தி கர்ஸ் ஆப் சூர்யா

தி கர்ஸ் ஆப் சூர்யா, தேவ் பிரசாத், ரேண்டம் ஹவுஸ் இண்டியர், பக். 306, விலை 299ரூ. இதயத்தைத் துரிதகதியில் இயங்க வைக்கும் மர்ம நாவல்! ஒரே மூச்சில் படித்து முடிக்கத் தூண்டும்! வசீகரமான ஆங்கில நடை. மதுரா கிருஷ்ண ஜன்மஸ்தான் கோவில். ‘திபெத் லிபரேஷன் பிரன்ட்’ என்ற ரகசிய அமைப்பைச் சேர்ந்த டென்சிங், கிருஷ்ணர் கோவிலில் உள்ள, சியமந்தக மணியை திருட வருகிறான். கோஹினூர் வைரம் போன்ற விலை மதிக்க முடியாத கல் அது; நீல நிறம் கொண்டது. திருடும் முயற்சியில் அவன் […]

Read more

அபாயப்பேட்டை

அபாயப்பேட்டை, ரமேஷ்வைத்யா, டிஸ்கவரி புக் பேலஸ், பக். 102, விலை 90ரூ. மனோதைரியத்தை வளர்க்கும் கதை! குழந்தைகளுக்காக எழுதுபவர்கள் தமிழ் இலக்கியச் சூழலில் மிகவும் குறைவு. அப்படியே எழுதினாலும் அந்தச் சின்ன வாசகர்களுக்கு, எளிதில் புரியும் சொற்களில், செறிவான தமிழ் நடையில் எழுதுவது மிக மிக அபூர்வம். அந்த இரண்டையும் பூர்த்தி செய்யக்கூடிய எழுத்தாளராக ரமேஷ் வைத்யா இருக்கிறார். ‘அபாயப்பேட்டை’ கதை சுட்டி விகடனில் தொடராக வந்து, பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் மனதை வெற்றிகொண்ட கதை. கதை மட்டும் அல்லாது மொழியறிவையும் குழந்தைகளுக்கு ஊட்டுவது மிக […]

Read more

கிளாரிந்தா

கிளாரிந்தா, அ. மாதவையா, தமிழில் சரோஜினி பாக்கியமுத்து, அடையாளம், பக்.284, விலை ரூ.230. இந்த புதினம், தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் வரலாற்று நாவலாகும். 1978-இல் முதல் பதிப்பாக கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் சார்பில் இந்நாவல் வெளியிடப்பட்டது. அதன் மறுபதிப்பு இந்நூல். கி.பி.1746-ஆம் ஆண்டு தொடங்கி 1806-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், கர்நாடக நவாபின் வாரிசு மயூஸ்கான் தலைமையில் இந்தியப் படைக்கும், என்ஜினியர் பராடிஸ் தலைமையில் பிரெஞ்சுப் படைக்கும் நடந்த கடும் போருடனும், தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாப சிம்மரின் ஆட்சியின் பின்னணியில், “கிளாவரிந்தாபாய்’ […]

Read more

வலம்

வலம், விநாயக முருகன், உயிர்மை பதிப்பகம், பக். 336, விலை 310ரூ. அழகைப் புதைத்து எழுந்த நகரத்தின் கதை சென்னை நகரின் உருவாக்கத்துக்குக் கொடுக்கப்பட்ட விலைதான் ‘வலம்’ நாவலின் பின்னணி. நரிகளுக்கும், சென்னை கிராமப்புறங்களுக்கும் இருந்த உறவையும், அவை ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்ட விதத்தையும் சுவாரசியமாகப் பேசுகிறது ‘வலம்’. கதை, நரிமேட்டுச் சித்தரில் தொடங்குகிறது. நரிகளுக்கும், இயற்கைக்கும், சுற்றி வாழ்ந்த மக்களுக்குமான உறவைப் பேசி, 18ம் நூற்றாண்டுக்குத் தாவுகிறது. நரிமேடு தகர்க்கப்படுகிறது. நரிகள் கொன்று குவிக்கப்படுகின்றன. சென்னைப் பட்டணம் எழுகிறது. இதன் பிறகு, 19ம் நூற்றாண்டில் […]

Read more

காளவாய்

காளவாய், கு.வெ. பாலசுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 190, விலை 145ரூ. காலம் காலமாக அச்சத்தின் வழிநடக்கும் அடிமை மனநிலையில் அமைந்த பெண்கள் மற்றும் சமூகத்தின் மவுனத்தை, உறுதியான எதிர்ப்பு மனநிலையோடு, ஆவேசத்தோடு மாற்றம் கொள்ளும் சாத்தியங்களை உருவாக்கி காட்டுகிறது இந்த நாவல். சமூக அநீதிகளுக்கு எதிரான பலதரப்பட்ட கதாபாத்திரங்களின் ஒருங்கிணைந்த குரலாக ஓங்கி ஒலிக்கிறது நாவல். நீதியையும், நேர்மையையும் அறவழியில் நிலைநாட்டும் முயற்சியில் ஒவ்வொரு கதாபாத்திரமும் போராடுவதும், இறுதியாக உண்மையும் தர்மமும் நிலைநாட்டப்படுவதும் சமூக நம்பிக்கையை உறுதிப்படுத்தவே செய்கின்றன. ஆங்காங்கே பளிச் […]

