அண்ணா அருமை அண்ணா

அண்ணா அருமை அண்ணா, ஜி. விசுவநாதன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 90ரூ. பள்ளிக்கூட மாணவர் பருவத்தில் இருந்தே அறிஞர் அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, கல்லூரி படிப்பின்போது அவரோடு அடிக்கடி அளவளாவும் வாய்ப்பைப் பெற்று 26 வயதிலேயே அண்ணாவால் பாராளுமன்ற உறுப்பினராக அனுப்பப்பட்டு, தொடர்ந்து சட்டசபை உறுப்பினர், அமைச்சர் என்று அரசியலில் நிறைய முத்திரைகளை பதிப்பித்தவர் வி.ஐ.டி.பல்கலைக்கழக நிறுவனர் வேந்தர் ஜி. விஸ்வநாதன். அண்ணாவை தொடர்ந்து கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று 4 முதல் அமைச்சர்களுடன் அரசியல் பணியாற்றிய ஜி. விஸ்வநாதன், அண்ணா பற்றி முழுமையாக […]

Read more

நேரு குடும்ப வரலாறு

நேரு குடும்ப வரலாறு, முஹம்மத் யூனுஸ், விகடன் பிரசுரம், விலை 210ரூ. பொது வாழ்க்கையில், குறிப்பாக அரசியலில் மனிதர்கள் எப்படி சந்தர்ப்பவாதிகளாகி, சுயநலம் பேணி, நாட்டையும் மக்களையும் மறந்து, மாறி விடுகின்றனர் என்றும், உண்மை நண்பர்கள், பகைவர்கள் எப்படி செயல்பட்டனர் என்றும் ஒரு 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் பல முக்கிய முடிவுகள் எப்படி விளைந்தன என்றும் சுவைபட கூறுகிறது இந்த நூல். நான்கு பகுதிகளாக இந்நூல் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக காந்தீய கொள்கைகளை, சுதந்திரப்போராட்டம் – அதற்காக ஏற்பட்ட இன்னல்களை, இடர்களை தெளிவாக்குகிறது. […]

Read more

தமிழ்வாணனின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள்

தமிழ்வாணனின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள், தமிழ்வாணன், லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், விலை 250ரூ. தன்னம்பிக்கையும், மன உறுதியும் இல்லாத காரணத்தினால்தான் பலருடைய பொன்னான காலம் வீணாகி அவர்கள் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. தன்னம்பிக்கையும், துணிவும் கொண்டு செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதை வலியுறுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு நூல். ஒருவரது திறமையை வளர்க்க ஒரு ஆசிரியரே, வழிகாட்டியோ நிச்சயம் தேவை. அந்த ஆசிரியர் ஒரு புத்தகமாகவோ, மனிதனாகவோ ஏன் நமது மனதாகக்கூட இருக்கலாம். எனவே, திறமை வளர்க்கும் வழிகளை எல்லாவற்றிலும் தேடுங்கள் என 62 […]

Read more

சிறகுகள் தரும் சின்னத்திரைக்கலை

சிறகுகள் தரும் சின்னத்திரைக்கலை, மீனாட்சி புத்தக நிலையம், விலை 300ரூ. சின்னத்திரை கலையின் ஒவ்வொரு பகுதியும் தனி நூலாக வெளியிடும் அளவிற்கு விரிவானவை என்றாலும் சின்னத்திரையின் தோற்றம், அதன் கருவிகளின் இயக்கம், கலை நுட்பங்களில் விளக்கம், காட்சி ஊடகப் படைப்பாக்கத்தின் நுணுக்கம், தொழில் நுட்பங்களின் மாற்றம் என அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியது இந்நூல். தொலைக்காட்சி பற்றி நம் முன்னோர்கள் கற்பனை செய்ததிலிருந்து இன்று வரையிலும் வரலாற்றுப் பாதையின் முக்கிய மைல்கற்கள் சுவையுடன் விளக்கப்பட்டிருக்கிறது. சின்னத்திரை பற்றிய பல்வேறு தொழில்நுட்பச் சொற்களை இயன்றவரை தமிழில் படைத்திருப்பதும், […]

Read more

நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டைத் திரைக்கலைஞர்கள்

நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டைத் திரைக்கலைஞர்கள், பி.வெங்கட்ராமன், மணிவாசகர் பதிப்பகம், விலை 50ரூ. நடிக மன்னன் பி.யூ. சின்னப்பா, திரைப்பட டைரக்டர் ப. நீலகண்டன், கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள், புகழின் உச்சத்தைத் தொட்டவர்கள். அவர்களின் நூற்றாண்டு விழா ஒரே நேரத்தில் கொண்டாடப்படுகிறது. எனவே மூவரின் சிறப்பை விவரிக்கும் இந்த நூலை எழுதியுள்ளார் பி. வெங்கட்ராமன். இவரும் புதுக்கோட்டைக்காரரே! இன்னும் நிறைய தகவல்களுடனும், படங்களுடனும் இதை பெரிய புத்தகமாக வெளியிடலாமே! நன்றி: தினத்தந்தி, 6/1/2016.   —- சிவரகசியம், கீர்த்தி, சங்கர் பதிப்பகம், […]

