அறிவார்ந்த ஆன்மீகம்

அறிவார்ந்த ஆன்மீகம், என். கணேசன், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ் லிமிடெட், சென்னை, பக். 240, விலை 200ரூ. ஏன், எப்படி, எதற்காக என்று நம் ஆன்மிகச் செயல்களின் பின்னணியிலிருக்கும் காரணங்களை அலசும் ஆன்மிகக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். நாம் பின்பற்றும் ஆன்மிகச் செயல்களின் காரணங்களை, விஞ்ஞான ஆராய்ச்சிகள் நிரூபித்த ஆதாரங்களுடன் அழகுற விளக்குகிறார் நூலாசிரியர். தேங்காய் உடைப்பது ஏன்?, அணுவில் ஆண்டவன் போன்ற கட்டுரைகள் புதிய சிந்தனைகளைத் தூண்ட வல்லன. இந்த மண்ணில் உதித்த ஞானிகள், அவர்களது உபதேசங்கள், புனித நூல்கள் மூலமாகவும், […]

Read more

அதிசயம் நிகழ்ந்த அற்புத திருக்கோயில்கள்

அதிசயம் நிகழ்ந்த அற்புத திருக்கோயில்கள், சிவப்பிரியா, தென்னவர் திருநெறிப் பதிப்பகம், புதுதில்லி, பக். 752, வி 380ரூ. நாட்டின் வட கோடி எல்லையில் உள்ள கயிலை மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள அமரநாதம் தொடங்கி தென் கோடியில் ராமேசுவரத்தில் உள்ள ராமநாதர் கோயில் வரை 300க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு நேரில் சென்று வழிபட்டு அக்கோயில்களின் சிறப்பைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர். ஒவ்வொரு கோயிலைப் பற்றியும் சமயக் குரவர்கள் பாடியுள்ளதை (உ.ம்: ஈங்கோய் மலையில் எழில் அது காட்டியும், தாயே ஆகி வளர்த்தனை போற்றி […]

Read more

திருத்தொண்டகம் பாசுரங்களும் விளக்கங்களும்

திருத்தொண்டகம் பாசுரங்களும் விளக்கங்களும், கலியன் எதிராசன்(எதிராஜுலு), கங்கை புத்தக நிலையம், சென்னை, பக். 278, விலை 100ரூ. கலியன் என்ற சிறப்புப் பெயர் கொண்ட திருமங்கையாழ்வாரின் 30 பாசுரங்கள் கொண்ட திருநெடுந்தாண்டகம் என்னும் பிரபந்தத்துக்கு பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரையுடன் இந்நூலை யாத்திருக்கிறார் கலியன் எதிராசன் என்ற புனைபெயர் கொண்ட எதிராஜுலு. வடிவவில், சைவ நாயன்மார் அப்பரின் தாண்டகங்களை ஒத்த இத்திருநெடுந்தாண்டகம், திருமங்கையாழ்வாரின் கடைசிப் படைப்பு மட்டுமல்ல, நாலாயிர திவ்யப்பிரபந்தத்தின் கடைசிப் பிரபந்தம் என்பதையும் வைணவ ஆசார்யார் பராசர பட்டரால் சாத்திரம் என்று போற்றப்பட்டது என்பதையும் […]

Read more

கதையில் கலந்த கணிதம்

கதையில் கலந்த கணிதம், இரா. சிவராமன், பை கணித மன்றம், பக். 168, விலை 150ரூ. இந்த நூல் கதைகள் மூலம் கணிதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. இரண்டாக பிளந்தாலும் மீண்டும் ஒன்று சேரும் வரம் பெற்ற ஜராசந்தனை, மகாபாரத போரில் பீமன் எவ்வாறு வீழ்த்துகிறான் என்பதை 2025, 3025, 9801 என்ற எண்களை வைத்து கூறுவதை ரசிக்கலாம். குருசேத்திர போரில் கையாளப்பட்ட சக்ர வியூகம் எத்தகையது என்பதை விளக்கும் கணித முறையும் வியப்பளிக்கிறது. மகர வியூகம், கூர்ம வியூகம், பத்ம வியூகம், கருடு வியூகம், […]

Read more

மழைப்பேச்சு

மழைப்பேச்சு, விகடன் பிரசுரம், விலை 85ரூ. வாழ்வின் இன்பமான நேரத்தை இளமைக்குள் ஊடுருவி அதனை ஒரு கவிதை தொகுப்பாக கவிஞர் அறிவுமதி அளித்துள்ளார். ஒவ்வொரு கவிதைக்கும் ஏற்றார்போல் வண்ணபடங்களையும் அளித்திருப்பது கவிதைக்கு கூடுதல் ரசனையை அளிக்கிறது. நன்றி: தினத்தந்தி, 5/11/2014.   —-   நவராத்திரி பண்டிகைச் சிறப்பும் வழிபாட்டு முறைகளும், பி.எஸ். ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், விலை 60ரூ. முப்பெரும் தேவியரான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியைப் போற்றும்விதமாக நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நூலாசிரியர் நவராத்திரி தோன்றிய கதை, கொண்டாடும் விதம், பாட வேண்டிய […]

