வளர்பிறைகளும் தேய்பிறைகளும்

வளர்பிறைகளும் தேய்பிறைகளும், கழனியூரன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 144, விலை 100ரூ. சிலரது வாழ்க்கை வளர்பிறை போல வளரும். சிலரது வாழ்க்கை தேய்பிறைபோல தேயும். இதற்கு என்ன காரணம் என்பதை இஸ்லாமியப் பின்னணியில் விளக்கும் சமூக நாவல். நெல்லை மாவட்டத்தின் ஒரு பகுதியாகிய பனையடியூரில் இஸ்லாம் எவ்வாறு வேரூன்றி செழித்து வளர்ந்தது என்பதை இப்பகுதி மக்களின் கலாச்சார பண்பாட்டு நோக்கில் பதிவு செய்யப்பட்ட நாவல் இது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 11/1/2017.

Read more

1084ன் அம்மா

1084ன் அம்மா, மகாஸ்வேதா தேவி, பரிசல், பக். 130, விலை 130ரூ. வங்க மொழியில் மகாஸ்வேதா தேவி எழுதிய ‘மாதர் ஆப் 1084’ என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் சு. கிருஷ்ணமூர்த்தி. பழைய மூடத்தனமான சாஸ்திர சம்பிரதாயங்களும், வேண்டாத வறட்டுக் கவுரவங்களும் கொண்ட மேல்தட்டு குடும்ப தாய், அந்த மூடச் சம்பிரதாயங்களையும், வறட்டுக் கவுரங்களையும் வெறுத்து, கீழ்த்தட்டு மக்களையும், அவர்களுக்கான சுதந்திரத்தையும் பெற போராடும் போராளியான மகன் என, இருவருக்கிடையிலான உறவையும், பிணைப்பையும் கூறும் உளவியல் மற்றும் உறவியல் ரீதியில் கனபரிமாணங்களுடன் எழுதப்பட்ட நாவல். […]

Read more

தொட்ட அலை தொடாத அலை

தொட்ட அலை தொடாத அலை, எஸ். சங்கரநாராயணன், நிவேதிதா பதிப்பகம், பக். 288, விலை 220ரூ. திருப்பூர் தமிழ்ச்சங்கம் சார்பாக, ஆண்டின் சிறந்த நாவல் பரிசு வாங்கியிருக்கிறது, இந்த நாவல். ஒவ்வொரு கதாபாத்திரங்களின் குணாம்சங்களை அழகாக விவரிக்கிறது. அழகான எழுத்து நடையில் நாவலில் வரும் மனிதர்களை காலத்தை ஒட்டிச் சித்தரித்திருக்கிறார் ஆசிரியர். நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் சொற்றொடர்கள் பொங்கிப் பிரகாசிக்கின்றன என்பதை வாசிக்கும்போது உணர்வீர்கள் என்பது நிச்சயம். நன்றி: தினமலர், 13/1/2017.

Read more

மிஷன் தெரு

மிஷன் தெரு, தஞ்சை பிரகாஷ், வாசகசாலை, பக். 112, விலை 120ரூ. அன்றைய ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டத்தில் சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு, கிறிஸ்தவ கள்ளர் குடும்பம் ஒன்றில், ஒற்றைப் பெண்ணாகப் பிறந்த எஸ்தர் என்கிற அழகும் அறிவும் நிரம்பிய ஒரு பெண்ணின் 33 வருட போராட்ட வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றமே இந்நாவல். அஞ்சாமை, ஆங்கிலப் புலமை, சங்கீத ஞானம், உலகம் முழுவதையும் விரும்பும் பரந்த நோக்கம் – இவையெல்லாம் கொண்டிருந்த எஸ்தர், பல்வேறு தரப்பு ஆண்களாலும் எப்படியெல்லாம் வீழ்த்தப்பட்டாள் என்பதை ரத்தமும் சதையுமாக […]

Read more

நீர்

நீர், விநாயகமுருகன், உயிர்மை, விலை 150ரூ. தமிழ் நிலத்தின் நினைவுகளில், கடற்கோளால் அழிந்த நகரங்களைப் பற்றிய சித்திரங்கள் ஆழமாக இருக்கின்றன. 2015 டிசம்பர் 5ம் தேதி, சென்னை நகரம் நீரால் சூழப்பட்டது. என்றென்றைக்கும் மாறாத வடுவாக, அந்த ஊழிக்காலம் நிகழ்ந்தது. மாபெரும் மானுட அவலம் ஒன்றின் சாட்சியமாக, அந்தத் தினங்கள் இருந்தன. தண்ணீராலும் உதவி கேட்டு அலறும் அபயக் குரல்களாலும், அதனூடே பெருகும் மகத்தான மானுட அன்பினாலும், இந்த நகரம் நிரம்பியிருந்தது. அந்த அழிவின் காலத்திற்கு சாட்சியம் சொல்கிறது இந்த நாவல். நன்றி: தினமலர், […]

