இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்

இயேசு இந்தியாவில் வாழ்ந்தார், ஹோல்கல் கெர்ஸ்டன், தமிழில் – உதயகுமார், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பும் பின்பும் அவரது வாழ்வில் நடந்த அறியப்படாத நிகழ்வுகளின் பதிவு இந்நூல். மத சரித்திர நூல்களை எழுதுவதில் நிபுரணரான ஹோல்கர் கெர்ஸ்டன், இயேசு இந்தியாவுக்கு வந்ததையும், வாழ்ந்ததையும், மறைந்ததையும் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். அதற்கான ஆதாரங்களையும் தந்திருக்கிறார். அவை இயேசு பற்றிய ஆய்வுக்குப் பயனுள்ள ஆதாரங்களாக விளக்குகின்றன. இயேசு இளம் வயதில் பட்டு வியாபார பாதை (Silk Route) வழியாக இந்தியாவுக்கு […]

Read more

ஸ்ரீ பூண்டி மகான் நிகழ்த்திய அற்புதங்கள்

ஸ்ரீ பூண்டி மகான் நிகழ்த்திய அற்புதங்கள், புலவர் அனு. வெண்ணிலா, திவ்யா பதிப்பகம், திருவண்ணாமலை, பக். 302, விலை 220ரூ. மனதை வெட்ட வெளியாக்கு நல்லதெல்லாம் நாடி வரும். தேவைகளைத் தேடி ஓடும் மனிதர்களுக்கு, வியப்பாகத் தோன்றுவதை நிகழ்த்திக் காட்டி, அவர்களால் வணங்கப்பெறும் சித்தர்கள், காலந்தோறும் அவதரித்துக் கொண்டே இருப்பர் என்று சொல்லப்படுவதுண்டு. அவ்வாறான சித்தர்களின் வரிசையில் பூண்டிச்சித்தரின் வாழ்க்கையை பூண்டி மகான் நிகழ்த்திய அற்புதங்கள் என, வாழ்வியல் சித்திரமாக படைத்துள்ளார் நூலாசிரியர் அனு வெண்ணிலா. முதல் பாகத்தில் 52 தலைப்புகளிலும், இரண்டாம் பாகத்தில் […]

Read more

மேனேஜரியல் எபிலிட்டி ஆப் ஸ்ரீ ராமானுஜா இன்ரெட்ரோஸ்பெக்ஷன்

மேனேஜரியல் எபிலிட்டி ஆப் ஸ்ரீ ராமானுஜா இன்ரெட்ரோஸ்பெக்ஷன், ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாச்சாரி, ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ வெளியிடு, திருச்சி, பக். 257, விலை 300ரூ. காவிரி வெள்ளத்தை தடுக்க பொறியியலாளர்களை நியமித்த ராமானுஜர் கி.பி. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமானுஜர், வைணவ நெறியின் கலங்கரை விளக்காக திகழ்ந்தவர். சுவாமி விவேகானந்தர், ராமானுஜரை, சேவைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த மகான் என போற்றுகிறார். அரிய நெறிகளை பரப்ப, ராமானுஜர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம். இஸ்லாமிய ஆட்சி, இந்தியாவில் வந்து காலூன்றிய காலகட்டத்தில் பாமர மக்கள் மதமாற்றத்தில் சிக்கி விடாமல் […]

Read more

பிராத்தனையின் மகிமை பற்றி மகாத்மா காந்தி

பிராத்தனையின் மகிமை பற்றி மகாத்மா காந்தி, தமிழில் லா.சு.ரங்கராஜன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, பக். 224, விலை 100ரூ. இந்திய அரசியல் ஆன்மிகமும் தார்மீகமும் இழைந்ததாகச் செயல்பட வேண்டும் என்று விரும்பிய மகாத்மா காந்தி, தனது ஆசிரமங்களின் கூட்டுப் பிரார்த்தனையின்போதுபாடுவதற்காகத் தேர்ந்தெடுத்த 253 துதிப்பாடல்களின் தொகுப்பே இந்நூல். உபநிடதம், துவாதச பஞ்சரிகம், துளசிதாசர், துகாராம், ஏக்நாத், சூர்தாஸ், கபீர், மீராபாய், ஹரிதாஸ், குருநானக், இஸ்லாமிய சூஃபி பாடல்கள் மற்றும் பெயர் தெரிந்த பெயர் தெரியாத பக்திப் பாடல்கள் (வினோபா பாவே கூட ஒரு பாடல் […]

Read more

திருப்புகழும் திருத்தலங்களும்

திருப்புகழும் திருத்தலங்களும், உரையாசிரியர் சண்முக.செல்வகணபதி, தஞ்சை பெரிய கோயில் வார வழிபாட்டு மன்றம், தஞ்சாவூர், பக். 152, விலை 60ரூ. நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் தொடங்கி, முருகனைப் போற்றிப் பாடும் நூல்கள் பல இருப்பினும், தமிழ் வளம், சொல் வன்மை, தொடை நயம், சந்தப் பொலிவு, கற்பனைத் திறன், பக்திப் பெருக்கு போன்ற கவிதைப் பண்புகளால் தமிழ் பக்தி இலக்கிய வரிசையில் குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ளது அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ். முருகப் பெருமானின் திருவண்ணாமலையில் அருணகிரிநாதரை தடுத்தாட்கெண்டபோது முத்தைத் திரு பத்தித் திருநகை என்று […]

