ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

ஏ.பி.ஜே. அப்துல் கலாம், அருண் திவாரி, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங், பக். 548, விலை 495ரூ. மகாத்மா காந்திக்குப் பிறகு அதிக மரியாதைக்குரியவராக கருதப்பட்ட ஓர் இந்தியத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். அவரது வாழ்க்கை வரலாற்றை விரிவாகப் பேசும் நூல் இது. அப்துல்கலாமின் சீடரான அருண் திவாரி, கலாம் தன் வாழ்வில் எதிர்ப்பட்ட அனைத்துத் தடைகளையும் சவால்களையும் எவ்வாறு வெற்றிகரமாக கடந்தார் என்பதை இந்நூல் மூலம் உலகிற்கு அறிவுறுத்தியிருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஓர் இந்தியராக இருந்தார் என்பதை இந்நூல் வெளிப்படுத்துகிறது. […]

Read more

பிம்பச் சிறை

பிம்பச் சிறை, எம்.எஸ். பாண்டியன், பிரக்ஞை பதிப்பகம், பக். 248, விலை 225ரூ. திராவிட இயக்க ஆய்வாளரான இந்நூலாசிரியர் 24 ஆண்டுகளுக்கு முன்னர் எம்.ஜி.ஆரைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய இந்நூல், தமிழில் இப்போது வெளிவந்துள்ளது. எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வல நிகழ்விலிருந்து தொடங்குகிறது இந்நூல். எம்.ஜி.ஆர். மீது தமிழக மக்கள் வைத்திருந்த அபரிமிதமான பற்று (எம்.ஜி.ஆர். இறந்தபோது ஏராளமானோர் மொட்டையடித்துக் கொண்டது, 31 பேர் தற்கொலை செய்து கொண்டது), எம்.ஜி.ஆர். தனது படங்களுக்கு அடித்தட்டு மக்களிடமிருந்தே தலைப்புகளைப் பெற்றது (“தொழிலாளி’‘, “விவசாயி’‘, “படகோட்டி‘’), ஆரம்ப காலப் […]

Read more

எம்.ஜி.ஆர். என்றொரு மாயக் கலைஞன்

எம்.ஜி.ஆர். என்றொரு மாயக் கலைஞன், ஆர்.சி. சம்பத், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 120ரூ. எம்.ஜி.ஆர். வரலாறு புத்தி கூர்மை, சாதுர்யம், சாதக சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளுதல், தகுந்த சூழ்நிலைக்காகக் காத்திருத்தல், மீன் கொத்திய வேகத்தில் தூண்டிலை ‘சரக்கென்று’ வெளியே வீசி எடுக்கும் தூண்காரனைப்போல சாதகச் சூழ்நிலை அமைந்த வேகத்தில் அதைப் பயன்படுத்தி நினைத்ததை ஜெயித்தல், எதிரிகளை வசப்படுத்துதல், வளைந்தும், நெளிந்தும், நிமிர்ந்தும் தனது பயணப் பாதைக்கு பங்கம் வராதபடி தொடர்ந்து முன்னேறுதல் – எல்லா வாழ்வியல் வித்தைகளும் அறிந்தவர் எம்.ஜி.ஆர். அவரது வாழ்க்கையில் நடந்த […]

Read more

பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்

பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள், கி. வீரமணி, திராவிடக் கழக வெளியீடு, விலை 150ரூ. 20-ம் நூற்றாண்டின் பகுத்தறிவுப் பகலவனாகத் திகழ்ந்தவர் தந்தை பெரியார். அவருடைய வாழ்க்கை, தமிழ்நாட்டின் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்ததாகும். அவருடைய வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை சுவைபட எழுதியுள்ளார், திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி. பெரியாரின் தொலைநோக்கு பார்வை, அஞ்சாமை, நேர்மை, சிக்கனம், சமத்துவம் முதலிய பண்புகளை எடுத்துக்காட்டும் நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. ஒரு சமயம் அவர் வாயில் புற்றுநோய் ஏற்பட்டு, அதில் இருந்து அவர் மீண்ட தகவலும் புத்தகத்தில் இடம் […]

Read more

எம்.ஜி.ஆர். என்றொரு மாயக் கலைஞன்

எம்.ஜி.ஆர். என்றொரு மாயக் கலைஞன், ஆர்.சி.சம்பத், கவிதா பதிப்பகம், பக்.160, விலை ரூ.120. எம்.ஜி.ஆர். பற்றிய நூல்கள் எத்தனையோ வந்திருந்தாலும், மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் எத்தனையோ சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் இடம்பெற்றிருக்கும் என்பதை இந்த நூல் வெளிக்கொண்டு வந்துள்ளது. எம்.ஜி.ஆர். படங்களில் நடிக்கும்போது அழுது நடிக்க மாட்டார். முகத்தை மூடிக்கொள்வார். சிலபேர் இதைப்பார்த்து, அவருக்கு உணர்ச்சிகரமாக நடிக்கத் தெரியாது என்பார்கள். உண்மை அதுவல்ல. அவர் தன் ரசிகர்களிடையே ஓர் அழகனாகவும், வீரனாகவும் வெளிப்பட விரும்பினார். வீரன் அழுதால் மக்களுக்கு அவன் வலிமையில் நம்பிக்கை […]