Read more

பெண்களும் நலவாழ்வும்

பெண்களும் நலவாழ்வும், நா. மோகன்தாஸ், இமாலயா பதிப்பகம், விலை 100ரூ. மனிதனைக் கருக்கொண்டு உருவாக்கும் பெண் மக்கள் நோயின்றி வாழ்ந்தால்தான், நல்ல மக்கள் செல்வத்தை உலகிற்குத் தர இயலும். மனித இனத்தின் ஆற்றல் வாய்ந்த பெண் மக்களை மனதில் கொண்டு பெண்ணின் உடல்கூறு அமைப்புகளை விளக்கி அவர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களைக் குறித்தும், அவை வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பெண்கள் மிக எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் மருத்துவர் நா. மோகன்தாஸ் எழுதியுள்ள இந்நூல் இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒன்றாகும். நன்றி: தினத்தந்தி, 6/1/2016.   […]

Read more

நாட்டை உருவாக்கிய மனிதர் ஹோ-சி-மின்

நாட்டை உ ருவாக்கிய மனிதர் ஹோ-சி-மின், தமிழில் நா. தர்மராஜன், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், விலை 75ரூ. பிரெஞ்சு அடிமைத்தளத்தின் நெருப்பு ஜுவாலை வியட்நாமிய தொழிலாளர் வர்க்கத்தை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சமயத்தில் விதைக்குள்ளிருந்து மண்ணை முட்டியெழும் முளைபோல எழுந்தவர் மாமனிதர் ஹோ-சி-மின். சிறைக்குள் தள்ளப்பட்போதிலும்,“பிடிவாதமும் விடாமுயற்சியும் என்னுடன் பிறந்தவை. நான் ஓர் அங்குலம்கூடப் பின்வாங்கமாட்டேன்…” என்று உறுதியுடன் சூளுரைத்தார். வியட்நாம் சுதந்திரத்துக்காக போராடி வெற்றி கண்டவர். தம் எழுத்தாற்றலாலும், கவியாற்றலாலும் பாமரர் நெஞ்சுக்குள்ளும் பச்சைக் குத்தியவராவார். ஒரு சாதாரண மனிதரால் எப்படி இத்தகைய […]

Read more

பத்துப்பாட்டு பொருளடைவு

பத்துப்பாட்டு பொருளடைவு, ச.பொ.சீனிவாசன், சேகர் பதிப்பகம், விலை 350ரூ. தமிழின் உயிர்நிலை இலக்கியங்களாக திகழ்வன சங்க இலக்கியங்கள். தமிர் மொழிக்கு செம்மொழி தகுதியையும், நிலைபேற்றையும் பெற்றுத்தந்த பெருமை, சங்க இலக்கியங்களுக்கு உண்டு. சங்க இலக்கியங்களை பொதுவான ஆய்வுக் கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்த அதிகமான நூல்கள் வெளிவந்துள்ளன. அவை போதுமானதாக இல்லை. தவிர, சொல்லடைவுகள், சொல், பொருள், வருமிடம் இலக்கணக் குறிப்பு இவற்றோடு நின்றுவிடுகின்றன. இத்தகைய தரவுகளின் தேவையை மனதில் கொண்டு எழுதப்பட்டுள்ள நூல்தான் “பத்துப்பாட்டு – பொருளடைவு” என்னும் ஆய்வு நூல். நன்றி: தினத்தந்தி, […]

Read more

திருக்கயிலைக்கு ஒரு மறக்கவியலாப் பயணம்

திருக்கயிலைக்கு ஒரு மறக்கவியலாப் பயணம், மணிமேகலைப் பிரசுரம், விலை 75ரூ. திருக்கயிலையின் புனிதப் பயணத்தை விவரிக்கும் நூலிது. கயிலைக் காட்சி மயிலைக் காட்சி போல மனத்திற்கு நிறைவு தந்திருப்பதை இந்நூலில் காணலாம். வெறும் பயண விளக்கம் தரும் வழிகாட்டி நூலாக இல்லாமல் வாழ்விற்கு அருள் வழிகாட்டியாய் இப்புத்தகத்தை செம்மைப்படுத்தியுள்ளார் முனைவர் வாசுகி கண்ணப்பன். அவர் வேதம், திருமுறை, புராணம், வரலாறு எனப் பல்வேறு துணை விளக்கங்களையும் அளித்து, மேற்கொண்டு யாரேனும் திருக்கயிலை யாத்திரை மேற்கொண்டால் அவர்களுக்கு உதவும்வகையில், முகவரிகள், ஆலாசனைகள், எடுத்துச்செல்ல வேண்டிய பொருள்கள், […]

Read more

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம், வீ. இளவழுதி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. தமிழில் உருவான முதல் காப்பியம் ‘சிலப்பதிகாரம்’. ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாரதியாரால் புகழப்பட்ட நூல். இயல், இசை, நாடகம் என்ற இலக்கண எல்லைக்குள் இடம் பெற்ற முத்தமிழ் நூல் எனப் போற்றப்படுகிறது. சிலப்பதிகாரத்தை கதை வடிவில் வீ. இளவழுதி எழுதியுள்ளார். மாணவர்களுக்கு பெரும் பயனளிக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 30/12/2015.   —- கட்டுரைக் கதம்பம், மு. ஸ்ரீனிவாஸன், அருள் பதிப்பகம், விலை 150ரூ. கண்ணன் வாழ்ந்த துவாரகை, சேழர்களின் தலைநகரும், உலகின் […]

Read more
1 106 107 108 109 110 223