வண்டிப் பாதை

வண்டிப் பாதை, நாவல் குமாரகேசன், அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், பக். 376, விலை 260ரூ. தீரன் சின்னமலைக்கு 250 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை எடுத்துக் கொண்டு இந்தச் சரித்திர கதையை படைத்திருக்கிறார் குமாரகேசன். கதையின் களமாக வருவது ஒரு மலையடிவார பூமி. கொங்கு சீமையின் தென் கிழக்குப் பகுதியில் இருக்கும் இந்த மண்ணிற்கு வலிமையும், வன்மமும், வலியும் அதிகம். பாண்டிய நாட்டின் வடக்குப்புற எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் கருமலையும் தொடர்ச்சி ரங்க மலையும் கூட கதையில் வருகின்றன. கொங்குப் பகுதி மக்களின் கிராம வாழ்வை, […]

Read more

கம்பனில் சட்டமும் நீதியும்

கம்பனில் சட்டமும் நீதியும், நீதியரசர் வெ. இராம சுப்பிரமணியன், வானதி வெளியீடு, பக். 196, விலை 150ரூ. To buy this Tamil book : https://www.nhm.in/shop/100-00-0002-278-0.html முழுமையான அதிகாரம் ஊழலுக்கு வழிவகுக்கும் நீதி, மனுநீதி போன்ற சொற்கள் எல்லாம், எந்தெந்தப் பாடல்களில் வருகிறதோ, அந்தப் பாடல்களை எல்லாம் நான் தொட்டிருக்கிறேன் என்ற காரணத்தால், இந்த நூல் குறைந்தபட்சம், கம்பனின் மிகப்பெரிய சொற்களங்சியத்தில் ஒரு சொல்லைக் குறித்த ஒரு தொகுப்பாகவாவது பயன்படும் எனும் நூலாசிரியர் சொல்லாக்கமும், விளக்கமும் என தொடங்கி கம்பனில் நீதியும், நீதியின் […]

Read more

திருலோக சீதாராம்

திருலோக சீதாராம், இராஜாமணி, சாகித்ய அகாடமி, பக். 104, விலை 50ரூ. திருலோக சீதாராம் எனும் சித்த சாகரம் திருலோக சீதாரம், எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். அவர் தாய்மொழி, தெலுங்கு, கடுமையான சுய உழைப்பால் கல்வியில் மேம்பாடு உற்றார். ஆங்கிலத்திலும் அபாரமான அறிவு உடையவராக திகழ்ந்தார். கணக்கெழுதுவதிலும் அவர் திறமை அடைந்தார். இதன் மூலமும், தன் வருமானத்தை அவர் பெருக்கிக் கொண்டார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் அவர், வறுமையில் அழுந்தியிருந்தார். ஆனால் தம்முடைய கடைசி. 13 ஆண்டுகள், அவர் வளமுற்று, வாகன […]

Read more

உ.வே.சா.வின் உரைநடை நூல்கள்

உ.வே.சா.வின் உரைநடை நூல்கள், உ.வே.சாமிநாத அய்யர் நூலகம் வெளியீட்டகம். அடமானத்தில் சங்கராபரணம் உ.வே.சாமிநாத அய்யர் நூலகம் வெளியிட்ட, உ.வே.சா.வின் உரைநடை நூல்கள் தொகுப்பை சமீபத்தில் படித்தேன். கடந்த சில ஆண்டுகளாக, இந்நூலின் மறுபதிப்பு வெளியாகவில்லை என்பது கவலைக்குரியது. இன்றைய இளைய சமூகத்துக்கு, இந்த நூல் அரிய பொக்கிஷம். தஞ்சைப் பகுதியில் வாழ்ந்தவர் சங்கராபரணம் நரசய்யா. சங்கராபரணம் ராகத்தில் வல்லமை பெற்றவர். பண நெருக்கடி ஏற்படவே, செல்வந்தராக இருந்த, கபிஸ்தலம் மூப்பனாரிடம் கடன் கேட்கிறார் (தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜி.கே. வாசனின் மூதாதையர்கள்). கடனுக்காக, […]

Read more

ஆங்கிலேயர் இல்லாத இந்தியா

ஆங்கிலேயர் இல்லாத இந்தியா, பிரெஞ்சு மொழியில் பிரயர் லோட்டி, தமிழில் சி.எஸ். வெங்கடேசன், சந்தியா பதிப்பகம். மதுரை மீனாட்சி அம்மனின் நகைகள் எத்தனை பிரான்சு நாட்டைச் சேர்ந்த, பிரயர் லோட்டி என்ற யாத்திரீகர், பிரஞ்சு மொழியில் எழுதி, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள, ஆங்கிலேயர் இல்லாத இந்தியா என்ற பயண நூலை சமீபத்தில் படித்தேன். சி.எஸ். வெங்கடேசன் மொழிபெயர்த்துள்ள இந்நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கடந்த 1899ல் இலங்கை அனுராதபுரத்தில் துவங்கி, காசி வரை பயணம் செய்து, இந்த பயண நூலை, லோட்டி எழுதியுள்ளார். இந்தியா தொடர்பாக, […]

