இவர்தான் சந்துரு

இவர்தான் சந்துரு, நிதர்ஸனா, மணற்கேணி பதிப்பகம், சென்னை, பக். 126, விலை 100ரூ. இழப்பதற்கு தயாராக இருந்தால் வாழ்க்கை ஏராளமான விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கும் என்ற அடிப்படை பாடத்தை இப்போது வரை நான் மறக்கவில்லை எனும்(பக். 11), நீதியரசர் கே. சந்துருவின் கட்டுரைகள், நேர்காணல்கள், உரைகள், கேள்வி – பதில்கள் இதில் தொகுக்கப்பட்டு உள்ளன. கோவிலில் பெண்கள் பூசாரியாக இருக்கலாம். சென்னை நகரில் விளம்பர பலகைகளை நீக்க வேண்டும். நூலகங்களுக்குப் பொரத்தமற்றவர்களை நியமிப்பது ஒரு இனத்தின் கலாசாரத்தையும், சரித்திரத்தையும் அழிப்பதற்குச் சமம் இப்படி எத்தனையோ […]

Read more

முழு மதுவிலக்கு அதுவே நமது இலக்கு

முழு மதுவிலக்கு அதுவே நமது இலக்கு, இரா. ரவிக்குமார், கொங்குமண்டல ஆய்வு மையம், உடுமலைப்பேட்டை, பக். 368, விலை 250ரூ. பூரண மதுவிலக்கு என்ற கோரிக்கை தமிழகத்தின் பல்வேறு திசைகளில் இருந்தும் ஒலித்து வருகிறது. அதற்கு வலு சேர்க்கும் விதமான தக்க சமயத்தில் இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது. மதுப்பழக்கத்தினால் தனிமனிக்கும், அவனைச் சார்ந்துள்ளோருக்கும், சமுதாயத்துக்கும் ஏற்படும் பேராபத்துகள் பற்றி ஆசிரியர் இந்நூல் தெளிவாகக் கூறியுள்ளார். பழைய இலக்கியங்களில் சோமபானம், சுராபானம் என்று கூறப்பட்டிருந்தாலும், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில்தான் மதுவின் தாக்குதல் தமிழகத்தில் அதிகமாகியது. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் […]

Read more

திராவிட இயக்க இதழ்கள் ஓர் ஆய்வு

திராவிட இயக்க இதழ்கள் ஓர் ஆய்வு, நவமணி பதிப்பகம், விலை 150ரூ. திராவிட இயக்கம் தோன்றி 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. திராவிட இயக்கத்திற்காக, நூற்றுக்கணக்கில் பத்திரிகைகள் வெளிவந்துள்ளன. அதுபற்றிய முழு விவரங்களையும் இந்த நூலில் கூறுகிறார் முனைவர் அ.மா.சாமி. வெறும் புள்ளி விவரங்களோடு நின்றுவிடவில்லை. பல சுவையான வியப்புக்குரிய செய்திகளையும் இந்த நூல் விவரிக்கிறது. மாதிரிக்கு ஒன்று. திராவிடன் தினசரிப் பத்திரிகை நடத்தி வந்த வகையில், ரூ.1000 கடனுக்காக, 2.6.2993ல் பெரியாரை கைது செய்து, சிறையில் அடைத்துவிடுகிறார்கள். அக்கடனைக் கட்டிவிட, பெரியாரின் நண்பர்கள் முன்வருகிறார்கள். […]

Read more

உலகை உலுக்கிய வாசகங்கள்

உலகை உலுக்கிய வாசகங்கள், வெ. இறையன்பு, தினத்தந்தி பதிப்பகம், பக். 432, விலை 200ரூ. ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளரும், பேச்சாளருமான வெ. இறையன்பு உலகை உலுக்கிய வாசகங்கள் என்ற தலைப்பில் தினத்தந்தி ஞாயிறு மலரில் தொடர்ந்து 101 வாரங்கள் எழுதி வந்தார். அந்தத் தொடர் இப்போது தந்தி பதிப்பகம் சார்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது. சிந்தனையாளர், ஆன்மிகவாதிகள், அறிவியல் அறிஞர்கள், சங்க காலப் புலவர்கள் வழங்கிய பொன்மொழிகளைக் கூறி அதற்கு ஆழ்ந்த விளக்கம் அளித்துள்ளார். உலகின் முதல் புரட்சியாளர் புத்தர், ஆர்க்கிமிடிஸ், சாக்ரட்டீஸ், ஸீஸர், சீன […]

Read more

பொன்மொழிகள்

பொன்மொழிகள், தந்தை பெரியார், திராவிட கழக வெளியீடு, சென்னை, விலை 30ரூ. தந்தை பெரியார் பொன்மொழிகள் பெரியார் ஈ.வே.ரா. பொன்மொழிகள் கொண்ட புத்தகம், 1949-ம் ஆண்டு திருச்சி திராவிடமணி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. அதை அன்றைய காங்கிரஸ் அரசு தடைசெய்தது. பின்னர் 1979-ல் பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அந்தத் தடையை அ.தி.மு.க. அரசு நீக்கியது. தடை நீக்கப்பட்ட புத்தகத்தை, இப்போது திராவிட கழகம் வெளியிட்டுள்ளது. அரசியல், மதம், கடவுள், சமுதாயம் இயக்கம், ஆட்சி, மொழி முதலான தலைப்புகளில் பொன்மொழிகள் தொகுத்து தரப்பட்டுள்ளன. சிந்தனைக்கு விருந்தளிக்கும் […]

