரியவரின் பெருமையும் புகழும் அவர் நிகழ்த்திய தெய்வீக நிகழ்வுகளும் சொல்லில் அடங்காதவை. அவருடன் அணுக்கமாக இருந்து அவருடைய அருளைப் பெற்று, அனுபவித்தவர்கள் சொல்லிக் கேட்க வேண்டும் என்றால் அதன் சுவையே தனிதான். காரணம் மகா பெரியவரின் சின்னச் சின்ன காரியங்களில்கூட தத்துவார்த்தமான செய்திகள் பொதிந்து கிடந்ததை அதுவும், மகா பெரியவருக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த […]

Read more

நான் பார்த்ததெல்லாம் அழகின் சிரிப்பு

நான் பார்த்ததெல்லாம் அழகின் சிரிப்பு, டாக்டர் அ. கலாநிதி, வெற்றி பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் அ.கலாநிதி, தமது நியூசிலாந்து சுற்றுப்பயண அனுபவங்கள் பற்றி எழுதிய புத்தகம் இது. நியூசிலாந்து நாட்டில் பார்க்க வேண்டிய இடங்களையும், அந்த நாட்டின் சிறப்புகளையும் நூலாசிரியர் சிறப்பாக வர்ணித்து இருப்பதால், நாமும் அங்கு இருப்பது போன்ற பிரமை உண்டாகிறது. புத்தகம் முழுவதும் வண்ணத்தில் அச்சிடப்பட்டு இருப்பதால், புத்தகத்தின் சிறப்பு மேலும் உயருகிறது. நியூசிலாந்துக்கு செல்ல இருப்பவர்களுக்கு இந்நூல் சிறந்த வழிகாட்டி. செல்ல இயலாதவர்களுக்க […]

Read more

வெள்ளித்திரையின் வெற்றி மந்திரங்கள்

வெள்ளித்திரையின் வெற்றி மந்திரங்கள், தி இந்து தமிழ், சென்னை, விலை 250ரூ. தமிழ் சினிமா பற்றிய முக்கியமான புத்தகம் இது. யுடிவி நிறுவனத்தின் தென்னகப் பிரிவுத் தலைவரான கோ. தனஞ்செயன், இதை எழுதியுள்ளார். படத்தயாரிப்பு, பட விநியோகம் மற்றும் திரைப்படத்துறையின் சகல பிரிவுகளில் நேரடி அனுபவம் உடையவர் இவர். தமிழில் இதுவரை 5 ஆயிரத்துக்கு மேற்படங்கள் வெளிவந்துள்ளன. திரையில் பார்த்த படங்களைத்தவிர, முக்கியமான பழைய படங்களையும் டிவிடி மூலம் பார்த்தவர். படங்களின் வெற்றி தோல்வி பற்றி பல கோணங்களில் ஆராய்ந்து இந்நூலை எழுதியுள்ளார். இந்தப் […]

Read more

அஷ்டாவக்ர மகாகீதை

அஷ்டாவக்ர மகாகீதை, ஓஷோ, தமிழில் என். ஸ்ரீதரன், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 448, விலை 350ரூ. அஷ்டாவக்ர ஸம்ஹிதாவின் 298 சூத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பது சூத்திரங்கள் சார்ந்து ஓஷோ நிகழ்த்திய சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்நூல். வடமொழி ஸ்லோகங்கள், அவற்றுக்கான விளக்கங்கள், முல்லா நசுருதீன் கதைகள், ஜென் கதைகள், சூஃபி மார்க்க கதைகள், பைபிள் கதைகள், திபேத்திய பழங்குடியினர் கதைகள், மகாபாரதக் கதைகள், நாட்டுப்புறக் கதைகள், புத்தர், விவேகானந்தர் போன்றோரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள், தனக்கே நேரிட்ட அனுபவங்கள் – இப்படி எல்லாவற்றையும் மேற்கோள் […]

Read more

ஜமாஅத் கடந்து வந்த பாதை

ஜமாஅத் கடந்து வந்த பாதை (மூன்றாம் தொகுதி), தமிழில்-டி.அஜிஸ்லுத்புல்லாஹ், இஸ்லாமிக் பவுண்டேசன் டிரஸ்ட், பக். 432, விலை 160ரூ. சுதந்திரத்திற்கு முன்பு பிரிக்கப்படாத இந்தியாவில் ஜமாஅத்தே இஸ்லாமி என்ற இயக்கம் முக்கிய பங்கு வகித்தது. 1945இல் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தின் மாநாட்டில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள், விவாதங்கள் குறித்த அரிய தொகுப்பு இந்நூல். தனிமனித ஒழுக்கம், ஆட்சி, சமூகத்தை கட்டமைத்தல் போன்றவற்றைப் பற்றி அந்த இயக்கம் என்ன விரும்புகிறது? அதனுடைய செயல்திட்டம், வழிமுறைகள் எவை என்பதே இந்நூல். நம்முடைய அழைப்பு என்ன? […]