Read more

சொட்டாங்கல்

சொட்டாங்கல், எஸ். அர்ஷியா, எதிர் வெளியீடு, விலை 220ரூ. மதுரைமக்களின் வாழ்க்கை முறையை பற்றி ஆழமாகவும், கூர்மையாகவும் பேசியுள்ளது. ‘கொட்டாங்கல்’ நூல். இது மதுரையில் நடக்கும் கதையாக இருந்தாலும், தமிழக மக்கள் அனைவரையும் பாதிக்கும் கதையாகவும் உள்ளது. நன்றி: தினமலர், 17/1/2017.   —-   உங்கள் தேகமும் யோகமும், கவியோகி வேதம், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. யோகா பற்றிய நல்ல நூல். யோகாவினால் பொங்கி வரும் ஆழ்மன சக்தி, சபலத்தை ஒழித்தலும் அமைதியாகச் செயல்படுதலும், பொறுமையும் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையும் […]

Read more

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம், காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், தமிழில் அருமை செல்வம், அசதா, காலச்சுவடு பதிப்பகம், பக். 96, விலை 100ரூ. காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் கொலம்பியாவைச் சேர்ந்தவர். இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றவர். இந்நாவல் சந்தியாகோ நாஸார் என்பவனின் கொலையுடன் தொடங்குகிறது. அக் கொலையுடனேயே நிறைவும் பெறுகிறது. இடையில் அவன் கொல்லப்படுவதற்கான காரணத்தை நாவல் விரட்டிச் செல்கிறது. பயார்தோ சான் ரோமான் என்பவரின் புது மனைவி ஆங்கெலா விகாரியோவின் கன்னித்தன்மை இழப்பிற்கு சந்தியாகோ நாஸார்தான் காரணம்; அதனால்தான் அவன் கொல்லப்பட்டான் என்பதாக […]

Read more

கடற்கரை காவியம்

கடற்கரை காவியம், மதுரை இளங்கவின், காவ்யா, பக். 15, விலை 150ரூ. கடலோரக் காவியம் தமிழ் திரையுலகில் நிலவும் சிக்கல்களையும் அன்னை வேளாங்கன்னி மாதாவின் அருளையும் புதுமைகளையும் சித்திரித்து, சினிமா கலைஞர்களின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை, காதல் பிரச்னைகளை அன்னை அருளால் தீர்த்துவைத்து வெற்றியடையச் செய்வதை சித்திரிக்கும் நாவல் இது. நன்றி: குமுதம், 21/12/2016.   —-   எட்டுத் திக்கும் எங்கள் பாட்டு, தொகுப்பாசிரியர் மயிலாடுதுறை இளைய பாரதி, நம்மொழி பதிப்பகம், பக். 152, விலை 200ரூ. பல்வேறு கலைஞர்களின் கவிதைகள் ஒரு […]

Read more

சிவனின் உடுக்கை

சிவனின் உடுக்கை, சந்திரசேகர கம்பாரா, தமிழில் இறையடியான், காவ்யா, பக். 324, விலை 300ரூ. கன்னட எழுத்தாளரான சந்திரசேகர கம்பாரா எழுதிய கிராம மாறுதல்களைப் பதிவு செய்யும் நாவல் இது. கிராமத்தில் இயல்பை புராணம் சார்ந்த நாட்டுப்புறக் கதையின் அழகியலோடு சொல்லியிருக்கிறார். பண்ணையார்களின் பகட்டு ஆரவாரத்தால் பண்ணையில் வேலை செய்பவர்கள் சிந்தும் கண்ணீர் வயல் வரப்புகளிலும் வாய்க்கால்களிலும் எப்படி தண்ணீராக ஓடுகிறது என்பதை ‘சிவனின் உடுக்கை’ வழி பதிவாகிறது. நன்றி: குமுதம், 28/12/2016.

Read more

ஒன்ஸ் அபான் ய டைம்

Once upon A Time, சேது, மொழிபெயர்ப்பு கே.டி. ராஜகோபாலன், சாகித்திய அகாதெமி, பக். 256, விலை 180ரூ. மலையாள நூலாசிரியர் சேது எழுதி, சாகித்திய அகாதெமி விருது பெற்ற, ‘அடையாளங்கள்’ எனும் புதினத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு இந்நூல். மொழிபெயர்த்திருப்பவர் கே.டி.ராஜகோபாலன். குறிப்பாகத் தளங்கள் எதையும் புனையாவிட்டாலும், கேரளாவில் நடப்பதாக களங்கள் சித்தரிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை. கருத்து வேறுபாட்டால் கணவனைப் பிரிந்து மகளோடு வாழும் கதையின் நாயகி, ஒரு மாபெரும் கூட்டாண்மை நிறுவன குழுமத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியும்கூட. பெரும் போராட்டங்களுக்கு இடையே, […]

Read more
1 23 24 25 26 27 66