பாரதியாரைப் பற்றி புதிய பார்வை

பாரதியாரைப் பற்றி புதிய பார்வை!, ஜி.சுப்பிரமணியன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.155 குயில் பாரதி குறித்த அரிய செய்திகளை விரித்துச் செல்லும் நுால். பாரதியின் பெருமித உணர்ச்சி, கவித்துவ மேன்மை, இசை அறிவு, நட்பு போற்றும் உருக்கம் எனப் பல்வேறு செய்திகளை விறுவிறுப்பு குறையாமல் சுவைபடச் சொல்கிறார் ஆசிரியர். காந்திமதிநாதனுடன் விளைந்த கவிதைப் போர், கிருஷ்ணசாமி செட்டியார், குவளைக்கண்ணனுடன் பாரதிக்கு இருந்த நெருக்கம், வ.ரா.,வின் பற்றும் ஈடுபாடும், சுதேசமித்திரன், இந்தியா நாளிதழ்கள் குறித்த செய்திகள், பாரதியின் இறுதிச் சொற்பொழிவு, ச.து.சி.யோகியார் பாரதியிடம் கொண்டிருந்த அன்பு எனப் […]

Read more

அபரோக்ஷ அனுபூதி

அபரோக்ஷ அனுபூதி, க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலைரூ.270. தலைப்பைப் பார்த்ததும், ‘சமஸ்கிருத வார்த்தையாச்சே… நமக்கு எங்கே புரியப் போகுது…’ என நினைத்து விட வேண்டாம். அத்தனை விளக்கங்களும் தமிழில் உள்ளன.இனி புத்தகத்தில் எழுதியுள்ளதைப் பற்றி… பானையைப் பார்க்கிறோம்; பானை என்பதாகவே நம் கண்ணுக்குப் புலப்படுகிறது. தங்கத்திலான நகையைப் பார்க்கிறோம்; நகை தான் நம் கண்ணுக்குப் புலப்படுகிறது. வானத்தைப் பார்க்கிறோம்; நீல நிறமாகத் தெரிகிறது. உண்மை என்ன… பானையைச் செய்ய பயன்படுத்தப்பட்ட களிமண் தான் பானையில் உள்ளது; நகையைச் செய்ய பயன்படும் தங்கம் தான், நகையில் […]

Read more

ஸ்ரீமந் நாராயணீயம் பாகம் – 1

ஸ்ரீமந் நாராயணீயம் பாகம்  – 1, ஆசிரியர் : பதிப்பக வெளியீடு, வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.290. சரணாகதி என்பதே ஸ்ரீமந் நாராயணீயத்தின் சாராம்சம். குருவை பிடித்த வாதநோயை தனக்கு மாற்றி தன்னை வருத்திக் கொண்ட நாராயண பட்டத்திரி அந்த நோயை குணமாக்குமாறு குருவாயூரப்பனை வேண்டுகிறார். 1,034 ஸ்லோகங்கள் இயற்றி பாடப் பாட குருவாயூரப்பன் சரியென்று தலையாட்டியதாக வரலாறு. குழந்தைகளை கண்ணே, மணியே, என் செல்லமே… என்று கொஞ்சி கொஞ்சி சீராட்டி பாராட்டுவதைப் போலிருக்கிறது ஸ்ரீமந் நாராயணீயம். பெருமாளின் ஒவ்வொரு […]

Read more

முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன்

முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன், ஆ.கலைச்செல்வன், தென்குமரிப் பதிப்பகம், விலை: ரூ.160, ஈழ விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில், தமிழகத்தின் கையறு நிலை உணர்வுகளை உலகுக்குச் சொல்லும் வகையில் உயிரை மாய்த்துக்கொண்டார் முத்துக்குமார். அந்த இளைஞரின் வாழ்க்கை வரலாற்றோடு அவரது கவிதை முயற்சிகள், பதினான்கு கோரிக்கைகளை உள்ளடக்கி ஒரு மரணசாசனமாக அமைந்துவிட்ட அவரது இறுதிக் கடிதம் ஆகியவற்றையும் ஒருசேரத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் ஆ.கலைச்செல்வன். இன, மொழிப் பற்றாளர்கள் உயிர்க்கொடையாளர் என்று முத்துக்குமாரின் நினைவுகளைப் போற்றுகிறார்கள். ஆனால், படைப்பூக்கமும் தீவிர வாசிப்பும் கொண்ட ஒரு இளைஞரின் வாழ்க்கையும் […]

Read more

காலவெளிக் கதைஞர்கள்

காலவெளிக் கதைஞர்கள், தொகுப்பாசிரியர்: சுப்பிரமணி இரமேஷ், சாகித்ய அகாடமி வெளியீடு, விலை: ரூ.300. நவீன சிறுகதை இலக்கியத்தில் சாதனைகள் படைத்த இருபது எழுத்தாளர்களைப் பற்றி தமிழ்ப் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள், கவிஞர்களும் எழுத்தாளர்களுமான பத்திரிகையாளர்கள் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்திருக்கிறார் தமிழ்ப் பேராசிரியரும் இலக்கிய விமர்சகருமான சுப்பிரமணி இரமேஷ். திறனாய்வுத் துறையில் ஆய்வாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்குமான இடைவெளியைக் குறைக்கும் முயற்சி என்ற வகையில் இந்தக் கட்டுரைத் தொகுப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ‘காலத்தை எதிர்த்துக் கரையேறிய கதைகள்’ என்ற தலைப்பிலான தொகுப்பாசிரியரின் முன்னுரை, தமிழ்ச் சிறுகதைகளின் வரலாற்றையும் சுருங்கச் […]

