சிதைந்த கூடு முதலிய கதைகள்

சிதைந்த கூடு முதலிய கதைகள், ரவிந்தீரநாத் தாகூர், தமிழில் சு. கிருஷ்ணமூர்த்தி, சாகித்ய அகாடமி வெளியீடு, பக். 288, விலை 175ரூ. தாகூர் நல்ல படைப்பாளி. கவிதை, கதை, நாடகம் போன்றவற்றில் முத்திரை பதித்தவர். அவர், இந்த சிறுகதைத் தொகுதியில், பெண்கள் தம் வாழ்க்கைப் போக்குகளில் எதிர்கொள்ளும் கொடுமைகள், துயரங்கள், தன்னிச்சையான மனநிலை, இவற்றோடு லட்சியத்தாகம் முதலானவற்றை வெளிப்படுத்தியுள்ளார். பெண்களை மையப்படுத்திய இச்சிறுகதைகள் யதார்த்தமான தளத்தில் நகர்கின்றன. தாகூரின் கதைகளில் பெண்களுக்கான பரிவும், பாசமும் பல கதைகளில் தென்படும். இந்நூலில் அமைந்துள்ள பத்துக் கதைகளும் […]

Read more

காலம் தோறும் நரசிங்கம்(பண்பாட்டுக் கட்டுரைகள்)

காலம் தோறும் நரசிங்கம்(பண்பாட்டுக் கட்டுரைகள்), ஜடாயு, தடம் பதிப்பகம், பக். 203, விலை 130ரூ. ஒவ்வொரு சிந்தனையுடன், வரலாறு, பண்பாடு, கலாசாரம், மதம், வழிபாடு உள்ளிட்டவற்றை பார்க்கும் போது, அதன் வடிவம் வேறுபடும். அவ்வாறு, ஆசிரியர் ஜடாயு தனது பார்வையில் பண்பாடு சார்ந்த சிந்தனைகளை கட்டுரைகளாக வடித்துள்ளார். பல்வேறு காலங்களில் அவர் எழுதி வெளிவந்த பண்பாட்டுக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, நூல் வடிவில் வெளியாகி இருக்கின்றன. காந்தியின் கிராம ராஜ்ய கனவு முதல், வேதநெறி, அப்துல் கலாம், ஹிந்துத்துவம் என, பலதரப்பட்ட விஷயங்களை எடுத்துரைக்கிறார். ராமன், […]

Read more

தடம் பதித்த தலைவர்கள் நினைவுகளும் நினைவகங்களு

தடம் பதித்த தலைவர்கள் நினைவுகளும் நினைவகங்களும், எஸ்.பி. மதியழகன், சுரா பதிப்பகம், பக். 408, விலை 250ரூ. மகாத்மா காந்தியடிகள் நினைவாக கிண்டியில் உள்ள காந்தி மண்டபம், கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் தொடங்கி, சுதந்திரப் பொன்விழா, குடியரசுப் பொன்விழா நினைவுத் தூண், சட்டசபை வைரவிழா நினைவு வளைவு, மகாமகம் கலையரங்கம் ஈறாகத் தமிழக அரசு அமைந்துள்ள நினைவகங்களை, படங்களுடன் அவற்றின் வரலாற்றையும் சுருக்கி உள்ளடக்கமாக, 71 தலைப்புகளில் தந்துள்ளார் நூலாசிரியர். தமிழக அரசின் சுற்றுல்லாத் துறை செய்ய வேண்டியதை, அதில் பணியாற்றிய நூலாசிரியர், […]

Read more

உபநிஷதச் சிந்தனைகள் (பகுதி 2

உபநிஷதச் சிந்தனைகள் (பகுதி 2), தொகுப்புரை கே.எஸ். சந்திரசேகரன், டாக்டர் வி. மோகன், ஓம் முருகாஸ்ரமம் வெளியீடு, பக். 84, விலை 50ரூ. பிரம்மத்தை அறியும் ஞானத்தை விளக்குவது, நான்கு வேதங்களின், 108 உபநிடதங்கள். அவற்றில், ஈச, கேன, தைத்ரீயம் முதலிய 10 உபநிடதங்கள் முக்கியமானவை. பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில், இந்த நூலின் முதற்பாகம் வந்தது. இரண்டாம் பாகமான இந்த நூலில், ஈசாவஸ்யம், கேனம், மாண்டூக்யம், முண்டகம் ஆகிய உபநிடதங்களின் சிந்தனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அதர்வண வேதத்தைச் சேர்ந்த முண்டக உபநிடதத்தில்தான், ‘சத்யமேவ ஜயதே’ […]

Read more

ஸ்ரீ அரவிந்த் அன்னை

ஸ்ரீ அரவிந்த் அன்னை, எஸ். ஆர் . செந்தில் குமார், சூரியன் பதிப்பகம், பக். 208, விலை 150ரூ. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மிரா அல் – பாஸாவாக பிறந்த பெண் குழந்தை, இந்தியாவில் பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்த அன்னையாக மலர்ந்த விதத்தை கூறுகிறது இந்நூல். கருவிலே திருவுடன் பொலிந்து பிறந்து வளர்ந்த காலத்தில் தாம் தெய்விக குழந்தை என்பதை நிரூபித்தார், மிரா. பின்பு அல்ஜீரியா சென்று தியான் என்பவரிடம் சித்துக்கலை பயின்றார். ஒருமுகப்பட்ட மனதின் வலிமை குறித்து மிராவின் ஆராய்ச்சிகள், சோதனைகள் பவுத்த […]

