உட்கவர் மனம்

உட்கவர் மனம், தமிழில்-சி.ந.வைத்தீஸ்வரன், முல்லை பதிப்பகம், 323-10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை 40, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-180-4.html டாக்டர் மரியா மாண்டிச்சோரி அம்மையார் இத்தாலிய நாட்டவர், மாண்டிச்சோரி ஆசிரியர் பயிற்சியை நடத்தி வைக்க சென்னைக்கு வந்தவர். இரண்டாம் உலகப்போருக்குப் பின், ஆமதாபாத்தில் குழந்தை கல்வி சம்பந்தமான சொற்பொழிவுகள் ஆற்றினார். அவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் உருவாகி இருக்கிறது. இந்த நூலில் அம்மையார் தம்முடைய தீர்க்க தரிசன ஒளியைக் காட்டுகிறார். குழந்தைகளுடன் நெருங்கிப் […]

Read more

தொல்காப்பியக் கவிதையியலும் தமிழிலக்கியமும்

தொல்காப்பியக் கவிதையியலும் தமிழிலக்கியமும், இரா. சம்பத், முரண்களரி பதிப்பகம், 34/25, வேதாச்சலம் தெரு, காந்தி நகர், சின்னசேக்காடு, மணலி, சென்னை 68, பக். 184, விலை 120ரூ. தமிழ்க் கவிதை என்பது மிக நீண்டதொரு வரலாற்றுப் பழமையினைக் கொண்டது. புதுக்கவிதையின் வகைமை, மரபுக்கவிதையில் கோட்பாடு, இலக்கிய மரபு, கவிதை மரபு, இலக்கியவியல் நோக்கு, யாப்பியல் நோக்கு எனப் பன்முகப் பார்வையில், தொல்காப்பியம், பதினெண்கீழ்க்கணக்கு, பாரதியார், தமிழ்நாடன், வானம்பாடிக் கவிஞர்கள் போன்றோரின் கவிதை மரபுகள் முதலியவை திறனாய்வு செய்யப்பட்டுள்ளன. இலக்கியவியல், யாப்பியல், மொழியியல் நோக்கில் எழுத்து […]

Read more

பெரியார் களஞ்சியம் குடிஅரசு

பெரியார் களஞ்சியம் குடிஅரசு, (தொகுதி 41, 42), பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், பெரியார் திடல், 81/1(50), ஈ,வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை 7, விலை 41வது தொகுதி 200ரூ, 42வது 270ரூ. தந்தை பெரியார் நடத்திய குடியரசு பத்திரிகை இதழ்கள், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை குறிப்பாக திராவிட இயக்கத்தின் வளர்ச்சியை விவரிக்கும் வரலாற்று ஆவணம் ஆகும். அந்தப் பத்திரிகையில் வெளியான பெரியாரின் தலையங்கங்கள், கட்டுரைகள், சொற்பொழிவுகள், அறிக்கைகள் முதலியவற்றை காலவரிசைப்படி தொடர்ந்து, புத்தகமாகப் பிரசுரிக்கும் பெரும் பணியை திராவிடக் கழகத்தலைவர் கி. […]

Read more

மங்கையர்க்கரசி எங்கள் தெய்வம்,

மங்கையர்க்கரசி எங்கள் தெய்வம், சைவத் திரு, ராமநாதன், பழனியப்பன், வானதி பதிப்பகம், பக். 496, விலை 270ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-867-2.html தமிழ்க் குடியிலே மிக உயர்ந்த புகழையும், பாரம்பரிய பெருமைகளையும் கொண்ட பெருங்குடி தனி வணிகர் எனப் போற்றப்படுவது நகரத்தார் குடி. கண்ணிமையைப்போல் தமிழையும், சைவத்தையும் வளர்த்து வருகின்ற, பெருங்குடி மரபில் வந்த பெருமகனார் இந்நூலாசிரியர். தெய்வச் சேக்கிழார் பெருமான், தமது குடிமக்கள் காப்பியமான பெரிய புராணத்தில், அறுபத்து மூன்று நாயன்மார்கள், மங்கையர்க்கரசி வளவர்கோன்பாவை வரிவளைக்கை மடமானி […]

Read more

தொழிலாளி டு முதலாளி

தொழிலாளி டு முதலாளி, இராம்குமார் சிங்காரம், பெரிகாம், 37, அசீஸ்மல்க் இரண்டாம் தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை 6, பக், 112, விலை 80ரூ. காய்கறிக் கடைக்காரர் முதல் கம்ப்யூட்டர் இன்ஜினீயர் வரை தமக்கென ஒரு தொழில் பாதையைக் கண்டு முன்னேறியவர்களின் நேர்காணல்களே இந்நூல். சொந்தத் தொழில், நாமே அதற்கு முதலாளி என்று களம் இறங்கியவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள், பிரச்னைகளைக் கண்டு துவண்டு போகாமல் முன்னேறும் வழிகள் என்று தொழில் முனைவோருக்கு எழும் சந்தேகங்களுக்கு நேர்காணலில் இடம்பெற்ற 23 தொழிலதிபர்களும் எளிய […]

