எம்.ஜி.ஆர். எழுதாத குறிப்புகள்

எம்.ஜி.ஆர். எழுதாத குறிப்புகள், வே. குமரவேல், முல்லை பதிப்பகம், பக். 808, விலை 550ரூ. தற்கால வரலாற்றையும் சென்ற தலைமுறையில் எம்.ஜி.ஆர். வாழ்ந்த கால கட்டத்தையும் இரண்டறக் கலந்து எழுதிச் செல்கிற நாவல் இது. முத்தமிழன், ரகு உள்ளிட்ட ஏழு கதாபாத்திரங்களுடன் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரையும் ஒரு கதாபாத்திரமாக அமைத்திருப்பது புதுமை. நன்றி: குமுதம், 31/8/2016.   —- தெரியும் ஆனால் தெரியாது, முனைவர் ந. அப்புராஜ், தண்மதி பதிப்பகம், பக்.110, விலை 120ரூ. மிகப்பெரிய கருத்தை ஒரு சிறிய பெட்டிக்குள் திணித்து வைத்திருப்பதுபோல் […]

Read more

அப்துல்கலாம் ஒரு சகாப்தம்,

அப்துல்கலாம் ஒரு சகாப்தம், ம. வசந்த், மணிமேகலைப் பிரசுரம், விலை 60ரூ. தனி மனித ஒழுக்கம், பெரியோர்களை மதிக்கும் பண்பு, கடமை உணர்ந்து செயல்படுதல், எப்படிப்பட்ட உச்ச நிலைக்குச் சென்றபோதும் பணிவையே தன் துணையாகக் கொண்டவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். அவரைப் பற்றிய புகழ்ப்பாக்களைக் கவிதை வடிவில் ஆக்கியுள்ளார் ம. வசந்த். நன்றி: தினத்தந்தி, 24/8/2016.   —- நல்லகாலம் பிறக்குது, எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், விலை 200ரூ. ஊரில் அக்கிரமங்கள் செய்யும் மூன்று அயோக்கியர்களை, கதாநாயகன் கிறிஸ்தவ குருமார் வேடத்தில் […]

Read more

புஷ்பாஞ்சலி

புஷ்பாஞ்சலி, யத்தனபூடி சலோசனா ராணி, தமிழில் கவுரி கிருபானந்தன், வானவில் புத்தகாலயம், பக். 248, விலை 199ரூ. கதையின் நாயகன் மாதவன், ஒரு சுதந்திரப் போராட்ட வீரன். நாடு சுதந்திரம் அடைந்ததும், காங்கிரஸ் தியாகிகள் சிறையில் இருந்து விடுவிக்கப் படுகின்றனர். மாதவனும் விடுதலை ஆகிறான். தன் மாமன் மகள், தனக்காகக் காத்திருப்பாள் என்று நம்பிக்கையுடன் வருகிறான். ஆனால், மாமன் மகள் சுதாவுக்கு, வேறு ஒருவருடன் திருமணம் முடிந்து விடுகிறது. இது அவனுக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில், இளம்பெண் ஒருத்தி, அவனை அடித்து, […]

Read more

தென்திசை வீரன் சிவன்

தென்திசை வீரன் சிவன், க.மனோகரன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 350ரூ. ‘ஈஸ்வர்’ என்றும் ‘தட்சிணாமூர்த்தி’ என்றும் இந்தியாவின் வட பகுதிகளிலும், சிவா, சிவன் என்ற பெயர்களில் உலகின் பல பகுதிகளிலும் சிவன் வணங்கப்படுகிறார். இத்தகைய சிறப்புகள் மிக்க சிவன் தென் தமிழகத்தைச் சேர்ந்த வீரன் என்றும், அவர் எப்படி வட திசைக்கச் சென்று அவர்களின் தலைவர் ஆனார் என்பதையும் நாவல் வடிவில் எழுதியுள்ளார் க. மனோகரன். புராணத்தையே சரித்திரக்கதை வடிவில் கூறியிருப்பது இந்நூலின் சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 17/8/2016.

Read more

பார்த்தீனியம்

பார்த்தீனியம், தமிழ்நதி, நற்றிணை பதிப்பகம், விலை 450ரூ. தமிழீழத்தில் நடந்த இன அழித்தொழிப்பு பின்புலமாக உடன் நிற்க, ஈழ நினைவுகளை துல்லியமாகவும், நேர்த்தியுடனும் வாசகப் பரப்பில் முன் வைக்கிறது பார்த்தீனியம். வரலாறு போலவும், நடப்பு போலவும், நாம் எல்லோரும் அதில் சம்பந்தப்பட்டது மாதிரியும் ஏக வடிவங்களில் நாவல் விரிவது பேரழகு. தமிழ்நதியின் மொழி நடையில் அலங்காரங்கள் இல்லை. அவரின் கவிதைகளில் கூடி வருகிற காவியத்தன்மை கூட இதில் இல்லாதது கதை சொல்லலை எளிதாக்குகிறது. இயல்பில் நாம் சந்தித்தவர்களே பாத்திரங்களாக வருகிறார்கள். கற்பனைப் பாத்திரங்களின் நுழைவெல்லாம் […]

