புரட்சியாளன்

புரட்சியாளன், ஆல்பர்ட் காம்யூ, ப்ரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா, காலச்சுவடு பதிப்பகம், விலை 475ரூ. ஆல்பர்ட் காம்யூவின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. நாம் வாழும் காலத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் இன்று வரைக்கும் இந்த நூல் உதவிக் கொண்டே வருகிறது. நிச்சயமற்ற உலகில் வாழக்கூடிய அனைத்து சூழலையும் காம்யூ அவரின் வார்த்தைகளில் பிரத்யேகமாக எழுதிச் செல்கிறார். ஒவ்வொரு கட்டுரையும் அடுத்தடுத்த கணத்தில் ஒருமை கூடி நிற்கிறது. மிகவும் கவனம் தேவைப்படுகிற நினைவையும் உணர்வையும் சேர்த்து ஒருங்கிணைந்து படிக்க வேண்டிய கட்டுரைகள். நம் வாழ்க்கையின் சாத்தியமின்மைகளை […]

Read more

விடம்பனம்

விடம்பனம், சீனிவாசன் நடராஜன், காலச்சுவடு பதிப்பகம், பக்.392, விலை ரூ.575. இந்நூலை ‘நாவல் 39‘ என்று கூறி பதிப்பித்திருக்கிறார்கள். ஆனால், ஒரு நாவலுக்குஉரிய எந்தவிதமான இலக்கணமும் இதில் இல்லை. தெளிவான கதை இல்லை; தொடர்ச்சியாகச் செல்லும் சம்பவங்கள் இல்லை; பல கதைகளின், சம்பவங்களின், தகவல்களின் தொகுப்பாக உள்ள இந்நூலில், எதுவுமே முழுமையான கதையாகப் பதிவு செய்யப்படவில்லை. பல காலங்களில், பல இடங்களில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள், பல மனிதர்களின் மனக் குரல்களையே இது எதிரொலிக்கிறது. அதனால், இந்நாவலை வாசிப்போர்க்கு முதலில் பொறுமையும், சகிப்புத் தன்மையும் தேவை. […]

Read more

நகலிசைக் கலைஞன்

நகலிசைக் கலைஞன், ஜான் சுந்தர், காலச்சுவடு பதிப்பகம், விலை 130ரூ. அனுபவக் கட்டுரைகளின் உண்மையும், ஆழமும் எப்போதும் சுவாரஸ்யமானவை. கற்பனையின் எல்லைக் கோட்டைக்கூட தொட்டுவிடாத அழகில் ஜான் சுந்தர் நகலிசைக் கலைஞர்களின் அனுபவங்களை, உடனிருப்பை ரத்தமும் சதையுமாக எழுதியிருக்கிறார். மெய் மறப்பதும், கவலை துறப்பதும் அனேகமாக திரைப் பாடல்களை கேட்கும் போது மட்டுமே நடக்கிறது. நகலிசைக் கலைஞர்களின் வாழ்க்கையின் சில பக்கங்களை துளி மிகையில்லாமல் செங்கல் சூளையின் வரிசை போல் கச்சிதமான அடுக்கில் கட்டுரைகள். இசையைப் புரிந்து கொள்வதும், அனுபவிப்பதும் ஜானின் எழுத்துகளில் தங்கு […]

Read more

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம், காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், தமிழில் அருமை செல்வம், அசதா, காலச்சுவடு பதிப்பகம், பக். 96, விலை 100ரூ. காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் கொலம்பியாவைச் சேர்ந்தவர். இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றவர். இந்நாவல் சந்தியாகோ நாஸார் என்பவனின் கொலையுடன் தொடங்குகிறது. அக் கொலையுடனேயே நிறைவும் பெறுகிறது. இடையில் அவன் கொல்லப்படுவதற்கான காரணத்தை நாவல் விரட்டிச் செல்கிறது. பயார்தோ சான் ரோமான் என்பவரின் புது மனைவி ஆங்கெலா விகாரியோவின் கன்னித்தன்மை இழப்பிற்கு சந்தியாகோ நாஸார்தான் காரணம்; அதனால்தான் அவன் கொல்லப்பட்டான் என்பதாக […]

Read more

அருள் தரும் ராமர் நரசிம்மர் திருத்தலங்கள்

அருள் தரும் ராமர் நரசிம்மர் திருத்தலங்கள், சிவம், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 30ரூ. திருப்புல்லாணி ராமர், மதுராந்தகம் ராமர், கடையம் ராமசாமி கோவில் மற்றும் தமிழகத்தில் காட்சி தந்த நரசிம்மர் கோவில் உள்ளிட்ட 23 கோவில்களின் சிறப்புகள் தொகுக்கப்பட்ட நூல். நன்றி: தினத்தந்தி, 9/11/2016.   —-   தெருவென்று எதனைச் சொல்வீர், தஞ்சாவூர்க் கவிராயர், காலச்சுவடு பதிப்பகம். விலை 180ரூ. மனிதர்களுக்குச் சம்பவங்கள் நேரலாம். அவற்றை நினைவுகூரவும் செய்யலாம், அதனை நூலாசிரியர் இலக்கியமாகப் படைத்து வெற்றி கண்டுள்ளார். நன்றி: தினத்தந்தி, 9/11/2016.

