ஜல்லிக்கட்டு (பாழ்படும் பாரம்பரியங்கள்)

ஜல்லிக்கட்டு (பாழ்படும் பாரம்பரியங்கள்), குன்றில் குமார், குறிஞ்சி வெளியீடு, பக். 176, விலை 165ரூ. தமிழர்களின் பாரம்பரியமாகக் கருதப்படுகிறது ஜல்லிக்கட்டு. சங்க காலம் முதல் வழி வழியாக ‘ஏர் தழுவல்’ என்னும் மாட்டை அடக்கும் போட்டி தமிழர்களின் அடையாளமாக இருக்கிறது. ஜல்லிக்கட்டு என்பது காளையோடு மல்யுத்தம் என்பதாகப் பலர் பார்க்கின்றனர். அது தவறு. மாறாக, காளையோடு ஓர் உற்சாக விளையாட்டு என்பதே நிஜம். உழவுத் தொழிலுக்கு அடிப்படை காளை மாடுகள். அத்தகைய காளைகளைப் போற்றி அவற்றோடு விளையாடி மகிழும் உன்னத் திருநாள் தான் ஜல்லிக்கட்டு. […]

Read more

மாயமான விமானம் விலகாத மர்மம்

மாயமான விமானம் விலகாத மர்மம்,ச.வைரவராஜன், சங்கமித்ரா பதிப்பகம், விலை 200ரூ. அண்மையில் காணாமல் போன மலேசிய விமானச் சம்பவம் மிகக் கொடியது. விமானம் கடத்தப்பட்டதா? விபத்துக்குள்ளானதா? என்பதை 20?க்கும் மேற்பட்ட நாடுகள், உயர் தொழில்நுட்பம், உளவுத்துறையினரின் தீவிர முயற்சி ? இவற்றால்கூட கண்டறிய முடியவில்லை. 239 பயணிகளுடன் மாயமான அந்த விமானத்தின் பிளன் ஒளிந்திருக்கும் மர்மம் குறித்து இந்த நூலில் ச.வைரவராஜன் விளக்குகிறார். நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more

பயணம் – சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி

பயணம் – சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி,  சமர் யாஸ்பெக், தமிழில்: ஸ்ரீதர் ரங்கராஜ், எதிர் வெளியீடு, பக்.344, விலை ரூ.320 சிரியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட நூலாசிரியர் தற்போது வசிப்பது பாரிஸ் நகரில். எனினும் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கும் தாய்நாடான சிரியாவுக்கு யாருக்கும் தெரியாமல் துணிச்சலுடன் நான்கு முறை எல்லைத் தாண்டிச் சென்று, சிரியா மக்களின் இன்றைய அவல வாழ்க்கையை இந்நூலில் படம்பிடித்துக் காட்டியுள்ளார். சொந்த மக்களின் மீதே வெடிகுண்டுகளை வீசுகிற அரசுக்கும், மரண வெறி கொண்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே சிக்கிக் கொண்டு அல்லல்படும் […]

Read more

பயணம்

பயணம், சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி, சமர் யாஸ்பெக், தமிழில் ஸ்ரீதர் ரங்கராஜ், எதிர் வெளியீடு, விலை 320ரூ. சிரியாவில் பிறந்து வளர்ந்த சமர் யாஸ்பெக்கின் மிக முக்கியமான பதிவு. போர்ச்சூழலில், கொஞ்சமும் நிச்சயமற்ற சூழலில் இருந்து தப்பி வந்து பாரீஸில் தஞ்சம் புகுந்தவர். சிரிய மக்கள் படுகிற பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஈரமுடைய எவர் மனசுக்கும் பொறுத்துக் கொள்ள முடியாதபடிக்கு அங்கே எல்லாமுமே நடக்கிறது. சொந்தநாட்டிலேயே அகதிகளாய் வாழும் பெரும் சோகம் மக்களுக்கு நேர்கிறது. சிரியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர், பயம் இன்றி மீண்டும் […]

Read more

ஐஎஸ்ஐஎஸ் கொலைகாரன் பேட்டை

ஐஎஸ்ஐஎஸ் கொலைகாரன் பேட்டை, பா. ராகவன், கிழக்கு பதிப்பகம், விலை 140ரூ. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்து எழுத்தாளர் பா. ராகவன் எழுதிய நூல். அல்கொய்தாவுக்கு பிறகு சர்வதேச சமூகத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தோற்றம், அதன் செயல்பாடுகள் குறித்து விரிவாக எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 23/3/2017.   —-   திருவாசகம், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்தின் மூலமும் உரையும் அடங்கிய நூல். உடலையும் உள்ளத்தையும் ஒருசேர உருக்குகின்ற திருவாசத்திற்கு உரையாசிரியர் தமிழ்ப்பிரியன் எளிய வகையில் விளக்கம் […]

