கே. பாலசந்தர் வாழ்வும் படைப்பும்

கே. பாலசந்தர் வாழ்வும் படைப்பும், தோழமை வெளியீடு, சென்னை, விலை 150ரூ. உலக அளவில் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர் டைரக்டர் பாலசந்தர். 100 படங்களை இயக்கியவர், புரட்சிகரமான கதைகளைத் துணிந்து படமாக்கியவர். ரஜினிகாந்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். கமல்ஹாசனை பட்டை தீட்டியவர். ஒரு படத்தைப்போல இன்னொரு படம் இல்லாதபடி, விதம் விதமாகப் படங்களை எடுத்த திறமைசாலி. பாடல் காட்சிகளை படமாக்குவதில் புதுமையைப் பகுத்தியவர். அண்மையில் காலஞ்சென்ற பாலசந்தரின் நினைவாக இந்நூலை சேவியர் எழுதியுள்ளார். புத்தகம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. ரஜினியை பாலசந்தர் பேட்டி கண்டது […]

Read more

குருவிக்கூடு

குருவிக்கூடு, கோவன் பதிப்பகம், சென்னை, விலை120ரூ. பத்திரிகைகளில் சிறுகதை வெளிவருவது குறைந்துவிட்டது. ஆனால் சிறுகதை படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை குறைந்துவிடவில்லை. அப்படிப்ட்டவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியும், தெவிட்டாத இன்பமும் அளிக்கக்கூடியது பிரபல எழுத்தாளரும், பேராசிரியருமான முகிலை இரா. பாண்டியனின் குருவிக்கூடு சிறுகதைத் தொகுதி. கதைகள் ஒவ்வொன்றும் மனதை வருடுகின்றன. எனினும் பாரம் என்ற சிறுகதை புதிய உச்சத்தைத் தொடுகிறது. ஜான் என்ற மனவளர்ச்சி குன்றிய குழந்தையைப் பற்றிய கதை. பிறருக்கு உதவுவதையே லட்சியமாகக் கொண்ட தங்களுக்கு இக்குழந்தை ஏன் பிறந்தது? தங்களுக்குப் பின் அக்குழந்தையைக் காக்கப்போவது […]

Read more

இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 350ரூ. இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் நிலவி வரும் தவறான புரிதல்களைப் போக்கும் வகையிலும், இஸ்லாம் மார்க்கத்தை பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் எழுத்தாளர் நாகூர் ரூமி எழுதியுள்ள நூல். இஸ்லாம் என்றால் என்ன? திருக்குர்ஆனும், ஹதீதும், இஸ்லாத்தின் தோற்றம், முஸ்லிம்களின் கடமைகளும் நம்பிக்கைகளும் போன்ற தலைப்புகள்ல் இஸ்லாம் குறித்த எதார்த்த நிலையை எளிமையாக தெளிவுபடுத்துகிறார். இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா? திருக்குர்ஆன் அருளப்பட்ட வேதமா? எழுதப்பட்ட புத்தகமா? ஜிஹாத் என்பது […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள், அ.ச. ஞானசம்பந்தன், நிர்மலா மோகன், சாகித்ய அகாதெமி, சென்னை, பக். 128, விலை 30ரூ. பேராசிரியர், எழுத்தாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், சாகித்ய அகாதெமி விருது பெற்றவர் என்று பல பெருமைகளைக் கொண்ட முதுபெரும் தமிழ் அறிஞர் அ.ச. ஞானசம்பந்தனைப் பற்றி, இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் எழுதியுள்ளார் நிர்மலா மோகன். அ.ச.ஞா.வின் வாழ்வும் பணியும் பற்றிய கட்டுரையில் அவர் இலக்கியச் சிற்பியாக செதுக்கப்பட்டு உருமாறி வந்த வளர்ச்சிப்பாதை தொகுக்கப்பட்டுள்ளது. வி.எஸ். ஸ்ரீநிவாச சாஸ்திரி, திரு.வி.க. தெ.பொ.மீ. […]

Read more

அதியமான் முதல் ஆங்கிலேயர் வரை

அதியமான் முதல் ஆங்கிலேயர் வரை, பா. சேதுமாதவன், உலா பதிப்பகம், திருச்சி, பக். 136, விலை 80ரூ. சங்ககால மன்னர்கள் முதல் ஆங்கிலேயர்கள் வரை பலரும் சோழநாட்டைக் கைப்பற்ற முயற்சித்தனர். காரணம் அதன் பெருவளமும் புவியியல் ரீதியாக பெற்றிருந்த இயற்கை அமைப்புமேயாகும். இம்முயற்சியில் பலர் வெற்றியும் கண்டனர். பல மொழிகள், இனங்கள், தேசங்களைச் சேர்ந்தவர்களின் அரசியல் நிரிவாகத்தின் கீழ் சோழநாடு இயங்கி வந்ததால், காலந்தோறும் பல நெருக்கடிகளையும், பன்னாட்டு, கலாச்சார சமூக பொருளாதார மாற்றங்களையும், கலை, இலக்கிய வளர்ச்சியையும் பாதிப்பையும் கண்டது. இச்சரித்திரக் கூறுகளை […]

