திரை

திரை, கன்னடமூலம் எஸ்.எல். பைரப்பா, தமிழில் ஜெயா வெங்கட்ராமன், விஜயபாரதம் வெளியீடு, சென்னை, விலை 300ரூ. பைரப்பாவின் ஆவரணா (2007) என்ற நாவல் தமிழில் திரை என்ற தலைப்பில் விஜயபாரம் பதிப்பகத்திலிருந்து வெளிவந்திருக்கிறது. கத்தி மேல் நடப்பது போல்தான் ஆசிரியர் நாவலை எழுதி இருக்கிறார். கலப்புத் திருமணங்களில் மதத்தை விடக் கலாசார மற்றும் உணவுப் பழக்கங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. கன்னட நாவலுக்கு நிறைய எதிர்ப்பு இருந்தபோதிலும் வாசகர் ஆதரவு அமோகமாக இருந்திருக்கிறது. ஆறு ஆண்டுகளில் முப்பது பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. தமிழ் மொழி பெயர்ப்புப் பிரதியில் […]

Read more

என் ஆசிரியப் பிரான்

என் ஆசிரியப் பிரான், கி.வா. ஜகந்நாதன், ஜெ. வீரநாதன், எஸென்ஷியல் பப்ளிகேஷன்ஸ், கோயம்புத்தூர், பக். 192, விலை 145ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-195-4.html தமிழ்த்தாத்தா என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர் அவர்கள் இல்லையேல், சங்க இலக்கியங்கள் பல நமக்குக் கிடைக்காமலே போயிருக்கும். அந்தளவுக்கு அவர் கிராமம் கிராமமாகச் சென்று, அலைந்து திரிந்து, அந்த ஓலைச் சுவடிகளைச் சேகரித்து, அச்சடித்து வெளியிட்டார். அது தவிர, தனது ஆழ்ந்த தமிழ்ப் புலமையால் அப்பாடல்களுக்கு பொருளுரையும் இயற்றி […]

Read more

எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்

எவராலும் கற்பனை செய்ய முடியாத நான், தொகுப்பு ஷோபாசக்தி, கருப்புப் பிரதிகள், சென்னை, விலை 140ரூ. ஈழம் பேசிப் பேசி மாளாத நிலம். அதன் கடந்தகாலச் சோகங்களையும் தவறுகளையும் வெளிப்படையாகப் பேசுவதன் மூலமாக எதிர்கால அரசியல் தெளிவுக்கு இட்டு நிரப்புபவையாக சிலரது படைப்புகள் மட்டுமே இருக்கும். அப்படிப்பட்ட நான்கு ஆளுமைகளைப் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார் ஷோபாசக்தி. கவிஞர் கருணாகரனும் தமிழ்க்கவியும் தமிழ் தேசியம் சார்ந்த ஆதரவு தளத்தில் இயங்கியவர்கள். புலிகள் இயக்கத்துடன் கடந்த காலத்தில் அடையாளம் காணப்பட்டவர்கள். பழ. ரிச்சர்ட், இடது சாரியாக அறியப்பட்டவர். […]

Read more

முதுமையை வெல்வோம்

முதுமையை வெல்வோம், டாக்டர் வ.செ. நடராசன், வெற்றி நலவாழ்வு மையம், பக். 96, விலை 100ரூ. முதுமைப் பருவம் நம் வாழ்க்கைப் பயணத்தில் இயல்பானதுதான். ஆனால் நம் மனம், முதுமைப் பருவத்தை மட்டும் வேண்டா வெறுப்பாகத்தான் ஏற்றுக்கொள்கிறது. முதுவையில் ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான பிரச்னைகளும், இந்த பருவத்தில் மரணம் குறித்து உண்டாகும் பயமும்தான் இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கக்கூடும். முதுமையில் ஏற்படும் உடல், மனரீதியான பிரச்னைகளுக்கான தீர்வுகளையும், மரண பயத்தை வெல்வதற்கான சூட்சுமங்களையும் உள்ளடக்கிய நூல்தான் இது. முதுமையில், சர்க்கரை நோய், உயர் […]

Read more

இமயத்து ஆசான் சுவாமி ராமாவுடன் எனது பயணம்

இமயத்து ஆசான் சுவாமி ராமாவுடன் எனது பயணம், ஜஸ்டின் ஓ பிரையன், தமிழில் சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், பக். 632, விலை 300ரூ. இமயமலை மீது நூலாசிரியர் ஜஸ்டின் ஓ பிரையன் பல முறை ஏறியிருக்கிறார். துறவிகள் அமர்ந்து தவம் செய்யும் புனிதமான இடங்களுக்கு நடந்தே சென்றிருக்கிறார். கும்பமேளாவில் தற்காலத் துறவிகளின் காலடியில் அமர்ந்து பாடம் கேட்டிருக்கிறார். அவருடைய ஆசான் சுவாமி ராமா பலமுறை அவரைப் புனிதப் பயணங்களுக்கு அனுப்பி ஆற்றலை அதிகரிக்க வைத்திருக்கிறார். அந்த ஆசான் மறைந்துவிட்டாலும் ஒளி வடிவில் இருந்துகொண்டு தகதியானவர்களின் […]