Read more

அரவாணிகள் அன்றும் இன்றும்

அரவாணிகள் அன்றும் இன்றும், முனைவர் கி. அய்யப்பன், விசாலாட்சி பதிப்பகம், கடையம் நல்லாப்பாளையம், விழுப்புரம் 605701, பக். 166, விலை 150ரூ. அரவாணியரின் உணவு, உறவு, சடங்குகள், தொழில்கள் என அவர்களது வாழ்க்கையை நூலாசிரியர் ஆய்வு செய்து விளக்கியுள்ளார். அரவாணிகளது கல்விநிலை, பொருளாதார நிலை போன்றவை பற்றியும், அவர்களது குழுவுக்குள் பேசும் கவுடி மொழி குறித்தும் கூறப்பட்டுள்ளது. பெண்ணியநோக்கில் அரவாணியம், திருக்குறள், அகநானூறு, நீலகேசி போன்ற இலக்கியங்களில் அரவாணியம் என அரவாணிகள் நிலை அன்றும் இன்றும் பகுத்து விளக்கப்பட்டுள்ளது. அரவாணிகள் குறித்து அறிய இந்நூல் […]

Read more

புத்தகம் பற்றிய புத்தகம்

புத்தகம் பற்றிய புத்தகம், ஜெ. வீரநாதன், எஸென்சியல் பப்ளிகேஷன்ஸ், 167ஏ, போலீஸ் கந்தசாமி வீதி, கணேசபுரம், ஒலம்பஸ், ராமநாதபுரம், கோயம்புத்தூர் 641045, விலை 275ரூ. புத்தகத்தின் தலைப்பைப் பார்த்ததும் புத்தகம் பற்றியே ஒரு புத்தகமா என்று வியப்படையத்தோன்றும். புத்தகம் பற்றி அப்படி என்ன அபூர்வமான தகவல்களைக் கூறிவிடப் போகிறார்கள்? என்று பலர் நினைக்கவும் செய்வார்கள். ஆனால் உண்மையில் புத்தகங்கள் பற்றி பல அபூர்வமான தகவல்கள் இந்நூலில்உள்ளன. ஆரம்ப காலத்தில் ஒரு புத்தகத்துக்கு வெறும் 200 பிரதிகள்தான் அச்சிட்டார்கள். அதை விற்பதற்கே ரொம்பவும் சிரமப்பட்டார்கள். இப்போது […]

Read more

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம்

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம், தத்துவம் சாமி சிதம்பரனார், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை 14, பக். 142, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-807-4.html சித்தர்கள் என்றதும் சித்த வைத்தியம் பதினெண் சித்தர்கள், கூடு விட்டு கூடு பாய்தல் உள்ளிட்ட எண் வகைச் சித்தர்கள், அற்புதங்களைச் செய்யக் கூடியவர்கள் என்ற வகையில்தான் எண்ணங்கள் ஓடும். ஆனால் சாமி சிதம்பரனார் எழுதியுள்ள சித்தர்கள் கண்ட விஞ்ஞானம், தத்துவம் என்ற நூலைப் படிக்கும்போது சித்தர்களின் பல்வேறு குணாதிசயங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. மக்கள் […]

Read more

அறியப்படாததமிழகம்

அறியப்படாததமிழகம், தொ. பரமசிவன், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.கே,பி, சாலை, நாகர்கோவில் 629001, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-049-2.html தமிழ்நாட்டில் திருமணத்தில் இருந்து கோவில் விழாக்கள் வரை இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. அதுபற்றி ஆராய்ந்து, பல சுவையான தகவல்களைக் கொடுத்துள்ளார், பேராசிரியர் தொ. பரமசிவன். தென்னை மரம் பற்றி தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் எவ்வித குறிப்பும் இல்லை. கி.பி. ஏழாம் நூற்றாண்டு அளவில் எழுந்த எந்த பக்தி இலக்கியத்திலும், கோவில்களில் தேங்காய் உடைக்கப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை. தமிழர் திருமணத்தில் […]

Read more

துணை வேந்தர் சொல்லும் செயலும்

துணை வேந்தர் சொல்லும் செயலும், மு. பொன்னவைக்கோ, தமிழ்ப்பேராயம், எஸ்.ஆர்.எம், பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் 603203. பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராகப் பணிபுரிந்துள்ள பொன்னவைக்கோ, தமிழறிஞர்களுடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பைப் பெற்ற பொறியாளர். தமிழ் மொழியைக் கடந்து, பிறமொழிகள் மீது பற்றும் பாசமும் உள்ள ஒரு பரந்துப்பட்ட, விசாலமான பார்வையாளர். பெரியாரின் கொள்கைகளை வரவேற்கும் இவர், ஆன்மிகத்திலும் நாட்டம் உள்ளவராக இருக்கிறார். சொந்த வாழ்க்கை பற்றி சில தகவல்கள், பணிபுரிந்தபோது பெற்ற அனுபவங்கள், செய்து முடித்த சில சாதனைகள், சில சொற்பொழிவுகள் என […]

Read more
1 13 14 15 16