சேரன்மாதேவி, குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்

சேரன்மாதேவி, குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும், பழ.அதியமான், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில், விலை 275ரூ. அரிய தகவல்களின் தொகுப்பு திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் வ.வே.சு.ஐயரால் நடத்தப்பட்ட குருகுலத்தில் பிராமணர், பிராமணரல்லாத மாணவரிடையே கடைப்பிடிக்கப்பட்ட சாதி ஏற்றத்தாழ்வு 1924 ஆம் ஆண்டு பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் மற்றும் பிற புரவலர்களிடம் நிதி திரட்டி நடத்தப்பட்ட இந்த குருகுலத்தில் சமத்துவத்தைக் கொண்டுவர வரதராஜுலு நாயுடு, பெரியோர் முதலியவர்கள் போராடினர். பத்திரிகைகள், பொதுமேடைகள், காந்தியிடம் புகார் என்று பல்வேறு கட்டங்களில் இந்த பிரச்னை விவாதிக்கப்பட்டது. பெரியார் […]

Read more

பனி

பனி, ஓரான் பாமுக், தமிழில் ஜி. குப்புசாமி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 575, விலை 450ரூ. To buy this Tamil online: https://www.nhm.in/shop/100-00-0002-182-0.html இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஓரான் பாமுக்கின் படைப்புகளில் அரசியலை வெளிப்படையாகப் பேசும் தனித்துவமான நாவல் பனி. துருக்கியின் எல்லைப்புற நகரமான கார்ஸுக்கு ஒரு பனிக்காலத்தில் வந்து சேரும் பத்திரிகையாளன் காவின் அனுபவங்களே இதன் கதை. துருக்கியை மேற்கு நோக்கி நகர்த்த முனையும் மதச்சார்பற்ற நவஅடாதுர்க்கிய அரசுக்கும் மத அடையாளங்களைத் தமது சுயகௌரவத்தின் சின்னங்களாகப் பார்க்கும் பெண்களுக்கும் […]

Read more

கடலோரக் கவிச்சோலை

கடலோரக் கவிச்சோலை, அருள்திரு. ஸ்டீபன் கோமஸ், சமூக சமய ஆய்வுக் கழகம், வலம்புரி நாதம் வெளியீடு, வீரபாண்டியன்பட்டினம், விலை 500ரூ. மீனவர்கள், பரதவர்கள் என சமகாலத்தில் அழைக்கப்படும் மக்கள் வரலாற்று நூல்களாலும் பொது சமூகத்தாலும் வஞ்சிக்கப்பட்டவர்கள். அவர்கள் வரலாற்றில் இழந்த இடத்தை மீட்கும் சொற்பமான முயற்சிகளில் ஒன்றுதான் இந்த நூல். 17ஆம் நூற்றாண்டு முதல் பரதவ சமூகத்தினர் பங்களித்த சந்தப் பாட்டுகள், கவிதைகள், கட்டுரைகளை இரண்டு பாகங்களாக 2000 பக்கங்களுடைய நூலாகத் தொகுத்தளித்திருக்கிறார்கள். தங்களின் வரலாற்றுப் பெருமை, நம்பிக்கைகள், தொழில், சமூகம் குறித்த சித்திரத்தைக் […]

Read more

நாயக்கர் காலக் கலைக்கோட்பாடுகள்

நாயக்கர் காலக் கலைக்கோட்பாடுகள், சா. பாலுசாமி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 336, விலை 375ரூ. நாயக்கர் காலத்தின் கட்டடம், சிற்பம், ஓவியம், இலக்கியம் ஆகியவற்றை ஆராய்ந்து, இவை அனைத்திலும் உள்ள ஒத்த தன்மைகளைக் கண்டறிந்து, அந்த ஒத்த தன்மை எவ்விதம் கலைக்கோட்பாடாக பரிணமிக்கிறது என்பதை ஆராயும் நூல். நாயக்கர் கால வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லும் இந்நூல், நாயக்கர் காலத்துக்கு முன்பு தோன்றிய கட்டட, சிற்ப, ஓவியக் கலைகளைப் பற்றியும், இலக்கியங்களைப் பற்றியும் அறிமுகப்படுத்துகிறது. நாயக்கர் காலக் கலைகளில் காணப்படும் முக்கிய தன்மைகளைக் கண்டறிந்து […]

Read more

தோட்டியின் மகன்

தோட்டியின் மகன், தகழி சிவசங்கரபிள்ளை, தமிழில் சுந்தர ராமசாமி, காலச்சுவடு பதிப்பகம், விலை 130ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-053-5.html சமூகத்தோடு வளர்வதே தனிமனித வளர்ச்சி கேரளத்தின் பிரபல எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளை மலையாளத்தில் எழுதி, எழுத்தாளர் சுந்தர ராமசாமியால், தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட, தோட்டியின் மகன் நாவலை, சமீபத்தில் படித்தேன். காலச்சுவடு பதிப்பகத்தார் இந்நாவலை வெளியிட்டுள்ளனர். மலம் அள்ளும் வேலையைச் செய்யும் தோட்டி, மலம் அள்ளுவதால் சமூகத்தில் ஏற்படும் அவமானம், கடுமையான வேலை செய்தும், குறைந்த கூலியே […]

