வலை உணங்கு குருமணல்

வலை உணங்கு குருமணல், மு. புஷ்பராஜன், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, பக்கங்கள் 184,விலை 140ரூ. இப்புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-197-4.html குருமணல் சுவடுகள் புலம்பெயர்ந்து போன ஈழத தமிழருக்கு நூல்கள்தான் தமது நிலத்தைக் காட்டுகின்றன. தன் கண்ணீராலும் பட்டினியாலும் எம்மை வளர்த்த அம்மாவிற்கு என்று புஷ்பராஜன் இந்த நூலை எழுத ஆரம்பிக்கும்போதே மனது வலிக்கிறது. இது வெறுமனே மு. புஷ்பராஜனுடைய அம்மாவை மட்டுமல்ல. அந்த குருநகர் என்ற யாழ்ப்பாணத்து மீனவக் கிராமத்தின் எல்லா ஏழை அம்மாக்களையும் கண்ணுக்கு முன்னால் […]

Read more

திருவகுப்பு, வேல், மயில், சேவல், விருத்தங்கள், திருஎழுகூற்றிருக்கை

திருவகுப்பு, வேல், மயில், சேவல், விருத்தங்கள், திருஎழுகூற்றிருக்கை, தெளிவுரை ம. ராமகிருஷ்ணன், திருப்புகழ்ச் சங்கமம் வெளியீடு, சென்னை 90, பக்கம் 232, விலை 120 ரூ. முனைவர் ம. ராமகிருஷ்ணன், திருப்புகழ் நெறி பரவுதற்கென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஆன்மிகப் பணியில் தற்போது முழுமையாக ஈடுபட்டுள்ள இவர், ‘வரிசைதரும் பதம் அதுபாடி வளமொடு செந்தமிழ் உரைசெய அன்பரும் மகிழ வரங்களும் அருள்வாயே’ என்னும் அருணகிரிநாரின் வரத்தைப் பெற்றவர். ஒரே பொருளை பலவிதமாக வகுத்தும், தொகுத்தும், சொல்லும் நூல் வகைக்கு வகுப்பு என்று பெயர். இதில் சீர்பாத […]

Read more

வீணையின் குரல் (எஸ். பாலசந்தர் வாழ்க்கை வரலாறு)

  வீணையின் குரல் (எஸ். பாலசந்தர் வாழ்க்கை வரலாறு), காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் – 629001, விலை 350ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-0.html 1934ல் பிரபல இந்தி டைரக்டர் வி. சாந்தாராம் தமிழில் தயாரித்த சீதா கல்யாணம் படத்தில் 7வயது சிறுவனாக கஞ்சிரா வாசித்தவர். 1948-ல் இரட்டை வேட நடிப்பில் வந்த முதல் சமூகப்படமான இது நிஜமாவில், கதாநாயகனாக இரட்டை வேடம் தாங்கி நடித்தவர். பாடல் – நடனம் இல்லாமல் எடுக்கப்பட்ட முதல் […]

Read more

ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை (செவ்வியல் அரசியல் பொருளாதாரம்)

காற்றால் நடந்தேன், சீனு ராமசாமி, உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை – 18, பக்கம் 104, விலை 80 ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-203-0.html சீனு ராமசாமியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு. சமூகம் கட்டமைத்த சராசரி ஆண் மனதைக் கடக்க எண்ணும் முயற்சி பல கவிதைகளில் பிரதிபலிக்கிறது. ஒரு கூரையின் கீழ் காதலின்றி வாழ நேரும் ஓர் ஆணையும் பெண்ணையும் காதலற்ற வாழ்வில் நடமாடித் திரிவதைவிடவும் இப்பிரிவு உன்னதம் என்கிறது ‘விளக்கம்’ கவிதை. […]

Read more

பீமாயணம் தீண்டாமையின் அனுபவங்கள்

பெண்ணெழுத்து களமும் அரசியலும், ச. விசயலட்சுமி, பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, சென்னை 18, விலை 70 ரூ.   தொண்ணூறுகளின் இறுதியில் பெண் கவிதை எழுத்தில் மிகப்பெரிய உடைப்பு ஏற்பட்டது. சொல்லும் பொருளும் புதிதாக, பல்வேறு வகைமைகளில் பெண் கவிஞர்கள் எழுதத் தொடங்கினார்கள். ஆனால் பெண்களின் கவிமொழியை முழுவதும் ஆராயும் விமர்சன நூல்கள் அதிகம் உருவாகாதது பெரும் குறையே. இச்சூழ்நிலையில் சமகாலப் பெண் கவிஞர்கள் குறித்து குட்டி ரேவதி எழுதியதைத் தொடர்ந்து வரும் புத்தகம் பெண்ணெழுத்து முக்கியமான வரவாகும். கவிஞர் ச. விசயலட்சுமி தனக்கேயுரிய […]

Read more

தமிழர் உணவு

தமிழர் உணவு, தொகுப்பாசிரியர் பக்தவத்சல பாரதி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக்கம் 415, விலை 250ரூ. பரபரப்பான இன்றைய வாழ்க்கை முறையில் உணவைப் பசிக்காகவோ, ருசிக்காகவோ உண்பது என்ற நிலை மாறிவிட்டது. அன்றாட நாளில் அதுவும் ஒரு கடமையாகவே கழிகிறது. உணவு என்பது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவது போன்ற விஷயம் அல்ல. அது சமூகம் சார்ந்தது. உணவும் சமூகமும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை என்ற கருத்தை இன்றைய தலைமுறையினருக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில், தமிழர்களின் உணவு முறைகளை நூலாகத் தொகுத்துள்ளார் பக்தவத்சல பாரதி. ஈழத்தில் […]

Read more

குண்டலகேசி

அவஸ்தை – கன்னட நாவல், யு. ஆர். அனந்தமூர்த்தி, காலச்சுவடு பதிப்பகம், பக்கம் 207, விலை 150ரூ. கன்னட இலக்கிய உலகில் மரியாதைக்குரிய ஒரு இலக்கியவாதி, யு. ஆர். அனந்த மூர்த்தி. ஞானபீடம் உள்ளிட்ட, பல பெரிய இலக்கிய அமைப்புகளிடமிருந்து விருதுகளும் பரிசுகளும் பெற்றவர். இவருடைய சமஸ்கர, பாரதிபுர என்ற இரண்டு புதினங்களும், இந்திய மற்றும் சர்வதேச மொழிகளில் மாற்றம் பெற்றுள்ளன. இவருடைய ‘அவஸ்தை’ என்ற நாவலை நஞ்சுண்டன் மொழி பெயர்ப்பில் காலச்சுவடு கிளாசிக் நாவல் வரிசை வெளியீடாக வந்துள்ளது. இதற்கு முன்னரே, வேறு ஒரு […]

Read more
1 10 11 12