Read more

நாளைய பொழுது உன்னோடு

நாளைய பொழுது உன்னோடு, ஜனகன், கங்கை புத்தக நிலையம், பக். 180, விலை 90ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-348-9.html எழுத்தாளர் சூடாமணி, தன் தாயார் ஸ்ரீரங்கநாயகி பெயரில் நிறுவியுள்ள நாவல் திட்டத்தில் பங்குபெற்று, பரிசு பெற்ற நாவல் இது. ஜனகனின் கை, எழுதி எழுதிப் பழகிய கை. வரிக்கு வரி, ஜனகனின் முத்திரை பளிச்சிடுகிறது. நாவலின் கட்டுமானத்தில் குறுக்கும், நெடுக்குமாக ஆன்மீக இழைகள் ஓடுவது தனிச்சிறப்பு. ஓம், சகஸ்ரநாமம் ஆகியவற்றின் மேன்மையையும், ஆசிரியர் விளக்குகிறார். ஓம் என்ற வார்த்தையைப் […]

Read more

வாலி 100

வாலி 100, நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம், பக். 102, விலை 130ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-211-8.html வாலியின் அறியப்படாத முகம் திரைப்பட பாடல்களை, வெறும் பாடல் என்று கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், தமிழ் திரைப்பாடலின் மொழி, ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பதை அறியும் அரிய பொக்கிஷமாகவே பார்க்க வேண்டும். தமிழ் திரைப்பாடல் வரலாற்றில், கவிஞர் வாலிக்கென தனித்த இடம் உண்டு. மூன்று தலைமுறை கதாநாயகர்களுக்கும் திரைப்பாடல் எழுதியதால், அவரின் தமிழ் தலைமுறை கடந்தும் பாராட்டப்படுகிறது. […]

Read more

ஆழ்வார்கள் யாவர்

ஆழ்வார்கள் யாவர், வேங்கடகிருஷ்ணன், ஆர்.என்.ஆர்.அச்சகம், பக். 159, விலை 100ரூ. ஆழ்வார்களில் தமிழ் தலைவன் யார் மாயோன் மேய காடுறை உலகம் என்று தொல்காப்பியர் காலம் முதல் போற்றப்பட்ட வைணவ சமயம், ஆழ்வார்களின் பாசுரங்கள் வாயிலாக வளர்க்கப்பட்டு, ராமானுஜரால் பாரத நாட்டின் பல பகுதிகளிலும் புகழ் பரப்பி திகழ்கிறது. பக்திப் பயிர் வளர்க்க பன்னிரு ஆழ்வார்களின் சில பாசுர நயங்களையும், அவர்களின் பெருமைகளையும் விளக்குவதே இந்நூல். இந்நூலில் 16 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொன்றும் நல்ல முத்தாக இருப்பதால், நூலும் பதினாறும் பெற்ற முத்து மாலையாகத் […]

Read more

திருமால் தரிசனம்

திருமால் தரிசனம், வேணு சீனிவாசன், வையவி பதிப்பகம், பக். 176, விலை 100ரூ, நாலாயிர திவ்ய பிரபந்தம், அதன் உரையாசிரியர்களின் நயம் குறித்தும், உரையாசிரியர்களின் உயர்வு குறித்தும், 18 கட்டுரைகளில், இந்த நூல் பழகு தமிழில் விவரிக்கிறது. பாலும் கண்ட சர்க்கரையும் குடிக்கப் பித்தம் தன்னடையே போமாபோல, பகவதனு பவம் பண்ண நெருப்பில் இட்ட பஞ்சுக்குவியலைப் போல தீவினைகளுடன் உருமாய்ந்து போகும் என்ற ஈட்டின் விளக்கம் கூறுவது (பக். 39). இறை அறிவு தலைதுக்கி மலரும்போது, இந்த உலக அறிவு கூம்ப ஆரம்பித்துவிடும் என்று […]

Read more

தொல்லியல் ஆய்வுகள்

தொல்லியல் ஆய்வுகள் (அகழாய்வு, கல்வெட்டு, நாணயம் பற்றியவை), டாக்டர் கே.வி. இராமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 164, விலை 120ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-321-4.html சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றிய டாக்டர் கே.வி.ராமன், தென் மாநிலங்களில், தான் பங்கேற்ற, பல முக்கிய அகழ்வாய்வுகள் பற்றி, இந்த நூலில் விவரித்துள்ளார். தென் மாநிலங்களில் நடந்த அகழாய்வு தொடர்பாக, தொல்லியல் துறை மூலம், அவ்வப்போது ஆசிரியர் வெளியிட்ட ஆங்கில ஆய்வறிக்கைகள், […]

Read more
1 181 182 183 184 185 240