செதுக்கிய தோட்டாக்கள்

செதுக்கிய தோட்டாக்கள், ஆ.பானு, விஜயா பதிப்பகம், பக். 96, விலை 70ரூ. இன்றைய அளவில் புதுக்கவிதைகளின் வரவு மரபுக்கவிதைகளை விஞ்சிவிட்டன. எண்ணிய எண்ணங்களை இயல்பான எழுத்துச் சீற்றத்தோடு எழுதும் கலை புதுக்கவிதை வடிவங்களின் வாயிலாக வளர்ந்திருக்கிறது. இதயத்தில் தோன்றும் வலிமையான பாடுபொருள்களை இலக்கணங்களுக்கு உட்படுத்தும் சிரமங்கள் இல்லாமல் படைக்கும் தன்னம்பிக்கையும் எழுத்தாற்றலும் இளைஞரிடையே பெருகி வருவது வரவேற்கத்தக்கது. வாழ்க்கையின் நெருக்கடிகளில் வாசமூட்டும் ‘மழலை’, அன்பை அள்ளிப்பூசும் ‘அம்மா’, வரதட்சணையைச் சாடும் ‘கைக்கூலி சமூகம்’, போன்ற கவிதைகள் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. அங்கும் இங்கும் உரைநடைகளாகத் தெரியும் […]

Read more

மனம் உதிரும் காலம்

மனம் உதிரும் காலம், கல்பனா ரத்தன், கல்பதரு பதிப்பகம், விலை 100ரூ. வித்தியாசமான கோணத்தில் பார்க்கும்போது ஒவ்வொன்றும் ஒரு கவிதையாய் முளைத்து மனதுக்குள் பதிந்து இன்னொன்றின் விதையாக மாறும். அப்படி கணங்களால் காலத்தை நகர்த்தி தான் கண்டவற்றையெல்லாம் கவிதையாக்கித் தந்திருப்பது நல்ல ரசனை. நன்றி: குமுதம், 14/3/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026797.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கமுகம் பூ

கமுகம் பூ, ஸ்ரீலெஜா, வாசி பதிப்பகம், விலை 100ரூ. கவிதைக் கால்களால் ஊர் முழுக்கச் சுற்றி உலகு முழுக்க உலவி, ஆங்காங்கே நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் ஆழ்ந்த கோணத்தில் கவிதைகளாய்ப் பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு கவிதையும் மனதில் விதையாய் பதிகிறது. நன்றி: குமுதம், 7/3/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026801.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

உருதுக் கவிஞர் கவிக்குயில் காலிப்பின் கவிதைகள்

உருதுக் கவிஞர் கவிக்குயில் காலிப்பின் கவிதைகள், தமிழாக்கமும் விளக்கமும் பேராசிரியர் தி.ரா.சீனிவாசரங்கன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 95ரூ. உலக இலக்கியவாதிகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக ஈர்த்த உருதுக் கவிஞர் காலிப்பின் அழகுக் கவிதைகள் எளிய தமிழாக்கத்துடன் தெளிவான விளக்கத்துடன் தொகுக்கப்பட்டிருக்கின்றன. வாழ்வின் பல நெளிவு சுளிவுகளைச் சொல்லும் அழகான கவிதைகள். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000022311.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம், 7/3/2018.

Read more

மறவாதிரு மனமே

மறவாதிரு மனமே, தி.நெ.வள்ளிநாயகம், மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ. நீதிபதி, கவிஞர், பேச்சாளர், ஆய்வாளர், எழுத்தாளர் என்ற பன்முக ஆற்றல் கொண்டவர் தி.நெ.வள்ளிநாயகம். அவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல். “கனிந்தால் தானே கனி? துணிந்தால் தானே வழி! இருந்தால் தானே உயிர்! விளைந்தால் தானே பயிர்! “சுடச்சுடச் சங்கு வெண்மை தரும் உண்மை! தொடத் தொடக் கல்லும் சிலையாகும் தன்மை” என்பன போன்ற சுவையான கவிதைகள். “நரம்பு ஓடிந்தால் வீணை பாடாது” “சூரியனை ஒரே விரல் மறைத்திடுமே! காரிருளை ஒரே அகல் குறைத்திடுமே” […]

Read more

வேட்கையில் எரியும் பெருங்காடு

வேட்கையில் எரியும் பெருங்காடு, பச்சியப்பன், இராசகுணா பதிப்பகம், விலை 150ரூ. இதயத்து உணர்வுகளை அனுபவத்தால் சொற்களாகச் செதுக்கி, வார்த்தைகளை வரிகளாக்கி எழுதப்பட்டிருக்கும் அழகான, ஆழமான கவிதைகள். படிக்கும்போது மனம் பறக்கிறது! பரபரக்கிறது! நன்றி: குமுதம், 28/3/2018.

Read more

ஒருமிடறு பச்சைக் குருதி

ஒருமிடறு பச்சைக் குருதி, காலச்சித்தன், விஜயா பதிப்பகம், விலை 120ரூ. விரிந்த வெளியில் பரந்து இயங்கி, மகாபாரதம் முதல் சிலப்பதிகாரம் வரை இலக்கியங்களையும் களங்களாக்கி, வியக்கச் செய்யும் வித்தியாசமான கோணத்தில் புனைந்திருக்கும் கவிதைகள். நன்றி: குமுதம், 28/3/2018.

Read more

பிணா

பிணா, பத்மஜா நாராயணன், விருட்சம், பக். 71 விலை 50ரூ. ஆசிரியரின் கவிதைகளில் கடல், அலை, நதி, காற்று, நரம்புகள் ஊடாக பறக்கும் பறவை, பச்சை கிளிகள் என, புற உலகம் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஒரு பெண் தனிமையில் வாடுகிறாள், தன்னை நெருங்கியவரின் பிரிவால் தடுமாறுகிறார் என்பதை கவிதையில் கொண்டு வந்துள்ளார். நன்றி: தினமலர், 22/1/2018.

Read more

மகளதிகாரம்

மகளதிகாரம், ஆண்டன்பெனி, தமிழ் அலை பதிப்பகம், பக். 104, விலை 90ரூ. ஒரு மகளின் ஆளுமையிலும், அதிகாரத்திலும் உணர்ந்ததை, கவிதையாக மொழிபெயர்த்திருக்கிறார் ஆசிரியர். மகன், ஒரு தகப்பனின் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறான் என்றால், மகளோ, ஒரு தகப்பனின் வாழ்வையே முழுமையாக்குகிறாள் என்பதாக, இந்நூல் அமைந்து உள்ளது. நன்றி: தினமலர், 22/1/2018.

Read more

ஒரு துளியின் துளித்துளி

ஒரு துளியின் துளித்துளி, தி.கு.இரவிச்சந்திரன், அலைகள் வெளியீட்டகம், விலை 70ரூ. கழிந்து செல்லும் கணங்களில் நடந்தவற்றைக் கூர்ந்து நோக்கியதால் செதுக்கப்பட்டிருக்கும் கவிதைகள். ஒவ்வொரு கவிதையும் விதவிதமான கோணத்தில் எழுதப்பட்டிருப்பது சோர்வில்லா வாசிப்புக்குத் துணை நிற்கிறது. நன்றி: குமுதம், 21/3/2018.

Read more
1 12 13 14 15 16 57