உன் மீதமர்ந்த பறவை

உன் மீதமர்ந்த பறவை, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. பறவைகளாக்கும் கவிதைகள் பழநிபாரதியின் கவிதைகளும் பாடல்களும் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவை. உன் மீதமர்ந்த பறவை என்னும் அவரது இந்தத் தொகுப்பில் இயற்கையும் காதலும் இயற்கை மீதான காதலும்  வாஞ்சையுடன் வெளிப்பட்டு கவிதை அனுபவத்தை அர்த்தப்படுத்துகின்றன. மென்மையான உணர்வுகளைச் சொற்களின் வார்ப்பிலிட்டுக் கவிதைகளாய்க் கவனப்படுத்தியுள்ளார் பழநிபாரதி. ஏ.பி. ஸ்ரீதரின் ஓவியங்களும் பழநிபாரதியின் கவிதைகளும் கொண்ட இந்தத் தொகுப்பு மெல்லிய காதலை விரும்புபவர்களுக்கும் இயற்கை நேசர்களுக்கும் விருந்தளிப்பவை. இளம் வெயில், கூந்தல், கூழாங்கற்கள், […]

Read more

அகம் புறம் அந்தப்புறம்

அகம் புறம் அந்தப்புறம், முகில், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 999ரூ. விரிந்துகொண்டே செல்லும் ராஜபாட்டைகள் To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-202-3.html குமுதம் ரிப்போட்டர் வார இதழில் முகில் எழுதிய தொடரின் தொகுப்பு நூலே அகம் புறம் அந்தப்புரம். கனத்த மேலட்டையுடன் கூடிய 1032 பக்கங்கள். பார்த்தாலே பிரமிப்பு ஏற்படுத்தும் இந்த நூலை வாசிக்கத் தொடங்கினாலோ பிரமிப்பு அடங்குவதே இல்லை. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதத்தில் நமக்குத் தெரிந்த, தெரியாத அரசர்களின் ஆளுமைகளின் செய்திகளை வேறொரு புதிய கோணத்தில் கதையாக […]

Read more

சிறுவன் தாகூர்

சிறுவன் தாகூர், லீலா மஜும்தார், தமிழில்-ரா.கி. ரங்கராஜன், நேஷனல் புக் டிரஸ்ட், சென்னை. பள்ளிக்கூடம் பிடிக்காத நோபல் கவி பல குழந்தைகளைப் போல ரவீந்திரநாத் தாகூரும் பள்ளி செல்லும் வயதை அடைவதற்கு முன்பே, பள்ளிக்குச் செல்ல ஆர்வமாக இருந்த குழந்தைகளில் ஒருவர்தான். அவரது உறவுக்காரப் பையன்கள் சத்யாவையும், சோமனையும் பள்ளிக்கு அழைத்துச் செல்ல தினமும் வண்டி வரும். அதில் தானும் போக வேண்டுமென்று குழந்தையாக இருந்த தாகூர் அழுது அடம்பிடித்திருக்கிறார். அப்போது தாகூருக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்த ஆசிரியரோ கொஞ்ச காலத்தில் பள்ளிக்குப் போகமாட்டேன் […]

Read more

சுவடுகள் நெய்த பாதை

சுவடுகள் நெய்த பாதை(கவிதைகள்), பா. கிருஷ்ணன், தகிதா பதிப்பகம், விலை 60ரூ. காட்சியை ஜெயித்த கவிதைகள் To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-209-1.html பத்திரிகையாளரான பா. கிருஷ்ணன் சிறந்த கவிஞரும்கூட. அவரின் கவிதை ஆற்றலை நிரூபிக்க வந்திருக்கும் கவிதை நூல்தான் சுவடுகள் நெய்த பாதை. இந்தத் தொகுப்பை கவிதையாகவே நெய்வதற்குக் காரணமாய் புகைப்படங்களே அமைந்துள்ளது. ஒரு படத்துக்கு ஒரு கவிதை என அமைந்துள்ள இத்தொகுப்பில் எதற்கு எது ஆதாரம் எனக் கண்டுபிடிக்க முடியாதபடி திகைக்க வைக்கிறது. கண்ணுக்கும் கருத்துக்கும் இதமான பயணத்தைத் […]

Read more

வைரமணிக் கதைகள்

வைரமணிக் கதைகள், வையவன், தாரிணி பதிப்பகம், சென்னை, விலை 450ரூ. அற்புதமான சிறுகதைகளைத் தருகிறவர் வையவன். பல்வேறு காலகட்டங்களில் எழுதியுள்ள எண்பது சிறுகதைகளை வைரமணிக் கதைகள் என்ற மகுடமிட்டு ஒரே தொகுதியாக வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொன்றிலும் இயல்பாக இழையோடுகிறது அப்பழுக்கற்ற மனிதம். இந்தக் கதைதான் சிறந்தது என்று குறிப்பிட்டு ஒன்றைச் சொல்லமுடியாத சங்கடத்தை நியாயமான விமர்சகனுக்கு ஏற்படுத்துகிற தொகுப்பு இது. பெரும்பாலான கதைகளில் கிராமப்புற அழகுகளை மிகைப்படுத்தலில்லாமல் சொல்லியிருக்கும் ஆற்றல் வையவன் போன்ற வெகு சிலருக்கே கைவரக்கூடிய ஒன்று. மார்க்ஸ் ஆகப் பெயர் மாற்றம் பெற்ற […]

