அருள் தரும் ராமர் நரசிம்மர் திருத்தலங்கள்

அருள் தரும் ராமர் நரசிம்மர் திருத்தலங்கள், சிவம், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 30ரூ. திருப்புல்லாணி ராமர், மதுராந்தகம் ராமர், கடையம் ராமசாமி கோவில் மற்றும் தமிழகத்தில் காட்சி தந்த நரசிம்மர் கோவில் உள்ளிட்ட 23 கோவில்களின் சிறப்புகள் தொகுக்கப்பட்ட நூல். நன்றி: தினத்தந்தி, 9/11/2016.   —-   தெருவென்று எதனைச் சொல்வீர், தஞ்சாவூர்க் கவிராயர், காலச்சுவடு பதிப்பகம். விலை 180ரூ. மனிதர்களுக்குச் சம்பவங்கள் நேரலாம். அவற்றை நினைவுகூரவும் செய்யலாம், அதனை நூலாசிரியர் இலக்கியமாகப் படைத்து வெற்றி கண்டுள்ளார். நன்றி: தினத்தந்தி, 9/11/2016.

Read more

சொன்னால் நம்பமாட்டீர்கள்

சொன்னால் நம்பமாட்டீர்கள், தேசியச் செல்வர் சின்ன அண்ணாமலை, குமரன் பதிப்பகம், பக். 240, விலை 90ரூ. 1978-ல் குமுதம் போனஸ் வெளியீடாக சிறுசிறு புத்தகங்கள் வெளியிட்டது. அப்போது சின்ன அண்ணாமலை வாழ்வில் நடைபெற்ற நம்பமுடியாத சில சம்பவங்களை தொகுத்து குமுதத்தில் அவர் எழுதிய கட்டுரைகள் பரபரப்பாகப் பேசப்பட்டன. அவற்றின் தொகுப்பே இந்நூல். காந்திஜியை நேரில் சந்தித்தது, ஹரிஜன் இதழை தமிழில் நடத்த காந்தி அவருக்கு அனுமதி தந்து கடிதம் எழுதியது, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறைசென்றது, மக்களே சிறையை உடைத்து இவரை விடுதலை செய்தது, […]

Read more

நான் மலாலா

நான் மலாலா, ஆங்கிலத்தில் மலாலா யூசுப்ஸை, கிறிஸ்டினா லாம்ப், தமிழில் பத்மஜா நாராயணன், காலச்சுவடு பதிப்பகம், பக். 303, விலை 275ரூ. ஒடுக்கப்பட்ட குழந்தைகளின் குரல் ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து, 100 மைல்கள் தூரத்தில் உள்ள, பாகிஸ்தானைச் சேர்ந்த, மலைகள் சூழ்ந்த இயற்கை அழகு கொஞ்சும் ஸ்வாட் பள்ளத்தாக்கில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சிறுமி மலாலா. அவர் கனவெல்லாம் பள்ளிக்கூடத்திற்கு சென்று படிப்பது மட்டும் தான். இயல்பிலேயே பேச்சாற்றல் மிகுந்த மலாலாவிற்கு, அவரது 11 வயதில் வாசித்த ஸ்டீபன் ஹாக்கிங்கின், ‘காலம்: ஒரு […]

Read more

ஜெயகாந்தனும் நானும்

ஜெயகாந்தனும் நானும், தேவபாரதி, கலைஞன் பதிப்பகம். ஜெயகாந்தனின் காலம் பொற்காலம்! தேவாரதி எழுதிய ‘ஜெயகாந்தனும் நானும்’ என்ற நூலை சமீபத்தில் படித்தேன். கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஜெயகாந்தன் என்ற ஆளுமை, தமிழ் எழுத்துலகில் மிக முக்கியமானவர். அவர், மற்றவர்களை போல அல்லாமல், அரசியல்வாதியாக, இயக்குனராக, பேச்சாளராக, எழுத்தாளராக புகழ் பெற்றவர். தேவபாரதி, ஜெயகாந்தனுடன் பழகியபோது நிகழ்ந்த மறக்க முடியாத நிகழ்வுகளை, நாவல்போல, சுவைபட இந்த நூலில் கூறுகிறார். கண்ணதாசனின் ‘வனவாசம்’ மிகவும் வெளிப்படையாக இருக்கும். அது, ரகசியமான அழகியலோடு பேசுகிறது. ஒருமுறை தேவபாரதி, ஜெயகாந்தனின் […]

Read more

செர்னோபிலின் குரல்கள்

செர்னோபிலின் குரல்கள், ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச், தமிழில் சித்தார்த்தன் சுந்தரம், எதிர் வெளியீடு, விலை 300ரூ. ‘இனி நீ தேர்வு செய்ய வேண்டியது என்ன? வாழ்வா, சாவா? நல்லாசியா, சாபக்கேடா? நியும் உன் சந்ததியும் வாழ்ந்திட, வாழ்வையே தேர்வுசெய்!’ என விவிலியத்தில் ஒரு அர்த்தமுள்ள வசனம் வரும். ‘செர்னோபிலின் குரல்கள்’ சொல்ல வருவதும் அதையே. அணு உலைகளின் பத்திரம், பாதுகாப்பு பற்றிய கேள்விகள் பெருகி வழிகின்றன. ‘ஆக்கபூர்வ காரியங்களுக்குத்தான் அணுசக்தி என்பது ஒரு மாயை’ என இதில் தெளிவாகிறது. ஓய்ந்துபோன கூடங்குளம் போராட்டம், புதிய அணுஉலைகளுக்கு […]

