நான் மலாலா

நான் மலாலா, மலாலா யூசுஃப்ஸை, தமிழில் பத்மஜா நாராயணன், காலச்சுவடு பதிப்பகம், பக். 303, விலை 275ரூ. பெண்களுக்கு எதிரான தாலிபான்களின் அடக்குமுறைச் சட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு துளிதான் மலாலா. ஆனால் அந்த ஒரு துளி பெரும் காட்டாற்று வெள்ளமாக மாறும் என்று தாலிபான்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். தன் சமூகத்தில் பெண்களின் கல்விக்காக குல்மக்காய் என்ற புனைபெயரில் அவர் எழுதியபோதுதான் அனைவரின் கவனமும் அவர்மேல் விழுந்தது. தாலிபான்களின் கவனம் உட்பட. அதன் விளைவு, 2012 அக்டோபரில் பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பியபோது அவரைக் குறிவைத்து […]

Read more

மதில்கள்

மதில்கள், வைக்கம் முகமது பஷீர், தமிழில் சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம். விடுதலையை விரும்பாத காதல் வைக்கம் முகமது பஷீர் மலையாளத்தில் எழுதி சுகுமாரனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மதில்கள் நாவலை சமீபத்தில் படித்தேன். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. குறுநாவலான மதில்கள் மலையாளத்தில் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. இந்த நாவல், பஷீரின் சொந்த வாழ்க்கையை பிரதிபலிப்பதாக உள்ளது. எழுத்தாளரான அவர், அரசுக்கு எதிராக எழுதும் கருத்தால் சிறையில் அடைக்கப்படுகிறார். அவர் இருக்கும் சிறைக்கு, அடுத்த அறையில் நாராயணி என்ற பெண் கைதி இருக்கிறார். இவர்களுக்கு இடையே அரும்பும் காதல்தான் […]

Read more

கிழவனும் கடலும்

கிழவனும் கடலும், தி ஓல்ட் மேன் அண்டு தி சீ, எர்னெஸ்ட் ஹெமிங்க்வே, தமிழில் எம்.எஸ்., காலச்சுவடு பதிப்பகம். எர்னெஸ்ட் ஹெமிங்க்வே ஆங்கிலத்தில் எழுதிய தி ஓல்ட் மேன் அண்டு தி சீ என்ற நாவலை தமிழில், கிழவனும் கடலும் என்ற பெயரில் எம். எஸ். மொழிபெயர்த்து உள்ளார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. நோபல் பரிசு பெற்ற நாவல், சினிமாவாகவும் வந்துள்ளது. சமீபத்தில் இந்த நாவலை படித்தேன். ஈராக் அதிபர் சதாம் உசேன் சிறைப்பட்டு இருந்தபோது, கடைசி ஆசை என்ன என சிறை […]

Read more

கோபல்ல கிராமம்

கோபல்ல கிராமம், கி.ராஜநாராயணன், காலச்சுவடு பதிப்பகம். நன்றாக தூங்குபவனுக்கு இரு மனைவிகளாம்! மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதிய ‘கோபல்ல கிராமம்’ நூலை சமீபத்தில் படித்தேன். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ‘கோபல்ல கிராமம்’ உண்மை சம்பவமா, நாவலா, வரலாற்று பதிவா என, என்னால் பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு, அனைத்தும் கலந்த கலவையாக உள்ளது. இஸ்லாமிய மன்னர்களுக்கு பயந்த, ஆந்திராவிலிருந்து தமிழகத்தில் குடியேறியோர் பற்றியது அந்த நூல். தமிழகத்தின் ஒரு பகுதியில் குடியேறி, அங்கு விவசாயம் செய்து, வீடுகள் கட்டி வாழ்ந்த, கோபல்ல கிராம மக்களின் […]

Read more

சாமிநாதம்

சாமிநாதம், (உ.வே.சா. முன்னுரைகள்), பதிப்பாசிரியர் ப. சரவணன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 1000ரூ. தமிழ் இலக்கியம் பிழைத்திருப்பதற்குக் காரணமான தனிமனிதர்களில் முக்கியமானவர் உ.வே.சா. எந்த வசதிகளும் இல்லாக் காலத்தில் தன்னுடைய தமிழ் உணர்ச்சியை மட்டுமே உந்து சக்தியாகக் கொண்டு ஊர் ஊராகத் திரிந்து ஓலைச்சுவடிகளைத் திரட்டி வந்து, எழுத்தெண்ணிப் படித்து, பாடம் பிரித்து அவர் பதிப்பித்திருக்காவிட்டால் புறநானூற்றுப் பெருமையும் சிலப்பதிகாரத்தின் சிறப்பும் மணிமேகலையின் வனப்பும், திருவிளையாடற் புராணத்தின் நயமும் அறியாமல் போயிருக்கும் தமிழ்ச்சமூகம். ஓலைச்சுவடியில் என்ன இருக்கிறது என்பதையே படிக்கத் தெரியாமல், படித்தாலும் […]

