நமது நடிப்புக்கலை செல்வங்கள்

நமது நடிப்புக்கலை செல்வங்கள், திருக்குடந்தை பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. சிறந்த டைரக்டரும், பட அதிபருமான முக்தா சீனிவாசன், சினிமா பற்றி புத்தகங்கள் எழுதி வருகிறார். இப்போது நமது நடிப்புக்கலை செல்வங்கள் பாகம் 1 என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முதல் பொற்காலத்தை உருவாக்கிய நடிகர் நடிகைகள் பற்றிய, சுருக்கமான வாழ்க்கை வரலாறுகள் இடம் பெற்றுள்ளன. லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அடைந்த பாகவதரும், என்.எஸ். கிருஷ்ணனும் லண்டனில் இருந்த பிரிவி கவுன்சிலுக்கு (வெள்ளையர் ஆட்சியின்போதுஇதுதான் உச்சநீதிமன்றம்) மெர்சி பெட்டிஷன் […]

Read more

எதிர்க்குரல் எதிர்க்குரலாளர்கள்

எதிர்க்குரல் எதிர்க்குரலாளர்கள், காவ்யா, சென்னை, விலை 350ரூ. ஒடுக்கப்படுவதும், அடக்கப்படுவதும் எல்லை மீறும்போதுதான் எதிர்க்குரலாளர்கள் தோன்றுகிறார்கள். அத்தகைய சமூகப் புரட்சியாளர்களான மகாத்மா காந்தி, அம்பேத்கார், மாசேதுங், நெல்சன் மண்டேலா, பெரியார், லெனின், சேகுவாரா போன்றவர்களின் கருத்துகளில் காணப்படும் ஒற்றுமைப் பண்புகளை இந்த நூல் ஆராய்கிறது. அதோடு அந்தச் சமூகப் புரட்சியாளர்களின் குரலோடு, புதுச்சேரி ஹைக்கூ (துளிப்பா) கவிதைகளின் பாடுபொருள் ஒத்துப்போவதை முனைவர் கு. தேன்மொழி இந்த நூலில் மிக விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 22/4/2015.   —- சங்கத் தொன்மம், கெ. […]

Read more

வா. மு. சேதுராமனின் தமிழ்ப்பணி

வா. மு. சேதுராமனின் தமிழ்ப்பணி, சேதுச்செல்வி பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு, உயர் கல்வி பயின்று, முனைவர் பட்டம் பெற்றவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன். அண்மையில் 80 வயது நிறைந்து, முத்து விழா கொண்டாடியவர். வாழ்நாளில் கணிசமான பகுதியை வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, தமிழின் பெருமையை பரப்பி வருகிறவர். கவிதை, உரைநடை, சொற்பொழிவு என்று பல துறைகளில் தமிழ்ப்பணியாற்றி வருகிற பெருங்கவிக்கோவின் தமிழ்த்தொண்டினை வா.மு. சேதுராமனின் தமிழ்ப்பணி என்ற தலைப்பில் ஆய்வு செய்து, டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் ச. குணா. அந்த […]

Read more

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா, தி. சந்தான கிருஷ்ணன், நிழல் வெளியீடு, பக். 140, விலை 150ரூ. தனித்துவமான வில்லன் நடிப்பாலும், தன்னிகரற்ற நகைச்சுவை நடிப்பாலும், தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களை வென்றவர், டி.எஸ். பாலையா. இந்த நூல், அவரின் திரை வாழ்வை முதலில் இருந்து இறுதிவரை, படிப்பவர் கண் முன், படமாக விரிகிறது. கடந்த, 1941ம் ஆண்டிலிருந்து, 1971ம் ஆண்டு வரை, அவர் நடித்த அத்தனை திரைப்படங்களின் ஸ்டில்களுடன், சிலவரி கதை சுருக்கம், படத்தில் பாலையாவின் பங்கு என, முழுமையான தகவல்கள் தரப்பட்டுள்ளதில், […]

Read more

சென்று வா உறவே சென்று வா

சென்று வா உறவே சென்று வா, கவிஞர் தியாரூ, ஜேபிரூபன் பப்ளிகேஷன்ஸ், பக். 122, விலை 100ரூ. இரண்டே இரண்டு பாத்திரங்கள். தமிழமுதன் மற்றும் வதனா. தமிழமுதன் வதனாவைக் காதலிக்கிறான். காதல் புலம்பல்களாக மட்டும் இல்லாம் சமூக சிந்தனைகளும் அந்த காதல் வெளிப்பாடுகள் ஊடே விரவிக்கிடப்பதுதான் இந்த நூலின் தனிச்சிறப்பு. பிளாட்பாரவாசிகளின் பிள்ளைகளைப் பார்த்தால், நாட்டின் எதிர்காலம் பயங்கரமாக தெரிகிறது. பாவம். ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாடாவது, அவர்களுக்கு ஒழுங்காகக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் பட்டினத்தில் சிற்றுண்டிச் சாலைகளுக்கும், தரமிக்க உணவு […]

