திருவாசகம்

திருவாசகம் – மூலமும் உரையும், உரையாசிரியர்: தமிழ்ப்பிரியன், அருணா பப்ளிகேஷன்ஸ்,  பக்.552, விலை ரூ.200. திருவாசகத்திற்கு தற்போது வெளிவரும் உரை நூல்கள் பாட்டின் பொருள் உணர்ந்த விளக்கவுரைகளாக இல்லை. நுட்பமான விளக்கவுரைகள் ஏற்கெனவே பல உள்ள ஒரு ஞான நூலுக்கு, மேன்மேலும் விளக்கவுரை எழுதுவது தேவையில்லாதது. இதனால், பாடல்களில் பிழை, பொருட்பிழை, அச்சுப்பிழை, ‘பா39’ வகைகளில் பிழை எனப் பல பிழைகள் மலிந்தே வெளிவருகின்றன. இந்நூலும் அதற்கு விதிவிலக்கல்ல. அதாவது, பத்தோடு பதினொன்றுதான் இந்நூல். சிவபுராணத்தில்,‘மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை 39’ என்பது திருத்தமான […]

Read more

சிரிக்க சிந்திக்க அறிஞர் அண்ணாவின் சின்னச் சின்ன கதைகள்

சிரிக்க சிந்திக்க அறிஞர் அண்ணாவின் சின்னச் சின்ன கதைகள், மண்னை சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், பக். 152, விலை 50ரூ. அறிஞர் அண்ணாதுரை ஆற்றல் மிகு பேச்சாளர். மேடையில், ‘மைக்’கின் முன்னே வந்து, அண்ணா பேச ஆரம்பித்தால், பண்டிதர் முதல், பாமரர் வரை மயங்குவர். அவரது பேச்சை கேட்க, சில சமயங்களில் கட்டணம் வைத்தனர். அப்படி இருந்தும் மக்கள் பணம் கட்டி, பெருமளவில் பேச்சைக் கேட்க வந்தனர். மேடையில் பேசும் போதும், ஏடுகளில் கட்டுரைகள் எழுதும் போதும், சொல்ல வந்த கருத்தை எளிதில் விளக்குவதற்காக […]

Read more

ஐஎஸ்ஐஎஸ் கொலைகாரன் பேட்டை

ஐஎஸ்ஐஎஸ் கொலைகாரன் பேட்டை, பா. ராகவன், கிழக்கு பதிப்பகம், விலை 140ரூ. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்து எழுத்தாளர் பா. ராகவன் எழுதிய நூல். அல்கொய்தாவுக்கு பிறகு சர்வதேச சமூகத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தோற்றம், அதன் செயல்பாடுகள் குறித்து விரிவாக எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 23/3/2017.   —-   திருவாசகம், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்தின் மூலமும் உரையும் அடங்கிய நூல். உடலையும் உள்ளத்தையும் ஒருசேர உருக்குகின்ற திருவாசத்திற்கு உரையாசிரியர் தமிழ்ப்பிரியன் எளிய வகையில் விளக்கம் […]

Read more

அருள்வளர் மதுரை மீனாட்சி அம்மை கலிவெண்பா

அருள்வளர் மதுரை மீனாட்சி அம்மை கலிவெண்பா, மு. இராமலிங்கம், எல்கேஎம் பப்ளிகேஷன், பக். 32, விலை 22ரூ. மீனாட்சி அம்மையின் சிறப்புகளை பாடுவதாக அமைந்துள்ளது இந்நூல். நன்றி: தினமலர், 29/1/2017. —- ஐம்பெரும் காப்பியக்கதைகள், ஆர்.சி.சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 45ரூ. எளிய கதை வடிவில், மாணவர்கள் படித்து பயன் அடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இந்நூல். நன்றி: தினமலர், 29/1/2017.  

Read more

என் நாடு என் மக்கள் எனது போராட்டம்

என் நாடு என் மக்கள் எனது போராட்டம், அடால்ஃப் ஹிட்லர், தமிழில் ஆர்.சி. சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், பக். 352, விலை 175ரூ. உலகின் மிகக் கொடிய சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் சுயசரிதை இந்நூல். அவருடைய இளமைக் காலம் முதல் 1918 வரையில் நிகழ்ந்த அவருடைய சொந்த வாழ்க்கை, அரசியல் நிகழ்வுகள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சாதாரண ஓவியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், உலகின் மாபெரும் சர்வாதிகாரியாக மாற அவருடைய கம்யூனிச எதிர்ப்பு சிந்தனை முறையே காரணமாக இருந்திருக்கிறது. “ஒரு கொள்கை பரவுவதைத் தடுக்க […]