Read more

தித்திப்பான தொகுப்புமுனைகள்

தித்திப்பான தொகுப்புமுனைகள், தொகுப்பாசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், புத்தொளிப் பதிப்பகம், பக். 168,விலை 80ரூ. ஒருவர் ஒரு மத நம்பிக்கையில் ஆழமான பிடிப்பில் இருக்கையில், ஏதோ ஒரு திருப்பு முனையால் வேறொரு மதச் சித்தாந்தங்களால் ஈர்க்கப்படும்போது, அவருக்கு ஒரு சிந்தனை மாற்றம் நிகழ்ந்து, மதமாற்றம் ஏற்படுகிறது. இதுவே இயற்கையானது. நிலையானது. மற்றபடி உலக ஆதாயங்களைக் காட்டி, மூளைச்சலவை செய்து ஏற்படும் மதமாற்றம் செயற்கையானது. நிலையற்றது என்கிறார் இந்நூலாசிரியர். பேராசிரியர், சட்டமன்ற உறுப்பினர், ஆன்மிகம், அரசியல், பேச்சு, எழுத்து, சமூகநலன்… என்று பல தளங்களிலே பயணிக்கும் இந்நூலாசிரியர், மாற்று […]

Read more

தேடலில் தெளியும் திசைகள்

தேடலில் தெளியும் திசைகள், வைகறை (தொகுப்பும் பதிப்பும்), பவளவிழாக்குழு வெளியீடு, பக். 272, விலை 20ரூ. ஞானலயா கிருஷ்ணமூர்த்திக்கு எழுத்தாளர்களாகவும் நண்பர்களாகவும் இருந்த இலக்கிய ஆளுமைகள் எழுதிய 255 கடிதங்களின் தொகுப்பு இந்நூல். தஞ்சை பிரகாஷ் தொடங்கி கரிச்சான்குஞ்சு, கவி கா.மு.ஷெரீப், ஏ.கே.செட்டியார், அசோகமித்திரன், கி.அ. சச்சிதானந்தன், சிட்டி என்று பல்வேறு இலக்கிய பிரமுகர்கள் கிருஷ்ணமூர்த்தி – டோரதி தம்பதியர்களுக்கு எழுதிய கடிதங்கள் பெரும்பாலும் புத்தகங்களைப் பற்றிய தேடல்களாகவே உள்ளன. இலக்கிய ஆளுமைகளின் உள்ளுணர்வுகளை, சமகால இலக்கியப் போக்கை இக்கடிதங்கள் வெளிப்படுத்தி, இலக்கிய வரலாற்றுக்கான […]

Read more

நம்ப முடியாத உண்மைகள்

நம்ப முடியாத உண்மைகள், எஸ்.பி. செந்தில், தந்தி பதிப்பகம், பக். 288, விலை 150ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/9788193129524.html 2003-ம் ஆண்டு மே மாதம் தினத்தந்தியில் தினம் ஒரு தகவல் என்ற தலைப்பில் புதிய பகுதி தொடங்கப்பட்டது. இதில் நாம் அறிந்திராத அபூர்வ செய்திகள் இடம் பெற்றன. இந்த செய்திகள் இளைஞர் முதல் முதியோர் வரை அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவர்ந்தது. வாசகர்கள் அளித்த வவேற்பு காரணமாக 12 ஆண்டுகளைக் கடந்து இப்போதும் தினம் ஒரு தகவல் வெளியாகிவருகிறது. […]

Read more

காமராஜ் புதிரா புதையலா

காமராஜ் புதிரா புதையலா, காமராஜ் விழிப்புணர்வு மையம், விலை 70ரூ. காமராஜரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளை வைத்து வரலாறு எழுதுவதென்பது, வரலாற்றை வாசகர் தெரிந்துகொள்வதற்கு மட்டுமல்ல, அந்த வரலாற்றிலிருந்து வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டியவற்றை கற்றுக் கொள்வதற்கும்தான். அந்த எதிர்பார்ப்பில்தான் நூலாசிரியர் எஸ்.பி. கணேசன் இந்நூலை தொகுத்து அளித்திருக்கிறார். வரலாற்று பதிப்பு என்பதால் கூட்டி, குறைத்து என்றில்லாமல் மிக கவனத்துடன் எழுதப்பட்டிருக்கிறது. செய்தி சேகரிப்பை வகைப்படுத்திய விதம் நேர்த்தியாக இருக்கிறது. வாசகரின் செய்தித் தேடலுக்குத் தகுந்தாற்போல் தலைப்புகள் அமைந்திருக்கின்றன. இந்த நூலை வாசித்தால், நம் மனதில் […]

Read more

மாவீரன் மருதநாயகம் (யூசுப்கான்)

மாவீரன் மருதநாயகம் (யூசுப்கான்), கொங்கு நூல் பதிப்பகம், சென்னை, விலை 175ரூ. தமிழ்நாட்டில் பிறந்து, பிரெஞ்சு படையில் பணி புரிந்து பின்னர் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியில் சேர்ந்து போர்த் தளபதியாக உயர்ந்தவன் மருதநாயகம். முஸ்லிம் மதத்தில் சேர்ந்ததால் யூசுப்கான் என்றும் கான் சாகிப் என்றும் அழைக்கப்படுகிறான். தீரமும், வீரமும் மிக்க மருதநாயகத்தின் வரலாற்றை எழுத்தாளர் பாஸ்கரதாஸ் எழுதியுள்ளார். தொடக்கத்தில் ஆங்கிலேயருக்கு ஆதரவாகச் செயல்பட்டவன், மருதநாயகம். பிற்காலத்தில் அவர்களின் அடக்குமுறையை தாங்கிக் கொள்ள அவனது தன்மானம் இடம் தரவில்லை. எதிர்த்துப் போராடுகிறான். இறுதியில் சிலரால் காட்டிக்கொடுக்கப்பட்டு […]

Read more
1 28 29 30 31 32 63