Read more

கிழக்கு மேற்கு கோவாவில் மதமாற்றம் துயரக்கதை

கிழக்கு மேற்கு கோவாவில் மதமாற்றம் துயரக்கதை, மலையாள மொழியில் ரங்க ஹரி, தமிழில் அலமேலு கிருஷ்ணன், விஜயபாரதம், விலை 120ரூ. போர்ச்சுக்கீசிய ஆட்சியில் கோவாவில் நடந்த மதமாற்றத்தால் ஏற்படும் கொடுஞ்செயல்களை நூலாசிரியர் அனைவருக்கும் புரியும் வகையில் நேரடி காட்சியாக காண்பித்து உள்ளார். கொங்கன் பகுதியில் இருந்து ஓடிச்செல்ல வேண்டிய ஒரு பகுதி மக்களின் சோகக் கதையை நூலாக, நூலாசிரியர் வடித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

அங்குசம்

அங்குசம், தவசிக்கருப்புசாமி, மணல்வீடு ஏர்வாடி, பக். 60, விலை 80ரூ. ‘கூடிவிட்டது சந்தை; துண்டுபோட்டு மூடி தடையற நடக்குது தரங்கெட்ட வணிகம்’ என்ற கவிதை வரி, இன்றைய சமூகத்திற்கு சாட்டையடி கொடுப்பதாக அமைந்துள்ளது. நன்றி: தினமலர், 5/3/2017.   —- இலையுதிர்க் காலம், டாக்டர் எஸ்.ஆர். கிஷோர் குமார், தாமரை பப்ளிகேஷன்ஸ், பக். 102, விலை 80ரூ. பிள்ளைகளால் வெறுத்து ஒதுக்கப்பட்டு, முதியோர் இல்லங்களில் அடைக்கலமான பெற்றோர் கண்ணீருடன் காலம் கழிக்கும் அவலநிலையை கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 5/3/2017.

Read more

பயங்கரவாதி என புனையப்பட்டேன்

பயங்கரவாதி என புனையப்பட்டேன், மொகமது ஆமிர் கான், நந்திதா ஹக்ஸர், தமிழில் அப்பணசாமி, எதிர் வெளியீடு, பக். 240, விலை 200ரூ. கடந்த, 1998ல் கடத்தப்பட்டு, வதைக்கு உள்ளாக்கப்பட்டு, 24 குண்டு வெடிப்புகள் தொடர்பாக, 19 வழக்குகளில் சேர்க்கப்பட்டவர், ஆமிர் கான். 14 ஆண்டு சிறைத் தண்டனைக்கு பின், தன்னை குற்றமற்றவன் என்பதை நிரூபித்து, விடுதலையாகிறான். தந்தையை இழந்து, தாயை நோயாளியாக பார்க்கும் அவனை, சமூகம் எப்படி நடத்துகிறது என்பது தான், இந்நூல். இது, போலீஸ் உள்ளிட்ட துறைகளின் தப்பித்தல், தப்ப வைத்தல், தப்பு […]

Read more

கோவாவில் மதமாற்றம் துயரக் கதை

கோவாவில் மதமாற்றம் துயரக் கதை, மலையாள மூலம் ரங்கஹரி, தமிழில் அலமேலு கிருஷ்ணன், விஜயபாரதம் பதிப்பகம், பக். 200, விலை 120ரூ. உலக வரலாறு நெடுகிலும் கட்டாய மதமாற்றம் செய்யும்போது மானுடம் அடைந்த துயரங்கள் அளவிட முடியாதவை. கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் “விச் ஹன்ட்’ எனப்படும் சூனியக்காரன் வேட்டை, “இன்குவிசிஷன்’‘ எனப்படும் சமயக்குற்ற விசாரணை ஆகிய கொடிய நிகழ்வுகளால், போர்ச்சுகலைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார்கள் கோவா மக்களை மிரட்டி கிறிஸ்தவர்களாக மாற்றினர். அப்போது நூற்றுக்கணக்கான கோயில்கள் இடிக்கப்பட்டன. ஐரோப்பிய நாடுகளின் நாடு பிடிக்கும் […]

Read more

காவிரி நேற்று இன்று நாளை

காவிரி நேற்று இன்று நாளை, பெ. மணியரசன், பண்மைவெளி பதிப்பகம், பக். 208, விலை 120ரூ. வரலாற்றுக் காலத்திலிருந்து இன்று வரை காவிரிக்கும், தமிழர்களுக்கும் உள்ள உறவு, கர்நாடகம் காவிரியைத் தடுக்கின்ற நிகழ்வுகள், ஒப்பந்தங்கள், தீர்ப்பாய, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள், தமிழகத்தின் காவிரி உரிமை குறித்த இந்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகள் இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. காவிரி பிரச்னை ஆரம்பித்த நாளிலிருந்து, 2016 டிசம்பர் வரை காவிரி சிக்கலில் நடந்த நிகழ்வுகள், வழக்குகள், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுடன், தண்ணீர் தகராறுச் […]

Read more
1 4 5 6 7 8 17