Read more

நான் பூலான்தேவி

நான் பூலான்தேவி, மரியே தெரஸ்கூன் பால் ராம்பாலி, தமிழில் மு.ந. புகழேந்தி, எதிர் வெளியீடு, பக். 364, விலை 300ரூ. எனக்காக நான் பேச ஒரு முறை கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், எனக்காக பலர் பேசியும், புகைப்படம் எடுத்தும் தங்களின் சுயநலத்துக்காக பலரும் பயன்படுத்திக் கொண்டனர். தாங்க முடியாத துயரங்கள், அவமானங்களை அனுபவித்த அப்பாவி பெண்ணான, என்னை பலரும் திட்டி, பழித்து, கேவலப்படுத்தினர். உதவி கேட்டு நான் கைகளை நீட்டினேன் என்றாலும், எவரும் எனக்கு உதவவில்லை. சமூகம் என்னை ஒரு சிறு பூச்சியாகவும், […]

Read more

மதங்களும் சில விவாதங்களும்

மதங்களும் சில விவாதங்களும், தருமி, எதிர்வெளியீடு, பக். 240, விலை 220ரூ. மதங்கள், நம்பிக்கை அடிப்படையிலானவை. நம்பிக்கை என்பது காரண, காரியத்திற்கு அப்பாற்பட்டது. அதனாலேயே அங்கு கேள்விக்கோ, தர்க்க ரீதியிலான சிந்தனைக்கோ இடமில்லை. விளைவு மதநம்பிக்கை கேள்விக்கு அப்பாற்பட்டதாக போய்விடுகிறது. நூலாசிரியர் பிறப்பால் கிறிஸ்தவர். அந்த மத நம்பிக்கையில் 43 வயது வரை ஆழ்ந்து சென்ற அவர், தர்க்கரீதியாக தன் மனதில் எழுந்த கேள்விகளுக்கு விடை தேடத் துவங்கி, பின் நாத்திகரானார். தன் அனுபவத்தை இந்த நூலில் மிக அழகாக விவரித்திருக்கிறார். அவரது அனுபவத்தோடு […]

Read more

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், எதிர்வெளியீடு, பக். 895, விலை 950ரூ. நூலாசிரியர் பொறியாளர். அதனால், கணிதவியல் முறை சார்ந்த ஆய்வு மரபை முன்னெடுத்து, சங்கப் பிரதிகளை ஆய்வு செய்துள்ளார். இதற்கென அவர் மேற்கொண்ட உழைப்பு மலைக்கச் செய்கிறது என முன்னுரையில் பேராசிரியர் வீ. அரசு கூறுகிறார். சிவராஜப் பிள்ளை, கமில் சுவலபில் ஆகியோரை அடுத்து, தனக்கென தனி முறையியலை உருவாக்கிக் கொண்டு, அதன் அடிப்படையில், தமிழக வரலாற்றை கணியன் பாலன் ஆய்ந்துள்ளதாக, வீ. அரசு தெரிவிக்கிறார். நூலாசிரியர், சங்க இலக்கியத்தை கூர்ந்து […]

Read more

முருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல்

முருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல், கவுதம சித்தார்த்தன், எதிர் வெளியீடு, பக். 44, விலை 40ரூ. குறிஞ்சி நில தெய்வமான முருகன் என்ற பிம்பம், பாரம்பரியமான தமிழ் மரபின் அடையாளம். இந்த பிம்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து, அந்த இடத்தில் விநாயகன் என்ற பிம்பத்தை முன் வைத்துக் கொண்டிருக்கும் சூழலை மிகவும் விரிவான ஆய்வுகளோடு எதிர்கொண்டு, பல்வேறு தரவுகளை முன்வைக்கிறார் நூலாசிரியர். இது வெறும் இந்துத்துவ வாசகக் கண்ணோட்டம் மட்டுமல்ல. இதற்குப் பின்னால் இயங்கும் சர்வதேச அரசியல் என்ன என, கேள்வி எழுப்புகிறார். […]

Read more

இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு

இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு, வெண்டி டோனிகர், தமிழில் க. பூரணச்சந்திரன், எதிர் வெளியீடு, பக். 904, விலை 750ரூ. கடந்த 2014ல், இந்தியாவில் பரபரப்பைக் கிளப்பி, சர்ச்சைக்குள்ளான நூல் இது. நூலாசிரியர் வெண்டி டோனிகர், ஹார்வர்டு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில், சமஸ்கிருதம், இந்திய ஆய்வு ஆகியவற்றில் முனைவர் பட்டங்களைப் பெற்றவர். இந்த நூலில் மொத்தம் 25 இயல்கள் உள்ளன. இந்து மதம் தொடர்பான வழக்கமான நூல்களில் இருந்து, பலவிதங்களில் வேறுபட்டது என்கிறார் நூலாசிரியர். ஒன்று, இது மாற்றுக் கதையாடலை முன் வைக்கிறது. இரண்டாவது வரலாற்றின் […]

Read more
1 138 139 140 141 142 240