Read more

இந்தியத் தேர்தல் வரலாறு

இந்தியத் தேர்தல் வரலாறு, ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த் சென்ஸ், சென்னை, பக். 607,விலை 650ரூ. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதலாவது பொதுத்தேர்தல் 1952ம் ஆண்டு இந்தியா முழுவதும் நடைபெற்றது. அப்போது தமிழ்நாடும், ஆந்திராவும் இணைந்து சென்னை மாகாணம் என்ற பெயரில் ஒரே மாநிலமாக இருந்தது. அந்த தேர்தலில் காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கம்யூனிஸ்டு கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஐக்கிய முன்னணி அமைத்து, மந்திரசபையை அமைக்கத் திட்டமிட்டன. சுதந்திரம் அடைந்தபின், முக்கிய மாநிலமான சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழப்பதை பிரதமர் நேரு விரும்பவில்லை. […]

Read more

ஹாலிவுட் பிரபலங்கள்

ஹாலிவுட் பிரபலங்கள், கண்ணம்மா பதிப்பகம், புதுச்சேரி, விலை 120ரூ. சினிமா கண்டுபிடிக்கப்பட்டு 120 ஆண்டுகள் ஆகின்றன. படத் தயாரிப்பில், உலகத்துக்கே முன்னோடியாகத் திகழ்பவர்கள் ஐரோப்பியர்கள். அவர்கள் அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட் என்ற சினிமா நகரை உருவாக்கி, பல ஸ்டுடியோக்களை அமைத்து, படங்களை தயாரித்தனர். ஹாலிவுட் அளித்த நடிகர் – நடிகைகள் உலகப்புகழ் பெற்று விளங்கினர். அவர்களில் சார்லி சாப்ளின், மார்லன் பிராண்டோ, மார்லின் மன்றோ, எலிசபெத் டெய்லர், புரூஸ் லீ, ஜாக்கிசான் உள்பட 30க்கும் மேற்பட்ட நட்சத்திரங்களின் வாழ்க்கை வரலாறுகள் இந்த […]

Read more

அன்புக்கு பஞ்சமில்லை

அன்புக்கு பஞ்சமில்லை, ம. வான்மதி, பாவை மதி வெளியீடு, பக். 144, விலை 120ரூ. சண்டைகள் ஆயிரம் இருந்தாலும், சங்கடங்கள் ஆயிரம் குடைந்தாலும், அனைத்திற்கும் அருமருந்தாக அமைவது அன்புதான் என்பதை, தன் உணர்வுப் பூர்வமான எழுத்தால் உணர வைத்துள்ளார் வான்மதி. எத்தனை நகை அணிந்தாலும், புன்னகைக்கான ஆத்மார்த்தமான ஆர்ப்பையும் ஆசியையும், காமாட்சி என்ற கதாபாத்திரத்தின் ஊடே விவரித்திருக்கிறார். மாமியார் – மருமகள் சண்டையை எப்படி கையாள்வது என்பதை, லதா என்ற தன் தோழியின் கதையை வைத்து உணர்த்தி இருக்கிறார். அதை விவரிக்க அவர் பிரயோகிக்கும் […]

Read more

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால், ஜெகாதா, நக்கீரன், விலை 150ரூ. அண்மையில் நடந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை வென்று, இந்தியாவை மட்டுமல்ல, உலகின் விழிகளையே வியப்பால் விரியச் செய்தவர், அரவிந்த் கெஜ்ரிவால். ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பை அன்னா ஹசாரேயுடன் இணைந்து உருவாக்கியது முதல், மீண்டும் டெல்லி அரியணையில் அமர்ந்தது வரையிலான கெஜ்ரிவாலின் வாழ்க்கையை எழுத்தாளர் ஜெகாதா சுவைபட எழுதியுள்ளார். சாமானியனாக இருந்த சாதனை படைத்த அரவிந்த் கெஜ்ரிவாலின் போராட்ட குணம், துணிச்சல் ஆகியவற்றை பாராட்டும் ஆசிரியர், அவரது ஆரவார […]

Read more

அறவாணரின் படைப்பிலக்கியங்கள்

அறவாணரின் படைப்பிலக்கியங்கள், தமிழ்க்கோட்டம் வெளியீடு, சென்னை, விலை 200ரூ. பேராசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், தலைசிறந்த ஆய்வறிஞர், மொழிபெயர்ப்பாளர் போன்ற பன்முகத் திறமை கொண்டவர் க.ப. அறவாணன். கலையும், இலக்கியமும் வாழ்க்கைக்காக என்னும் கருத்துடைய அறவாணரின் சிறுகதை மற்றும் நாவல்களை ஆராய்ந்து வீர. ஆதிபராசக்தி இந்த நூலைப் படைத்துள்ளார். அறன், அன்பு, ஒழுக்கம், நேர்மை, கடமை தவறாமை போன்றவை அவரது படைப்புகளில் பரிணமிக்கின்றன. படைப்பிலக்கியங்களில் மனித சமுதாயத்தை முன்னேற்றிச் செல்ல வேண்டும் என்பதற்கு அவரது சிறுகதைகளும், நாவல்களும் முன்னோடிகளாக அமைந்துள்ளன என்பதை இலக்கிய தராசில் நூலாசிரியர் […]

Read more
1 131 132 133 134 135 223