Read more

வருவான் வடிவேலன்

வருவான் வடிவேலன், தி.செல்லப்பா, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160. அழகன் முருகன் தமிழுக்கு சொந்தமானவர். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரம் சரவணபவ. இதனுடன் மந்திரச் சொற்களை சேர்க்கும் போது சக்தி அதிகமாகும். குருவின் மூலம் உபதேசம் பெற்று, நியமநிஷ்டையுடன் இருந்தால் மட்டுமே மந்திரம் சொல்ல வேண்டும். கந்தசஷ்டி கவசம் எழுதிய தேவராய சுவாமிகள் மந்திரச் சொற்களை சேர்த்து கட்டமைத்தார். இந்த வரிகளைச் சொன்னால் நியமத்துடன் மந்திரம் சொன்னதாக அர்த்தம். சரவணன், முருகன், கந்தன் பெருமைகளை தொகுத்து, ‘தினமலர் ஆன்மிகமலர்’ இதழில் வெளிவந்தது, ‘வருவான் […]

Read more

விந்தை மிகு பூச்சியினம்

விந்தை மிகு பூச்சியினம், ரெ. வீரவேல், அனுதானா பப்ளிஷர்ஸ், பக்.384, விலை ரூ.900. உலகம் முழுவதும் காணப்படும் பூச்சி இனங்களைப் பற்றிய விரிவான நூல். “கலைக்கதிர்’ இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். “பூச்சிகளின் தோற்றம்’, “பூச்சிகளின் நெருங்கிய உறவினர்கள்’, “பாடும் வெட்டுக்கிளிகள்’, “பாயும் பாச்சான்கள்’, “தேனீக்களின் தேன் வாழ்க்கை’ என்பன உள்ளிட்ட 45 தலைப்புகளிலான கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. பூச்சிகளில் எண்ணற்ற வகைகள்; அவற்றின் பலம், பகுத்தறிவு, நுண்ணறிவு, செயலாற்றும் திறன் போன்றவற்றைப்பற்றி அறியும்போது நமக்கு வியப்பு மேலிடுகிறது. ஆண் பூச்சிகளின் உதவி […]

Read more

பள்ளு இலக்கியம் மறுகட்டமைப்பு

பள்ளு இலக்கியம் மறுகட்டமைப்பு,  தே.ஞானசேகரன், காவ்யா பதிப்பகம், பக். 253,  விலை ரூ.270. பள்ளு இலக்கியங்களின் தோற்றம், வளர்ச்சி, தமிழ் இலக்கியங்களில் மருத நில மக்கள், மள்ளர்களின் வீரம், பெருமை, ஆட்சி அதிகாரம், வரலாற்று கதைகள் ஆகியவை இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அதிகாரத்தில் இருந்த மள்ளர்கள் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களால் பட்டியலினத்திற்குக் கொண்டுவரப்பட்ட விதமும் கூறப்பட்டுள்ளது. இந்தச் சமூக மக்களின் வாழ்வியல் முறைகள், குலப் பெயர்கள், குடும்ப முறைகள், அவர்களின் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை எளிய தமிழில் நூலாசிரியர் […]

Read more

விடுதலைக்கு முன் தமிழ்இலக்கிய வளர்ச்சி

விடுதலைக்கு முன் தமிழ்இலக்கிய வளர்ச்சி (1900 – 1930) முதல் பாகம்,  அ.பிச்சை, கபிலன் பதிப்பகம், பக்.270, விலை  ரூ.250. கடந்த நூற்றாண்டின் தொடக்கமான 1900- இல் இருந்து1930வரைகவிதை, சிறுகதை, நாவல்,நாடகம், ஊடகம்,கட்டுரை, பதிப்புத்துறை ஆகியவற்றில் நிகழ்ந்த முக்கிய மாற்றங்களை, வளர்ச்சிகளை இந்நூல் விளக்குகிறது . பாரதியாரின் “தனிமையிரக்கம்’ 1904 – ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. அக்காலகட்டத்தில் வழிநடை உப்புமா பாட்டு, தனிப்பாசுரத் தொகை,வருண சிந்தாமணி, சங்கிரக இராமாயணம், அருணாசல புராணம் போன்ற கவிதை நூல்கள் வெளிவந்திருக்கின்றன. வ.வே.சு.ஐயரின் “குளத்தங்கரை அரசமரம்’ இக்காலகட்டத்தில் வெளிவந்த […]

Read more

பௌத்தமும் தமிழும்

பௌத்தமும் தமிழும், மயிலை சீனி.வேங்கடசாமி, அலைகள், விலை 220ரூ. தமிழகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக செல்வாக்குடன் இருந்த பவுத்த மதம், பின்னர் தடயமே இல்லாமல் அழிந்து போனது எப்படி என்ற வரலாற்றை பல இடங்களுக்குச் சென்று, கள ஆய்வு செய்து இந்த நூலைப் படைத்து இருக்கிறார் ஆசிரியர். தமிழகத்தில் பவுத்தம் எந்தெந்தப் பகுதிகளில் பரவி இருந்தது, பவுத்த மதத்தால் கிடைத்த நன்மைகள், பவுத்தர்கள் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மன்னர் அசோகர் பவுத்த மதத்தை எவ்வாறு தமிழகத்தில் பரப்பினார், ஜைனம் […]

Read more
1 2 3 4 5 6 23