இதழ் விரிக்கும் தமிழ்ப் பூக்கள்

இதழ் விரிக்கும் தமிழ்ப் பூக்கள், க.ஜெய்சங்கர், அகநி, விலைரூ.120. பல்வேறு கருத்துகள் அடங்கிய 12 கட்டுரைகளின் தொகுப்பு நுால். மெய்ப்பொருள் நாயனார் கட்டுரை மூலம் திருக்கோவிலுார் அரசாண்ட குறுநில மன்னர் என்றும், சைவம் பரப்பிய பெருமையையும் அறிய முடிகிறது. நுால் இரு வகைப்படும். ஒன்று நடப்பு காலத்திற்கு ஏற்றது. அடுத்தது காலம் கடந்தும் நிற்பது. உதாரணங்களுடன் ஒரு கட்டுரையில் விளக்குகிறார். செய்யுள் என்பது சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது என்பதையும் ஒரு கட்டுரை காட்டுகிறது. இலக்கண அறிவை மேம்படுத்திக் கொள்ள விரும்புவோர் படிக்க ஏற்ற […]

Read more

மதாம்

மதாம், டாக்டர் மு.ராஜேந்திரன், அகநி, விலைரூ.400. மேடம் என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழ்ப் பேச்சு வடிவமான, ‘மதாம்’ என்பது நாவலின் பெயராகி, புதுச்சேரி கவர்னராக இருந்த டியூப்ளேயின் மனைவி ழான் என்பவரைக் குறிக்கிறது. அவரது வரலாற்றையும், டியூப்ளேயின் வரலாற்றையும் புதுச்சேரியின் பேச்சு வழக்குடன் எடுத்துஉரைக்கிறது. பிரெஞ்சு சொற்கள் தமிழ் மயமாக்கப்பட்டு நாவலில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றை விளக்குவதற்காக நட்சத்திரக் குறியிட்டு பொருள் விளக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கவர்னராக டியூப்ளே, 12 ஆண்டுகள் பதவியில் இருந்தார். அந்த வரலாறு தான் நாவலாகியிருக்கிறது. கவர்னராக இருந்த அவரை குற்றவாளி […]

Read more

காலா பாணி

காலா பாணி, டாக்டர் மு.ராஜேந்திரன், அகநி, விலைரூ.650 ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட்ட சிவகங்கைச் சீமையின் வரலாற்றை – குறிப்பாக நாடு கடத்தப்பட்ட போராளிகளைப் பற்றியது இந்த நுால். கிழக்கிந்தியக் கம்பெனி தமிழகத்துப் போராளிகளை எல்லா வகைகளிலும் ஒடுக்கியும், கொன்று குவித்தும், நாடு கடத்தியும் செயல்பட்ட நிகழ்வுகளை வரலாற்றுப் பின்னணியில் விவரிக்கிறது. சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையண்ணத் தேவர் உள்ளிட்ட 73 போராட்ட வீரர்களைக் குற்றவாளிகளாகக் கருதி காலா பாணியாக ஆக்கிய கதையை விளக்குகிறது. காலா பாணி என்ற சொல்லுக்குக் கறுப்புத் தண்ணீர் என்று […]

Read more

சாலாம்புரி

சாலாம்புரி, அ.வெண்ணிலா, அகநி, விலைரூ.400. வெள்ளைத் துணியில் கறுப்பு, சிவப்பு வண்ணக் கலவை தான் சாலாம்புரி. துணி, சாயம் என்றவுடன் நாவல் எதை நோக்கி நகர்கிறது என்பது புரிந்து விடுகிறது. கூடுதல் விளக்கமாக நாவலின் காலமாக 1950 என்னும் தகவலையும் தந்து விடுகிறார். நெசவாளர்களின் வாழ்க்கைக்குள் ஊடு நுாலாகவும், பாவு நுாலாகவும் இணைந்து இயங்குகிறது நாவல். ஏழ்மை வாழ்க்கையில் ஒரு நிறைவுடன் வாழ்ந்த மனிதர்களின் மனநிலையைத் தெள்ளத் தெளிவாக்கியுள்ளார். நடராஜன் என்ற பாத்திரத்தை, 43 அத்தியாயங்களில் நிலை நாட்டியுள்ளார். கதைப் போக்கில் 1950களின் அரசியல் […]

Read more

குக்கூவென

குக்கூவென, மு.முருகேஷ், அகநி, பக். 80, விலை 50ரூ. மூன்று வரியில் ஒரு, ‘அடடே’ போட வைக்கும் கவிதையே ஹைக்கூ. ஒரு பக்கம், ஒரு என, உள்ளங்கைக்குள் அடக்கும் வகையில், புதுமையான நூலை வெளியிட்டிருக்கிறார் மு.முருகேஷ். இவரின், ‘விரல் நுனியில் வானம், தோழமையுடன்’ உள்ளிட்ட ஹைக்கூ நூல்களைப் போலவே, இதுவும் கவனிக்கப்படும். நன்றி: தினமலர், 14/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

