இந்தியத் தேர்தல் வரலாறு

இந்தியத் தேர்தல் வரலாறு, ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த் சென்ஸ், பக். 608, விலை 650ரூ. இந்திராவை வாஜ்பாய் ஆதரித்தது ஏன்? உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 125 கோடி மக்கள் தொகையில் 80கோடிக்கும் அதிகமானோர், தேர்தல் முறையில் பங்கேற்பது, இதன் ஆணிவேர். நாட்டை நிர்வகிக்க, மக்கள் பிரதிநிதிகளை நேரடியாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மூலம், பிற பிரதிநிதிகளையும் மறைமுகமாகவும் தேர்வு செய்கின்றனர். மறைமுக தேர்வில், நாட்டின் முதல் குடிமகனான குடியரசு தலைவரும் அடக்கம். சுதந்திரம் பெற்ற பின், இன்றுவரை, எத்தனையோ தேர்தல்களை […]

Read more

சக்கை

சக்கை, கலைச்செல்வி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 236, விலை 180ரூ. ஜல்லி உடைக்கும் கூலித் தொழிலாளிகளின் கண்ணீர்க் கதைதான் இந்த நாவல். நூலாசிரியரின் முதல் நாவல் இது. வறுக்கும் உச்சிவெயிலில் கல்லுடைத்து வாங்கும் சொற்ப கூலியில் கஷ்ட ஜீவனம் நடத்தும் ராசப்பனின் குடும்பம் கதையில் மையமாகிறது. முக்காலும் ஒரு குடும்பத்தைச் சுற்றிச் செல்லும் நாவலில், வருத்தும் வறுமை, இழவு, இழிவு, வஞ்சகம், நோய், மனவலிகள் என்பதாக ஓடுகிறது கதை. அதற்குள்ளும் காதல், கல்யாணம், சடங்கு, சம்பிரதாயம், மான, மரியாதை, வைராக்கியம், வீரியம் […]

Read more

கம்பராமாயணம் (அயோத்தியா காண்டம்)

கம்பராமாயணம் (அயோத்தியா காண்டம்), பெரும்புலவர் கோ. வில்வபதி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 1320, விலை 900ரூ. கம்ப ராமாயணம், ஆறு காண்டங்களை உடையது. இரண்டாவதான, அயோத்தியா காண்டத்தின் பாடல்களுக்கு, தெளிவுரையும், விளக்க உரையும் கொண்டது இந்த நூல். நூலின் முதலில் 12 படலங்களுக்கும் உரிய கதைச் சுருக்கம் உள்ளது. அது படிப்போருக்கு தூண்டுகோலாக அமையும். கெடுத்தொழிற்தனை என துவங்கும் பாடலுக்கு, உரையாசிரியர் தரும் அருமையான விளக்கம், அவரது புலமைத் திறனுக்கு எடுத்துக்காட்டு. (பக். 156 -161). கிள்ளையொடு பூவை அழுத பாடலுக்கு, ஒருசார் அஃறிணையோடு […]

Read more

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், என்.சி. ஞானப்பிரகாசம், கற்பக வித்யா பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. எந்தக் கருத்தையும், வெறும் பேச்சு அறிவுரையாக இல்லாமல், கலையோடு இணைந்து வழங்கினால், அது மக்களை எளிதில் சென்றடையும் என்ற உண்மையறிந்து, சிறு நாடகங்கள் மூலம், சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார், வானொலி அண்ணா என்றழைக்கப்படும் என்.சி. ஞானப்பிரகாசம். எலும்பு முறிவு முதல், பல் பாதுகாப்பு வரை 22 அத்தியாவசிய சுகாதார நலன் குறித்து, சிறு நாடகங்கள் இயற்றியுள்ளார். அத்தனை நாடகங்களும், நகைச்சுவை பின்னணியில் அமைந்திருப்பது, ஆசிரியரின் அனுபவத்தை வெளிக்காட்டி […]

Read more

தமிழில் அறிவியல் புலம்

தமிழில் அறிவியல் புலம், கவிக்கோ ஞானச்செல்வன், மணிவாசகர் பதிப்பகம், பக். 96, விலை 50ரூ. எழுத்தாளர்களும், பேச்சாளர்களும், இதழ்களும் தமிழ் மொழியில் செய்யும் பிழைகளைச் சுட்டிக்காட்டி, இடித்துரைத்துத் தெளிய வைக்கிறார். நூலைப் படிப்போர் தமிழின் சிறப்புகளை உணர்வர். தெ.பொ.மீ., மு.வ., ராதாகிருஷ்ணன் ஆகிய பேராசிரியர்கள், கவிஞர் வாலி ஆகியோர் பற்றிய அவர்தம் கருத்துகள் நூலில் ஒளிர்கனிற்ன. பன்மொழிப் புலமைமையில் மு.வ., அவர்களைத் தெ.பொ.மீ. யோடு நிகராக்க இயலாது என, குறிப்பிட்டுள்ளமை, மனத்தை தொடுகிறது. ஆங்காங்கே நூலாசிரியரின் தன் வரலாற்றுச் செய்திகளையும் காண்கிறோம். பெயர் சுட்டப் […]

