பறந்து கொண்டிருக்கும் கழுகு

பறந்து கொண்டிருக்கும் கழுகு,சுப்ரபாரதி மணியன், காவ்யா பதிப்பகம், பக். 632, விலை ரூ.640. நூலாசிரியா் எழுதி பல்வேறு இதழ்களில் வெளி வந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இந்நூலில் இருநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. வீட்டில் சமையல் குறிப்புகள் முதல் உலக அரசியல் வரை எண்ணற்ற விஷயங்களை நூலில் அறிந்து கொள்ள முடிகிறது. அரசியல், அறிவியியல், இலக்கியம், எழுத்தா பலதரப்பட்ட தகவல்கள் நூலில் இடம் பெற்றுள்ளன. பல்வேறு பொருள்களைப் பற்றிய கட்டுரைகளாக இருப்பதால், சலிப்பில்லாமல் படிக்க முடிகிறது. துரித உணவுகளால் உடல் நலம்தான் பாதிக்கும் என்று […]

Read more

ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு

ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு, ஜெயமோகன், தன்னறம் நுால்வெளி, விலைரூ.100. பிறக்கும் குழந்தையை, குருவாக பாவித்து எழுதப்பட்டுள்ள நுால். நெகிழ்ச்சி தருகிறது. மழலை உலகில் கற்றுக்கொள்ள பல்லாயிரம் உண்டு என்பதை அனுபவமாக வெளிப்படுத்துகிறது. அனுபவம் சுயம் சார்ந்து வெளிப்படுகிறது. மகிழ்ச்சியும், பிணைப்பும் நிறைந்த அன்பு வெளியைக் காட்டுகிறது. உணர்வின் தொடர்பை விளக்குகிறது. குழந்தையின் செயல்கள் மீது நுட்பமான அவதானம் வெளிப்பட்டுள்ளது. சிந்தனையைத் தொடும் வகையில் உள்ளது. – மலர் நன்றி: தினமலர், 4.4.21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609இந்தப் […]

Read more

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, வானொலி அண்ணா என்.சி.ஞானப்பிரகாசம், கற்பகவித்யா பதிப்பகம், விலைரூ.120. தினத்தந்தி அதிபர் மறைந்த பா.சிவந்தி ஆதித்தனார் வாழ்க்கை வரலாறை சுருக்கமாக சொல்லும் நுால்; 27 அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்னும் தொடருக்கு ஏற்ப, சி.பா.ஆதித்தனாரின் பத்திரிகை கொள்கையை அப்படியே பின்பற்றினார் என்ற தகவலையும் தெரிவித்துள்ளார். அத்தியாயங்களின் நிறைவில் சி.பா.ஆதித்தனாரின் படமும், அவரது பொன்மொழிகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பேசுவதில் மட்டும் அல்ல, எழுதுவதிலும் தனிச்சிறப்பு பெற்றவர் வானொலி அண்ணா என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது இந்த நுால். நன்றி: தினமலர், […]

Read more

தமிழ்நாட்டில் சர் தாமஸ் மன்றோ

தமிழ்நாட்டில் சர் தாமஸ் மன்றோ, இடைப்பாடி அமுதன், அனுராதா பதிப்பகம், பக்.336, விலை ரூ.275. கி.பி.1780- இல் இங்கிலாந்திலிருந்து சென்னைக்கு வந்து 47 ஆண்டுகள் இங்கு வாழ்ந்தவர் தாமஸ் மன்றோ. அவர் சேலத்தில் கலெக்டராக இருந்த ரீடு என்பவருக்கு உதவியாளராக – உதவி கலெக்டராக பணிபுரிந்திருக்கிறார். அவர் தனது நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எழுதிய கடிதங்களில் அக்காலத் தமிழ்நாட்டைப் பற்றிய பல அரிய தகவல்கள் கிடைக்கின்றன. தாமஸ் மன்றோ தனது தந்தைக்கு எழுதிய ஒரு கடிதத்தின் மூலம் அக்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த பெண்களின் நிலையைத் தெரிந்து […]

Read more

பாபாயணம்

பாபாயணம், ஜி.ஏ.பிரபா, விகடன் பிரசுரம், விலை 350ரூ. மதபேதம் இல்லாமல், அனைவருக்கம் அருள் மழை பொழியும் சாய்பாபா, நிகழ்த்திய ஏராளமான அற்புதங்கள் இந்த நூலில் தொகுத்துத்து தரப்பட்டு இருக்கின்றன. சாய்பாப நிகழ்த்திக் காட்டிய அருஞ்செயல்கள், அவர் தொடர்பான வியப்பான சம்பவங்கள், அவர் தொடர்பான வியப்பான சம்பவங்கள் அனைத்தும் படித்துப் பரவசம் அடையும் வகையில் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இதுவரை அதிரகம் பகிரப்படாத பாபாவின் அற்புத நிகழ்வுகளையும் இதில் காணமுடிகிறது. இவை, சாய்பாபாவின் உயிரோட்டம் நிறைந்த வண்ணப்படங்களுடன் கொடுக்கப்பட்டு இருப்பதால் மனதை ஈர்க்கின்றன. […]