விடியலின் முகவரிகள்

விடியலின் முகவரிகள், கவிஞர் செல்லம் ரகு, அகநி, பக். 96, விலை 120ரூ. இன்றைக்கு பூமியே நெகிழிப் பையென சுருங்கிப் போய்விட்டதோ என்று அஞ்சும் அளவிற்கு நெகிழிப் பை இல்லாமல் எதுவுமேயில்லை என்கிற நிலை உண்டாகி விட்டது. ‘மேய்ச்சல் நிலம் தேடிச் சென்ற மாடுகள் மாலையில் திரும்பின நெகிழிப்பை மென்றபடி’ என்ற கவிதை வரிகளில், நம்மைக் கொல்லும் நெகிழிப் பையின் அபாயம் குறித்து ஆசிரியர் கூறியுள்ளது, நெஞ்சத்தை பதற வைக்கிறது. நன்றி: தினமலர், 22/7/2018.   இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027093.html இந்தப் புத்தகத்தை […]

Read more

எங்கிருந்து தொடங்குவது

எங்கிருந்து தொடங்குவது, வெண்ணிலா, அகநி, விலை 100ரூ. ஆணும் பெண்ணும் கணவன் மனைவி ஆனவுடன் இருவருக்கும் உண்டாகும் இடைவெளி, பகைமை, குழந்தைகளை வளர்க்கும் விதம், குடும்பத்துக்குள் சாதியின் நிலை, பாலின வேலைப் பாகுபாடுகள், உறவினர்களுக்காக வேறுபாடுகளை பொறுத்துக்கொள்ளும் இயலாமை ஆகியவை தனித்தனி அம்சங்களாக இந்தப் புத்தகத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன. நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

எரியத் துவங்கும் கடல்

எரியத் துவங்கும் கடல், அ.வெண்ணிலா, அகநி, விலை 275ரூ. பெண்முகம் ‘நானும் கவிதையும் வேறுவேறல்ல, கவிதை பெயரிடப்படாத நான், நான் பெயரழிந்த கவிதை’ என்ற நூலின் முகப்பிலேயே குறிப்பிடும் கவிஞர் வெண்ணிலா இந்த கவிதைத் தொகுப்பில் தன் மொத்த கவியுலகத்தையும் பார்வைக்கு வைக்கிறார். பொதுவாக கவிதை என்பதை மொழி தெரிந்த யார் வேண்மாடுனாலும் எழுதிவிடக்கூடும். ஆனால், அதன் பின்னால் இயங்கும் பித்துப்பிடித்த கவிமனம் தான் கவிஞருக்கும் ‘தொழில் நுட்பவாதிகளுக்கான’ வித்தியாம். வெண்ணிலாவின் கவி உள்ளம் நெகிழ்ச்சியானது. உறவுகளை, உணர்வுகளை, வாழ்வை, சூழலை நெகிழ்வோடு காண்கிறார். […]

Read more

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், என்.சி. ஞானப்பிரகாசம், கற்பக வித்யா பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. வானொலி அண்ணா என்று புகழ்பெற்ற என்.சி. ஞானப்பிரகாசம், மருத்துவத்தை அடிப்படையாக வைத்து எழுதிய நாடகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இவை வெறும் பொழுதுபோன்னு நாடகங்கள் அல்ல. ஒவ்வொரு நோயும் எதனால் வருகின்றன, அதற்கு சிகிச்சை என்ன, நோய் வராமல் தடுப்பது எப்படி என்பதை உணர்த்துகின்றன. எனவே, இதை ஒரு நாடக நூல் என்று கூறுவதைவிட, மருத்துவக் களஞ்சியம் என்று கூறுவதே பொருந்தும். மிகப் பயனுள்ள நூல். நன்றி: […]

Read more

வடகரை

வடகரை, டாக்டர் மு. ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். அகநி, வந்தவாசி, விலை 400ரூ. ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் மு. ராஜேந்திரன் எழுதியுள்ள வடகரை என்ற ஒரு வம்சத்தின் வரலாறு நூல். அவரது குடும்பத்தினரின் 600 ஆண்டு வம்ச வரலாறு மட்டுமல்ல, தென் மாவட்டங்களின் குறிப்பாக மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி போன்ற மாவட்டங்களின் கலாச்சார வரலாறு. ஏதோ காதில் விழுந்த செய்தியாக எழுதாமல் 600 ஆண்டு சம்பவங்களையும், ஆதாரத்தோடு அத்தனை விவரங்களையும் திரட்டி எதையும் ஒளிக்காமல் எழுதியிருக்கிறார். குடும்பங்களில் இன்று இழந்து கொண்டு இருக்கும் பாசப்பிணைப்புகள் […]

Read more
1 2