Read more

மணக்கும் வளம்

மணக்கும் வளம், இனிக்கும் மனம், தாமரை பப்ளிகேஷன்ஸ், விலை 80ரூ. நூலாசிரியர் கொ.மா. கோதண்டம் அடர்ந்த காடுகளிலும், மலைகளிலும், மலைவாசி மக்களுடன் சென்று, இரவில் பந்தம் கொளுத்தி வைத்து ஆற்றங்கரையில் தங்கி காடுகளின் அழகிய ரம்மியமான காட்சியை தத்ரூபமாக எழுதி நூலாக வடித்துள்ளார். இதனை படிக்கும் போது நமக்கு காடுகளுக்கு நேரில் செல்வதுபோல உணர்வு ஏற்படுகிறது. நன்றி: தினத்தந்தி, 5/11/2014.   —-   மரண விளிம்பில் மனிதன், எஸ்.கே.எஸ்.பப்ளிஷர்ஸ், விலை 60ரூ. குர்ஆனில் கூறப்படும் கருத்துக்களுக்கு ஏற்ப, உண்மைக் கதைகளை எழுதியுள்ளார் எஸ். […]

Read more

சாகசக்காரி பற்றியவை

சாகசக்காரி பற்றியவை, தான்யா, வடலி வெளியீடு, சென்னை, விலை 50ரூ. புலம் பெயர்ந்து கனடாவில் கடந்த 20 ஆண்டுகளாக வாழும் கவிஞர் தான்யாவின் கவிதைநூல். புலம் பெயர்ந்த பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளே கதைகளின் மையக்கரு. பெண்களை குடும்ப அமைப்பும் சமூக அமைப்பும் எப்படி போர்க்குணம் அற்றவர்களாக மாற்றி தன்னலம், குடும்பநலம் என்கிற குறுகிய வட்டத்திற்குள் சுற்றவைக்கிறது என்பதை பதிவு செய்ததோடு அச்சூழலில்லிருந்து வெளிவர போராடிக் கொண்டிருக்கும் சாகசக்காரிகளைப் பற்றிய கவிதைகள் இவை. குடும்பம், குடும்ப உறவுகளுடனான போரே இதன் பாடுபொருளாகியிருக்கிறது. பேராற்றல் மிக்க பெண்களை […]

Read more

வடலிமரம்

வடலிமரம், ஐரேனிபுரம் பால்ராசய்யா, முதற்சங்கு பதிப்பகம், நாகர்கோவில், பக். 124, விலை 80ரூ. இலக்கியவாதிகளான தகழி, கேசவ, தேவ், வைக்கம் முகம்மது பஷீர் ஆகியோரின் நாவல்களைப் படித்தபோது அடைந்த இலக்கிய இன்பத்தை, இந்த நாவலைப் படித்த போதும் அடைந்தேன். பள்ளிப் பருவத்திலேயே காதலிக்க துவங்குகின்றனர் கதாநாயகன் அனந்தகிருஷ்ணனும், கதாநாயகி சொர்ணாவும். அனந்தகிருஷ்ணனின் தந்தை காதலுக்கு எதிராக நிற்கிறார். ஜாதி ஆதிக்கமும், பண ஆதிக்கமும் காதலர் பாதையில் குறுக்கிடுகின்றன. பள்ளிப் பருவத்திலேயே ஊரை விட்டுப் போய் வேற்றூரில் கல்யாணம் செய்து வாழ்க்கை நடத்துகின்றனர். அங்கும் வந்து […]

Read more

நாரதரின் பக்தி நெறி

நாரதரின் பக்தி நெறி, மும்பை ராமகிருஷ்ணன், பகவன் நாமா பப்ளிகேஷன்ஸ், பக். 256, விலை 100ரூ. நாரதர் என்ற பெயருக்கு, மனிதர்களின் அஞ்ஞானத்தை போக்கி, ஞானம், ஆனந்தம் அளிப்பவர் என்பது பொருள். பிரம்மாவின் மானச புத்திரரான நாரதர் எழுதிய பக்தி சூத்திரத்தை இந்த நூல் விளக்குகிறது. இதில் 84 நாரத பக்தி சூத்திரங்கள் விளக்கப்படுகின்றன.  முதல் 24 சூத்திரங்கள் பக்தியின் நிலையைக் கூறுகின்றன. மற்றவை அதன் விளக்கம் கூறுகின்றன. சூத்திரங்களை விளக்கும்போது, பகவத்கீதை, அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதி, திருப்புகழ், திருமூலரின் திருமந்திரம், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை, […]

Read more

கிருஷ்ணதேவராயர்

கிருஷ்ணதேவராயர், ஆ.சி. சம்பத், கிழக்கு பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-93-5135-183-2.html விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர், இந்தியாவின் தென் பகுதி முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தவர். அவர் முதன்முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது எழுந்த பல சவால்களை எளிதாகச் சமாளித்தார். விஜயநகரத்தின் மீது தொடர்ந்து படையெடுத்த தக்காணத்து சுல்தான்களை வீரம் மற்றும் விவேகத்தால் வென்றெடுத்தார். அவரது பதவி ஏற்பு, ஆட்சிமுறை, போர்கள், அவர் வாழ்ந்த காலகட்டத்தின் சமுதாய அமைப்பு ஆகிய அனைத்தையும் எளிமையாகவும், […]

Read more
1 78 79 80 81 82 128