Read more

கொல்வதெழுதுதல் 90

கொல்வதெழுதுதல் 90, ஆர்.எம். நௌஸாத், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 150ரூ. கிராமத்தின் கதை இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ஆர்.எம்.நௌஸாத் எழுதிய கொல்வதெழுதுதல் 90 என்ற நாவல் கிழக்கிலங்கையின் ஒரு முஸ்லிம் கிராமத்தளத்தில் இயங்குகிறது. அக்காலகட்ட மக்கள் மனநிலை மற்றும் அரசியல் சூழ்நிலை தெளிவாகக் காண்பிக்கிறது. 1990ஆம் ஆண்டு இலங்கை மக்கள் இலங்கை இராணுவம், அதிரடிப்படை, இந்திய அமைதிப்படை, விடுதலைப்புலிகள், உதிரி இயக்கங்கள், ஊர்க்காவல்படை என்று பல வேறு அம்சங்களால் போரியல் அவதிக்குள்ளானார்கள். இந்நாவலில் இடம்பெற்றிருக்கும் சம்பவங்கள் யாவுமே கற்பனையேயல்ல என்றாலும் யாவுமே நிஜமுமே […]

Read more

நான் மலாலா

நான் மலாலா (சுயசரிதை), ஆங்கிலம்-மலாலா, கிறிஸ்டினா லாம்ப், தமிழ்-பத்மஜா நாராயணன், காலச்சுவடு பதிப்பகம், பக். 312, விலை 275ரூ. இன்று உலகம் முழுதும் நேசிக்கப்படும் பெயர் மலாலா. அந்த பெயருக்குரிய 15 வயது சிறுமி, தன் வாழ்வில் அனுபவித்த துயரம் மிகக் கொடுமையானது. முஸ்லிம் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என, பிரசாரம் செய்த ஒரே காரணத்தால், 2012, அக்டோபரில், பள்ளியில் இருந்து மலாலா வீட்டிற்கு திரும்பியபோது, தலிபான்கள் அவரது தலையை குறிவைத்து சுட்டனர். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி, இன்று நோபல் பரிசு பெற்று, […]

Read more

சிவப்புத் தகரக் கூரை

சிவப்புத் தகரக் கூரை, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 272, விலை 225ரூ. நவீன இந்தி இலக்கியத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான ஞானபீடவிருது பெற்ற நிர்மல் வர்மாவின் நாவல் இது.  பருவ வயதில் உள்ள ஒரு சிறுமி எதிர்கொள்ளும் சிக்கல்கள், மனக்குழப்பங்கள், உடல் ரீதியாக எழும் கிளர்ச்சிகள், குதூகலமும், சுற்றியுள்ளன மனிதர்களின் புதிரான நடத்தைகள், ஆசைகள், துயரங்கள், அச்சங்கள் என்று எல்லாமுமே நாவலாக உருப்பெற்றுள்ளன. ஆண் பெண் உறவுகளில் உள்ள சிக்கல்கள் சித்திரிக்கப்படுவதுடன், பெண்களின் வாழ்வு குறித்த பெரும் விவாதத்தை ஒரு சிறுமியின் வாழ்வியல் […]

Read more

சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்

சேரன்மாதேவி, குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும், பழ.அதியமான், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில், விலை 275ரூ. தமிழ்நாட்டு அரசியலை அப்படியே புரட்டிப் போடக் காரணமான ஊர் சேரன்மாதேவி. அந்த ஊரில் இருந்து செயல்பட்டு வந்த குருகுலத்தில் குறிப்பிட்ட நிகழ்வு மட்டும் நடக்காமல் போயிருக்குமானால், தமிழகத்தின் கடந்த முக்கால் நூற்றாண்டு வரலாற்றை கணிப்பதே சிரமமாக இருக்கும். காங்கிரஸ் கட்சியில் இருந்து பெரியார் வெளியேறாமல்கூட இருந்திருக்கலாம். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளே உருவாகி இருக்காது. அப்படிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு பற்றிய […]

Read more

சாதியும் நானும்

சாதியும் நானும், பதிப்பாசிரியர்-பெருமாள் முருகன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 257, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-192-4.html இந்தியாவில் ஜாதியம் என்ற சமூக அவலம் இந்த நவீன காலத்திலும் ஆழ வேரூன்றியுள்ளது. இதனால் மனித சமூகம் சந்தித்து வரும் வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. இது தொடர்பான கட்டுரைகளைத் தொகுத்து வழங்கி, ஜாதியின் கொடூரத்தை இந்த உலகுக்கு மீண்டும் ஒரு முறை உணர்த்தியுள்ளார் பதிப்பாசிரியர். குக்கிராமம், கிராமம், நகரம், மாநகரம் என எந்த ஓர் இடத்தையும் ஜாதிக்கொடுமை விட்டு […]

Read more
1 4 5 6 7 8 12