Read more

கடைசி நமஸ்காரம்

கடைசி நமஸ்காரம், தமிழில் புவனா நடராஜன், சாகித்திய அகாடமி, விலை 415ரூ. 1972-ம் ஆண்டு வங்க மொழிக்கான சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவல். கொஞ்சம் வேதனை, கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் தேடுதல், கொஞ்சம் உணர்ந்து கொள்ளுதல், கொஞ்சம் புரிந்துகொள்ளுதல் இவையும் வாழ்க்கைதானே. அவற்றை அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறார் வங்க எழுத்தாளர் சந்தோஷ்குமார்கோஷ். இதை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் புவனா நடராஜன். நன்றி: தினத்தந்தி, 10/8/2016.   —- சர்க்கரை நோய், தொகுப்பாசிரியர் மரு.கு. கண்ணன், பாப்பா பதிப்பகம், விலை 145ரூ. சர்க்கரை நோய் […]

Read more

நைரா

நைரா, சுப்ரபாரதிமணியன், நியூ செஞ்சரி புக் ஹவுஸ், பக். 190, விலை ரூ.150. வர்த்தகத்துக்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும் தமிழ் மண்ணுக்குப் புலம் பெயர்ந்து வந்த நைஜீரிய மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் நாவல் நைரா. உலகமயமாக்கலின் தாக்கத்திலும், அந்நிய தேச கலாசார பன்முகத்திலும் சிக்கித் தவிக்கும் நைஜீரிய இளைஞன்தான் கதையின் நாயகன். கண்டங்கள் தாண்டி வந்த மக்களும் கடை விரித்து காசு பார்க்கும் தொழில் நகரமான திருப்பூரின் பின்னணியில் விரிகிறது இந்நாவல். பண்பாட்டிலும், உருவ அமைப்பிலும், மொழியிலும் வேறுபட்ட ஒரு சமூக மக்கள், மாற்று தேசத்தில் […]

Read more

பாட்டுடைத் தலைவி

பாட்டுடைத் தலைவி, லட்சுமி ராஜரத்தினம், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 224, விலை 160ரூ. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, 1,200 சிறுகதைகள், வானொலி நாடகங்கள், தொடர்கள், மாத நாவல்கள் என்று பன்முகத் தன்மையோடு எழுதி வருபவர் லட்சுமி ராஜரத்னம். அன்றாட வாழ்வில் நடைபெறும் சம்பவங்களை, ஒரு சிலர்தான் உணர்வூட்டி கருவாக்கி, கற்பனை கலந்து கதையாக உருப்பெற்றெடுக்கிறார்கள். அந்த வகையில் லட்சுமி ராஜரத்னம் படைத்திருக்கும் ஒரு நெடுங்கதை தான் இந்த பாட்டுடைத் தலைவி. ரவி, ராதா, நிர்மலா மற்றும் அவர்களைச் சார்ந்த மனிதர்களின் வாயிலாக வாழ்க்கைச் […]

Read more

ஆமை காட்டிய அற்புத உலகம்

ஆமை காட்டிய அற்புத உலகம், யெஸ். பாலபாரதி, புக்ஸ் பார் சில்ரன், பக். 80, விலை 60ரூ. சிறார் நாவல் உலகில் ஓரு புதிய வரவு, ‘ஆமை காட்டிய அற்புத உலகம்.’ ஜூஜோ என்ற ஆமையுடன் சிறுவர்கள் மேற்கொள்ளும் ஒரு சாகசப் பயணத்தை விவரிப்பதுதான் இந்த நாவல். சிறுவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் எப்போதும் வசீகரிப்பது கடல். கடலும் அதன் அற்புதங்களும் கேட்கச் சலிக்காதவை. அத்தகைய விரிவானதொரு பின்புலத்தில் கடலுக்குள்ளே சென்று நாமே பார்க்கிற நேரடி அனுபவத்தைத் தருகிறது இந்நாவல். கடல்வாழ் உயிரினங்கள், அவற்றின் வாழ்க்கை […]

Read more

வரப்பு

வரப்பு, அமுதா பாலகிருஷ்ணன், அமுதா பதிப்பகம், விலை 75ரூ. தொழில் அதிபர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன், எழுத்தார்வம் மிக்கவர். சுய முன்னேற்ற நூல்கள் எழுதி புகழ்பெற்றவர். இப்போது 15 சிறுகதைகள் கொண்ட “வரப்பு” என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு கதையிலும், ஒரு நல்ல கருத்தை வலியுறுத்தி இருப்பது, பாராட்டத்தக்கது. நன்றி: தினத்தந்தி, 20/7/2016.   —- பனையாளியும் மாடமாளிகையும், சாமி வெளியீடு, விலை 60ரூ. நூலாசிரியர் ஆத்மா கே. இரவி, ஓவியரும்கூட. எனவே தன் நாவலுக்கு உரிய படங்களை அவரே வரைந்துள்ளார். எனவே, […]

Read more
1 25 26 27 28 29 66