பாவலரேறு பெருஞ்சித்தனார் பாடல்களின் யாப்பமைதி

பாவலரேறு பெருஞ்சித்தனார் பாடல்களின் யாப்பமைதி, ஜெ. மதிவேந்தன், நெய்தல் பதிப்பகம், பக். 208, விலை 130ரூ. தனித்தமிழ் இயக்கத்தின் அறிஞர் பெருமக்கள் பலருள் குறிப்பிடத்தக்கவர் பெருஞ்சித்திரனார். இதழாசிரியராகவும் நூலாசிரியராகவும் எழுத்துப்பணியில் அயராது ஈடுபட்டிருந்தவர். பெருஞ்சித்திரனாரின் இலக்கிய-இலக்கணக் கூறுகளையும் பாவினங்களையும் இந்நூல் ஆராய்கிறது. மக்களில் உயர்வு-தாழ்வைப் படைத்தவர்கள் பாவினங்களிலும் யார் எந்தப் பாவினத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வகைப்படுத்தியிருந்தனர். ஆனால், பெருஞ்சித்திரனார் இதைத் தகர்த்தெறியும்படியாக, தமிழிலுள்ள அனைத்துப் பாவினங்களையும் பயன்படுத்திப் பாடினார். மேலும், அவர் பயன்படுத்திய யாப்பு வடிவங்களையே முதன்மைப் பொருளாகக் கொண்டு இந்நூல் அமைந்திருக்கிறது. […]

Read more

தமிழாய்வு சில மயக்கங்கள்

தமிழாய்வு சில மயக்கங்கள், சா. பன்னீர்செல்வம், மணிவாசகர் பதிப்பகம், பக். 320, விலை 200ரூ. தமிழ் இலக்கணம், இலக்கியம் ஆகியவை குறித்து எழுதப்பட்ட பத்து கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தொல்காப்பியர் நோக்கில் திசைச்சொல் என்பது என்ன, தமிழில் பேச்சுமொழியே எழுத்துமொழியாகி விடுமா, தமிழில் தன்வினை – பிறவினை பொருள் மரபுகளும் அவற்றிற்கான சொல்லாட்சிகளும் எவ்வாறு அமைகின்றன, தமிழ் கலப்புமொழி ஆகாமல் காப்பதெப்படி, வள்ளுவர் கொல்லாமையை முதலாவதாகவும் பொய்யாமையை இரண்டாவதாகவும் கூறியது சரியா – இப்படிப்பட்ட ஆழமான செய்திகளை எடுத்துக்கொண்டு அவற்றைப் பல கோணங்களிலும் அலசி […]

Read more

கவிஞராக

கவிஞராக, அ.கி. பரந்தாமன், அல்லி நிலையம், பக். 342, விலை 135ரூ. தமிழில் இலக்கியம், இலக்கணம், வரலாறு என அனைத்து நிலைகளிலும் நுண்மாண் நுழைபுலம் மிக்கவரான நூலாசிரியர், தன் மாணாக்கர்களுக்கு கவிதை படைக்கும் ஆற்றலை வளர்க்க கற்பித்ததன் அடிப்படையில் இந்நூல் உருவாக்கம் பெற்றுள்ளது. பொது இயல், உறுப்பியல் போன்ற ஒன்பது தலைப்புகளிலும், முப்பத்தைந்து உள் தலைப்புகளிலும் கவிதையை, அதன் உருவாக்கத்தை நூலெங்கும் விளக்கியுள்ளார். யாப்பிலக்கணத்தை மையமாக வைத்து கவிதை உருவாக்குவதன் அவசியத்தைமுக்கியமாகக் கூறியுள்ள நூலாசிரியர், புதுக்கவிதை இலக்கணமற்றது என்பதை மறுக்கிறார். யாப்பிலக்கணம் அக்காலம் முதல் […]

Read more

நல்ல தமிழில் எழுதுவோம்

நல்ல தமிழில் எழுதுவோம், என் சொக்கன், கிழக்கு பதிப்பகம், பக்.256, விலை ரூ.200. தமிழர்கள் தம் தாய்மொழியின் பெருமையை உணர்ந்து அதைப் பிழையில்லாமல் படிக்கவும் எழுதவும் பழக வேண்டும். ஏனெனில், தமிழ் மொழியில் ஓர் எழுத்தை மாற்றி எழுதினாலும் அதன் பொருள் மாறிவிடும். ஒரு மொழிக்கு ஆணிவேர் போன்றது இலக்கணம். அதை முறையாக – சரியாகக் கற்றுக் கொண்டால்தான் பிழை இல்லாமல் எழுதவும், படிக்கவும், உச்சரிக்கவும் முடியும். மொழித் தூய்மைக்கு முக்கியமானது பிழை இல்லாமல் எழுதுவதுதான். இன்றைக்கும் பலரும் தடுமாறிப் போவது வல்லின, மெல்லினச் […]

Read more

திணை – உணர்வும் பொருளும்

திணை – உணர்வும் பொருளும், பிரகாஷ். வெ, பரிசல் வெளியீடு, பக். 112, விலை 90ரூ. இந்நூல், அளவில் சிறிதாயினும் ஆழமான ஆய்வுச் செய்திகளை உள்ளடக்கியுள்ளது. தமிழ் இலக்கணத்துள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணை வழியிலமைந்த வாழ்வியல் இலக்கணம் உள்ளது. ஐந்திணைகளுக்கும், முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என உட்பிரிவுகள் உண்டு. இவற்றுள் உரிப்பொருள் என்பது அவ்வத்திணைகளுக்குரிய அகப்பொருள் ஒழுக்கம் குறித்து வருவது. அன்பின் ஐந்திணையன்றி கைக்கிளை, பெருந்திணை என இரண்டு உள்ளன. உரிப்பொருள்களை உணர்வுகள் எனக் கொண்டு, தொல்காப்பியர் வழிநின்று […]

