ஜான்சிராணி

ஜான்சிராணி, கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, சுவாமிமலை பதிப்பகம், பக். 96, விலை 40ரூ. ஜான்சிராணி லட்சுமிபாய் சாதாரண குடும்பத்தில் பிறந்து, அரச குடும்பத்தைச் சேர்ந்தவராகி, பிரிட்டிஷ் பேரரசை ஆட்டம் காணவைத்த வீரமங்கை. இந்திய புரட்சி இயக்கம் கொண்ட வீரர்களிலேயே துணிச்சல் மிக்க, அச்சமற்ற, மிகச்சிறந்த தலைவியாக விளங்குவதை பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டு நூலாசிரியர் விளக்குவது சிறப்பு. அவரைப்போன்று ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் அந்நியரிடமிருந்தும் தீவிரவாதிகளிடமிருந்தும் தீய சக்திகளிடமிருந்தும் நாட்டினைக் காக்க வீராங்கனைகளாக வீறுகொண்டு எழ வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூல் இது. நன்றி: குமுதம், […]

Read more

அப்துல் கலாம்

அப்துல் கலாம், வரலொட்டி ரங்கசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 280, விலை 200ரூ. சிறகுகள் தந்த கனவு நாயகன் அப்துல் கலாம் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த கனவு நாயகர் குறித்து இதுவரை வெளிவராத பல தகவல்களை கோர்வையாக, படிக்க அலுப்பு தட்டாத வகையில், 280 பக்கங்களில் விவரித்துள்ளார் வரலொட்டி ரெங்கசாமி. ‘காந்தி காலத்தில் வாழ்ந்தவர்கள்’ என்று ஒரு தலைமுறை பெருமை பேசியது என்றால், ‘நாங்கள் இவர் காலத்தில் வாழ்ந்தவர்கள்’ என, இன்னொரு […]

Read more

தொண்டர் கோவே

தொண்டர் கோவே, வீ. செல்வராஜ், குமுதம் வெளியீடு, விலை 200ரூ. தொண்டர்கோவே என்றழைக்கப்படும் கோ. வேங்கடாசலபதியின் வாழ்க்கை வரலாற்ற நூல். அவரது வாழ்க்கை முழுவதும் சமுதாயத் தொண்டுகள் நிறைந்ததாகவே உள்ளது. காந்தியடிகளைப் போல அவரும் ஒரு சமுதாய விஞ்ஞானியாகத் திகழ்ந்திருக்கிறார். அவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையை உற்று நோக்கினால் அவர் ஒரு பிறவித் தொண்ட என்ற உண்மையை அறிய முடிகிறது என விவரிக்கிறார் நூலாசிரியர் வீ. செல்வராஜ். நன்றி: தினத்தந்தி, 31/8/2016.

Read more

அப்துல்கலாம் – ஒரு கனவின் வரலாறு

அப்துல்கலாம் – ஒரு கனவின் வரலாறு, சேவியர், அருவி வெளியீடு, விலை 250ரூ. ‘ஏவுகணை மனிதர்’ ‘மக்கள் ஜனாதிபதி’ ‘மாணவர்களின் நண்பன்’ ‘அணு விஞ்ஞானி’ போன்ற அடைமொழிகளால் அடைகாக்கப்பட்டவர் அப்துல் கலாம். அப்துல்கலாமுடைய புகழுக்கும் பெருமைக்கும் அவரது எளிமையும், பணிவும் நேர்மையுமே காரணம். இந்தப் பண்புதான் அவரை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வழிகாட்டியாக மாற்றியது. இன்றைய தலைமுறையும், அடுத்த தலைமுறையும் கலாமிடம் இருந்து எதைக் கற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ இந்த மூன்று பண்புகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் எழுத்தாஒர் சேவியர் இந்த நூலை […]

Read more

காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம், இசையரசியின் வாழ்க்கை பயணம், ரமணன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 264, விலை 800ரூ. கர்நாடக இசையுலகில் நிகரற்ற கலைஞராக விளங்கிய எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்றாண்டையொட்டி வெளியாகியிருக்கும் அவரது வாழ்க்கைப் பயண நூல் இது. மதுரை சேதுபதி பள்ளியின் திறந்தவெளியில் மதுரை சண்முகவடிவு வீணை வாசிக்க அவரது ஆறு வயதுக் குழந்தையான குஞ்சம்மா சற்று தொலைவில் மணல் வீடு கட்டி விளையாடுவதில் தொடங்கி, அந்த ஆறு வயதுக் குழந்தை “ஆனந்தஜா’‘ என்கிற மராட்டிய மொழிப் பாடலை முதன்முதலாக மைக்கில் பாடியது, மதுரை […]