Read more

புதுவை வரலாற்றுச் சுவடுகள்

புதுவை வரலாற்றுச் சுவடுகள், நந்திவர்மன், சேகர் பதிப்பகம், சென்னை, பக். 244, விலை 170ரூ. புதுவையின் தொடர்ச்சியான வரலாறாக இல்லாமல், புதுவையில் தங்கியிருந்த அறிஞர்கள், புதுவையில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்கள், புதுவைக்கு வந்த கப்பல்கள் என்று புதுவையோடு தொடர்புடையவை பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அலக லல்ல லாடக நி என்று தியாகராஜ கீர்த்தனையைப் பாவேந்தர் பாரதிதாசன் தமிழாக்கம் செய்தள்ளார். பிரெஞ்சுக் கவிஞர் ப்ளோரியான் எழுதிய கவிதையை செம்மறியாடும் நாயும் என்ற தலைப்பில் பெரும்புலவர் மு.த. வேலாயுதனார் மொழியாக்கம் செய்துள்ளார் என்பன போன்ற […]

Read more

குரல்வளையில் இறங்கும் ஆறு

குரல்வளையில் இறங்கும் ஆறு, அய்யப்ப மாதவன் சாய் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 120, விலை 100ரூ. அய்யப்ப மாதவனின் சமீபத்திய தொகுப்பு குரவளையில் இறங்கும் ஆறு. கவிதைக்கான தனியான பிரயத்தனங்களை அய்யப்ப மாதவன் கொண்டிருக்கவில்லை. நண்பர்கள் எல்லோரும் உறங்கிவிட்ட இரவில் ஒரு நாளை, அதுவரையிலான தன் வாழ்வை நினைத்து உறங்காமல் கிடந்து நினைவில் ஓட்டிப் பார்க்கிறார். எங்கோ செல்ல நினைத்து, கடைசியில் வீட்டுக்கே திரும்ப வேண்டிய நிர்பந்தத்தில் ஒரு தற்காலிக மரணத்துக்குத் தயாராகிறார். இவ்வாறான தன் அனுபவங்களை எல்லாம் கவிதைக்குச் சொல்கிறார். எதிர்வினையாற்றாத கண்ணாடியில் […]

Read more

மகனுக்கு மடல்

மகனுக்கு மடல், மருத்துவர் நா. ஜெயராமன், அபெகா வெளியீடுதி , புதுக்கோட்டை, விலை 80ரூ. சொல்லப்பட வேண்டிய நன்றிகள் மகனுக்கு மடல் எனும் இந்தப் புத்தகம் புதுக்கோட்டையைச் சேர்ந்த பல் மருத்துவர் நா. ஜெயராமன் ஹாங்காங்கில் படிக்கும் தன் மகள் ஜெயகுமாருக்கு எழுதிய நான்கு கடிதங்கள். ஜெயகுமார் எழுதிய ஒரு கடிதம் என்று ஐந்து கடிதங்களைக் கொண்டது. உயர்கல்வி என்ற நீண்ட கடிதத்தில் பெற்றோரும் பிள்ளைகளும் சொல்லிக்கொள்ள வேண்டிய நன்றி குறித்து இடம் பெற்றிருக்கும் உரையாடல்கள் மிகவும் முக்கியமானவை. குடும்ப வாழ்வில் உறவுகளைச் செம்மைப்படுத்திக் […]

Read more

அந்தோனியோ கிராம்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்

அந்தோனியோ கிராம்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள், குவின்டின் ஹோரே, ஜியடோஃபெரி நோவல் ஸ்மித், தமிழில் வான்முகிலன், அலைகள் வெளியீட்டகம், சென்னை, பக். 802, விலை 600ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-346-8.html அந்தோனியோ கிராம்சி இத்தாலியைச் சேர்ந்தவர். 1891இல் பிறந்தவர். இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டவர். அதன் காரணமாக, இரண்டாம் உலகப் போர் காலத்தில் சர்வாதிகார ஆட்சி நடத்திய முசோலினியால் சிறை வைக்கப்பட்டவர். பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர். எனினும் அவர் சிறையில் இருந்த காலத்தில் தனது சிந்தனைகளைக் கிறுக்கல்களாகவும், […]

Read more

காகிதப் படகில் சாகசப் பயணம்

காகிதப் படகில் சாகசப் பயணம், பெ. கருணாகரன், குன்றம் பதிப்பகம், சென்னை, பக். 208, விலை 150ரூ. விகடன், குமுதம், நக்கீரன், தினமணி, புதிய தலைமுறை என்று பல முன்னணிப் பத்திரிகைகளில் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய இந்நூலாசிரியர், கதை, கட்டுரை, பேட்டி என்று தனது படைப்புகளாலும், வசீகரமான எழுத்தாறறலாலும் வாசகர்களைக் கவர்ந்தவர். தனது 27 வருட பத்திரிகை துறையின் சுவாரஸ்யமான அனுபவங்களை இந்நூலில் கட்டுரை வடிவில் சுவைபட கூறியுள்ளார். ஒரு பத்திரிகையாளன் ஜொலிக்கும் வைரமாக வெளியுலகிற்குத் தெரிந்தாலும், அதற்காக அவன் பட்டை தீட்டப்படும்போது எத்தகைய […]

Read more
1 625 626 627 628 629 841