Read more

மேற்கத்திய ஓவியங்கள்

மேற்கத்திய ஓவியங்கள், பி.ஏ. கிருஷ்ணன், காலச்சுவடு பதிப்பகம், விலை 850ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-231-9.html ஓவிய ரசனை மேற்கத்திய ஓவியங்களைக் குறித்து சிலாகிக்கும் பி.ஏ. கிருஷ்ணனின் இந்தப் புத்தகம் தமிழுக்குப் புதியது. 30,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்கால மனிதர்கள் வரைந்த குகை ஓவியங்களில் தொடங்கி பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய ஆண்டுகள் வரையுள்ள காலகட்டத்தில் உருவான ஓவியங்களைக் குறித்த நூல் இது. இந்தப் புத்தகம் எடுத்தாளும் களம் மிகப்பெரியது. வெறும் அழகுணர்ச்சி சார்நத் கலைவடிவமாக ஓவியங்களை அணுகவில்லை அவர். […]

Read more

அவரவர் கை மணல்

அவரவர் கை மணல், ஆனந்த்-தேவதச்சன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 60ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-279-2.html ஒரு வாய் நீரும் ஒரு தருணமும் இன்றைக்குத் தமிழில் பல கவிதைத் தொகுப்புகள் வெளியாகின்றன. சில தொகுப்புகளுக்கு மட்டும் தனித்துவமான மொழியும் பொருளும் இருக்கின்றன. அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த சில தொகுப்புகள் மட்டுமே புதிய போக்குகளை உருவாக்குகின்றன. அந்த விதத்தில் 1981ல் வெளிவந்த அவரவர் கை மணல் முக்கியமானது. 80களின் தொடக்கத்தில் எழுத வந்த தேவதச்சன், ஆனந்த் ஆகியோரின் கவிதைகள் அடங்கிய […]

Read more

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும், டாக்டர் சங்கரசரவணன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 195ரூ. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் முதலான பரீட்சைகள் எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் எழுதப்பட்டுள்ள நூல் இது. ஆயினும், இந்தியாவுக்குள் வெள்ளையர்கள் எப்படி நுழைந்தார்கள், ஆட்சியைப் எப்படி கைப்பற்றி, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் விவரங்கள் என்ன இதுபற்றி எல்லாம் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் விளக்கமாகவும், விறுவிறுப்பாகவும் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. ஏறத்தாழ 200 ஆண்டுகள், இந்தியாவை வெள்ளையர்கள் ஆண்டனர். அந்தக் காலக்கட்டத்தில் எத்தனையோ வரலாற்று […]

Read more

பாரதநாடு பாருக்கெல்லாம் திலகம்

பாரதநாடு பாருக்கெல்லாம் திலகம், ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பிரசுரம், சென்னை, விலை 140ரூ. நம் பாரத நாட்டின் அருமை, பெருமைகளைப் பற்றி, வி.ஹெச்.பி. நடத்தி வந்த ஹிந்து மித்திரன் இதழில் 2005ல் இந்நூலாசிரியர் எழுதிரய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இதில் உள்ள விஷயங்கள் அடடா… இத்தனை சிறப்புகளைக் கொண்டதா நம் நாடு என்று இன்றைய தலைமுறையினரை வியப்பில் ஆழ்த்தக்கூடியவை. நமது பழைய சாஸ்திரங்களில் இல்லாத விஷயங்களே இல்லை. ஆனால் நம்மை ஆண்ட அன்னியர்கள் அவற்றையெல்லாம் அழித்துவிட்டார்கள் என்று ஆதங்கப்படும் ஆசிரியர், அவற்றை உரிய […]

Read more

வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள்

வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள், கிருபாகர், சேனானி, காலச்சுவடு பதிப்பகம், பக். 215, விலை 175ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-195-7.html கடந்த 1997ல், பிரபல வனவிலங்கு புகைப்படக்காரர்களான கிருபாகர், சேனானி இருவரும், வீரப்பனால் கடத்தப்பட்டனர். மொத்தம் 14 நாட்கள் அவர்களை தனது பிடியில் வீரப்பன் வைத்திருந்தான். அப்போது நடந்த சம்பவங்கள், சுவையான விறுவிறுப்பான மொழிநடையில் தொகுக்கப்பட்டுள்ளன. வெள்ளைக்காரர்களை கடத்த வீரப்பன் திட்டமிட்டது, அதை கிருபாகரும் சேனானியும் கெடுத்தது, வீரப்பனின் உடன் இருந்த மாதேஷ், அன்புராஜ், சேத்துக்குளி கோவிந்தன் உள்ளிட்டோர், […]

Read more
1 5 6 7 8 9 12