வெல்லும் சொல்(வைகோவின் இலக்கியச் சொற்பொழிவுகள்)

வைகோவின் இலக்கியச் சொற்பொழிவுகள் – வெல்லும் சொல், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 300ரூ. அரசியல் பற்றி மட்டுமல்ல, இலக்கியம் பற்றியும் மனதைக் கவரும் வண்ணம் சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவர் வைகோ. அவருடைய இலக்கியச் சொற்பொழிவுகள் அடங்கிய நூல் வெல்லும் சொல். சிலப்பதிகாரம் பற்றிய அவருடைய விரிவான உரையில், கண்ணகி கோவலன் வரலாற்றை சிறந்த முறையில் எடுத்துக் கூறுவதுடன் சிலம்புக்கு நிகரான காப்பியம் வேறு எந்த மொழியிலும் கிடையாது என்று அடித்துக் கூறுகிறார். கல்கியின் அற்புத நாவல்களான பொன்னியின் செல்வன், […]

Read more

கனவு மெய்ப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும், வெ. துரைசாமி, ஆப்பிள் பப்ளிகேஷன்ஸ், 130, நெல்சன் மாணிக்கம் ரோடு, சென்னை 29. இந்நூலாசிரியர், இந்திய அளவில் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்கத் தலைவராக பல ஆண்டுகள் தொண்டாற்றியவர். இன்றைய அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்னைகளை படம்பிடித்துக் காட்டும் இந்நூலாசிரியர், இவற்றைக் களைந்து இந்தியாவை செழிப்பான ஒரு நாடாக ஆக்கிக் காட்டும் வழிகளை இந்நூலில் கூறியுள்ளார். வாசகர்களுக்குப் போரடிக்காமல் இருக்க, விறுவிறுப்பான நாவலாக இந்நூலை உருவாக்கியுள்ளார். ஒரு சாதாரண மனிதன் இறையருளால் பிரதமராகி, நாட்டுப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதுதான் கதைக்கரு. […]

Read more

கர்ணன்

கர்ணன், எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், பக். 380, விலை ரூ.320. எஸ். விஜயராஜ் ஓர் திரைப்பட இயக்குனர், கதாசிரியர், சிறந்த இலக்கிய விமர்சிகர். அர்ச்சுனன் தர்மயுத்தம் செய்தானா? அல்லது யுத்த தர்மத்தை மீறி, பாரதப் போரில் கர்ணனைக் கொல்ல செய்தானா? என்ற கருத்தை, உள்ளடக்கி அருமையான விமர்சன நூலை எழுதியுள்ளார். சிட்டுக் குருவியின் தாவல்போல் சின்னச் சின்ன அழகு வாக்கியங்கள். மதுரமான நடை. புராண இலக்கியப் பொக்கிஷம். -எஸ். குரு.   —-   புதிய நோக்கில் புறநானூறு, பூவை அமுதன், அருள் […]

Read more

தடம் பதித்த மாமனிதன் ரசிகமணி டி.கே.சி.

தடம் பதித்த மாமனிதன் ரசிகமணி டி.கே.சி., தி. சுபாஷிணி, மித்ரஸ் பதிப்பகம், ஸ்ரீனிவாசன் என்க்ளேவ்,10/18, வாசன் தெரு, தி.நகர், சென்னை 600017, பக். 400, விலை 250ரூ. ராமன் கம்பனுக்குள் வந்தார், கம்பன் டி.கே.சி.க்குள் வந்தார் என்றும், தமிழ் உரைநடை உயிரோட்டமுள்ளதாயும், உணர்ச்சியை வெளிப்படுத்துவதுமாக அமைவதற்கு டி.கே.சி. தான் வழிகாட்டி என்று, மூதறிஞர் ராஜாஜியால் பாராட்டப்பெற்றவர். என்னருமை நண்பா, இனிய கலை ரசிகா, தென்னர் தமிழ் வளர்க்கும் தேசிகா, என்றெல்லாம் நாமக்கல் கவிஞரால் பாராட்டப் பெற்றவர். குற்றாலம் என்றாலே, ரசிகமணியும் அவர் கண்ட வட்டத் […]

Read more

அனுமனின் கதையே

அனுமனின் கதையே, இந்திரா சவுந்திரராஜன், சாருபிரபா, பக். 464, விலை 250ரூ. ஊழிதோறும் புதிது புதிது தோன்றும் சீர்த்தியன் என்று கம்பர் அனுமனைப் போற்றுவார். அது உண்மைதான். பல யுகங்கள் கடந்து, இன்றும் அனுமன் புதிய புதிய உருவப் பொலிவுடன் தோன்றி அருளுகிறார். பக்தியும், தொண்டும் தவிர ஏதும் அறியாத அனுமனின் ஆளுமையும், அதை வரிகளில் படம் பிடித்து, படிப்பவர் மனதில் திரைப்படமாய் காட்டும் இந்திரா சவுந்திரராஜனின் எழுத்தின் திறமை சிறப்பானது. இடை இடையே ஓவியங்கள், எழுத்துக் காவியத்தை தூக்கி நிறுத்துகின்றன. சீதையை கண்டு […]