Read more

அங்காடித் தெரு

அங்காடித் தெரு, வசந்தபாலன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 250ரூ. அங்காடித் தெரு திரைப்படம் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, மக்களின் பிரச்சினைகளைப் பேசிய படம் ஆகும். தமிழ் சினிமாவில் சாதாரண மக்களின் பிரச்சினையைப் பொத்தம் பொதுவாக பேசாமல் வெளிப்படையாகப் பேசிய திரைப்படங்களில் முதலிடம் மட்டுமல்ல, முக்கியமான இடத்தையும் பெற்றது. அதனால்தான் அது மாபெரும் வெற்றியைப் பெற்றது. அந்த சினிமா வெளியாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு அதன் திரைக் கதை இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. இயக்குநர் ஜி. வசந்தபாலன் எழுதிய இந்தத் திரைக்கதை மெருகு குறையாமல் […]

Read more

வலம்

வலம், விநாயக முருகன், உயிர்மை பதிப்பகம், விலை 310ரூ. இந்தியாவின் முதல் அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டு சமூகநீதிக்கான முதல் குரல் ஒலிக்கத் தொடங்கிய பின் புலத்தில் எழுதப்பட்ட இந்த நாவல், நம்பிக்கைக்கும் துரோகத்துக்கும் இடையில் ஊசலாடும் மனிதர்களின் தவிப்பை வெளிக்காட்டும் நூலாகும். நன்றி: தினத்தந்தி, 15/6/2016.   —- தைராய்டு, மரு.கு.கண்ணன், பாப்பா பதிப்பகம், விலை 100ரூ. மிகினும் குறையினும் நோய் செய்யும் தைராய்டு நோய் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் எளிமையான நடையில் 17 தலைப்புகளில் தொகுக்கப்பட்ட நூலாகும். அனைவரும் படித்து […]

Read more

ஆயுத எழுத்து

ஆயுத எழுத்து, சாத்திரி, திலீபன் பதிப்பகம், பக். 400, விலை 300ரூ. உலுக்கி எடுக்கும் கண்ணீர் கதை ஆயுத எழுத்து, நம் முகத்தில் அறையும் எழுத்து. ஒவ்வொரு அஸ்தமனத்திற்கு பின்னும் ஒரு விடியல் உண்டு என்று சொன்னால், ‘எங்கள் வானம் விடியலே இல்லாத இருண்ட வானம்’ என்று சொல்வார்கள் இலங்கைத் தமிழ்ப் போராளிகள். அவர்களின் கண்ணீர்க் கதைதான் இந்த நாவல். கடந்த, 30 ஆண்டுகளாக இலங்கைத் தீவில் சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான ஆயுத விடுதலைப் போராட்டம் நடந்து முடிந்திருக்கும் நிலையில், அந்தப் போராட்டத்தில் தான் […]

Read more

பங்களா கொட்டா

பங்களா கொட்டா, ஆரூர் பாஸ்கர், அகநாழிகை பதிப்பகம், பக். 128, விலை 130ரூ. சொத்தில் தன் பங்காக வரும் நிலத்தில், கல்வியை சேவையாக செய்யும் நல்ல எண்ணத்துடன், கல்லூரிக்கு கட்ட விரும்பும் ஞானசேகர் என்பவரின் கனவையும், அதன் பொருட்டு அவர் எதிர்கொள்ளும் சவால்களையும் விவரிக்கிறது, இந்த நாவல். தஞ்சை மண்ணின் பின்னணியில் நிகழ்கிறது இந்தக் கதைக்களம். கதையின் ஊடாக அந்நிலத்தின் ஜாதியக் கட்டமைப்பையும், விவசாயம் சார்ந்த மக்களின் வாழ்க்கையையும், குடும்ப உறவுக்குள் இருக்கும் அன்பையும், பிணக்குகளையும், மனிதர்களின் குணாதிசயங்களையும் விறுவிறுப்பாக கூறிக்கொண்டே செல்கிறது இந்நாவல். […]

Read more

சொப்பன சுந்தரி

சொப்பன சுந்தரி, தெலுங்கில் யத்தனபூடி சுலோசனா ராணி, தமிழில் கவுரி கிருபானந்தன், வானவில் புத்தகாலயம், பக். 384, விலை 299ரூ. ஏழ்மையில் இருந்த மேனகா, எதிர்பாராத விதமாக நடிகையாகி விடுகிறாள். ஹரி கிருஷ்ணா என்ற  டாக்டரை அவள் நேசிக்கிறாள். மேனகா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டபோது, அவளைக் காப்பாற்றியவர் ஹரிகிருஷ்ணா. ஆனால், சந்தர்ப்ப வசத்தால் ஹரி, ரேகா என்ற பெண்ணை மணக்கிறான். ரேகா ஒரு லட்சிய மனைவி அல்ல; ஆடம்பர வாழ்க்கை வாழ நினைப்பவள். ஹரியை உதாசீனம் செய்கிறாள். ஹரி ஒரு பரோபகார டாக்டர். தான் […]

Read more
1 26 27 28 29 30 66