Read more

காடுகளுக்காக ஒரு போராட்டம்

காடுகளுக்காக ஒரு போராட்டம், சிக்கோ மென்டிஸ், தமிழில் ச. வின்சென்ட், எதிர்வெளியீடு, விலை 120ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023826.html இறுதி சடங்கிற்கு பூக்கள் வேண்டாம். பிரேசிலை சேர்ந்த, சிக்கோ மென்டிஸ் ஆங்கிலத்தில் எழுதி, பேராசிரியர் ச.வின்சென்ட், ‘காடுகளுக்காக ஒரு போராட்டம்’ என, தமிழில் மொழிபெயர்த்த நூலை சமீபத்தில் படித்தேன். எதிர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இயற்கையை அழிப்போருக்கு, அரசு நிர்வாகம் துணை நிற்பதும், எதிர்ப்பவர்களை கொல்வதும் என்ற உண்மை சம்பவத்தை நூல் விவரிக்கிறது. இயற்கையை காப்பாற்ற போராடி கொல்லப்படும், சிக்கோ […]

Read more

தேவை

தேவை, மரபு மாறா மனிதர்கள், மருதம் கோகி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, விலை 160ரூ. மீத்தேன் எதிர்ப்பின் மண்ணிலிருந்து காவிரி டெல்டாவை மிகப் பெரும் அச்சம் சூழ்ந்திருக்கிறது. முப்போகம் நெல் விளைந்த தஞ்சை பூமியின் அடையாளம் கொஞ்சகொஞ்சமாய் மாறிவருகிறது. பெட்ரோலியம் உள்ளிட்ட இயற்கை வளங்கள், அங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்குக் கேடாய் மாறியிருக்கின்றன. பெட்ரோலிய எண்ணெய் தோண்டியெடுப்பதற்காக அந்த மண்ணில் ஒ.என்.ஜி.சி. ஆரம்பத்தில் காலடி எடுத்து வைத்தது. இப்போது மீத்தேன் வாயு, ஷேல் காஸ் என அங்கு பூமியை பிளந்தெடுத்து […]

Read more

நான், ஜிபு மற்றும் புற்றுநோய்

நான், ஜிபு மற்றும் புற்றுநோய், ம.அஹமது நவ்ரோஸ் பேகம், என்.ஜே.பதிப்பகம், பக். 96, விலை 30ரூ. சென்னை புரசைவாக்கம் ஜே.எம்.பள்ளியின் முதல்வர் அஹமது நவ்ரோஸ் பேகம், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் மகன் ஜிபு என்ற ஜிப்ரீல் பட்ட அவஸ்தைகளையும், எடுத்துக்கொண்ட சிகிச்சைகளையும் கண்ணீருடன் பதிவு செய்திருக்கும் நூல் இது. ஒரு தேர்ந்த எழுத்தாளருக்கே உரிய திறமையுடன் மிக நேர்த்தியாக இந்த நூலை எழுதியிருக்கிறார் ஆசிரியர். மகனுக்கு உடல்நலம் குன்றிய முதல் நாளில் தொடங்கி, அவனை மருத்தவரிடம் காட்டியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, மகனுக்கு செய்யப்பட்ட இரத்தப் […]

Read more

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

நான் நம்மாழ்வார் பேசுகிறேன், சீனிவாசன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 282, விலை 165ரூ. இயற்கை விவசாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் நம்மாழ்வர். குக்கிராமங்களிலும் கூட இயற்கை விவசாயத்தை எடுத்துச் சென்ற அவரின் வாழ்க்கை வரலாறு இந்நூல். பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் என மண்ணைக் கொல்லும் நஞ்சுகளை எதிர்த்துப் போராடியவர். மண்ணுக்கேற்ற பயிர் ரகங்களைப் பயிர் செய்வது குறித்தும், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல் கால்நடைகளின் கழிவுகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரித்து இயற்கை விவசாயம் செய்வது குறித்தும் இந்நூலில் அருமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வேம்பு […]

Read more

பழவேற்காடு முதல் நீரோடி வரை

பழவேற்காடு முதல் நீரோடி வரை, வறீதையா கான்ஸ்தந்தின், எதிர் வெளியீடு, விலை 130ரூ. என் விடலைப் பருவம் மீனவக் கிராமத்தின் வாசனை அடுக்குகளாக மனதில் பதிந்துகிடக்கிறது. மறக்க இயாத அருமையான வாழ்க்கை அது. காலண்டரில் தமிழ்/ஆங்கில மாதங்களை வரிசைப்படுத்துவதுபோல என் கடற்கரை வாழக்கையில் வருடத்தை மீன்வரவுகளின் பருவங்களாக வரிசைப்படுத்திவிட முடியும். சாளை, சாவாளை, குதிப்பு, சள்ளை மீன், அயிலை, நெத்திலி, கூனி, இறால், மரத்துமீன், கணவாய், கெழுது, கிளார்த்தி என்று எளிதாய்ப் பட்டியல்படுத்தலாம். ஒவ்வொரு மீனின் வருகையின்போதும் கடலோரம் புதுப்புது வாசனைகளை அணிந்துகொள்ளும். இதையெல்லாம் […]

Read more
1 5 6 7 8 9 17