Read more

செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்

செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், முனைவர் மு. இளங்கோவன், வயல்வெளிப் பதிப்பகம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இளம் அறிஞர் விருது பெற்றவர் இந்நூலாசிரியர். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், திருக்குறள் தொடர்பான, 20 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இணையம் வழியாக தமிழ் பரப்பும் முனைப்பு மிக்கவர். ஆய்வு நெறிகளில் ஆர்வமும், ஊக்மம் கொண்டவர் என்பதை இக்கட்டுரைகள் உறுதி செய்கின்றன. பல்வேறு நாடுகளில் நடைபெற்ற ஆய்வுக் கருத்தரங்குகளில், கட்டுரைகள் படைத்தவராதலின் நூலின் தரம் உயர்ந்துள்ளது. தமிழர்களின் பண்டைக்காலத்து ஆவணமாகப் பட்டினப்பாலை விளங்குவதை விரித்தெழுதியுள்ளார். ஈழத்து அறிஞர்கள் ஆற்றிய […]

Read more

கம்பன் சில தரிசனங்கள்

கம்பன் சில தரிசனங்கள், பேராசிரியர் மு. ராமச்சந்திரன், ராஜபாளையம் கம்பன் கழக அறக்கட்டளை, 12, தாண்டல் கந்தசாமி ராஜா தெரு, ராஜபாளையம் 626117, பக். 136, விலை 110ரூ. சிவகாசி கல்லூரி ஆங்கிலப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் மு. ராமச்சந்திரன் மிகச்சிறந்த பட்டிமன்ற நாவரசர். கம்பராமாயணக் கடலில் மூழ்கி பத்து முத்தான கட்டுரைகளை எழுதி, முன்வைத்துள்ளார். அனுமனும், இலக்குவனும், ராமனுக்கு செய்த பயன் கருதாத தொண்டு, முதலில் நம்மை வரவேற்கிறது. தம்பியர் அறுவர் கட்டுரையில் குகன் அன்பினன் பெருமாள், சுக்ரீவன் அரசியலாளர் மகாராஜா, […]

Read more

சோழர் கால ஆடற்கலை

சோழர் கால ஆடற்கலை, ஆர். கலைக்கோவன், சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 78, பக். 288, விலை 225ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-0.html ஆசிரியர் இலக்கியச் செல்வர் டாக்டர் மா.ராசமாணிக்கனாரின் புதல்வர். சிராப் பள்ளியில் கண் மருத்துவராகப் பணிபுரிகிறார். தமிழ்பால் உற்ற காதலால் முதுகலைத் தமிழ் பயின்று, முனைவர் பட்டம் பெற்றவர். வரலாற்றிலும் முதுகலை நிறைவு. ஆடற்கல்வி கலைஞர்களும் கருவிகளும் அரங்கம் ஆடற்கலைஞர்களும், அவர் தம் வாழ்க்கையும் போன்ற தலைப்புகளில் சோழர் […]

Read more

குற்றாலக் குறிஞ்சி

குற்றாலக் குறிஞ்சி, பூம்புகார் பதிப்பகம், 127/63 பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை 108, விலை 275ரூ. சாகித்ய அகாதமி விருது பெற்ற ஓர் அபூர்வ இசையிலக்கியப் புதினம். அபூர்வமாகக் காணப்படும் குறிஞ்சியைப்போல, இந்நாவலும் தமிழுக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம் என்றே சொல்லலாம். குறிஞ்சி என்ற ராகத்தின் பெயரையே தன் பெயராகக் கொண்டு, தாழ்ந்த குலத்தில் பிறந்துவிட்ட பெண். அவளின் சீலம், ஞானம், தமிழ்ப் பாட்டையே பாடுவேன் என்கிற வீரம், மக்களுக்காக மக்கள் மத்தியில் மட்டுமே பாடுவேன். சமஸ்தானங்களை, ஜமீன்களை, கலெக்டர்களை, வெள்ளைக்காரத் துரைகளை மதியேன். […]

Read more

வெற்றி வெளியே இல்லை

வெற்றி வெளியே இல்லை, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-772-8.html தன்னம்பிக்கை கட்டுரைகள் கொண்ட நூல். விதைக்குள்ளே மரம் மறைந்திருப்பதைப்போல முயற்சியும், உற்சாகமும், உழைப்பும், ஊக்கமும் நமக்குள்ளே மறைந்து இருக்கின்றன. அயராத முயற்சியால், மூடி இருப்பதை அகற்றி ஆற்றலை வெளிப்படுத்தினால் வெற்றிதான் என்பதை எளிமையான கட்டுரைகள் மூலம் கூறுகிறார் வழக்கறிஞர் த. இராமலிங்கம். நன்றி: தினத்தந்தி, 18/12/13. —-   தமிழ் இன்பம், ரா.பி. சேதுப்பிள்ளை, பூம்புகார் பதிப்பகம். […]

Read more
1 40 41 42 43 44 56