Read more

நல்ல தமிழில் எழுதுவோம்

நல்ல தமிழில் எழுதுவோம், என். சொக்கன், கிழக்கு பதிப்பகம், விலை 200ரூ. வழக்கமான இலக்கண நூல் அல்ல இது. விதி மேல் விதி சொல்லி இம்சிக்காமல், பல்வேறு சூத்திரங்களைச் சொல்லி குழப்பாமல், மிக இயல்பான முறையில் மிக இனிமையான புதிய வடிவில் அடிப்படை இலக்கணத்தைக் கற்றுக்கொடுக்கிறது இந்நூல். இலக்கணம் ஒரு மொழிக்கு ஆணி வேர் போல அவசியமானது என்பதையும் வலியுறுத்துகிறது. வழக்கமான அந்த இலக்கணப் பாடமுறையைக் கொஞ்சம் மாற்றிப் பார்க்கலாமே என சிந்தித்ததின் விளைவாக, செய்யும் உதாரணங்களுக்குப் பதிலாக, நாம் தினமும் பயன்படுத்தும் சொற்கள், […]

Read more

தமிழில் பிழைகள் தவிர்ப்போம்

தமிழில் பிழைகள் தவிர்ப்போம், புலவர் அ.சா. குருசாமி, நர்மதாபதிப்பகம், விலை 70ரூ. தமிழில் பிழை இன்றி எழுதுவதற்கான வழிகளைச் சொல்கிறார், புலவர் அ.சா. குருசாமி. இந்தப் புத்தகத்தைப் படித்தால் இலக்கணப் பிழை இல்லாமல் எழுதலாம். பயனுள்ள நூல். நன்றி: தினத்தந்தி, 15/6/2016.   —- எழுத்துகளை எரித்தல் கருத்துகளை ஒடுக்குதல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 300ரூ. கலை, இலக்கியம், வரலாறு குறித்து நூலாசிரியர் எஸ்.வி. ராஜதுரை எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சமூக பிரச்சினைகளையும், அரசியல் கட்சிகளின் மக்கள் விரோத போக்குகுளையும் விரிவாக […]

Read more

இலக்கண விளக்கம்

இலக்கண விளக்கம், (எழுத்தியல், சொல்லியல், புணரியல், பொருளியல், யாப்பியல், அணியியல் ஆறு தனி நூல்கள்), கலாநிலையம் கே. இராஜகோபாலாச்சாரியார், கண்ணப்பன் பதிப்பகம், ஆறு நூல்களின் மொத்த விலை 570ரூ. இலக்கண விளக்கம் என்ற பெயரில் வந்துள்ள, இந்த ஆறு நூல்களும், தமிழுக்குச் சிறப்பைச் சேர்க்கின்றன. எளிய, இனிய நடையில், தமிழ் இலக்கணத்தை தெரிவிக்கின்றன. தமிழைப் பிழையின்றி எழுதவும், பேசவும் இலக்கண நூல்கள் பெரிதும் உதவுகின்றன. சொல்லுக்குஅடிப்படையான எழுத்து இலக்கணமும், சொல்லின் பெயர், வினை, இடை, உரி என்ற நான்கையும் விளக்கும் சொல் இலக்கணமும், சொற்கள் […]

Read more

தண்டியலங்கார மூலமும் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் 14ஆவது பட்டம் சுப்பிரமணிய தேசிகர் உரையும்

தண்டியலங்கார மூலமும் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் 14ஆவது பட்டம் சுப்பிரமணிய தேசிகர் உரையும், ச. கிருஷ்ணமூர்த்தி, மெய்யப்பன் பதிப்பகம், பக். 480, விலை 300ரூ. வடமொழி இலக்கண மரபைப் பின்பற்றி இயற்றப்பெற்ற நூல்களுள் தண்டியலங்காரமும் ஒன்று. மிக அதிகமான அளவில் வடமொழியில் அணியியல் நூல்கள் தோன்றின. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வடமொழியில் இயற்றப்பட்ட காவ்யாதர்ஸ்ம் என்னும் நூலினைப் பின்பற்றியும் அதன் மொழிப்பெயர்ப்பாகவே தண்டி என்பவரால் தமிழில் இயற்றப்பட்டதே தண்டியலங்காரம். முதன் முதலாக தில்லையம்பூர் சந்திரசேகர கவிராஜ பண்டிதர், ‘தண்டியலங்கார மூலமும் சுப்பிரமணிய தேசிகரால் செய்யப்பட்ட உரையும்’ […]

Read more

அகப்பொருள் விளக்கம்

நாற்கவிராசநம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம், பதிப்பாசிரியர் க.வெள்ளைவாரணன், பாரி நிலையம், பக். 360, விலை 200ரூ. தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியமே இன்றைக்கு முதன்மையான இலக்கண நூலாகவும் காலத்ததால் மிகவும் தொன்மையான நூலாகவும் திகழ்கிறது. தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய மூன்றுக்கும் இலக்கணம் வகுத்துள்ளார். பிற மொழி இலக்கண நூல்களில் இல்லாத தனிச்சிறப்பு வாய்ந்தது தொல்காப்பியத்தில் உள்ள பொருளிலக்கணம். இது தமிழுக்கே – தமிழருக்கே உரித்தான அக வாழ்க்கை பற்றி தமிழரின் காதல் வாழ்வின் மேன்மைகளைப் பற்றி விரித்துரைக்கிறது. தொல்காப்பியத்தின் இலக்கணக் கூறுகள் ஒவ்வொன்றையும் […]

Read more
1 2 3 4 5 6