இறகென இருத்தல்

இறகென இருத்தல், செ.கார்த்திகா, பொள்ளாச்சி இலக்கிய வட்டம், விலை 60ரூ. மெல்லிறகாய் வருடி, கனமான பதிவுகளை மனதுக்குள் எழுதும் யதார்த்த கவிதைகள். குழந்தை முதல் தெய்வம் வரை, பாசம் முதல் நேசம் வரை அத்தனையும் இங்கே அவரவர் கனவுக்கும் கற்பனைக்கும் ஏற்ற நடையிலேயே நகர்வது நளினம். நன்றி: குமுதம், 5/6/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தித்திக்கும் நினைவுகள்

தித்திக்கும் நினைவுகள், கலைமாமணி ஏ.ஆர்.எஸ்., ஏ.ஆர். சீனிவாசன், விலை 200ரூ. நாடக மேடையில் நாயகனாக இருந்து சினிமாவில் பிரவேசித்து அங்கும் முத்திரை பதித்தவர் ஏ.ஆர்.எஸ். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சிவாஜி, நாகேஷ், சிவக்குமார் என்று திரையில் மின்னிய நட்சத்திரங்களின் திரைக்குப் பின்னாலான முகங்களை நேரில் கண்டிருக்கும் அவர், அவர்களுடனான அனுபவங்களை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார். அத்தனைக்கும் ஆதாரமாய்ப் புகைப்படங்களையும் தந்திருப்பது சிறப்பு. நாற்பதைக் கடந்தவர்களுக்கு அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்திடும். நன்றி: குமுதம், 5/6/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

ஸ்ரீபாஷ்யம்

ஸ்ரீபாஷ்யம், (ஸ்ரீ ராமானுஜரின் பிரும்ம சூத்திர விளக்கவுரை), ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், விலை 600ரூ. பகவான் வேதவியாசர் அருளிய பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீமத் ராமானுஜர் எழுதிய பாஷ்யத்துக்கான விளக்கநூல். பிரும்மத்தில் இருந்தே உலகம் தோன்றியது என்பது முதல் அந்த பிரம்மம் யார்? பிரும்மத்தை அறிவதற்கும் அடைவதற்கும் வேதங்களும் வேதாந்தங்களும் சொல்லும் நெறிமுறைகள் என்னென்ன என்பதையெல்லாம் சாமான்யர்களுக்கும் புரியும் வகையில் எளிமையாகச் சொல்லியிருப்பது சிறப்பு. பகவானைக் காண பக்தர்களுக்குப் பாதை காட்டும் நூல். நன்றி: குமுதம், 5/6/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

வாட் இஸ் பரதநாட்டியம்?

வாட் இஸ் பரதநாட்டியம்?(ஆங்கிலம்), வித்யா பவானி சுரேஷ், ஸ்கந்தா பப்பிளகேஷன்ஸ், விலை 1330ரூ. தலைப்பு பரதநாட்டியம் கற்றுத்தரும் புத்தகம்போல் இருந்தாலும், பரத நாட்டியக் கலைஞரும் இசை ஆராய்ச்சியாளருமான வித்யா பவானி சுரேஷ், பரதக் கலையோடு வாழ்க்கையில் முன்னேறும் கலையையும் கற்றுத்தரும் வகையில் எழுதியிருக்கும் நூல் இது. “ஒருநாள் நான் லிஃப்டில் சென்றபோது, அவசர அவசரமாக தலைமுடியில் இருந்து ஈரம் சொட்ட ஓடிவந்தார் ஒரு பெண்மணி. வலது கையால் தலையைக் கோதி காய வைத்தபடியே, அரக்கப்பரக்க அலுவலகத்துக்குச் சென்ற அவரைப் பார்த்த எனக்கு சங்கடமாக இருந்தது. […]

Read more

மாற்றுத்திறனாளிகள் வாழ்வியல் சூழல்

மாற்றுத்திறனாளிகள் வாழ்வியல் சூழல், கோ.மாலினி சீதா, வாசகன் பதிப்பகம், விலை 100ரூ. உடலாலும் மனதாலும் சவால் விடப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் நிலை புராதன காலம் முதல் இன்றுவரை எப்படியெல்லாம் உயர்வு பெற்றிருக்கிறது என்பதைச் சொல்லும் ஆய்வு ரீதியான நூல். உடல் சோதனையையும், மன வேதனையும் கடந்து சாதனை படைத்தவர்கள் பற்றிப் படிக்கும்போது மனதுக்குள் இனம்புரியாத நெகிழ்வு ஏற்படுவது நிஜம். நன்றி: குமுதம், 13/3/2019. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

குறள் இனிது! கதை இனிது!