Read more

மரணத்தின் மீது உருளும் சக்கரம்

மரணத்தின் மீது உருளும் சக்கரம், தோப்பில் முஹம்மது மீரான், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், பக். 128, விலை 80ரூ. பல்வேறு இதழ்களில் வந்த சிறு கதைகளின் தொகுப்பு. சில கதைகள், நூலாசிரியரின் அனுபவத்தை கூறுவதாக உள்ளது. நன்றி: தினமலர், 13/11/2016.   —-   சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம், முடிகொண்டான் வெங்கட்ராம சாஸ்திரிகள், அருணா பப்ளிகேஷன்ஸ், பக். 176, விலை 65ரூ. எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கியவர் சாணக்கியர். அவர்சொன்ன வழியில் இன்றைய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என்று கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 13/11/2016.

Read more

அருள் தரும் ராமர் நரசிம்மர் திருத்தலங்கள்

அருள் தரும் ராமர் நரசிம்மர் திருத்தலங்கள், சிவம், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 30ரூ. திருப்புல்லாணி ராமர், மதுராந்தகம் ராமர், கடையம் ராமசாமி கோவில் மற்றும் தமிழகத்தில் காட்சி தந்த நரசிம்மர் கோவில் உள்ளிட்ட 23 கோவில்களின் சிறப்புகள் தொகுக்கப்பட்ட நூல். நன்றி: தினத்தந்தி, 9/11/2016.   —-   தெருவென்று எதனைச் சொல்வீர், தஞ்சாவூர்க் கவிராயர், காலச்சுவடு பதிப்பகம். விலை 180ரூ. மனிதர்களுக்குச் சம்பவங்கள் நேரலாம். அவற்றை நினைவுகூரவும் செய்யலாம், அதனை நூலாசிரியர் இலக்கியமாகப் படைத்து வெற்றி கண்டுள்ளார். நன்றி: தினத்தந்தி, 9/11/2016.

Read more

சினிமாவின் மறுபக்கம்

சினிமாவின் மறுபக்கம், ஆரூர்தாஸ், தினத்தந்தி பதிப்பகம், பக். 416, விலை 250ரூ. ஆயிரம் படங்களுக்கு மேல் வசனம் எழுதியுள்ள ஆரூர்தாஸ், தான் சினிமா துறைக்குள் நுழைந்தது, தஞ்சை ராமையாதாஸை குருவாக ஏற்றுக்கொண்டு ஆரூர்தாஸ் ஆனது, ‘பாசமலர்’ படத்தின் வசனம் அவரை உச்சத்திற்குக்கொண்டு போனது முதல் இக்கால படங்கள் வரை அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மூலம் தமிழ் சினிமாவின் மறுபக்கத்தைப் பதிவு செய்திருக்கிறார். -மணிகண்டன். நன்றி: குமுதம், 29/6/2016.   —- உலகப்புரட்சியாளர்கள், ஆர்.கி. சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 40ரூ. நாட்டுக்காக புரட்சிகள் செய்த […]

Read more

காசி முதல் ராமேஸ்வரம் வரை பயண வழிகாட்டி

காசி முதல் ராமேஸ்வரம் வரை பயண வழிகாட்டி, புதிய புத்தக உலகம், விலை 120ரூ. காசி யாத்திரை என்பது இந்துக்கள் வாழ்க்கையில் முக்கியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய கடமையாக உள்ளது. காசி யாத்திரை என்பது காசி – ராமேஸ்வரம் – கயா ஆகிய மூன்று தலங்களையும் இணைப்பதாக இருக்கிறது. இந்த நூலில் காசி முதல் ராமேஸ்வரம் வரையிலான புனித தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்வதற்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக இந்த நூலை லட்சமி சுப்பிரமணியம் வடிவமைத்துள்ளார். புனிதப் பயணம் மேற்கொள்வோருக்கு பயனுள்ள இனிய நூல். நன்றி: தினத்தந்தி, […]

Read more

திருக்குறள் பரிமேலழகர் உரை

திருக்குறள், பரிமேலழகர் உரை, அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள், உலகின் தலைசிறந்த நீதி நூலாகப் போற்றப்படுகிறது. அதற்கு உரை எழுதிய அறிஞர்கள் பலர். பழங்காலத்தில் எழுதப்பட்ட உரைகளில், பரிமேலழகர் உரையே சிறந்தது என்பது தமிழறிஞர்களின் கருத்து. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பரிமேலழகர் உரை சிறந்த முறையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கு உரிய பணி. நன்றி: தினத்தந்தி, 11/5/2016.   —- வாரியார் சுவாமிகள் ரசித்து தொகுத்த பழமொழிகள், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 23ரூ. பொதுவாக பழமொழிகள் […]

Read more
1 2 3 4 5