Read more

நகைச்சுவை நாடகங்கள்

நகைச்சுவை நாடகங்கள், வானொலி அண்ணா என்.சி.ஞானப்பிரகாசம், கற்பகவித்யா பதிப்பகம், விலைரூ.325 நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் எழுதப்பட்டுள்ள நாடகங்களின் தொகுப்பு நுால். மொத்தம், 15 நாடகங்கள் உள்ளன; அனைத்தும், வானொலி நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பாகி புகழ்பெற்றவை; நேயர்களிடம் பாராட்டுகளை பெற்றவை. நுகர்வோர் சட்டங்களை மிக எளிமையாக புரிய வைக்கும் நுட்பத்துடன் எழுதப்பட்டுள்ளது. அன்றாடம் வாழ்வில் எதிர்கொள்ளும் மருத்துவம், நுகர்வோர் உரிமை போன்ற பொருளடக்கங்களைக் கருவாகக் கொண்டுள்ளன. வாசிப்பதற்கும், நடிப்பதற்கும் ஏதுவாக உள்ளன. மிகவும் எளிய நடையில் அமைந்துள்ளன. சிறு சுலபமான உரையாடல்கள் மிகவும் நயமாக வும், […]

Read more

அறுபத்து மூவர் சரிதத்தில் ஆச்சரியமூட்டும் பெண்கள்

அறுபத்து மூவர் சரிதத்தில் ஆச்சரியமூட்டும் பெண்கள், ப.ஜெயக்குமார், உமாதேவி பதிப்பகம், விலைரூ.200. பெரிய புராணத்தில் இடம்பெற்ற பெண்களில், 19 பேரின் வரலாற்றை படைத்துள்ளார். இதில், 13 பேர் இல்லத்தரசியராகவும், ஒருவர் மகள் என்னும் நிலையிலும் ஒருவர் தாய் என்னும் நிலையிலும், இன்னொருவர் தமக்கை என்னும் நிலையிலும் இடம்பெற்றுள்ளனர். மூன்று பேர் நாயன்மார் வரிசையில் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்துக் கட்டுரைகளைப் படைத்துள்ளார். கட்டுரையின் மையத்தை உள்ளடக்கிய பழமை மாறாத அழகிய ஓவியத்தை பதித்து மெருகூட்டியுள்ளார்.எளிய நடையில் படைக்கப்பட்டுள்ளது. அழகிய வடிவமைப்புடன் அமைந்துள்ளது. பக்தி […]

Read more

வைரமுத்து வரை தமிழ்த் திரைப்பாடல் வரலாறு (1931 முதல் 2020 வரை)

வைரமுத்து வரை தமிழ்த் திரைப்பாடல் வரலாறு (1931 முதல் 2020 வரை), சு.சண்முகசுந்தரம், காவ்யா,  பக்.1550, விலை ரூ.1600 தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் (1931) படத்தில் பாடல் எழுதிய மதுரகவி பாஸ்கரதாஸில் தொடங்கி, கடந்த ஆண்டு வெளியான படங்களில் பாடல்கள் எழுதியுள்ளவர்கள் வரையிலான முந்நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட பாடலாசிரியர்கள் குறித்த செய்திகளும் அவர்கள் எழுதிய ஓரிரு பாடல் வரிகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. எல்லாமே அறிந்த பெயர்கள்; எல்லாமே அறியாத தகவல்கள். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், மருதகாசி, உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையாதாஸ், […]

Read more

விவேகானந்தம்

விவேகானந்தம், எஸ்.சுஜாதன், தமிழில்: ப.விமலா, காவ்யா, பக். 320, விலை ரூ. 350. மலையாளத்தில் எழுதப்பட்ட சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றுப் புதினத்தின் தமிழ் மொழிபெயர்ப்பே விவேகானந்தம். இந்து மதத்தின் சாராம்சங்களை இந்தியாவுக்குள் மட்டுமன்றி மேற்கத்திய நாடுகளிலும் சுவாமி விவேகானந்தர் பரப்புரை செய்தார். இந்தியா, வெளிநாடுகளில் சுவாமி விவேகானந்தர் மேற்கொண்ட சுமார் ஆறு வருடப் பயணங்களில் அவருக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை இந்த நாவல் பதிவு செய்துள்ளது.தீவிர இந்து மதப் பற்றாளரான சுவாமி விவேகானந்தர் பிற மதங்களிலுள்ள நல்ல பல கருத்துகளை தயங்காமல் ஏற்றுக்கொண்டார். […]

Read more

நீர்–நேற்று, இன்று, நாளை?

நீர்–நேற்று, இன்று, நாளை?, ப.திருமலை, மண் மக்கள் மனிதம், விலைரூ.160. இன்றைய உலகின் அவசரத்தேவையும், சிக்கனமாக நாம் பயன்படுத்த வேண்டியதும் நீர் அன்றி வேறில்லை. நீரின்றி அமையாது உலகு. அது எப்படி என்று விளக்க இந்த நூலின் 21 கட்டுரைகள் போதும். மூத்த பத்திரிகையாளரான திருமலை நம் நாட்டின் ‘நீர் அரசியல்’ பற்றி, கேரளா, கர்நாடகாவிடம் நமக்கு நடக்கும் தண்ணீர் போர் பற்றி அருமையாக மூன்று கட்டுரைகளில் விளக்கி இருக்கிறார். கண்மாய்கள், ஆறுகளை காக்கும் அற்புத வழிகள், குடிநீரின் தேவை, நீர் மாசு என […]

Read more
1 3 4 5 6 7 23