குறள் இனிது! கதை இனிது!. இரா.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்., குமரன் பதிப்பகம், விலை 200ரூ. தேர்ந்தெடுத்த நூற்றியெட்டு குறட்பாக்களுக்கு பொருத்தமான குட்டிக் குட்டி நன்னெறிக் கதைகள். ராமாயணம், மகாபாரதம் வரலாற்று நிகழ்வுகள் என்று பலவற்றோடும் தொடர்புடைய கதைகளைச் சொல்லியிருப்பது திருக்குறளை ஒரு புதிய கோணத்தில் அழகுபடுத்தியிருப்பதோடு, படிப்போரின் ஆர்வத்தையும் தூண்டுகிறது. குட்டீஸை நிச்சயம் ஈர்க்கும். நன்றி: குமுதம், 13/3/2019.   இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மாமியார் என்னும் சிற்பி

மாமியார் என்னும் சிற்பி, முனைவர் ப. கலைவாணி, அபிசான் பதிப்பகம், விலை 60ரூ. உலகம் முழுக்க, மாமியார் மருமகள் பிரச்னை இல்லாத குடும்பமே இல்லை என்று சொல்லலாம். அதற்குக் காரணம், புகுந்த வீட்டுப் பழக்கங்களை பழக்க மாமியார் செய்யும் முயற்சிகள் மருமகளால் கடுமையாகப் பார்க்கப்படுவதும், பிறந்த வீட்டுப் பழக்கங்களை மறக்க முடியாமல் தொடர நினைக்கும் மருமகளின் செயல்கள் மாமியாரால் அந்நியமாக நோக்கப்படுவதும்தான். இந்த நிலைமாறி, தன்னைச் செதுக்கும் தலைமைச் சிற்பியே மாமியார் என்பதை உணர்ந்து ஒவ்வொரு மருமகளும் சிலையாக மிளிர்ந்திடவும், உறவுகள் சிதையாமல் இருக்கவும் […]

Read more

பாரதியார் பதில்கள் நூறு

பாரதியார் பதில்கள் நூறு, ஓளவை அருள், ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம். பாரதியாரின் வாழ்க்கை, வரலாறு முதல் அவரது கவித் திறன், இலக்கிய வல்லமை, தேசப்பற்று, பாரதியாரைப் பற்றி பல்வேறு அறிஞர்களின் கருத்து என்று மகாகவியைப் பற்றிய அத்தனை விஷயங்களும் எளிமையான வினா, விடை பாணியில் மாணவர்களுக்குச் சொல்லித் தருவதுபோல் தொகுக்கப்பட்டுள்ளது. புரட்சிக் கவியின் மொத்தப் படைப்புகளையும் புரட்டிய திருப்தி கிடைக்கிறது. நன்றி: குமுதம், 13/3/2019. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

கண்ணதாசன் என்னும் கடல்

கண்ணதாசன் என்னும் கடல், ஆண்டாள் பிரியதர்ஷினி, ழகரம் வெளியீடு, விலை 110ரூ. கடல் வியப்பானது… பல அதிசயங்களை உள்ளடக்கியது. அந்தக் கடலைப்போலவே கவியரசனின் பாடல்களும் அர்த்தம் பொதிந்த ஆழமானவை, விளக்க விளக்க விரியும் அகலமானவை, தத்துவ முத்துகளை உள்ளடக்கி, வார்த்தை வண்ணங்களை வாரியிறைத்து மாயாஜாலம்போல் மலைக்கச் செய்பவை. கடல் பயணம்போல கண்ணதாசனின் பாடல்களை அனுபவித்து ரசித்து மகிழ, கைப்பிடித்து அழைத்துச் செல்லும் கருத்துப் பயணம். நன்றி: குமுதம், 16/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

ஜீவா நாராண.துரைக்கண்ணன் வாழ்வும் பணியும்

ஜீவா நாராண.துரைக்கண்ணன் வாழ்வும் பணியும், முகம் மாமாணி, முல்லை பதிப்பகம், விலை 90ரூ. பத்திரிகை உலகின் பிதாமகராக, இலக்கியத் துறையின் முன்னோடியாகத் திகழ்ந்த, ஜீவா நாராண.துரைக்கண்ணன் அவர்களை நேரில் சந்தித்து, 1986 முதல் 1988 வரை எழுதப்பட்ட சுயசரிதையின் தொகுப்பு. பாரதியார், சுப்ரமண்ய சிவா, காமராஜர், ராஜாஜி என்று தான் சந்தித்த பல பிரபலங்கள் குறித்து அவர் சொல்லியிருப்பவை சுவாரஸ்யமான விஷயங்கள். நன்றி: குமுதம், 16/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more
1 2 3 4 5 57