Read more

இமயத்து ஆசான் சுவாமி ராமாவுடன் எனது பயணம்

இமயத்து ஆசான் சுவாமி ராமாவுடன் எனது பயணம், ஜஸ்டின் ஓ பிரையன், தமிழில் சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், பக். 632, விலை 300ரூ. இமயமலை மீது நூலாசிரியர் ஜஸ்டின் ஓ பிரையன் பல முறை ஏறியிருக்கிறார். துறவிகள் அமர்ந்து தவம் செய்யும் புனிதமான இடங்களுக்கு நடந்தே சென்றிருக்கிறார். கும்பமேளாவில் தற்காலத் துறவிகளின் காலடியில் அமர்ந்து பாடம் கேட்டிருக்கிறார். அவருடைய ஆசான் சுவாமி ராமா பலமுறை அவரைப் புனிதப் பயணங்களுக்கு அனுப்பி ஆற்றலை அதிகரிக்க வைத்திருக்கிறார். அந்த ஆசான் மறைந்துவிட்டாலும் ஒளி வடிவில் இருந்துகொண்டு தகதியானவர்களின் […]

Read more

திருமுறைகளில் கலைகள் சமுதாயம் கோயில்கள்

திருமுறைகளில் கலைகள், சமுதாயம், கோயில்கள், பதிப்பாசிரியர் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள், திலகவதியார் திருவருள் ஆதீனம், புதுக்கோட்டை, பக். 220, விலை 100ரூ. திலகவதியார் திருவருள் ஆதீனத்தின் மூலமாக, சைவத் திருமுறை மாநாடுகள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்தி, அதன் மூலம் பல ஞான நூல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில், சமுதாயம், அருளியல், கலைகள், கோயில்கள் தொடர்பாக பன்னிரு திருமுறைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதைத் தக்க ஆதாரங்களுடன் அறிஞர் பெருமக்கள் பதினெட்டுப் பேர் விரித்துரைத்துள்ளனர். திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் பெருமக்கள் காலத்தில் […]

Read more

உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம்,

உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம், டாக்டர் எஸ். கார்த்திகேயன், விகடன் பிரசுரம், பக். 272, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-358-8.html அத்தியாவசியத்தின் வேராக இருப்பது பணம். அதன் குணம் என்ன? நியாயமான முறையில், எந்தெந்த வகையில், அதை ஈட்டலாம் என, விவரிக்கிறது இப்புத்தகம். இப்புத்தகத்தின் ஆசிரியர், பங்கு சந்தை வியாபாரத்தில் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். இந்த நூலில் மொத்தம் 46 கட்டுரைகள் உள்ளன. அனைத்தும், ஒன்றிலிருந்து ஒன்று என்ற சங்கிலி தொடராக செல்வது சிறப்பு. பணம் […]

Read more

மனிதன் வெற்றிக்காக படைக்கப்பட்டவன்

மனிதன் வெற்றிக்காக படைக்கப்பட்டவன், டாக்டர் ஒய். லிவிங்ஸ்டன், ஆரோவ்ஸ் கிரியேஷன்ஸ், சென்னை, பக். 427, விலை 240ரூ. கடந்தகால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை, எதிர்கால வாழ்க்கை குறித்து பேசிக் கொண்டிருப்பதோ, சிந்தித்துக் கொண்டிருப்பதோ வாழ்க்கை இல்லை. நாம் ஒவ்வொரு விநாடியும் எவ்வாறு சிந்தித்துச் செயலாற்றுகிறோமோ, அதுவே உண்மையான வாழ்க்கை என்று, அர்த்தமுள்ள வாழ்க்கை குறித்து நூலாசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார். வாழ்க்கையின் பல்வேறு கோணங்களையும் அலசி ஆராய்ந்து, ஒருவர் வெற்றியான வாழ்க்கையை அமைத்துக்கொள்வது எப்படி? அவ்விதம் வெற்றியான வாழ்க்கையை அமைக்க முயல்வோர் சந்திக்கும் பிரச்னைகள் எவை? அதற்கான […]

Read more

திருக்குறளில் யான் அறிந்தவையும் அறியாதவையும் மாணவர்களுக்கு

திருக்குறளில் யான் அறிந்தவையும் அறியாதவையும் மாணவர்களுக்கு, வக்கீல் செ. வந்தகுமாரி செல்லையா, டாக்டர் ஏ.இ. செல்லையா கல்வி அறக்கட்டளை, சென்னை, விலை 250ரூ. திருக்குறளை ஆராய்ந்து அதில் பல அறிஞர்களால் எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை தொகுத்து தனது கருத்துக்களையும் இணைத்து அரிய நூலாக எழுதியுள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வள்ளுவத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் எளியநடையில் தொகுத்துள்ளார். இந்த நூலைப் படிப்பதன் மூலம் திருக்குறள் பற்றி அறிந்த கருத்துக்களை ஆழப்படுத்திக் கொள்வதுடன், அறியாதவற்றை அறிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட பயனுள்ள நூலாகும். நன்றி: தினத்தந்தி, […]

Read more
1 79 80 81 82 83 128