Read more

வளமும் நலமும் அருளும் வலம்புரி இடம்புரிச் சங்கு பூஜைகளும் பயன்களும்

வளமும் நலமும் அருளும் வலம்புரி இடம்புரிச் சங்கு பூஜைகளும் பயன்களும், மு. இலக்குமணப்பெருமாள் நாயுடு, உலகத் தமிழ்ப் படைப்பாளர் நூல் வெளியீட்டகம், திருச்சி, பக். 656, விலை 490ரூ. எந்த வீட்டில் வலம்புரிச் சங்கு இருக்கிறதோ, தினசரி வழிபாடு செய்யப்படுகிறதோ, அந்த வீட்டில் செல்வத்திற்குக் குறைவு இருக்காது. சங்கு இருக்கும் வீட்டில் துர்சக்திகள், பில்லி, சூனியம், ஏவல் ஆகியவை அணுகாது. திருஷ்ட்டிகள் அகலும், திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல துணை கிடைக்கும், குடும்பத்தில் கடன் வாங்கும் சூழ்நிலை அமையாது, அவ்வாறு சூழ்நிலை அமைந்தாலும், கடன் சுலபத்தில் […]

Read more

கீதைப் பேருரைகள்

கீதைப் பேருரைகள், ஆசார்ய வினோபா பாவே, காந்திய இலக்கிய சங்கம், மதுரை, பக். 416, விலை 80ரூ. விடுதலைப் போராட்டத்தின் போது சிறையில் அடைக்கப்பட்ட ஆசார்ய வினோபா பாவே 1932இல் கீதை குறித்து சிறையில் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு இந்நூல். சுய தர்மத்துக்குத் தடையாக உள்ள மோகத்தை அகற்றுவதே கீதை உபதேசத்தின் முக்கிய குறிக்கோள் என்கிறார் நூலாசிரியர். உயர்ந்த தத்துவங்களை நடைமுறைக்குக் கொண்டு வருவது எப்படி என்று கூறுவது கீதையின் சிறப்பு. பாராயணம் செய்வதுடன் சிந்திக்கவும். ஆன்ம சோதனை புரியவும் தூண்டுவது கீதை. கர்ம […]

Read more

ஆசைக்கிளியே அழகிய ராணி

ஆசைக்கிளியே அழகிய ராணி, அனுராதா ரமணன், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. 480க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 365க்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதியவர் அனுராதா ரமணன். கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, கதையை வேகமாக கொண்டு செல்வதில் வல்லவர். அதனால்தான் இவருடைய 4 நாவல்கள் தமிழிலும், ஒரு கதை தெலுங்கிலும், ஒரு கதை கன்னடத்திலும் திரைப்படங்களாக வெளிவந்து வெற்றிவாகை சூடின. ஆசைக்கிளியே அழகியராணி “உனக்காக உமா”, “குயில் வேட்டை” ஆகிய மூன்று நாவல்கள் இப்புத்தகத்தில் அடங்கியுள்ளன. மூன்று கதைகளையும், மூன்று முக்கனிகளுடன் ஒப்பிடலாம். வழக்கமான முத்திரையை […]

Read more

கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள்

கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. கல்வியை கடல் என்பார்கள், ஆனால் நூலாசிரியர் கல்வியை ‘பூங்கா’ என்று புதிய சிந்தனையுடன் அணுகியுள்ளார். கல்வி களஞ்சியமாக திகழும் இந்த நூலில், சுவையான கருத்துக்களும் நீதிக்கதைகள் மூலம் விளக்கப்பட்டுள்ளன. நூலில் உள்ள கல்விச்சிந்தனை, குருவணக்கம், இளைஞர்கள், பெண்கள், கல்வித் தத்துவங்கள் ஆகிய தலைப்புகள் வாசிப்பவர்களுக்கு சமுதாயத்தில் ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது. நாட்டை வல்லரசாக்கும் வலிமையும், புத்திக்கூர்மையும் இளைஞர்களுக்கு அவசியம் வேண்டும் என்று நூலாசிரியர் முனைவர் மு.ராசாராம் ஐ.ஏ.எஸ். வலியுறுத்துகிறார். திசைமாறி போகும் […]

Read more
1 77 78 79 80 81 128