Read more

ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஒரு வாழ்க்கை வரலாறு

ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஒரு வாழ்க்கை வரலாறு. அருண் திவாரி. தமிழில்: நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக்.548, விலை ரூ.495. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு. அவரோடு நெருங்கிப் பழகிய நூலாசிரியர், அப்துல் கலாமின் வாழ்க்கையை வெறும் நிகழ்வுகளின் தொகுப்பாகப் பார்க்காமல், அந்த நிகழ்வுகளின் ஊடே அப்துல்கலாம் விட்டுச் சென்ற வாழ்க்கைப் பார்வையை நூல் முழுவதும் இழையோட விட்டிருக்கிறார். அப்துல்கலாமின் இளமைப் பருவம், ஒரு விமானியாக வேண்டும் என்று அவர் கண்ட கனவு நிறைவேறாமல் போனது, ஆனால் அதற்கும் […]

Read more

வள்ளலார் மூட்டிய புரட்சி

வள்ளலார் மூட்டிய புரட்சி, பழ.நெடுமாறன், ஐந்திணை வெளியீட்டகம், பக். 160, விலை ரூ.150. திருவருட்பிரகாச வள்ளலாரை ஓர் ஆன்மிகவாதியாக மிகப் பெரிய ஞானியாக மட்டுமே அறிந்து வைத்துள்ளவர்களுக்கு அவரை மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதியாக, மனித நேயப் பண்பாளராக, மொழிப்பற்றாளராக இன்னும் பல்வேறு கோணங்களில் அவரது அருமை பெருமைகளை இந்நூலின் வாயிலாக எடுத்தியம்பி இருக்கிறார் பழ.நெடுமாறன். 19-ஆம் நூற்றாண்டின் தனிப்பெரும் சிந்தனையாளராக வள்ளலார் சிறப்பிடம் பெற்றுள்ளார். வள்ளலார் பெருமான் உலகிற்கு வழங்கிய அழியா முழு முதற்கோட்பாடு ஒன்றே ஒன்றுதான். அதுவே சீவகாருண்யம் என்னும் உயிரிரக்கப் பண்பு. […]

Read more

பிம்பச் சிறை

பிம்பச் சிறை, பாண்டியன், தமிழில் பூ.கொ. சரவணன், பிரக்ஞை பதிப்பகம், விலை 225ரூ எம்.ஜி.ஆர். பற்றிய ஆய்வு நூல் தமிழ்நாட்டில் முதலில் சினிமாவிலும், பிறகு அரசியலிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் எம்.ஜி.ஆர். அவரைப்பற்றி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய எம்.எஸ்.எஸ். பாண்டியன் ஆய்வு செய்து, ஆங்கிலத்தில் எழுதிய நூல், இப்போது தமிழில் “பிம்பச் சிறை” எம்.ஜி. ராமச்சந்திரன் திரையிலும், அரசியலிலும் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. தமிழில் மொழி பெயர்த்தவர் பூ.கொ. சரவணன். திரை உலகில் எம்.ஜி.ஆர். பெற்ற வெற்றியை விரவாகக் கூறும் பாண்டியன், அவருடைய […]

Read more

என். கிருஷ்ணசாமி-படிக்காத மேதை பட அதிபரின் வாழ்க்கை வரலாறு

என். கிருஷ்ணசாமி, படிக்காத மேதை பட அதிபரின் வாழ்க்கை வரலாறு, கலைஞன் பதிப்பகம், விலை 130ரூ. சிவாஜி கணேசனின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று “படிக்காத மேதை”. பல கட்டங்களில், படம் பார்ப்பவர்களின் கண்களை கலங்கச் செய்து விடுவார் சிவாஜி. அந்தப் படத்தை தயாரித்தவர் “பாலா மூவிஸ்” என். கிருஷ்ணசாமி. படத்தைத் தயாரிக்கவும், ரிலீஸ் செய்யவும் அவர் எதிர்நீச்சல் போட வேண்டி இருந்தது. படம் பெரிய வெற்றி பெற்று வசூலை குவித்த போதிலும், அதனால் லாபம் அடைந்தவர்கள் விநியோகஸ்தர்கள்தான். என்.கிருஷ்ணசாமி வேறு பல சாதனைகளுக்கும் சொந்தக்காரர். […]

Read more

காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 800ரூ. இசையரசி “பாரத ரத்னா” எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை “காற்றினிலே வரும் கீதம்” என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார் எழுத்தாளர் ரமணன். எம்.எஸ். பாடலைக்கேட்டு மகாத்மா காந்தியும், நேருவும் பாராட்டியிருக்கிறார்கள். ஐந்து திரைப்படங்களில் மட்டுமே நடித்த எம்.எஸ். அதன் பிறகு வந்த வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்துவிட்டு, இசைக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். 1940-ம் ஆண்டில், எம்.எஸ். சுப்புலட்சுமியும், “கல்கி” சதாசிவமும் திருமணம் செய்து கொண்டார்கள். அதன்பின், எம்.எஸ்.சை சிகரத்துக்கு கொண்டு சென்ற பெருமை சதாசிவத்துக்கே […]

Read more
1 18 19 20 21 22 46