Read more

டூக்கன் பறவைகளுக்கு ஏன் அலகு பெரிதாக உள்ளது

டூக்கன் பறவைகளுக்கு ஏன் அலகு பெரிதாக உள்ளது?, அருண் நரசிம்மன், அம்ருதா பதிப்பகம், பக். 240, விலை 210ரூ. நம் தமிழ் சூழலில், அறிவியல் நூல்களின் வரத்து கம்மிதான். இந்த நிலையில் அருண் நரசிம்மன், இந்த நூல், தமிழில் அறிவியலை வாசிக்க விரும்புவோருக்கு ராஜ விருந்து. ஹளேபீடு சிற்பங்களை அருமை பெருமைகளை விளக்கிச் சொல்ல, ஒரு சிற்பபக்கலை வல்லுனரே நம் உடன் வந்தால் எப்படி இருக்கும். அப்படி இருக்கின்றன சென்னை ஐ.ஐ.டி. யில் பணியாற்றும் நூலாசிரியரின் அறிவியல் கட்டுரைகள். இத்தொகுப்பில் 25 கட்டுரைகளில் உயிரியல், […]

Read more

அடையாற்றில் இன்னோர் ஆலமரம்

அடையாற்றில் இன்னோர் ஆலமரம், ராணி மைந்தன், தி கேன்சர் இன்ஸ்டிடியூட், பக். 288, விலை 150ரூ. திசை நோக்கி தொழுவோம்! அடையாற்றின் அடையாளங்கள், ஆலமரம், அன்னி பெசன்ட் அம்மையார், அடையாறுகேன்சர் இன்ஸ்டிடியூட். இவற்றுள் இன்றும் தன்னை உலகெங்கும் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் கேன்சர் இன்ஸ்டிட்யூட் எனும் விருட்சத்திற்கு வித்திட்டவர், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர். அவர் கண்ட கனவுதான், கருமவினை என ஒதுக்கித் தள்ளப்பட்ட புற்றுநோயைக் குணப்படுத்த, தனி மருத்துவமனை வேண்டும் எனும் லட்சியம். அந்த லட்சியம் ஈடேற, உலக நாடுகள் […]

Read more

கனம் கோர்ட்டாரே!

கனம் கோர்ட்டாரே!, கே. சந்துரு, காலச்சுவடு பதிப்பகம், பக். 264, விலை 225ரூ. செப்டம்பர் 2013 முதல், மார்ச் 2014 வரை, தினமலர் தி இந்து நாளிதழ்களில் வெளியான, 71 கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டு உள்ளன. அண்டப்புரட்டன் அந்தவாதி / அகிலாண்டப் / புரட்டன் அப்பா அவன் பிரதிவாதி – சண்டப் / பிரசண்டன் நியாயவாதி – நாளும் / சகஸ்திரப்புளுகன் சாஷிக்காரனெனும் கியாதி (பக். 28) என, வேத நாயகம் பிள்ளையின் பாடலை எடுத்தாண்டுள்ள முதல் கட்டுரையானாலும், நீதிபதிகளுக்கு ஓய்வு தேவை, நீதிமன்றங்களுக்கு […]

Read more

அ-சுரர்களின் அரசியல் (தலித்துகளும் மதுவிலக்கும்)

அ-சுரர்களின் அரசியல் (தலித்துகளும் மதுவிலக்கும்), ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், பக். 40, விலை 30ரூ. கள் வேண்டுமா, வேண்டாமா? தமிழ்நாட்டு மக்கள், மதுவுக்காக 2013ம் ஆண்டில் செலவழித்த தொகையில், ஐந்து லட்சம் வீடுகள் கட்டியிருக்கலாம். 200 மருத்துவக் கல்லுரிகளை உருவாக்கியிருக்கலாம். 10 ஆயிரம் பள்ளிகளைக் கட்டியிருக்கலாம் என்கிறார் நூலாசிரியர் (பக். 5). அதே ஆண்டில் சிகரெட், சுருட்டு, பீடிக்கு செலவு செய்யப்பட்ட தொகை எவ்வளவு, அந்தப் பணத்தில் வேறு சமூக நலப்பணிகளையும் செய்திருக்கலாம் அல்லவா என்ற கேள்வி நம்முடையது. குடி, சிகரெட்டை விட்டு விடுவோம். […]

Read more

தற்காலத் தமிழில் பின்னுருபுகள்

தற்காலத் தமிழில் பின்னுருபுகள், கோ. பழனிராஜன், இராசகுணா பதிப்பகம், பக். 152, விலை 130ரூ. தமிழ் மொழியில் சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என, நான்கு வகைப்படும். அவன் பார்த்தான் என்ற சொற்றொடரில் ஐ என்ற வேற்றுமை உருபினைச் சேர்த்து, அவனைப் பார்த்தான் என, எழுதினால் பொருள் வேறுபடுவதை உணரலாம். பொருளை வேறுபடுத்துவதால், அவற்றிற்கு வேற்றுமை என, பெயரமைந்தது. ஆங்கிலத்தில் சொல்லின் முன்னால் வரும் உருபுகள், தமிழில் சொல்லின் பின்னால் வருவதால், பின்னுருபுகள் எனப்பட்டன. வேற்றுமை உருபு, சொல்லுருபு, பின்னுருபு என்பனவற்றை ஆசிரியர் […]

Read more
1 161 162 163 164 165 240