Read more

பாரதியின் பாஞ்சாலி சபதம்

பாரதியின் பாஞ்சாலி சபதம், பதிப்பாசிரியர் பழ. அதியமான், காலச்சுவடு பதிப்பகம், பக். 200, விலை 180ரூ. பதிப்புலகின் புதுமை: 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெளியான நூல் ஒன்றின், 21ம் நூற்றாண்டு பதிப்பு இந்நூல். ஆம்! பாரதியின் பாஞ்சாலி சபதத்தின் மறு பதிப்பு. பதிப்புரை எழுதும் கலையில் ஒரு புதுமையை இந்தப் பதிப்பின் முன்னுரை தெளிவுப்படுத்துகிறது. பாரதியின் பாஞ்சாலி சபதத்தை வியாசரின் பாஞ்சாலி சபதத்துடன் ஒப்பிட்டு மாறுபடும் இடங்களையும், பாரதியின் கவிதை வீரியத்தையும் இப்பதிப்பு வெளிப்படுத்துகிறது. வியாச பாரதத்தில் பாஞ்சாலி சபதம் பகுதி இடம் பெறும் […]

Read more

நான் மலாலா

நான் மலாலா, ஆங்கிலத்தில் மலாலா யூசுப்ஸை, கிறிஸ்டினா லாம்ப், தமிழில் பத்மஜா நாராயணன், காலச்சுவடு பதிப்பகம், பக். 303, விலை 275ரூ. ஒடுக்கப்பட்ட குழந்தைகளின் குரல் ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து, 100 மைல்கள் தூரத்தில் உள்ள, பாகிஸ்தானைச் சேர்ந்த, மலைகள் சூழ்ந்த இயற்கை அழகு கொஞ்சும் ஸ்வாட் பள்ளத்தாக்கில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சிறுமி மலாலா. அவர் கனவெல்லாம் பள்ளிக்கூடத்திற்கு சென்று படிப்பது மட்டும் தான். இயல்பிலேயே பேச்சாற்றல் மிகுந்த மலாலாவிற்கு, அவரது 11 வயதில் வாசித்த ஸ்டீபன் ஹாக்கிங்கின், ‘காலம்: ஒரு […]

Read more

என் உளம் நெற்றி நீ

என் உளம் நெற்றி நீ, ஞனக்கூத்தன், காலச்சுவடு பதிப்பகம், பக். 184, விலை 160ரூ. பயப்பட வைக்கும் கவிதைகளின் தொகுப்பு என் உளம் நெற்றி இன்றைக்கு, 43 வருடங்களுக்கு முன்னால், ‘அன்று வேறு கிழமை’ என்று ஒரு கவிதைத் தொகுப்பு வெளியானது. எழுதியவர் ஞானக்கூத்தன். அந்தப் புத்தகம் ஏறக்குறைய பொன்விழா கொண்டாடவிருக்கும் காலத்தில், இப்போது ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார் கவிஞர். தலைப்பு: ‘என் உளம் நிற்றி நீ’. தலைப்பே வாசகருக்கு ஒரு செய்தியைச் சொல்லி நிற்கிறது. ‘இது ‘நெஞ்சுக்குள் நீ’ பாணி கவிதைகள் […]

Read more

வெண்ணிறக் கோட்டை

வெண்ணிறக் கோட்டை , துருக்கி நாவல், ஓரான் பாமுக், ஆங்கில மூலம் விக்டோரியா ,ஹோல்ப்ரூக், தமிழில் ஜி.குப்புசாமி, காலச்சுவடு பதிப்பகம், பக்.176, விலை ரூ.165. 2006-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற துருக்கிய எழுத்தாளர் ஓரான் பாமுக்கின் தி ஒயிட் கேஸில் நாவலின் தமிழ் வடிவமே வெண்ணிறக்கோட்டை. வெனிஸ் நகரிலிருந்து நேப்பிள்ஸ்க்கு புறப்பட்டுச் செல்லும் கப்பலொன்றை துருக்கிய கடலோடிகள் சிறைப்பிடித்து, அதிலுள்ள பயணிகளை இஸ்தான்புல்லுக்கு அழைத்துச் சென்று அடிமைப்படுத்துகின்றனர். அவ்வடிமைகளில் ஒருவன், மத மாற்றத்துக்கு உடன்படாததால் பல்வேறு இன்னல்களுக்குப் பிறகு அவனைப் போலவே உருவத்தையொத்த ஒருவனிடம் விற்கப்படுகிறான். இவ்விருவரும் […]

Read more

பொன்னகரம்

பொன்னகரம், அரவிந்தன், காலச்சுவடு பதிப்பகம், விலை 230ரூ. மைய நீரோட்டம் எனச் சொல்லப்படும் உலகில் இருப்பவர்கள் நுழையத் தயங்குகிற சாம்பல் உலகத்தில் வெளிச்சத்தைத் தேடுகிற நாவல் இது. கதைக்களம், கதை மாந்தர்கள், அதில் வெளிப்படுத்தக்கூடிய வாழ்வு ஆகியவை நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. ‘பொன்னகரம்’ வெளியில் இருப்பவர்களுக்கு ஒரு சிறிய காலனி. ஆனால் அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு ஊர். அந்த ஊரின் பொதுத்தன்மை சாம்பல் நிறம். அந்தச் சாம்பல் நிற உலகத்தில் யார் யாரெல்லாம் குற்றாவாளிகள், குற்றம் என்றால் என்ன என்பது குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது. […]

Read more
1 2 3 4 5 6 12