Read more

கலாம் கனவு நாயகன்

கலாம் கனவு நாயகன், ரமேஷ் வைத்யா, விகடன் பிரசுரம், பக். 159, விலை 185ரூ. அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு முதன்முறையாக, அவரே சொல்வதாக, ரமேஷ் வைத்யா எழுத்தில், காமிக்ஸாக 60 பக்கங்களில் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் ஆற்றிய உரைகளின் பகுதிகள், அவர் அளித்த பேட்டிகள், சுட்டிக் குழந்தைகளின், பொதுமக்களின் கேள்விகளுக்குச் சொன்ன பதில்கள், அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின்போது வந்திருந்தவர்களிடையே அவர் ஏற்படுத்திய உத்வேகமான உணர்வுகள், நம் நாட்டின் மீது அவர் கொண்டிருந்த பெருமிதமான கருத்துகள் என்று பல பரிமாணங்களிலும் படைப்புகளை […]

Read more

எழுச்சிநாயகன் விவேகானந்தர்

எழுச்சிநாயகன் விவேகானந்தர்  சி.எஸ்.தேவநாதன், எஸ்.எஸ்.பப்ளிகேஷன்,  பக்.192, விலை ரூ.120. விவேகானந்தரின் இளமைக் காலத்திலிருந்து அவர் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைச் சொல்லும் வாழ்க்கை வரலாற்று நூல் என்றும் இதனைச் சொல்லலாம். ஆனால் அந்த எல்லையோடு இந்நூல் நின்றுவிடவில்லை. விவேகானந்தரின் சிந்தனைகள் வளர்ந்தவிதம், ஒவ்வொரு விஷயங்களைப் பற்றியும் அவருடைய தெளிவான கருத்துகள் தோன்றியவிதம் ஆகியவற்றை இந்நூல் விளக்குகிறது. விவேகானந்தரின் வாலிபப் பருவத்தில், அவரை விரும்பி அவர் இருக்கும் இடத்துக்கு இரவில் வந்த ஓர் இளம் பெண்ணைப் பார்த்து, “”அம்மா, இது தகாத காரியம் என்பதை உணருங்கள். உடனே இங்கிருந்து […]

Read more

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர், பிரியா பாலு, சஞ்சீவியார் பதிப்பகம், விலை 115ரூ. கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லாதவர்களையும் கிரிக்கெட் பார்க்க தூண்டியவர் சச்சின் டெண்டுல்கர். இந்திய கிரிக்கெட் விளையாட்டில் இவர் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவருமில்லை. அவரின் சாதனையின் வரலாறே இந்நூல். சச்சின் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் ஏராளம். அதை கருத்தில் கொண்டு சச்சின் கிரிக்கெட் துறையில் காலடி எடுத்து வைத்ததிலிருந்து அவர் சந்தித்த, பெற்ற அனுபவங்கள், சாதனைகள், மற்ற வீரர்களக்க அவர் மீது இருக்கும் ஆபிப்பிராயம் போன்றவற்றின் தொகுப்பாக இந்நூல் உருவாகியுள்ளது. சச்சின் […]

Read more

அன்னை தெரசா

அன்னை தெரசா, பா. தீனதயாளன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 168, விலை 125ரூ. தெரசாவின் தாயகம் அல்பேனியா. இருப்பினும் அவர், 1948ம் ஆண்டிலேயே இந்தியப் பிரஜை ஆகி விட்டார். தெரசாவும் ஒருமுறை, ‘ரத்த சம்பந்தத்தால் நான் அல்பேனியன். மதநம்பிக்கையில் ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரி. மற்றபடி எப்போதும் நான் இந்தியப் பெண்மணி’ என்று கூறியிருக்கிறார். மற்ற இளம்பெண்களைப் பாடாய்ப்படுத்தும் பருவத் தொல்லைகள் எதனையும் தெரசா அனுபவித்ததில்லை. அது, இயற்கை அவருக்குத் தந்த கொடை என்று தான் சொல்ல வேண்டும். மாறாக, துறவறம் பூண்டு ஏழை, எளிய […]

Read more

கவிஞர் அறை சுஜா – கோபி

கவிஞர் அறை சுஜா – கோபி, கோபி கண்ணதாசன், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 112, விலை 90ரூ. கண்ணதாசனின் மட்டுப்பட்ட மதுப்பழக்கம் பிரபலமான மனிதர்களின் சாதாரண விஷயங்கள் கூட பதிவாகி விடுகின்றன. சாதாரணமான மனிதர்களின் அபூர்வமான விஷயங்கள் கூடப் பதிவாவதில்லை. இது ஒரு சமூக முரண். இந்தச் சூழலில், கவிஞர் கண்ணதாசனின் மகன் கோபி கண்ணதாசன் எழுதியிருக்கும் இந்தப் புத்தகத்தை எந்த வகையில் சேர்ப்பது என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. கவிஞரின் உணவுப் பழக்கம், மட்டுப்பட்ட மதுப் பழக்கம் எனப் பல சுவாரசியமான […]

Read more
1 19 20 21 22 23 46