Read more

இசையின் சித்திரங்கள்

இசையின் சித்திரங்கள், எம்.எஸ். சுப்புலட்சுமி, எழுத்து லக்ஷ்மி தேவ்நாத், ஹெரிடேஜ் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, விலை 72ரூ. சித்திரமடலில் இசையரசி காமிக்ஸ் என்று வழங்கப்படுகிற வண்ணம் சித்திர மடலாக இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தந்திருக்கிறார்கள் ஹெரிடேஜ் வெளியீட்டகத்தார். லக்ஷ்மி தேவ்நாத் எழுதி, ஓவியர் அரஸ் கைவண்ணத்தில் வெளியாகியுள்ள இச்சிறு நூலில் குழந்தை சுப்புலக்ஷ்மி குஞ்சாவிலிருந்து, உச்ச நிலையை எட்டி அமரத்துவம் பெறுகிறவரை, ஒரு குறும்படம் பார்ப்பது போன்ற அனுபவத்தோடு படித்தும் பார்த்தும் மகிழலாம். அடிக்குறிப்பு விவரங்களில் அரியக்குடி போன்றவர்களின் காலமும் […]

Read more

காற்றின் குரல்

காற்றின் குரல், திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், சென்னை 92, பக். 264, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-216-7.html தெய்வீக இலக்கியமான இராமாயணத்தை நினைத்த நேரத்தில், நினைத்தபடி அனுபவித்து மகிழலாம். ஒவ்வொரு சிறு நிகழ்வையும் மையப்படுத்தி எத்தனையோ சிறுகதைகளைப் பலரும் எழுதியிருக்கிறார்கள். அந்த வகையில் தேர்ந்த இலக்கியவாதியுமான திருப்பூர் கிருஷ்ணன் தமக்கே கைவந்த எளிய நடையில் பல காட்சிகளைக் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறார். சரயூ நதியில் கலந்து மறைய முடிவெடுத்த ஸ்ரீ ராமன் முன்னால், […]

Read more

சட்டம் உன் கையில்

சட்டம் உன் கையில், ஆதிலட்சுமி லோகமூர்த்தி, சூரியன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதற்குள்ளேயே இருக்கும்போது, அது பிரம்மாண்டமாகத்தான் தெரியும். அதை விட்டு தள்ளி நிற்கும்போதுதான் பிரச்சினையின் உண்மையான வீரியம் பிடிபடும். இப்படி பெண்கள் தங்களைச் சூழ்ந்திருக்கிற பிரச்சினைகளில் இருந்து தள்ளி நின்று தீர்வு காண வழிகாட்டுகிறது வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி எழுதியிருக்கும் சட்டம் உன் கையில் புத்தகம். மூடப்பட்டிருக்கும் வீட்டின் ஜன்னல்கள் அடைபட்டு இருக்கும்போது, விசாலமாகத் திறக்கிற கதவைப்போலவே, பெண்கள் தங்கள் குடும்பத்திலும், அலுவலகத்திலும் சந்திக்க நேர்கிற பிரச்சினைகளுக்கு, […]

Read more

மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், விடியல் பதிப்பகம், கோயமுத்தூர், தொகுதி – 9,  விலை 2000ரூ. தத்துவார்த்த விசாரணைகளை வளர்தெடுத்தவை அமைப்புகளோ, கட்சிகளோ, பெரிய பல்கலைக்கழகங்களோ அல்ல. சில தனி மனிதர்களே அதைச் சாதித்தார்கள். அந்தவகையில் உலகின் திசையை மாற்றிய மாவோவின் படைப்புகளை முழுமையாகத் தமிழில் கொண்டுவந்த மகத்தான சாதனையை செய்துவிட்டு மண்ணில் புதைந்துவிட்டார் விடியல் சிவா. அவரது நினைவுகளைச் சுமந்து இந்த ஒன்பது தொகுதிகள் வெளிவந்து இருக்கின்றன. ஓர் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி ஒரு தேசத்துக்கு விடியலை விதைத்து கோடிக்கணக்கான மக்களுக்கு வசந்தத்தின் […]

Read more

அப்பா சிறுவனாக இருந்தபோது

அப்பா சிறுவனாக இருந்தபோது, அலெக்சாந்தர் ரஸ்கின், தமிழில் நா. முகமுது ஷெரிபு, மறுவடிவம் ஈஸ்வர சந்தான மூர்த்தி, புக்ஸ் ஃபார் சில்ரன். உங்களுக்குச் சாப்பிடப் பிடிக்குமா, எல்லாவற்றையும் சாப்பிடப் பிடிக்குமா? நிச்சயமாகப் பிடிக்காது இல்லையா? அப்படி ஒரு சிறுவன். தினசரி பிரெட்டைச் சாப்பிட மறுத்து, அதைத் தரையில் வீசி எறிகிறான். யார் சொல்லியும் அந்தச் சிறுவன் பிரெட்டைச் சாப்பிடவில்லை. கடைசியாக அடுத்த நாள் காலையில் இருந்து சிறுவனுக்கு பிரெட்டே தரப்படவில்லை. குளிர்பானங்களும் தரப்படவில்லை. இரவுச் சாப்பாடும் இல்லை. பிரெட் இல்லாமல் காலையில் சீஸ், மதியம் […]

Read more
1 683 684 685 686 687 841