Read more

மறவர் சீமை ஒரு பாதிரியாரின் பார்வையில்

மறவர் சீமை ஒரு பாதிரியாரின் பார்வையில், தமிழில் மு.பாலகிருஷ்ணன், எஸ்.ஆர்.விவேகானந்தம், அகநி வெளியீடு, பக். 192, விலை 150ரூ. மருது பாண்டியர் குறித்து, ரெவரன்ட் பாதர் பாச்சி எழுதியுள்ள, மருதுபாண்டியன் தி பேட்புல் எய்ட்டீன்த் செஞ்சுரி எனும் இந்த நூல், குறிப்பிடத்தக்கது. 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தமிழகத்தில் சமயப்பணி ஆற்றிய, கத்தோலிக்க பிரெஞ்சுப் பாதிரியாரான பாச்சி, ராமநாதபுரம் மற்றம் சிவகங்கை ஆட்சியாளர்களிடம் பழகியுள்ளார். அரசு நடவடிக்கைகள், ஆங்கிலேயர்களின் அதிகார குறுக்கீடுகள், பாளையக்காரர்களின் கிளர்ச்சிகள் என பலவற்றை, தன் குறிப்பேடுகளில் பதிவு செய்துள்ளார். குறிப்பாக, மருது […]

Read more

கண்ணதாசனின் வனவாசம்

கண்ணதாசனின் வனவாசம், கண்ணதாசன் ஆடியோஸ், சென்னை, விலை 120ரூ. கவிஞர் கண்ணதாசன் அவருடைய சுயசரிதையை வனவாசம் என்ற பெயரில் எழுதினார். அந்த நூல் தமிழகத்தில் பெரிய பரபரப்பை உண்டாக்கியது. காரணம், தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் எதையும் மறைக்காமல் உள்ளது உள்ளபடி எழுதியதுதான். இப்போது அதை கண்ணதாசன் ஆடியோஸ் ஒலிவடிவில் டிவிடி-யாக வெளியிட்டுள்ளது. அதாவது கண்ணதாசன் எழுதியதை, அவருடைய மகன்களில் ஒருவரான அண்ணாதுரை கண்ணதாசன், கம்பீர குரலில் ஏற்ற இறக்கத்துடன் சங்கீதக் கச்சேரியைக் கேட்டு ரசிக்கும் உணர்வு ஏற்படுகிறது. முன்பு படித்து ரசித்தவர்கள், இப்போது […]

Read more

திரவ்பதி

திரவ்பதி, லட்சுமி பிரசாத், தமிழில் இளம்பாரதி, சாகித்ய அகாதெமி,  சென்னை, விலை 200ரூ. இந்திய மொழிகளின் ஆதார நாவல் இலக்கியமான மகாபாரதம், மீள்பார்வையாக இங்கு பெண்ணிய நோக்கில் விவரிக்கப்பட்டிருக்கிறது. நமக்கு ஏற்கனவே அறிமுகமான மகாபாரத கதைமாந்தர்கள், புதிய கோணத்தில் விமர்சிக்கப்படுகிறார்கள். ஒரு பெண் மையமாக இருந்து, மகாபாரத கதையை இயக்கி நடத்துவதாக அமைந்த இலக்கியப்போக்கு எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்கவல்லது. 2010ம் ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற இந்தத் தெலுங்கு நாவலில், லட்சுமி பிரசாத் கையாண்டிருக்கும் கதை சொல்லும் முறையும், வர்ணனைகளின் துணைக்களமும் வாசகர்களை மிகவும் […]

Read more

இஸ்லாம் கூறும் திருமண வாழ்வு

இஸ்லாம் கூறும் திருமண வாழ்வு, முவப்பிக்கா பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 45ரூ. சமச்சீர் பெற்ற வாழ்வு திருமணத்தில்தான் உண்டு என்று இஸ்லாம் எடுத்தியம்புகிறது. திருமணம் செய்யாதவன் என் கொள்கையைச் சார்ந்தவன் அல்லன் என்பது நபி மொழி. அந்த வகையில், இஸ்லாத்தில் திருமணம் ஏன் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது? திருமண உறவில் ஆணுக்கும், பெண்க்கும் எத்தகைய உரிமைகளும், கடமைகளும் உள்ளன? திருமண வாழ்வு வெற்றிகரமாக அமைய என்ன செய்ய வேண்டும்? என்பன போன்ற கேள்விகளுக்கு இரு மணம் கொண்ட திருமண வாழ்வில் என்ற இந்த நூலில் உடன்குடி […]

Read more

ஆளுமைத் திறன் பாதை தெரியுது பார்

ஆளுமைத் திறன் பாதை தெரியுது பார், தந்தி பதிப்பகம் ,சென்னை, விலை 160ரூ. தினத்தந்தியில் மாணவர் ஸ்பெஷல் பகுதியில் பெர்சனாலிட்டியை வளர்த்துக் கொள்வது எப்படி? என்ற தலைப்பில் நெல்லை கவிநேசன் தொடர் கட்டுரை எழுதி வந்தார். இந்தத் தொடர் வாசகர்களிடையே குறிப்பாக மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இப்போது ஆளுமைத்திறன்: பாதை தெரியுது பார் என்ற தலைப்பில் தொகுத்து நூலாக வெளிவந்துள்ளது. இந்தப் புத்தகத்தில் ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி? நல்ல மனப்பாங்கை உருவாக்குவது எப்படி? உணர்வுகளைக் கையாள்வது […]

Read more
1 132 133 134 135 136 223